என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Village Peoples"

    • கோவாவில் தனது 2-வது மகன் நிச்சயதார்த்தத்தை தனது கிராம மக்களுடன் கொண்டாட முடிவு செய்தார்.
    • சுமார் ரூ.2 கோடி செலவழித்து 2 விமானங்களை முன்பதிவு செய்தார்.

    கிராமத்தில் யாராவது விமானத்தில் பயணம் செய்தால், முழு கிராமமும் அதைப் பற்றி விவாதிக்கும். தெலுங்கானாவில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 500 பேர் ஒரே நேரத்தில் விமானத்தில் பயணம் செய்து அசத்தி உள்ளனர்.

    நாகர்கர்னூல் மாவட்டம், பிஜினேபள்ளி மண்டலம், குட்லனர்வா கிராமத்தைச் சேர்ந்த 500 பேர் நேற்று இரவு ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் இருந்து கோவாவுக்கு விமானத்தில் குதூகலமாக பயணம் செய்தனர்.

    மேட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தில் உள்ள ஜவஹர்நகர் நகராட்சியின் முன்னாள் மேயரான மேகலா காவ்யாவின் தந்தை மேகலா அய்யப்பா, இவர் தனது சொந்த கிராம மக்களுக்கு மறக்கமுடியாத ஒன்றைச் செய்ய விரும்பினார்.

    கோவாவில் தனது 2-வது மகன் நிச்சயதார்த்தத்தை தனது கிராம மக்களுடன் கொண்டாட முடிவு செய்தார். இதற்காக, அவர் சுமார் ரூ.2 கோடி செலவழித்து 2 விமானங்களை முன்பதிவு செய்தார்.

    தனது சொந்த கிராம மக்கள் 500 பேரை 2 விமானங்களில் கோவாவுக்கு அழைத்துச் சென்றார்.

    இந்த நிகழ்வில் பேசிய காவ்யா, தனது தந்தை ஒரு எளிய விவசாயியாக தனது வாழ்க்கையைத் தொடங்கி ஒரு சிறந்த தொழிலதிபராக வளர்ந்தார்.

    அவருடைய கிராம மக்களின் கண்களில் மகிழ்ச்சியைக் காண கோவாவில் மகன் நிச்சயதார்த்தத்தை ஏற்பாடு செய்தார். அனைத்து கிராம மக்களையும் விமானத்தில் அழைத்து வந்தார். கிராம மக்கள் 500 பேரின் ஆசையை நிறைவேற்றியுள்ளார். அவர்களின் மகிழ்ச்சியை தங்கள் மகிழ்ச்சியாகக் கருதி இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.

    தெலுங்கானாவில் நடந்த இந்த ருசிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • சேர்ந்தனார்குளத்தில் பல நூறு ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை.
    • மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமையில் பொது மக்கள் சுடுகாட்டில் குடியேற சென்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பருத்திப்பாடு சேர்ந்தனார்குளத்தில் பல நூறு ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு குடிமனை பட்டா இன்னும் வழங்கப்படவில்லை.

    மேலும் தனிப்பட்ட நபர்கள் சிலர் சுடுகாட்டு பாதை உள்ளிட்ட பொது இடங்களை தங்களது பட்டா நிலம் என கூறி வேலி அமைத்து தடுத்துள்ள தாகவும் தெரிகிறது.

    இதன் காரணமாக இறந்தவரின் உடலை வேறொரு தரப்பினர் வசிக்கும் தெரு வழியாக எடுத்துச் செல்லும் போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் இது வரையிலும் பட்டா வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    சுடுகாட்டில் குடியேறும் போராட்டம்

    இதனையடுத்து இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி அங்குள்ள சுடுகாட்டில் குடியேறும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமையில் பொது மக்கள் சுடுகாட்டில் குடியேறி போராட்டம் நடத்துவதற்காக சென்றனர்.

    அவர்களை போலீசார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து அவர்கள் தெருவிலேயே தங்களது போராட்டத்தை தொடங்கினர்.பின்னர் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதில் உடன்பாடு ஏற்படாததால் சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பள்ளிமாணவ, மாணவி களும், பெண்களும், முதி யவர்கள் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தில் நடு தெருவில் சமையல் செய்தும் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையறிந்து அங்கு வந்த நாங்குநேரி தாசில்தார் இசக்கிப்பாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் மீண்டும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இதனால் கோரிக்கை நிறை வேறும் வரை போராட்டம் தொடரும் என கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

    மேற்கு வங்க மாநிலத்தில் பிடிபட்ட மலைப்பாம்புடன் கிராம மக்கள் பல்வேறு விதமாக செல்பி எடுத்துக்கொண்டதில் மலைப்பாம்பு பரிதாபமாக உயிரிழந்தது.
    கொல்கத்தா:

    இன்றையை ஸ்மார்ட்போன் உலகில் செல்பி மோகம், அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது. இதனால் ஏற்படும் ஆபத்துக்களை உணர்ந்தாலும்,   அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் செல்பி எடுப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்துகொண்டே வருகிறது.

    செல்பி மோகத்தால் மனிதர்கள் உயிரிழந்து வந்த நிலையில், தற்போது அதே செல்பி மோகம் உயிரினங்களையும் மரணிக்க செய்கிறது. மேற்கு வங்க மாநிலம் பாபுஜியோர் கிராமத்தை சேர்ந்த மக்கள் அப்பகுதியில் செல்லும் ஆற்றில் 6 அடி நீள மலைப்பாம்பை பிடித்துள்ளனர். பின்னர் அதனுடன் பல்வேறு விதமாக செல்பியை எடுத்துள்ளனர்.

    செல்பி எடுப்பதற்காக பாம்பினை மிக மோசமாக கையாண்டதால் மலைப்பாம்பு உயிரிழந்துள்ளது. சிலர் பாம்பின் கழுத்துப்பகுதியை பிடித்த வண்ணமும் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக தகவல் அறிந்த வனத்துறையினர், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட புகைப்படங்களை சேகரித்து, சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
    ×