search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரதம்
    X

    சேலத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

    • தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் பணியேற்ற முதுகலை ஆசிரியரின் ஊதிய விகிதத்தில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை நீக்க வேண்டும்.
    • முதுகலை ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதியத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

    சேலம்:

    தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் பணியேற்ற முதுகலை ஆசிரியரின் ஊதிய விகிதத்தில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை நீக்க வேண்டும். முதுகலை ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதியத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு மேல்நிலை மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். பாரி, ராஜேந்திரன், மணிகண்டன், ரபார்ட் கிங்ஸ்லி, ரவி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஜெகதீஸ்வரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×