search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Push"

    • ஏராளமானோர் குவிந்ததால் தள்ளுமுள்ளு
    • போலீசார் பயனாளிகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்

    வேலூர்:

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வேலூர் கோட்டத்தின் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மத்திய, மாநில மற்றும் பயனாளிகளின் பங்களிப்புடன் 160 அடுக்குமாடி குடியிருப்புகள் வேலூர் தொரப்பாடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த மாதம் 10-ந் தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இந்த திட்டத்தில் பயன்பெற 824 பயனாளிகள் கலெக்டரின் பரிந்துரையின் பேரில் ஒப்புதல் பெறப்பட்டது. பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைவருக்கும் குடியிருப்பு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் என்றும், மேலும் பயனாளிகளின் பங்களிப்பு தொகை ரூ.2 லட்சத்து 39 ஆயிரம்- வரைவோலையாக கடந்த மாதம் 28-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    அதன்பேரில் 367 பேர் மட்டுமே குறிப்பிட்ட தேதிக்குள் வரைவோலை செலுத்தினர்.

    இந்த நிலையில் தொரப்பாடியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு குலுக்கள் முறையில் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி இன்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் நடந்தது.

    நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் லினோலியா, தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார மேம்பாட்டு நிர்வாக பொறியாளர் கீதா தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிர்வாக பொறியாளர் கணேசன் தாசில்தார் செந்தில் பயிற்சி ஏ எஸ் பி பிரசன்னா குமார் உள்ளிட்டோர் முன்னிலையில் குலுக்கல் நடைபெற்றது.

    குலுக்களில் கலந்து கொள்ள ஏராளமானோர் திரண்டு வந்ததால் அவர்களுடைய டோக்கன் பெறுவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசார் வரவழைக்கப்பட்டு பயனாளிகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    • 22 சிறிய பாளையம் என திட்டம் போடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
    • காவல் துறை முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை மேற்கொண்டது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் முதல் கள்ளக்குறிச்சி வரை புதிய ரயில் பாதை போடும் பணி 2006 -ல் தொடங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 116 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரயில் பாதை அமைப்பதற்கு ஒரு மேம்பாலம் இரண்டு பெரியபாலம், பத்து தரைப்பாலம், 22 சிறிய பாளையம் என திட்டம் போடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ரயில் பாதை அமைப்பதற்கு நிதி ஒதுக்கி பல ஆண்டுகள் ஆன பிறகும் மிகவும் தாமத மாகவும், மந்தமாகவும் நடைபெ றுகிறது எனவும், ரயில் பாதை பணிகளை துரிதப்படுத்தி விரைவாக முடிக்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சின்னசேலம் ரயில் நிலைய முன்பு மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போரா ட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க தடுப்பு கட்டை அமைத்து காவல் துறை முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை மேற்கொண்டது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்று ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அப்பொழுது போலீசார் அமைத்த தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்ற போது கட்சியினருக்கும் போலீஸ்சாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்து றையை மீறி உள்ளே செல்ல முடியாததால் அதே இடத்தில் அமர்ந்து கோஷம் எழுப்பினார்கள். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தர்கள் சேலம் ரயில்வே டிஎஸ்பி குணசேகரன், உதவி கோட்ட பொறியாளர் வின்சன், கள்ளக்குறிச்சி ஏடிஎஸ்பி விஜயகார்த்திராஜா, டி எஸ் பி ரமேஷ், சின்னசேலம் தாசில்தார் இந்திரா ,உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள் அப்பொழுது வின்சென்ட் கூறுகையில் தற்போதுள்ள பொரு ளாதார சூழ்நிலையில் கூடுதல் நிதி தேவைப்படுவதாகவும், மத்திய அரசிடம் 356 கோடி நிதி பெற உள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டுக்குள் உறுதியாக சின்னசேலத்திற்கும் கள்ளக்குறிச்சிக்கும் இடையிலான ரயில் பாதை அமைக்கும் பணி முடிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதனை அடுத்துமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஸ்கல்கேண்டி நிறுவனம் இந்தியாவில் தனது புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. #Skullcandy



    ஸ்கல்கேண்டி நிறுவனம் இந்தியாவில் புஷ் என்ற பெயரில் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. 

    புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ்களில் ஸ்கல்கேண்டி செக்யூர் ஃபிட்ஃபின் ஜெல்கள் மற்றும் ஆக்டிவ் அசிஸ்டண்ட் வசதியை வழங்கியிருக்கிறது. இது இயர்பட்ஸ்களுக்கு ஆறு மணி நேரத்திற்கு தேவையான பேட்டரி பேக்கப் வழங்கும். இத்துடன் கூடுதலாக ஆறு மணி நேரங்களுக்கு பேட்டரி பேக்கப் கேஸ் வழங்கப்படுகிறது.

    இதன் புதுவித வடிவமைப்பு இயர்பட்ஸ்களை மிக எளிமையாக இயக்க வழி செய்வதோடு சிக்னல்கள் சீராக கிடைக்கவும் துணை புரிகிறது. ஒவ்வொரு இயர்பட்களிலும் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதனை மூன்று முறை தொடர்ச்சியாக க்ளிக் செய்யும் போது அசிஸ்டண்ட் வசிதயுடன் குறுந்தகவல் அனுப்பலாம்.



    இத்துடன் ரிமைண்டர் மற்றும் பல்வேறு வசதிகளை இயக்க முடியும். மேலும் இயர்பட்களை க்ளிக் செய்து அழைப்புகளை ஏற்கவும், நிராகரிக்கவும் முடியும். தொடர்ச்சியாக இருமுறை இடதுபுற இயர்பட் க்ளிக் செய்தால் இன்கமிங் அழைப்புகளை ரிஜெக்ட் அல்லது ஹோல்டில் வைக்கலாம். 

    புதிய வயர்லெஸ் இயர்பட்கள் காதுகளில் இருந்து எளிதில் கீழே விழாதபடி மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் தொடர்ச்சியாக ஆறு மணி நேரங்களுக்கு பயன்படுத்த முடியும். இத்துடன் சார்ஜிங் கேஸ் கொண்டு 12 மணி நேரத்திற்கு பிளேபேக் கிடைக்கும்.

    ஸ்கல்கேண்டி புஷ் வயர்லெஸ் இயர்பட் கிரே டே மற்றும் சைகோடிராபிக்கல் டியல் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை நாடு முழுக்க ஆஃப்லைன் விற்பனை மையங்களில் வாங்கிட முடியும்.
    ×