search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruputhur"

    • திருப்புத்தூரில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முஸ்லிம் ஜமாத்தார்கள் நடத்திய இப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பங்கேற்று தலைமை வகித்தார்.

    முன்னதாக மாவட்ட அரசு டவுன் காஜி முகமது பாரூக் ஆலிம் துவா ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். திருப்பத்தூர் அனைத்து பள்ளி ஜமாத் நிர்வாகிகள் உலமாக்கள் முன்னிலை வகித்தனர்.

    மேலும் பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி நாராயணன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கமருன் ஜமான், ஆதில் மௌலானா ஆகியோர் வாழ்த்துரை யாற்றினர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரூராட்சி துணை தலைவர் கான் முகமது, நகர இளைஞரணி அமைப்பாளர் பசீர் அகமது, பேரூராட்சி கவுன்சிலர்கள் ரெமி சுலைமான் பாதுஷா, ஷமீம் நவாஸ், அபுதாஹிர் ஆகியோர் செய்திருந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் கார்த்தி கேயன், நாராயணன், நகர துணை செயலாளர் உதய சண்முகம், பேரூராட்சி கவுன்சிலர்கள் பிளாசா ராஜேஸ்வரி, சீனிவாசன், முன்னாள் பேரூராட்சி சேர்மன் சாக்ளா, பழக்கடை அபுதாஹிர், ஷாஜகான், வர்த்தக சங்க நிர்வாகிகள், அனைத்து பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.எஸ்.ஆர்.சி.லெட்சுமணன் நன்றி கூறினார்.

    ×