search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fast"

    • பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நி லை ப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் உண்ணாவிரத போரா ட்டம் நடந்தது.
    • இதில் தேர்தல் அறிக்கையின்படி தமிழக அரசு தன்பங்களிப்பு ஓய்வூ தியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்,

    பெரம்பலூர்

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நி லை ப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் உண்ணாவிரத போரா ட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனி வேலன் தலைமை வகித்தார். தலைமையிடத்து செய லாளர் இளையராஜா, மா வட்ட மகளிரணி செய லாளர் ராகமஞ்சரி ஆகி யோர் முன்னிலை வகித்த னர். சிறப்பு விருந்தின ர்களாக தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட துணை செயலாளர் மணிவ ண்ணன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் சுப்பிரமணியன், ராஜா சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் தேர்தல் அறிக்கையின்படி தமிழக அரசு தன்பங்களிப்பு ஓய்வூ தியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், ஆசிரி யர்களு க்கான பணிப்பா துகாப்புச் சட்டம் இயற்றிட வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறு த்தப்பட்டது.

    இதில் தலைமை யாசிரியர்கள் ராஜேந்திரன், முருகானந்தம், அய்யம்பெருமாள், வெங்கடேசன், முன்னாள் மாவட்ட செயலாளர் வையாபுரி, முன்னாள் மாவட்ட பொருளாளர் ராம சமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட செய லாளர் ராஜேந்திரன் வரவே ற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் ஜானகிராமன் நன்றி கூறினார்.

    • தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் பணியேற்ற முதுகலை ஆசிரியரின் ஊதிய விகிதத்தில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை நீக்க வேண்டும்.
    • முதுகலை ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதியத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

    சேலம்:

    தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் பணியேற்ற முதுகலை ஆசிரியரின் ஊதிய விகிதத்தில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை நீக்க வேண்டும். முதுகலை ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதியத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு மேல்நிலை மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். பாரி, ராஜேந்திரன், மணிகண்டன், ரபார்ட் கிங்ஸ்லி, ரவி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஜெகதீஸ்வரன் நன்றி கூறினார்.

    • 20-ம் நாளாக போராட்டம் இன்றும் தொடர்ந்து வருகிறது
    • 6 கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு விலை வேண்டி கோத்தகிரி நட்டக்கல் பகுதியில் நாக்கு பெட்டா படுகர் நலசங்கம் சார்பில் கடந்த 19 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. அவர்களின் போராட்டம் 20-ம் நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் தேயிலை விவசாயிகளின் போராட்டம் தற்போது மாவட்ட அளவில் பரவி வருகிறது. இதன் ஒருபகுதியாக குன்னூர் தாலுக்காவில் படுகர் இன மக்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை ஆரூர் தலைவர் குமார் தலைமைதாங்கி தொடங்கி வைத்தார்.

    மேற்கு நாடு சீமை நல சங்கம், நாக்கு பெட்டா சங்கம், நெலிகோலு அறக்கட்டளை உள்ளிட்ட சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள் ராமன், தருமன்னன்,கேத்தி 14 ஊர் தலைவர் ரமேஷ், தேனலை ஊர் தலைவர் போஜன், கொதங்கட்டி சங்க செயலாளர் குமார், சோகத்தொரை ஊர் தலைவர் மகாலிங்கம், சக்கலட்டி ஊர் தலைவர் ராஜு, ஒடையரட்டி ஊர் தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் அர்ஜுனன், தொட்டணி ஊர் தலைவர் நாகராஜ் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    குன்னூர் உண்ணாவிரத போராட்டத்தில் கேத்தொரை, ஒடையரட்டி, சோகத்தொரை, தேனலை, தொட்டனி, சக்கலட்டி உள்ளடக்கிய 6 கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று உள்ளனர். மேலும் அவர்கள் பாரம்பரிய உடை அணிந்து பதாகைகளை கையில் ஏந்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை ஊட்டி, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் தற்போது குன்னூர் பகுதிகளுக்கு பரவியது அதிகாரிகள் மட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • தேயிலை விலை வீழ்ச்சியால் வாழ்வாதாரம் இழந்து இடம்பெயரும் குடும்பங்கள்
    • தேயிலை வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே விவசாயிகளுக்கும் நியாயம் கிடைக்கும் என்று வலியுறுத்தல்

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க கோரி அங்கு உள்ள விவசாயிகள் கடந்த 1-ந்தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 12-வது நாளாக தொடர்கிறது. ஒரு நாள் ஒரு கிராமத்தினர் என்ற முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தேயிலை விலை வீழ்ச்சியால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்துள்ளதாகவும், எனவே அரசு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். அவர்கள் கூறியதாவது:-

    தர்மலிங்கம்:

    நீலகிரி தேநீருக்கு உலகஅளவில் மவுசு உண்டு. அதன் தனித்துவமான சுவை மற்றும் நறுமணம் பல்வேறு சிறப்புகளை உடையது. ஆனால் தேயிலை விலை வீழ்ச்சி காரணமாக, நீலகிரியில் உள்ள தேயிலை தோட்டங்கள் அழிந்து வருகின்றன.

    சித்ரா:

    நீலகிரி மலைகளில் விளையும் இந்திய கருப்பு தேயிலை வகை, அதிக உயரம் மற்றும் பனிமூட்டமான காலநிலை காரணமாக தனித்துவ சுவை மற்றும் நறுமணத்தை கொண்டது. இது இந்தியாவில் மிகவும் பிரபலமான தேயிலைகளில் ஒன்று. 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து நீலகிரியில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நீலகிரி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தேயிலை வாரியம் எங்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    ஹாலம்மாள்:

    பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் தேயிலை பயிரிடுவதற்கு ஏற்ற இடமாக நீலகிரியை அடையாளம் கண்டனர். அங்கு கடந்த 1854-ம் ஆண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் தேயிலைத் தோட்டங்களை நிறுவத் தொடங்கியது. இங்கு பல ஆண்டுகளாக தேயிலை நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. கடந்த 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு தேயிலைக்கு கொள்முதல் விலையாக ரூ.18 வழங்கினர். அதற்கும் குறைவாகவே தற்போதும் வழங்கி வருகின்றனர். விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு தேயிலை கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.

    ராஜம்மாள்:

    நீலகிரி தேயிலை தொழில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது. தேயிலை தொழிலை ஒழுங்குபடுத்தி ஊழியர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நீலகிரி தேயிலை மலிவு விலையில் சிறந்த தரத்தை வழங்குவதால், வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் ஈர்த்து உள்ளது. எனவே இப்பகுதியில் முதலீடுகள் அதிகரித்து உள்ளது. மேலும் உள்ளூர் சமூகத்தின் பொருளாதாரமும் ஊக்கம் பெற்று உள்ளது. ஆனால் தேயிலைக்கு போதிய உற்பத்தி விலை கிடைப்பதில்லை. எங்களுக்கு தேயிலை தவிர வேறு தொழில் எதுவும் தெரியாது. சம்பந்தப்பட்ட துறையினர் தேயிலைக்கு நிரந்தர விலை அளிக்க வேண்டும்.

    எஸ்.கே.போஜன்:

    நீலகிரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை சாகுபடி செய்யப்படுகிறது. இதை நம்பி 65 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர். பச்சை தேயிலைக்கு கடந்த 40 வருடங்களாக சரியான விலை கிடைக்கவில்லை. விவசாயிகள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தேயிலை சட்டப்பிரிவு 30ஏ-வை அமல்படுத்த வேண்டும்.

    சவுமியா:

    பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி பிரதமர், மத்திய வர்த்தக மந்திரி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தபால் மூலம் மனு அனுப்பும் போராட்டம் நடந்தது. ஆனாலும் பலனில்லை. இதனால் விவசாய சங்கத்தினர் பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 குறைந்தபட்ச விலையாக நிர்ணயம் செய்யக்கோரி கடந்த 1-ந் தேதி முதல் நீலகிரியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களின் பேராட்டத்துக்கு அனைத்து தரப்பு இளைஞர்களும், பெண்களும் ஆதரவு தர வேண்டும். தேயிலைக்கு நிரந்தர விலை கிடைக்க வேண்டும்.

    ஜி.எல்.ஆர்.குமார்:

    தேயிலைக்கு உரிய விலை வழங்க கோரி 400 கிராமங்களில் இருந்து 65 ஆயிரம் விவசாயிகளுடன் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறோம். எனவே எம்.பி, அமைச்சர், மாவட்ட நிர்வாகம், தேயிலை வாரிய அதிகாரிகள் கூட்டாக விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். விளைநிலங்கள் கட்டிடங்களாக மாறாமல் இருக்க, விவசாயிகள் புலம்பெயர் தொழிலாளிகளாக மாறாமல் இருக்க, தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

    ஜோகி (கக்குச்சி):

    நீதிமன்ற தீர்ப்புப்படி தேயிலை சட்டபிரிவை அமுல்படுத்த வேண்டும். ஒருசில வியாபாரிகளின் தந்திரத்தால் தேயிலை தொழிற்சா லைகளும், விவசாயிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    முருகேஷ்:

    அரசு தேயிலை வாரியத்தில் 45 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகள் பதிவு செய்து உள்ளனர். எங்களுக்கு கடந்த 4 தலைமுறையாக பசுந்தேயிலைகளுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. தமிழக அரசின் கூற்றுப்படி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தேயிலை விலை வீழ்ச்சியால் வாழ்வாதாரம் இழந்து இடம்பெயர்ந்து உள்ளனர். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே மக்கள்தொகை குறைந்து உள்ளது கவனிக்கத்தக்கது. விவசாயிகள் விளைநிலங்களை விற்று வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்ய வேண்டி உள்ளது. இதே நிலை நீடித்தால் தேயிலைத் தொழில் முழுவதுமாக அழிந்து விடும் அபாயம் உள்ளது. எங்களை அரசாங்கம் தான் காப்பாற்ற வேண்டும்.

    சந்திரன், (தும்பூர்):

    தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிப்பதில் தேயிலை வாரியம் தனது கடமையை தட்டிக்கழித்து வருகிறது. சாகுபடி செலவின் அடிப்படையில் நியாயமான விலை தந்தால் அவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். சிறு-குறு தேயிலை விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வரை போராட தயாராக உள்ளோம்.

    மோகன், (கீழ்அணைஹட்டி):

    குறைந்தபட்ச அடிப்படை விலை நிர்ணயிக்க தேயிலை வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே இந்த ஒழுங்கீனத்தை சரி செய்ய முடியும். வஞ்சிக்கப்பட்டு வரும் விவசாயிகளுக்கும் நியாயம் கிடைக்கும். அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் விரைவில் தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.

    தியாகு:

    தேயிலை விவசாயிகளின் பாதிப்பு குறித்து அனைத்து தரப்பு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்து உள்ளோம். அவர்கள் எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து எங்களின் போராட்டம் அமையும்.

    இவ்வாறு தேயிலை விவசாயிகள் கூறினர்.

    நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி நட்டக்கல் மட்டுமின்றி ஊட்டி பகுதியிலுள்ள இத்தலார், பாலகொலா பகுதிகளிலும் விவசாயிகள் 12-வது நாளாக தேயிலை விலை நிர்ணயம் செய்யக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது.

    • ஊர்வலமாக புறப்பட்டு சென்று எத்தையம்மன் கோவிலில் வழிபாடு
    • தேயிலை வர்த்தகர்களை உடனடியாக இணைக்க வாரிய அதிகாரி உறுதி

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு உரிய விலை வேண்டியும், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த கோரியும், தேயிலை வாரியம் உடனடியாக 30-ஏ சட்டத்தை அமல்படுத்த கோரியும் அங்கு உள்ள விவசாயிகள் கடந்த 1-ந்தேதி முதல் கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இது 11-வது நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக நாக்குபெட்டா படுகர் நல சங்கம் சார்பில் நேற்று 10-வது நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. பொரங்காடு சீமை படுகர் நலச்சங்க தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் பேரகணி, தாந்தநாடு, புடியங்கி , கன்னேரிமுக்கு, அளியூர், ஒடேன், உல்லத்தட்டி ஆகிய, கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக விவசாயிகள் அந்தந்த கிராமங்களில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு குலதெய்வம் எத்தையம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் அம்மனை மனமுருக வழிபட்டனர். பின்னர் மீண்டும் பேரணியாக வந்திருந்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    நீலகிரி தேயிலை விவசாயிகளின் உண்ணா விரத போராட்டத்திற்கு வந்திருந்த தேயிலை வாரிய உறுப்பினர் ராஜேஷ்சந்தர் பேசுகையில், தேயிலை தொழிற்சாலைகள் சட்டம் 30 ஏ பிரிவில் தற்போது தேயிலை விவசாயிகள் இணைக்கப்பட்டு உள்ளனர். மேலும் தேயிலை வர்த்தகர்களை உடனடியாக இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    இதேபோல ஊட்டியில் உள்ள குருத்துளி, தங்காடு ஆகிய பகுதிகளிலும் தேயிலை விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நீலகிரி மாவட்டத்தின் அனைத்து கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தேயிலை பறிக்க செல்லாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஒரசோலை பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு
    • தினமும் ஒரு கிராமம் என்ற அடிப்படையில் தொடர் போராட்டம்

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் பச்சை தேயிலைக்கு உரிய விலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அங்குள்ள விவசாயிகள் கடந்த 50 ஆண்டு காலமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு உரிய விலை வழங்க வேண்டும் என கோர்ட்டும் தீர்ப்பளித்து உள்ளது. ஆனாலும் தேயிலை வாரியம் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை.

    இதனால் விவசாயிகளுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் நாக்குபெட்டா படுகர் நல சங்கம் சார்பில் தேயிலைக்கு உரிய விலை வேண்டியும், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை அமுல்படுத்த கோரியும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பொரங்காடு சீமை படுகர் நலச்சங்கம் உள் ளிட்ட பல்வேறு அமைப்புகளின் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    உண்ணாவிரத போராட்டத்துக்கு பார்பத்தி ஹால கவுடர், 19 ஊர் தலைவர் ராமா கவுடர், கைகாரு சீமை தலைவர் நஞ்சாகவுடர் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். தொடர் உண்ணாவிரத போராட்டம் என்பதால் 120 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஒவ்வொரு ஊரும் தனித்தனியாக பங்கேற்க உள்ளனர்.

    முதல்நாள் போராட்டத்தில் ஒரசோலை பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற் பட்ட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். இதுதவிர ஊட்டி பகுதியில் நஞ்சுநாடு, இத்தலர் ஆகிய பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    நீலகிரியில் உண்ணாவிரத போராட்டம் காரணமாக அனைத்து கிராமங்களிலும் வசிக்கும் விவசாயிகள் தேயிலை பறிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக், தமிழக சுற்றுலா அமைச்சர் ராமசந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவரணி சார்பில் நீட் தேர்வை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக், தமிழக சுற்றுலா அமைச்சர் ராமசந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ராஜா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாக ராஜ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

    • அனைத்து தொழில்நுட்ப காலி பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.
    • தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பயிற்றுனர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.

    நெல்லை:

    தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் நெல்லை மண்டல நிர்வாகிகள் சார்பில் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் பேட்டையில் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்க இணை தலைவர்கள் ராமையா, ஹமீது, விஜயகுமார், ராமசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இணைச் செயலாளர்கள் ராமமூர்த்தி, முருகேசன், தாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி கிளைச் செயலாளர் முருகன் வரவேற்றார். மாநில தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்து உரையாற்றினார். நெல்லை மண்டல செயலாளர் கோரிக்கை விளக்க உரையாற்றினார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து தொழில்நுட்ப காலி பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும், சட்ட திட்டத்தின்படி தொழில்நுட்ப சான்றிதழ்தாரர்களுக்கு முதல்வர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும், 12 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பயிற்றுனர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    • கோவை பேரூர் பட்டீசுவரர் ஆலய குத்தகை விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் பேரூரில் நடந்தது.
    • நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3000, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4500 வழங்க முன்வர வேண்டும்.

    கோவை,

    பேரூர் பட்டீசுவரர் ஆலய குத்தகை விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி ஆகஸ்டு 15-ல் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

    கோவை பேரூர் பட்டீசுவரர் ஆலய குத்தகை விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் பேரூரில் நடந்தது. சாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார்.

    குத்தகை விவசாயிகள் சங்கத் தலைவர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிகழ்ச்சியில் பங்கேற்று விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

    பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஆறுகளிலும், பாசன கால்வாய்களிலும் கழிவுநீர் கலப்பதால் மாசு ஏற்பட்டு வருவதை தடுத்து நிறுத்த நீர்ப்பாசனத் துறைக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3000, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4500 வழங்க முன்வர வேண்டும்.

    வேளாண் விளை பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு உரிய ஆதார விலை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

    100 ஆண்டுகளுக்கு மேலாக சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் குத்தகைப் பதிவை ரத்து செய்து விளைநிலத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

    பேரூர் பட்டீசுவரர் கோவிலுக்கு சொந்தமான 360 ஏக்கர் நிலத்தில், நூறு ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள்.

    நீதிமன்ற நடவடிக்கையை காரணம் காட்டி விவசாயிகளை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறுவதை கைவிட வலியுறுத்தியும், விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தியும் வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி பேரூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காளை மாட்டு சிலை அருகில் தூய்மை பணியாளர்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மாநகராட்சி பகுதி முழுவதும் ஆங்காங்கே குப்பைகள் மலை போல் தேங்கியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும். இதற்காக நடைபெறவுள்ள டெண்டர் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.

    பணி நிரந்தரம், குறைந்த பட்ச அரசு நிர்ணயித்த கூலி, முதல் தேதியில் ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி, சி.ஐ.டி.யு, எல்.பி.எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் தூய்மை பணியாளர்கள், குடிநீர் வினியோகப் பணியாளர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் கடந்த 23-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்ற நிலையில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ராகவன் முன்னிலையில், மாநகராட்சி உதவி ஆணையர் சுதா, தொழிற்சங்க நிர்வாகிகள் ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சின்னசாமி, எல்.பி.எப். மாவட்ட செயலாளர் கோபால் உள்ளிட்ட தோழமை சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    ஆனால் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, 5-வது நாளாக நேற்றும் தூய்மைப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது. மேலும் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற கோரி, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், தூய்மை பணியாளர்கள் குடும்பத்துடன் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.

    இந்த நிலையில் 6-வது நாளாக தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக காளை மாட்டு சிலை அருகில் தூய்மை பணியாளர்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் சின்னசாமி, மற்றும் எல்.பி.எப்., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தோழமை சங்கங்களின் நிர்வாகிகள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதற்கிடையே 6-வது நாளாக தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்வதால் மாநகராட்சி பகுதி முழுவதும் ஆங்காங்கே குப்பைகள் மலை போல் தேங்கியுள்ளது.

    ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இதில் 1,800 தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர். 500 நிரந்தர தூய்மை பணியாளர்களும் வேலை பார்த்து வருகின்றனர். ஒப்பந்த பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் குப்பைகள் அள்ளும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 257 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இது தவிர மக்கும் குப்பை, மக்காத குப்பை என தூய்மை பணியாளர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று குப்பைகளை சேகரித்து வந்தனர்.

    வேலை நிறுத்த போராட்டத்தால் மாநகர் பகுதியில் ஆயிரம் டன் குப்பைகள் தேங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் குப்பைகளை தெருவோரம் வீசி சென்று ள்ளதால் குப்பைகள் மலை போல் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தற்சமயம் மாநகராட்சி சார்பில் 300-க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களை வைத்து குப்பைகள் அள்ளும் பணி நடைபெற்று வருகிறது.

    • திருப்புத்தூரில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முஸ்லிம் ஜமாத்தார்கள் நடத்திய இப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பங்கேற்று தலைமை வகித்தார்.

    முன்னதாக மாவட்ட அரசு டவுன் காஜி முகமது பாரூக் ஆலிம் துவா ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். திருப்பத்தூர் அனைத்து பள்ளி ஜமாத் நிர்வாகிகள் உலமாக்கள் முன்னிலை வகித்தனர்.

    மேலும் பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி நாராயணன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கமருன் ஜமான், ஆதில் மௌலானா ஆகியோர் வாழ்த்துரை யாற்றினர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரூராட்சி துணை தலைவர் கான் முகமது, நகர இளைஞரணி அமைப்பாளர் பசீர் அகமது, பேரூராட்சி கவுன்சிலர்கள் ரெமி சுலைமான் பாதுஷா, ஷமீம் நவாஸ், அபுதாஹிர் ஆகியோர் செய்திருந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் கார்த்தி கேயன், நாராயணன், நகர துணை செயலாளர் உதய சண்முகம், பேரூராட்சி கவுன்சிலர்கள் பிளாசா ராஜேஸ்வரி, சீனிவாசன், முன்னாள் பேரூராட்சி சேர்மன் சாக்ளா, பழக்கடை அபுதாஹிர், ஷாஜகான், வர்த்தக சங்க நிர்வாகிகள், அனைத்து பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.எஸ்.ஆர்.சி.லெட்சுமணன் நன்றி கூறினார்.

    • புதுவை குடிசைமாற்று வாரிய அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் முல்லை நகர் அலுவலகத்தின் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    • மாதந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை குடிசைமாற்று வாரிய அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் முல்லை நகர் அலுவலகத்தின் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    போராட்டத்துக்கு சங்க ஆலோசகர் பிரேமதாசன், தலைவர் பழனிநாதன் தலைமை வகித்தனர். துணைத்தலைவர்கள் கணேசன், பழனி, வீரமுத்து, செயலாளர் கோவிந்தராசு முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மாதந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும். வாரியத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி

    இந்த போராட்டம் நடந்தது.

    ×