search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lawyers protest"

    • உண்ணாவிரத போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராகவும் சட்ட மசோதாவை திரும்ப பெற கோரியும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.
    • போராட்டத்தில் மூத்த வக்கீல்கள், பெண் வக்கீல்கள், இளம் வக்கீல்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கிருத மொழியிலும் இந்தி மொழியிலும் மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ள மத்திய அரசை கண்டித்து திருப்பூரில் பாண்டிச்சேரி மற்றும் தமிழக வக்கீல்கள் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் இன்று கோரிக்கையை வலியுறுத்தி கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் கோர்ட்டு வளாகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு திருப்பூர் வக்கீல் சங்க தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார்.

    இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மூத்த வக்கீல்கள் கே. என் .சுப்பிரமணியம், பாப்பா மோகன் ,பூபேஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

    அப்போது மத்திய அரசு மறைமுகமாக இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் விதமாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது கண்டனத்துக்குரியது. இந்த சட்ட மசோதாவை திரும்பப் பெறும் வரை எங்களது போராட்டம் ஓயாது என்றனர்.

    உண்ணாவிரத போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராகவும் சட்ட மசோதாவை திரும்ப பெற கோரியும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. போராட்டத்தில் மூத்த வக்கீல்கள், பெண் வக்கீல்கள், இளம் வக்கீல்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வழக்கறிஞருக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு கொரோனா காலகட்டத்தில் திரும்ப பெறப்பட்டது.
    • கொலையாளிகள் நரேஷ் மற்றும் பிரதீப் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி துவாரகா பகுதியில் வழக்கறிஞர் வீரேந்தர் குமார் நர்வால் நேற்று பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பைக்கில் வந்த இரண்டு நபர்கள் அவரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகள் நரேஷ் மற்றும் பிரதீப் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

    36 வருட பகை காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாகவும், பிரதீப்புக்கும் வழக்கறிஞர் வீரேந்தர் குமாருக்கும் முன்விரோதம் இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்கறிஞர் வீரேந்தர் குமாரின் தாத்தா, பிரதீப்பின் மாமாவை 1987ல் கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், பிரதீப்பிற்கு கிடைக்கவேண்டிய இழப்பீடுகளில் வீரேந்தர் குமார் சில சட்ட தடங்கல்களை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு பிரதீப் பணக்கஷ்டத்தில் இருந்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே விரோதம் மேலும் வளர்ந்துள்ளது.

    2017ம் ஆண்டு வழக்கறிஞர் வீரேந்தர் குமாரை பிரதீப் கொல்ல முயன்றுள்ளார். ஆனால் அப்போதைய தாக்குதலில் வழக்கறிஞர் உயிர்தப்பினார். அவரது டிரைவர் காயமடைந்தார். அதன்பின்னர் வழக்கறிஞருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஆனால், கொரோனா காலகட்டத்தில் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது.

    பட்டப்பகலில் அவர் கொல்லப்பட்டதால் சக வழக்கறிஞர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கறிஞர் கொலைக்கு நீதி கேட்டு, நாளை அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் விசாரணைகளுக்கு ஆஜராகாமல் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்த டெல்லி பார் அசோசியேசன் அழைப்பு விடுத்துள்ளது. வழக்கறிஞர்கள் மீதான வன்முறை சம்பவங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாகவும், அவர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை என்றும் வடக்கு டெல்லி வழக்கறிஞர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

    • பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    சென்னை பெருங்குடி ராஜீவ் நகரை சேர்ந்த ஜெய்கணேஷ் சைதாப்பேட்டை கோர்ட் டில் வழக்கறிஞராக பணி யாற்றி வந்தார்.

    அவர் கடந்த 25-ந் தேதி இரவு தனது வீட்ட ருகே நின்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக் களில் வந்த மர்ம கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப் பியது. இது பெரும் பரப ரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்திற்கு கண்ட னம் தெரிவித்து அரக்கோ ணம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் அரக் கோணம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் லோகபிரா மன் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

    வழக்கறி ஞர்களுக்கு பாதுகாப்பு சட் டத்தை மத்திய, மாநில அரசு கள் விரைவாக இயற்றக்கோரி கோஷமிட்டனர். இதில் 80-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

    அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பொன்னேரி சார்பு நீதிமன்றம் அருகில் வழக்கறிஞர் லெனின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பொன்னேரி:

    ஆந்திர மாநிலம் சட்டக் கல்லூரியில் பயிலும் தமிழக மாணவர்கள் திருப்பதி அருகே வடமலைப்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்களால் தாக்கப்பட்டதை கண்டித்தும் அவர்களை கைது செய்ய கோரியும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பொன்னேரி சார்பு நீதிமன்றம் அருகில் வழக்கறிஞர் லெனின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • அந்த பணியிலும் கூட 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கூலி ஆட்களை எடுக்க துணிந்து இருக்கிறது மத்திய அரசு. இது மிகப்பெரிய மோசடி ஆகும்.
    • இளம் வயதினரை ஆர். எஸ். எஸ்.சின் ஊழியர்களாக மாற்றி ராணுவ ஆட்சியை நிறுவ முயற்சிக்கும் திட்டமாகும்.

    கோவை:

    கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புல்டோசர் பாசிசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அகில இந்திய வக்கீல்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் ஜோதிகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மாசேதுங், செயலாளர் கோபால் சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டம் குறித்து வக்கீல்கள் கூறியதாவது:-

    ஆபத்தான சூழலில் இருந்து இந்திய நாட்டை பாதுகாக்கும் உச்சபட்ச கடமையை ஆற்றுவோர் ராணுவ வீரர்களே. அந்த பணியிலும் கூட 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கூலி ஆட்களை எடுக்க துணிந்து இருக்கிறது மத்திய அரசு. இது மிகப்பெரிய மோசடி ஆகும்.

    ஓய்வூதியம், பணி பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுத்து நிரந்தரமற்ற சூழலில் 4 ஆண்டுகளுக்குப்பின் கைவிடப்படும் வீரர்களின் நிலைமை என்ன ஆகும். ராணுவ வீரர்களுக்கு இதுதான் நிலை என்றால் மற்ற பல துறைகளிலும் இதைவிட மோசமான நிலை ஏற்படுத்தப்படும்.

    இந்த அக்னிபாத் திட்டத்தை எதிர்ப்பது மகத்தான தேசபக்த கடமை. இளம் வயதினரை ஆர். எஸ். எஸ்.சின் ஊழியர்களாக மாற்றி ராணுவ ஆட்சியை நிறுவ முயற்சிக்கும் திட்டமாகும். இந்தியா முழுவதும் தங்களது வாழ்வியல் உரிமைக்காக போராடும் சிறுபான்மை மக்களின் வாழ்விடங்களை புல்டோசர் கொண்டு அரசியலமைப்பு சட்ட மாண்புகளை குழிதோண்டி புதைக்கும் மத்திய அரசை கண்டிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புல்டோசர் பாசிசத்தை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    ×