search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரதம்
    X

    நெல்லையில் தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

    • அனைத்து தொழில்நுட்ப காலி பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.
    • தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பயிற்றுனர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.

    நெல்லை:

    தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் நெல்லை மண்டல நிர்வாகிகள் சார்பில் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் பேட்டையில் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்க இணை தலைவர்கள் ராமையா, ஹமீது, விஜயகுமார், ராமசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இணைச் செயலாளர்கள் ராமமூர்த்தி, முருகேசன், தாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி கிளைச் செயலாளர் முருகன் வரவேற்றார். மாநில தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்து உரையாற்றினார். நெல்லை மண்டல செயலாளர் கோரிக்கை விளக்க உரையாற்றினார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து தொழில்நுட்ப காலி பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும், சட்ட திட்டத்தின்படி தொழில்நுட்ப சான்றிதழ்தாரர்களுக்கு முதல்வர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும், 12 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பயிற்றுனர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    Next Story
    ×