search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு - மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
    X

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு - மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

    • பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நி லை ப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் உண்ணாவிரத போரா ட்டம் நடந்தது.
    • இதில் தேர்தல் அறிக்கையின்படி தமிழக அரசு தன்பங்களிப்பு ஓய்வூ தியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்,

    பெரம்பலூர்

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நி லை ப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் உண்ணாவிரத போரா ட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனி வேலன் தலைமை வகித்தார். தலைமையிடத்து செய லாளர் இளையராஜா, மா வட்ட மகளிரணி செய லாளர் ராகமஞ்சரி ஆகி யோர் முன்னிலை வகித்த னர். சிறப்பு விருந்தின ர்களாக தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட துணை செயலாளர் மணிவ ண்ணன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் சுப்பிரமணியன், ராஜா சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் தேர்தல் அறிக்கையின்படி தமிழக அரசு தன்பங்களிப்பு ஓய்வூ தியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், ஆசிரி யர்களு க்கான பணிப்பா துகாப்புச் சட்டம் இயற்றிட வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறு த்தப்பட்டது.

    இதில் தலைமை யாசிரியர்கள் ராஜேந்திரன், முருகானந்தம், அய்யம்பெருமாள், வெங்கடேசன், முன்னாள் மாவட்ட செயலாளர் வையாபுரி, முன்னாள் மாவட்ட பொருளாளர் ராம சமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட செய லாளர் ராஜேந்திரன் வரவே ற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் ஜானகிராமன் நன்றி கூறினார்.

    Next Story
    ×