என் மலர்
நீங்கள் தேடியது "பொதுமக்கள் சாலை மறியல்"
- உறவினர்கள் அழகம்மாளின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகளை செய்து முடித்து சடலத்தை சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.
- இந்த வழியாக சடலத்தை கொண்டு செல்லக்கூடாது இந்த இடம் எங்களுக்குச் சொந்தமான பட்டா நிலம் என்று அதே ஊரைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புதியம்புத்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள மேல வேலாயுதபுரத்தை சேர்ந்த அழகம்மாள் (வயது 85) என்ற மூதாட்டி நேற்று இறந்துவிட்டார்.
அவரது உறவினர்கள் அழகம்மாளின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகளை செய்து முடித்து சடலத்தை சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். அப்போது இந்த வழியாக சடலத்தை கொண்டு செல்லக்கூடாது இந்த இடம் எங்களுக்குச் சொந்தமான பட்டா நிலம் என்று அதே ஊரைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சடலத்தை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல முறைப்படி பாதை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இறந்தவரின் உறவினர்கள் புதியம்புத்தூர்-தூத்துக்குடி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 50 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மறியல் போராட்ட தகவல் அறிந்ததும் ஒட்டப்பிடாரம் மண்டல துணை தாசில்தார் சுமதி, வருவாய் ஆய்வாளர் சுகுணா, புதியம்புத்தூர் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் பாலன் ஆகியோர் பஸ் மறியல் செய்தவர்களிடம் பேசினர்.
இன்று ஒட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் வைத்து மயான பாதை குறித்து சமாதான கூட்டம் நடத்தப்பட்டு மயான பாதைக்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து பஸ் மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.
- தேவாலயத்தில் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஒன்றுகூடி வெள்ளோடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
- போலீசார் இருதரப்பினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
சின்னாளபட்டி:
திண்டுக்கல் அருகே ஏ.வெள்ளோடு பகுதியில் புனித தெரசா சந்தியாகப்பர் கோவில் உள்ளது. இங்கு பழைய நிர்வாகக்குழுவினருக்கு போட்டியாக புதிய குழு உருவானது. அவர்கள் நிர்வாகத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆனால் இதற்கு பழைய நிர்வாகக்குழு மறுத்தது. இந்தநிலையில் ரூ.40 லட்சம் பணத்தை கையாடல் செய்ததாக கலெக்டர் அலுவலகத்தில் சிலர் புகார் அளித்தனர்.
பழைய நிர்வாகக்குழு மற்றும் புதிய குழுவினருக்கு இடையே பிரச்சிைன ஏற்பட்டதால் கோவிலில் இருதரப்பினர் சார்பாகவும் 2 பூட்டுகள் போட்டு பூட்டப்பட்டன. அதன் சாவிகள் வி.ஏ.ஓவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இன்று வெள்ளோடு பகுதியில் ஒருவர் இறந்துவிட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்த கோவில் நிர்வாகம் சார்பாக சென்றபோது அங்கிருந்த 2 பூட்டுகளுமே உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஒன்றுகூடி வெள்ளோடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் சந்தனமேரி கீதா மற்றும் அம்பாத்துரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அவர்கள் இருதரப்பினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பழைய நிர்வாகக்குழு தங்களிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என புதிய குழுவினர் தெரிவித்தனர். ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் முடிவு எட்டப்படவில்லை. உயர் அதிகாரிகள் முன்னிலையில் மறுபடியும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
- நல்லூர் மேற்குக் களத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குடியிருப்புக்கு தனியார் பட்டா நிலத்தின் வழியாக சென்று வந்துள்ள னர்.
- பாதை அடைக்கப்பட்டதால் அரவங்குறிச்சியிலிருந்து கோட்டையூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
செந்துறை:
நத்தம் அருகே கோட்டை யூர் ஊராட்சிக்குட்பட்ட நல்லூர் மேற்குக் களத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குடியிருப்புக்கு தனியார் பட்டா நிலத்தின் வழியாக சென்று வந்துள்ள னர். நிலத்தின் உரிமையாளர் திடீரென்று தனது நில த்தினை அடைத்து விட்டார். எனவே குடியிருப்புகளுக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். எனவே பாதை அமைக்க வேண்டும் எனக்கோரி திடீரென அரவங்குறிச்சியிலிருந்து கோட்டையூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியசாமி, கிராம நிர்வாக அலுவலர் முருகவேல் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்க ளுடன் சமரசம் பேசினர். அப்போது நத்தம் தாலுகா தாசில்தாரிடம் இது குறித்து தீர்வு காண பேச்சு வார்த்தை யில் கலந்து கொண்டு முடிவெடுக்க கூறிய ஆலோ சனையை ஏற்று மறியலை கைவிட்ட னர்.
இதனால் சுமார் 1 மணி நேரம் கோட்டையூர் - அரவங்குறிச்சி வழியாக நத்தம் செல்லும் சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பஸ் கடந்த சில மாதங்களாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் மிகுந்த அவதியடைந்தனர்.
- பழனி-உடுமலைப்பேட்டை சாலையில் திடீரென தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி:
பழனி அருகில் உள்ள நெய்காரப்பட்டிக்கு சின்னகாந்திபுரம், வாய்க்கால்பட்டி வழியாக புளியம்பட்டி மார்க்கத்தில் அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் கடந்த சில மாதங்களாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் மிகுந்த அவதியடைந்தனர்.
நீண்டதூரம் நடந்து வந்தும் ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் செலுத்தியும் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனுக்கள் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் இன்று பழனி-உடுமலைப்பேட்டை சாலையில் திடீரென தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கேட்காமல் போராட்டத்தை தொடர்ந்ததால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- பஸ்களை சிறை பிடித்தனர்
- தாசில்தார் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்
திருப்பத்தூர்:
தமிழகம் முழுவதும் நீர்நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் தண்டபாணி கோவில், சிவராஜ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனிடையே அந்த பகுதிகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 3 தலைமுறைகளாக வசித்து வருவதாக கூறப்படும் நிலையில், நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி துவங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதால் இடிப்பு பணி தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி நடைபெற உள்ளதாக நேற்றைய தினம் நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை பொக்லைன் எந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நீர்வளத்துறை சார்பில் நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயற்சி செய்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட மக்கள் திருப்பத்தூர்-பொன்னியம்மன் கோயில் சாலை பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் சாலை செல்லும் சாலையில் அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் கோட்டாட்சியர் லட்சுமி, தாசில்தார் சிவப்பிரகாசம் பேச்சுவார்த்தை நடத்தி 10, நாட்கள் அவகாசம் அளிப்பதாக உறுதி அளித்ததன் பேரில் 2 மணி நேரம் சாலை மறியலை அப்பகுதி மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலும் நேற்று இரவு இதே கோரிக்கை முன்வைத்து நல்லதம்பி எம்எல்ஏ வீடு மற்றும் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டும வீடுகளை இடிக்க கூடாது என கோரிக்கைகளை வைத்தனர்.
பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- மங்கலம் போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் விஜயலட்சுமி, ரவிசந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- பொதுமக்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் ஆயாமரம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 54). இவரது விவசாய நிலத்திற்கு அருகில் அரசுக்கு சொந்தமான 2 சென்ட் நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் தற்போது ஊராட்சி ஒன்றிய ஆணையாளரின் உத்தரவின் பேரில் பொதுமக்கள் தேவைக்காக குடிநீர் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அந்த இடத்தில் குடிநீர் தொட்டி அமைக்க கூடாது என்று கூறி சின்னத்தம்பி குடும்பத்தினர் கம்பி அமைத்து விட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு வந்து நேற்று தாரமங்கலத்தில் இருந்து ஜலகண்டபுரம் செல்லும் சாலையில் ஆயாமரம் பகுதியில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தார்.
மங்கலம் போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் விஜயலட்சுமி, ரவிசந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மறியலில் ஈடுபட்ட 45 பேரை போலீசார் கைது செய்து தாரமங்கலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
அதனை தொடர்ந்து அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்ததால் ஆணையாளர் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சின்னத்தம்பி,விஜயா, கார்த்தி, குருநாதசாமி, பெரியம்மாள், ராஜி, தங்கவேல்,சரோஜா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மோகனூர் ஊராட்சி ஒன்றியம், மணப்பள்ளி பஞ்சாயத்தில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன.
- இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட சென்னாக்கல்புதூர் பகுதியில், கடந்த 10 நாட்களாக தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், மணப்பள்ளி பஞ்சாயத்தில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. அவற்றில், குடியிருக்கும் மக்களுக்கு, பஞ்சாயத்து சார்பில் குடிநீர் இணைப்பு மூலமும், பொது குழாய்கள் மூலமும், தினமும் காவிரி குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட சென்னாக்கல்புதூர் பகுதியில், கடந்த 10 நாட்களாக தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இது குறித்து, அப்பகுதி பொதுமக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும், குடிநீர் விநியோகம் செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், டீக்கடை, ஓட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் நடத்துவோர் உள்ளிட்டோர் குடிநீர் தேவைக்காக காசு கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பஞ்சாயத்து நிர்வாகத்தினர், குடிநீர் இணைப்பில் உள்ள மோட்டார் பழுத டைந்துவிட்டதால் அதை சரி செய்த பிறகுதான் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று காரணம் கூறியதாக தெரிகிறது.
இதனால் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து, சென்னாக்கல்புதூர் கிராம மக்கள், பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் காலி குடங்களுடன் மெயின் ரோட்டிற்கு வந்தனர். அவர்கள் மோகனூர் - பரமத்தி நெடுஞ்சாலையில் உட்கார்ந்து திடீர் என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இருபுற மும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. பஸ்களில் இருந்து பயணிகள் தாங்கள் செல்லவேண்டிய இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்த மோகனூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, தடையின்றி குடி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்த னர். அதையடுத்து, ஒரு மணி நேரம் நடந்த மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். அதன் பின்னர் நீண்ட வரிசையில் காத்து நின்ற வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டன.
இது குறித்து, மணப்பள்ளி பஞ்சாயத்து தலைவர் இந்துமதி கூறும்போது, காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளதால், மோட்டார் ரூம் அருகே தண்ணீர் வருவதில்லை. மேலும் மோட்டாரும் பழுதாகிவிட்டது. அவற்றை விரைந்து சரி செய்து, மணலை அப்புறப்படுத்தி, தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
- போலீசார் பேச்சுவார்த்தை
- சுழற்சி முறையில் வேலை வழங்கப்படும் என உறுதி
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள அத்திமலைப்பட்டு ஊராட்சியில் உள்ள கிராம சேவை மையத்தில் 100 நாள் திட்ட சமூகதணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சிமன்றதலைவர் சங்கர் தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு வந்த அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் 100 நாள் திட்டபணி யாளர்கள், தங்களுக்கு 100 நாள் வேலை சரிவர வழங்க வில்லை என்று கூறினர்.
மேலும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 100 நாள் வேலை சரிவர வழங்காததை கண்டித்து அவ்வூர் வழியாக செல்லும் வேலூர் - ஆரணி மெயின்ரோடு மேட்டுக்குடி கூட்ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஆரணி தாசில்தார் ஜெகதீ சன், வட்டார வளர்ச்சி அலுவலர் சவீதா, கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தரணி மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இனிவரும் காலங்களில் 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் வேலை வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.
அதன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக வாகனங்கள் மாற்றுப்பாதை யில் திருப்பி விடப்பட்டது.
- போலீசாரிடம் வாக்குவாதம்
- போக்குவரத்து பாதிக்கப்பட்டது
வந்தவாசி:
வந்தவாசி அருகே சுடுகாட்டுப் பாதை பிரச்சனையை தீர்க்கக் கோரியும், இது தொடர்பான பிரச்சனையில் முதியவரை கத்தியால் வெட்டியவர்களை கைது செய்யக் கோரியும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வந்தவாசியை அடுத்த தூக்குவாடி கிராமத்தில் உள்ள சுடுகாட்டுக்கு கடந்த பல ஆண்டுகளாக தனியார் விவசாய நிலம் வழியாக பிணங்களை அந்த கிராம பொதுமக்கள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த நிலத்தை வாங்கிய மற்றொரு நபர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிணங்களை எடுத்துச் செல்லும் பாதையை பொக்லைன் எந்திரம் மூலம் அண்மையில் தோண்டினாராம். இதனால் அந்த நில உரிமையாளரின் ஆதரவாளர்களுக்கும் கிராம பொதுமக்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பான பிரச்சினையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன்(65) என்பவரை அந்த நில உரிமையாளரின் ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு கத்தியால் வெட்டினராம்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த சீனிவாசன் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராம பொதுமக்கள் வந்தவாசி-காஞ்சிபுரம் சாலை, மேல்மா கூட்டுச்சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். சுடுகாட்டுப் பாதை பிரச்சினையை தீர்க்கக் கோரியும், சீனிவாசனை கத்தியால் வெட்டிய நபர்களை கைது செய்யக் கோரியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
தகவலறிந்து அங்கு சென்ற வந்தவாசி டிஎஸ்பி கார்த்திக் தலைமையிலான வந்தவாசி வடக்கு போலீசார் பொதுமக்களை சமரசம் செய்ய முயன்றனர். அப்போது, ஏற்கனவே புகார் கொடுத்த போதே போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் சீனிவாசனை வெட்டும் அளவுக்கு பிரச்சினை வளர்ந்திருக்காது என்று கோபமாக தெரிவித்த பொதுமக்கள் சிலர், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை போலீசார் தடுக்கவே அங்கு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக டிஎஸ்பி கார்த்திக் பொதுமக்களை சமரசப்படுத்தினார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த மறியல் போராட்டத்தால் வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- குடும்பத்துடன் ரோட்டில் அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட் பட்ட கடத்தூர் ஊராட்சி பள்ளிக்கூட பிரிவு பகுதி யில் 2 குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்கு பொது மக்கள் பலர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
இந்த பகுதியில் சாக்கடை வசதி இல்லை என கூறப்படு கிறது. இங்கு சாக்கடை வசதி அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளிடம் பல முறை பொதுமக்கள் மனு கொடு த்தனர். ஆனால் சாக்கடை வசதி செய்து தரப்பட வில்லை என பொதுமக்கள் புகார் கூறினர்.
இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான பொது மக்கள் சாக்கடை வசதி செய்து தர வலியுறுத்தி பள்ளிக்கூட பிரிவு பகுதி யில் ஒன்று திரண்டனர். தொடர்ந்து அவர்கள் குடும்பத்துடன் ரோட்டில் அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் கிடை த்ததும் கடத்தூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் அதிகாரிகள் அந்த பகுதியில் சாக்கடை வசதி அமைத்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளி த்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. இதனால் அந்த பகுதியில் இன்று காலை பர பரப்பான நிலை நிலவியது.
- மின் தடையை கண்டித்து சக்தி- பண்ணாரி சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புதுப்பீர்கடவு பகுதி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் மின் பழுது ஏற்பட்டு மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் இப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் இன்று காலை அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் மின் தடையை கண்டித்து ராஜன் நகர் பவர் ஹவுஸ் எதிரே உள்ள சக்தி- பண்ணாரி சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
இது குறித்து தகவல் அறிந்ததும் பவானிசாகர் போலீசார், ராஜன் நகர் பஞ்சாயத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது மக்கள் 25 நாட்களாக மின்தடையால் கடும் அவதி அடைந்து வருவதாகவும், உடனடியாக மின்பழுதை சரி செய்து சீரான மின் விநியோகம் வழங்க வேண்டும் என்று கூறினர்.
இதனையடுத்து அதிகாரிகள் உடனடியாக உங்கள் பகுதியில் மின் பழுது சரி செய்யப்பட்டு மின் விநியோகம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதனை ஏற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். சுமார் 30 நிமிடம் போராட்டத்திற்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து தொடங்கியது.
- 3-வது வார்டு பகுதிக்கு கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக குடிதண்ணீர் வழங்கப்படததால் அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
- அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் சென்று பலமுறை கூறியும், 3-வது வார்டு பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதில் மெத்தனம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே சித்தையன்கோட்டை பகுதியில் தற்போது சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், சாலை ஓரமாக கொண்டு செல்லப்பட்ட குடிநீர் குழாய்களில் ஆங்காங்கே உடைப்புகள் ஏற்படுவதால் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக சரி செய்யப்பட்டு அவ்வப்போது குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 3-வது வார்டு பகுதிக்கு, கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக குடிதண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால், அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குடிதண்ணீர் விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் சென்று பலமுறை கூறியும், 3-வது வார்டு பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதில் மெத்தனம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
எனவே உடனடியாக குடிதண்ணீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிருத்தி சித்தையன்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த பேரூராட்சி அலுவலர்கள் குடிதண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






