என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுமைப் பெண் திட்டம்"

    • உயர்கல்வியில் சேரும் மாணவிகள், மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது.
    • திருநங்கைகள் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டையினை தாங்கள் பயிலும் கல்லூரியில் சான்றாக சமர்ப்பித்தால் போதுமானது.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகள், மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு படித்த மாணவிகள் கல்லூரியில் சேர்ந்தால் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்படும். இந்த திட்டத்தில் திருநங்கைகளும் பயன் பெறலாம்.

    இதுவரை திருநங்கைகளும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் மட்டுமே கல்லூரி படிப்பில் ரூ.1000 உதவித்தொகை பெற முடியும் என்று இருந்தது.

    இப்போது இந்த விதிமுறையை தமிழ்நாடு அரசு தளர்த்தியுள்ளது. தமிழ், ஆங்கிலம் என எந்த வழியில் பயின்றிருந்தாலும், இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் திருநங்கைகள் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டையினை தாங்கள் பயிலும் கல்லூரியில் சான்றாக சமர்ப்பித்தால் போதுமானது.

    திருநங்கை, திருநம்பி, இடைபாலினத்தவர்கள் UMIS இணையதளத்தில் விண்ணப்பித்து உயர்கல்வி பயில உதவித்தொகை பெறலாம் என்று தெரிவித்துள்ளது.

    • நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு முதலமைச்சர் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
    • நிதிநிலைமை ஓரளவு சீரான பின்னர் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவிகளுக்கும் உதவித்தொகை வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.

    நெல்லை:

    தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் பெண்கள் அதிக அளவில் உயர்கல்வி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் புதுமைப் பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்த நிலையில், இன்று 2-ம் கட்டமாக திருவள்ளுவர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து பாளை பெருமாள்புரம் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மேயர் சரவணன் முன்னிலை வகித்தார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு 1,590 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 கல்வி உதவி தொகைக்கான வங்கி பரிவர்த்தனை அட்டையை வழங்கினார். பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவிகளின் உயர்கல்வி சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் முதலமைச்சர் புதுமைப்பெண் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.

    அரசு உதவிபெறும் கல்லூரி மாணவிகளுக்கும், உதவித்தொகை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் 3-ல் 2 பங்கு அரசு உதவி பெறும் கல்லூரி உள்ளது.

    நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு முதலமைச்சர் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். நிதிநிலைமை ஓரளவு சீரான பின்னர் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவிகளுக்கும் உதவித்தொகை வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.

    டெல்டா மாவட்டங்களில் சேதமான நெற்பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஹெக்டேருக்கு ரூ.12 ஆயிரம்தான் வழங்கப்பட்டது.

    இந்தியாவிலேயே முதல் முறையாக தி.மு.க. ஆட்சியில் தான் விவசாயிகளுக்கு இலவச பம்பு செட், ரூ.7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு மேலும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு இதுவரை 50 ஆயிரம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    நம்பியாறு-கருமேனியாறு-தாமிரபரணி இணைப்பு திட்டம் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. வருகிற மார்ச் மாதத்திற்குள் இத்திட்டம் முடிக்கப்படும் என முதலமைச்சர் உறுதி தெரிவித்துள்ளார்.

    களக்காட்டில் பல்லாயிரக்கணக்கான வாழைகள் சேதமடைந்துள்ளது. அதனை கலெக்டருடன் சென்று நான் பார்வையிட்டுள்ளேன்.

    சமீபத்தில் நெல்லை வந்த வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வமும், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். சேதமான வாழைகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'புதுமைப் பெண்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார்.
    • 2022-23-ம் கல்வியாண்டில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் சேர்க்கை அதிகரித்து இருப்பதாக உயர்கல்வித் துறை தெரிவித்து உள்ளது.

    சென்னை:

    அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து முடிக்கும் மாணவிகள் குடும்ப வறுமை காரணமாக, உயர்கல்வியை தொடராமல் போய்விடக் கூடாது என்ற உயர்ந்த நோக்கில், தமிழ்நாடு அரசு புதுமைப் பெண் என்ற உயர்கல்வி உறுதித் திட்டத்தை கொண்டு வந்தது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, இளங்கலை மருத்துவம், என்ஜினீயரிங், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் உள்பட உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, 2022-23-ம் கல்வியாண்டில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் சேர்க்கை அதிகரித்து இருப்பதாக உயர்கல்வித் துறை தெரிவித்து உள்ளது.

    அதன்படி, மாநிலத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் 2021-22-ம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவிகளின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 8 ஆக இருந்த நிலையில், 2022-23-ம் கல்வியாண்டில் இதன் எண்ணிக்கை 91 ஆயிரத்து 485 ஆக உயர்ந்து இருப்பதாக உயர்கல்வித் துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் 29 சதவீதம் மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளது.

    இதில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 4 ஆயிரத்து 806 பேரும், என்ஜினீயரிங் கல்லூரிகளில் 12 ஆயிரத்து 711 பேரும், மீதமுள்ளவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் உள்பட உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பள்ளி அளவில் இந்த திட்டம் குறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வறுமையின் காரணமாக பள்ளிக்கு பிறகு, உயர்கல்விக்கு செல்லாமல் படிப்பை நிறுத்தும் நிலைக்கும் தள்ளப்படும் மாணவிகளின் இடைநிற்றல் விகிதத்தை இந்த திட்டம் குறைக்க உதவுவதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

    • காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்
    • 4,680 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு பொறுப்பேற்றது முதலே மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.

    பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண வசதி தரும் விடியல் பயணம் திட்டம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்.

    இதில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் கடந்த 5-9-2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் இதுவரை 4 லட்சத்து 25 ஆயிரம் மாணவிகள் பயன் அடைந்து உள்ளனர்.

    புதுமைப்பெண் திட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி செல்லும் மாணவிகளையும் சேர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

    அதை ஏற்று அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது.

    இந்த புதுமைப்பெண் விரிவாக்க திட்டம் தொடக்க விழா இன்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதன் மூலம் தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேர்ந்துள்ள 75 ஆயிரத்து 28 மாணவிகள் பயன் பெறுவார்கள்.

    விழாவில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாநகராட்சி கமிஷனர் மதுபாலன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார்.
    • சட்டமன்ற உறுப்பினர்கள் பர்கூர் மதியழகன், தளி ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கிருஷ்ணகிரி,

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார்.

    இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 43 கல்லூரிகளில் படிக்கும் 2401 மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் பர்கூர் மதியழகன், தளி ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 43 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படித்து வரும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த 2,401 மாணவிகளுக்கு மாதாந்திரம் ரூபாய் ஆயிரம் வழங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதாந்திர உதவித்தொகை மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படும்.

    எனவே, மாணவி கள் உயர்கல்வி உறு தித்திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகையை தங்களது மேல்படிப்பை முடித்து, விருப்பமான பணியில் சேர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முதல்வர் நபிஷாபேகம் நன்றி கூறினார்.

    ×