பொன்னேரியில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பொன்னேரி சார்பு நீதிமன்றம் அருகில் வழக்கறிஞர் லெனின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொன்னேரியில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

பொன்னேரி:

ஆந்திர மாநிலம் சட்டக் கல்லூரியில் பயிலும் தமிழக மாணவர்கள் திருப்பதி அருகே வடமலைப்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்களால் தாக்கப்பட்டதை கண்டித்தும் அவர்களை கைது செய்ய கோரியும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பொன்னேரி சார்பு நீதிமன்றம் அருகில் வழக்கறிஞர் லெனின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com