search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "scotland"

    • திருடியவன் பணத்தை எடுத்து கொண்டு பையை டான் நதியில் வீசியுள்ளான்
    • பையில் இருந்த கிரெடிட் கார்டில் 1993 வருடம் குறிப்பிடப்பட்டிருந்தது

    வட கிழக்கு ஸ்காட்லேண்டு பகுதியில் உள்ள நகரம், அபர்டீன் (Aberdeen).

    அபர்டீனில் வசிப்பவர் 81 வயதாகும் ஆட்ரி ஹே (Audrey Hay). சுமார் 30 வருடங்களுக்கு முன் இவரது பணியிடத்தில் இவரின் விலை உயர்ந்த கைப்பை திருடு போனது. பறி போன அவர் பையில் அப்போது சுமார் 200 பவுண்ட் பணம் இருந்தது.

    ஆட்ரி காவல்துறையிடம் புகார் அளித்தார். ஆனால், காவல்துறையினரின் தேடலில் கைப்பை கிடைக்கவில்லை.

    திருடியவன் அந்த பையை டான் நதியில் (River Don) வீசி உள்ளான்.

    கடந்த செவ்வாய் அன்று மெய்சி கூட்ஸ் (Maisie Coutts) எனும் 11-வயது சிறுமி தான் வளர்க்கும் நாயுடனும், பெற்றோருடனும் டான் நதிக்கரையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கரை ஒதுங்கியிருந்த ஒரு பையை கண்டார். அதில் பேனாக்கள், சில்லறை நாணயங்கள், உதட்டு சாயம், ஆபரணங்கள், சாவி, சில மாத்திரைகள் என பல பொருட்கள் இருந்தன.

    அதில் இருந்த சில கிரெடிட் கார்டுகளில் 1993 வருடம் குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்பையின் மேலே இருந்த சில அடையாளங்கள் மற்றும் உள்ளே இருந்த பொருட்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உரிமையாளரை தேட தொடங்கினார் அந்த சிறுமி.

    தனது நீண்ட தேடலில் அப்பையின் உரிமையாளரான ஆட்ரியை கண்டு பிடித்தார் மெய்சி. உடனே அவரை தொடர்பு கொண்டு அப்பையை அவரிடமே சேர்த்தார்.


    இது குறித்து ஆட்ரி, "நான் எதிர்பார்க்கவே இல்லை. இத்தனை வருடங்கள் ஆகியும் அது அப்படியே உள்ளது. நான் தொலைத்த ஒரே பை இதுதான்" என தெரிவித்தார்.

    "சமூக வலைதளங்களின் தாக்கமும், பயன்பாடும் நம்ப முடியாததாக இருக்கிறது" என மெய்சியின் தாயார் கூறினார்.

    மெய்சியின் நேர்மைக்கும், உரிமையாளரிடம் பொருளை ஒப்படைக்க அவர் எடுத்த முயற்சிகளுக்கும் சமூக வலைதளங்களிலும், நேரிலும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    • இங்கிலாந்தில் 1817ல் தொடங்கப்பட்டது புகழ் பெற்ற காலின்ஸ் பதிப்பகம்
    • 2023க்கான வார்த்தை என்னவென்று அறிந்து கொள்ள பலரும் ஆர்வமுடன் இருந்தார்கள்

    இங்கிலாந்து நாட்டின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் உள்ளது பிரபல ஆங்கிலோ-அமெரிக்க புத்தக பதிப்பகமான ஹார்பர் காலின்ஸ் பதிப்பகம் (HarperCollins Publishers).

    1817ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் புகழ் பெற்ற காலின்ஸ் அகராதி (Collins Dictionary) எனும் உலக மக்களிடையே மிகவும் பிரபலமான அகராதியை பல மொழிகளில் பதிப்பித்து வருகிறது.

    பொது மக்களிடையேயும், பொது மேடைகளிலும், இணைய தளங்களிலும் அதிகம் புழக்கத்தில் உள்ள வார்த்தை எது என வருடாவருடம் காலின்ஸ் பதிப்பகத்தார், "காலின்ஸின் வருடத்திற்கான வார்த்தை" (Collins Word of the year) என கண்டறிந்து வெளியிடுவதும், மாணவர்கள், புத்தக பிரியர்கள் உட்பட பலரும் உலகெங்கிலும் ஒவ்வொரு வருடமும் அந்த வார்த்தை எது என ஆவலுடன் எதிர்பார்ப்பதும் வழக்கம்.

    "2023 வருடத்திற்கான வார்த்தை" என காலின்ஸ் அகராதி வெளியிட்டுள்ள வார்த்தை, "ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்" எனப்படும் செயற்கை நுண்ணறிவின் சுருக்கமான "ஏ.ஐ" (AI).

    இது குறித்து காலின்ஸ் அகராதி பதிப்பக நிர்வாக இயக்குனர் அலெக்ஸ் பீக்ராஃப்ட் (Alex Beecroft) தெரிவித்துள்ளதாவது:

    எங்கள் நிபுணர்கள் வானொலி, தொலைக்காட்சி, இணையம், பொதுவெளி உரையாடல்கள் உள்ளிட்ட தளங்களில் இருந்து 20 பில்லியனுக்கும் மேற்பட்ட வார்த்தைகள் கொண்ட உள்ளடக்க கருவூலங்களை ஆராய்ந்து இந்த முடிவை அறிவித்துள்ளனர். மிக குறுகிய காலத்தில் வளர்ந்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, இந்த வருடம் ஏஐ தான் உலகின் பேசுபொருளாக இருந்தது. நம்மை அறியாமலேயே நமது அன்றாட வாழ்க்கைக்கான சாதனங்களிலும் அது மறைந்துள்ளது. எதிர்கால தொழில்நுட்பங்களிலும் ஏஐ நன்றாக இணைந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உலகெங்கும் ஏஐ-யின் தாக்கம் பல்வேறு தொழில்களில் மாற்றத்தை ஏற்படுத்த போவதாக பல முன்னணி நாட்டின் தலைவர்கள் கவலை தெரிவித்து, இதன் பயன்பாடு குறித்து சட்டதிட்டங்களை விரைவில் ஒருங்கிணைந்து வகுக்க வேண்டும் என கூறி வந்தனர்.

    ஏஐ பயன்பாட்டில் கட்டுப்பாடு தேவை என்றும், இல்லையென்றால் அது மனித குலத்திற்கு ஆபத்தாக முடியும் என ஒரு சாராரும், செயற்கை நுண்ணறிவினால் நன்மையே என மற்றொரு சாராரும் காரசாரமாக சமூக வலைதளங்களிலும், பொது மேடைகளிலும், கருத்தரங்குகளிலும் விவாதித்து வருகின்றனர்.

    திரையுலகம் உள்ளிட்ட பல துறைகளில் உள்ளவர்களின் மகன்கள் அல்லது மகள்கள், அதே துறையில் வளர்ச்சியும் வெற்றியும் பெற்றால் அவர்களை "நெபோ பேபி" (nepo baby) என அழைக்கின்றனர். இந்த வார்த்தை "2023க்கான வார்த்தை" பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதாக காலின்ஸ் பதிப்பகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வெஸ்ட் இண்டீஸ் 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 ரன் எடுத்தது.
    • ஸ்காட்லாந்து அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்தது.

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.

    இந்த போட்டியில் கலந்து கொண்ட 10 அணிகளில் இருந்து ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஓமன், இலங்கை ஆகிய 6 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின.

    இதில் இருந்து இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு 2 அணிகள் தேர்வாகும்.

    இந்நிலையில், சூப்பர் 6 தொரின் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- ஸ்காட்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

    இந்த ஆட்டத்திற்கான டாசை ஸ்காட்லாந்து வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது.

    இதில், வெஸ்ட் இண்டீஸ் 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 ரன் எடுத்தது.

    தொடர்ந்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து ஆட்டத்தை தொடங்கியது.

    இந்த ஆட்டத்தின்போது பிரண்டன் மெக்முல்லன் மேத்யூ க்ராஸ் உடன் ஜோடி சேர்ந்து இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

    இந்த ஆட்டத்தின் முடிவில் ஸ்காட்லாந்து அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்தது.

    இதன்மூலம், ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றது.

    முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தது.

    • கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை பதவியில் நீடிப்பதாக தகவல்
    • நிகோலா ஸ்டர்ஜன் நாட்டிற்கு செய்த நீண்ட கால சேவைக்கு பிரதமர் ரிஷி சுனக் நன்றி தெரிவித்தார்.

    லண்டன்:

    பிரிட்டனின் ஸ்காட்லாந்து மாநில முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் நிகோலா ஸ்டர்ஜன் (வயது 53). ஸ்காட்லாந்து முதல் மந்திரியாக பதவி வகித்த முதல் பெண் மற்றும் நீண்ட காலம் பணியாற்றிய முதல் மந்திரி என்ற பெருமை பெற்ற இவர், ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக இன்று அறிவித்துள்ளார். ஆளுங்கட்சியான ஸ்காட்லாந்து தேசிய கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் நிகோலா ஸ்டர்ஜன் கூறியதாவது:-

    8 ஆண்டுகள் ஸ்காட்லாந்து தேசிய கட்சிக்கு தலைமை தாங்கிய பிறகு, பதவி விலகுவதற்கு சரியான நேரம் இது. இப்போது பதவி விலகுவதே எனக்கும், எனது கட்சிக்கும், நாட்டுக்கும் சரியானது. திருநங்கைகளின் உரிமைகள் பிரச்சனை பற்றி கட்சிக்குள் நிலவும் பிளவுகள் இருந்தாலும், இதன் காரணமாக பதவி விலகும் முடிவை எடுக்கவில்லை.

    கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை பதவியில் நீடிப்பேன். அத்துடன், 2026ல் பாராளுமன்ற தேர்தல் வரை ஸ்காட்லாந்து பாராளுமன்ற உறுப்பினராக இருப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதல் மந்திரி நிகோலா ஸ்டர்ஜன் நாட்டிற்கு செய்த நீண்ட கால சேவைக்கு நன்றி தெரிவிப்பதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறி உள்ளார். இதேபோல் மேலும் சில தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.

    ஸ்காட்லாந்தில் ஆதிக்கம் செலுத்தும் ஸ்காட்லாந்து தேசிய கட்சியின் முக்கிய தலைவர் வெளியேறுவதால், கன்சர்வேடிவ் மற்றும் தொழிலாளர் கட்சிகள் இழந்த செல்வாக்கை பெறுவதற்கு ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

    ஸ்காட்லாந்தின் சுதந்திரத்திற்காக நிகோலா ஸ்டர்ஜன் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ஸ்காட்லாந்து அணிக்கெதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஓமன் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. #SCOTvOMAN
    ஓமன் - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அல் அமராத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி ஓமன் அணி முதலில் களம் இறங்கியது. மொகமது நதிம், குர்ரம் நவாஸ் ஆகியோரின் பொறுப்பான அரை சதத்தால் 200 ரன்களை தாண்டியது.

    இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் ஓமன் அணி 8 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது.

    ஸ்காட்லாந்து அணி சார்பில் சப்யான் ஷரீப் 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது ஸ்காட்லாந்து அணி.

    ஆனால், ஓமன் அணியினரின் சிறப்பான பந்து வீச்சில் சிக்கிய ஸ்காட்லாந்து அணி 155 ரன்களில் ஆல் அவுட்டானது.
    இதையடுத்து, 93 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது ஓமன்.

    ஓமன் அணி சார்பில் மொகமது நதிம், பாதல் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், பிலால் கான், கலிமுல்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். #SCOTvOMAN
    நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் முத்தரப்பு டி20 தொடரின் ஸ்காட்லாந்து, அயர்லாந்து இடையிலான லீக் போட்டி டிராவில் முடிந்தது. #SCOvIRE #IREvSCO

    நெதர்லாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. 

    முதல் இரண்டு போட்டியிலும் நெதர்லாந்து அணி அயர்லாந்தை வீழ்த்தியது. மூன்றாவது போட்டியில் அயர்லாந்து, ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது. நேற்று நடைபெற்ற நான்காவது போட்டியில் ஸ்காட்லாந்து - அயர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இதையடுத்து ஸ்காட்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜார்ஜ் முன்சே, கைல் கொயிட்சர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முன்சே 25 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொயிட்சர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். 

    கொயிட்சர் 41 பந்தில் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேலம் மேக்லியாட் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தார். மைக்கெல் லீஸ்க் 4 ரன்னில் ரன்-அவுட் ஆனார். அதன்பின் வந்த மேத்தீவ் கிராஸ் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 186 ரன்களை இலக்காக கொண்டு அயர்லாந்து அணி பேட்டிங் செய்தது.



    அயர்லாந்து அணியின் பால் ஸ்டிர்லிங், ஜேம்ஸ் ஷனான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஷனான் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ஆண்ட்ரூ பால்பிர்னி 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து ஸ்டிர்லிங் உடன் சிமி சிங் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி ரன் குவித்தனர். 

    சிமி சிங் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த ஸ்டிர்லிங் 41 பந்தில் 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் கேரி வில்சன் - கெவின் ஓ பிரெயின் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். கேரி வில்சன் 20 ரன்களில் வெளியேறினார். 



    கடைசி ஓவரில் அயர்லாந்து அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் கெவின் ஓ பிரெயின் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. ஸ்காட்லாந்து அணி பந்துவீச்சில் சப்யான் ஷரிப், ஸ்டு ஒயிட்டிங்காம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து வருகிற 19-ம் தேதி நடைபெறும் ஐந்தாவது லீக் போட்டியில், ஸ்காட்லாந்து - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #SCOvIRE #IREvSCO
    நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் முத்தரப்பு டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் அயர்லாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது. #SCOvIRE #IREvSCO

    டெவெண்டெர்:

    நெதர்லாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டியிலும் நெதர்லாந்து அணி அயர்லாந்தை வீழ்த்தியது. இத்தொடரின் மூன்றாவது போட்டியில் ஸ்காட்லாந்து - அயர்லாந்து அணிகள் நேற்று மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இதையடுத்து அயர்லாந்து அணியின் பால் ஸ்டிர்லிங், ஜேம்ஸ் ஷனான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஷனான் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஸ்டிர்லிங் உடன் ஆண்ட்ரூ பால்பிர்னி ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி ரன் குவித்தனர். 



    அரைசதம் அடித்த ஸ்டிர்லிங் 29 பந்தில் 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து வந்த சிமி சிங் டக்-அவுட் ஆனார். அதன்பின் பால்பிர்னி உடன் கேரி வில்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். பால்பிர்னி 40 பந்தில் 74 ரன்கள் (11 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். கேரி வில்சன் 38 பந்தில் 58 ரன்களில் வெளியேறினார். 

    அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. ஸ்காட்லாந்து அணி பந்துவீச்சில் அலஸ்டையர் எவான்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 206 ரன்களை இலக்காக கொண்டு ஸ்காட்லாந்து அணி பேட்டிங் செய்தது.



    ஸ்காட்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜார்ஜ் முன்சே, கைல் கொயிட்சர் ஆகியோர் களமிறங்கினர். கொயிட்சர் 33 ரன்களிலும், முன்சே 41 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ரிச்சி பெர்ரிங்டன் 29 ரன்கள் எடுத்தார். அயர்லாந்து அணியினரின் பந்துவீச்சில் ரன்குவிக்க முடியாமல் ஸ்காட்லாந்து அணியினர் திணறினர்.

    தொடர்ந்து களமிறங்கிய கேலம் மேக்லியாட் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். டைலன் பட்ஜ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 23 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் அயர்லாந்து அணி 46 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது. அயர்லாந்து அணி பந்துவீச்சில் ஜார்ஜ் டாக்ரெல் 2 விக்கெட் வீழ்த்தினார். 

    இதைத்தொடர்ந்து வருகிற 16-ம் தேதி நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில், ஸ்காட்லாந்து - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #SCOvIRE #IREvSCO
    நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் முத்தரப்பு டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. #NEDvIRE #IREvNED

    ரோட்டர்டேம்:

    நெதர்லாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் நெதர்லாந்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் போட்டியில் நெதர்லாந்து அணி அயர்லாந்தை வீழ்த்தியது. இத்தொடரின் இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து - அயர்லாந்து அணிகள் நேற்று மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இதையடுத்து அயர்லாந்து அணியின் பால் ஸ்டிர்லிங், ஜேம்ஸ் ஷனான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஸ்டிர்லிங் 27 ரன்களிலும், ஜேம்ஸ் 31 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த வில்லியம் போர்டர்பீல்ட் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த சிமி சிங் 13 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார்.

    கேரி வில்சன் மட்டும் சற்று நிலைத்து நின்று விளையாடினார். எதிர் முனையில் வந்தவர்கள் பிரகாசிக்க தவறியதால் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. கேரி வில்சன் 45 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நெதர்லாந்து அணி பந்துவீச்சில் ரோலோப் வேன் டெர் மெர்வ் 2 விக்கெட் வீழ்த்தினார்.



    இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி பேட்டிங் செய்தது. நெதர்லாந்து அணியின் தோபியாஸ் விசே, மேக்ஸ் ஓதவ்த் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தோபியாஸ் 25 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பென் கூப்பர் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மேக்ஸ் ஓதவ்த் நிதானமாக விளையாடி 39 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 

    அதைத்தொடர்ந்து பஸ் டி லீடே 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் ரோலோப் வேன் டெர் மெர்வ், பீட்டர் சீலர் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். வேன் டெர் மெர்வ் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். பீட்டர் சீலர் 22 ரன்களுடன் களத்தில் இருந்தார். நெதர்லாந்து அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அயர்லாந்து அணி பந்துவீச்சில் ஜார்ஜ் டாக்ரெல் 2 விக்கெட் வீழ்த்தினார். 

    இதைத்தொடர்ந்து வருகிற 16-ம் தேதி நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில், ஸ்காட்லாந்து - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #NEDvIRE #IREvNED
    ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது. #SCOvPAK #PAKvSCO

    எடின்பர்க்:

    ஸ்காட்லாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி எடின்பர்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் பகர் ஜமான், அகமது ஷெசாத் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஷெசாத் 33 ரன்களிலும், ஜமான் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஹுசைன் தலாட் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 



    அதைத்தொடர்ந்து வந்த கேப்டன் சர்பராஸ் அகமது 14 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷோயிப் மாலிக் மட்டும் சற்று நிலைத்து நின்று விளையாடினார். மற்றவர்கள் பிராகசிக்க தவறியதால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. மாலிக் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்ஸர்கள் அடங்கும். ஸ்காட்லாந்து அணி பந்துவீச்சில் மைக்கெல் லீஸ்க் 3 விக்கெட்களும், கிறிஸ் சோலே 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜார்ஜ் முன்சே, கைல் கொயிட்செர் ஆகியோர் களமிறங்கினர். முன்சே முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆனார்.  அதன்பின் வந்த ரிச்சி பெர்ரிங்டன் நிதானமாக ரன் சேர்த்தனர். அவர் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். கொயிட்செர் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.



    அதைத்தொடர்ந்து வந்த கலம் மெக்லியோட் 26 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஸ்காட்லாந்து அணி 14.4 ஓவர்களில் 82 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் பஹீம் அஷ்ரப் 3 விக்கெட்களும், உஸ்மான் கான் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். பாகிஸ்தான் அணியின் உஸ்மான் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார். #SCOvPAK #PAKvSCO

    ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் டி20 தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது. #SCOvPAK #PAKvSCO

    எடின்பர்க்:

    ஸ்காட்லாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி எடின்பர்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி பாகிஸ்தான் அணியின் பகர் ஜமான், அகமது ஷெசாத் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஷெசாத் 14 ரன்களிலும், ஜமான் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஹுசைன் தலாட் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து கேப்டன் சர்பராஸ் அகமது, ஷோயிப் மாலிக் ஆகியோர் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 



    இருவரும் அரைசதம் கடந்தனர். அதிரடியாக விளையாடிய மாலிக் 27 பந்தில் 5 சிக்ஸர்கள் உட்பட 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது. சர்பராஸ் அகமது இறுதிவரை ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். ஸ்காட்லாந்து அணி பந்துவீச்சில் அலஸ்டெய்ர் எவான்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜார்ஜ் முன்சே, கைல் கொயிட்செர் ஆகியோர் களமிறங்கினர். முன்சே 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ரிச்சி பெர்ரிங்டன் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். கைல் கொயிட்செர் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.



    இதுதவிர டைலான் பட்ஜ் 4 ரன்கள், கலம் மெக்லியோட் 12 ரன்கள், மேத்தீவ் கிராஸ் 13 ரன்கள் எடுத்தனர். மைக்கெல் லீஸ்க் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 38 ரன்கள் எடுத்தார். ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் ஹசன் அலி, ஷதப் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.

    பாகிஸ்தான் அணியின் சர்பிராஸ் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார். ஸ்காட்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. #SCOvPAK #PAKvSCO
    நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் முத்தரப்பு டி20 தொடரின் முதல் போட்டியில் நெதர்லாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. #NEDvIRE #IREvNED

    ரோட்டர்டேம்:

    நெதர்லாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் நெதர்லாந்தில் நேற்று தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் நெதர்லாந்து - அயர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து நெதர்லாந்து அணியின் தோபியாஸ் விசே, மேக்ஸ் ஓதவ்த் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தோபியாஸ் 15 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பென் கூப்பர் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மேக்ஸ் ஓதவ்த் 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். அதைத்தொடர்ந்து சாகிப் சுல்பிகர் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.



    அதன்பின் பஸ் டி லீடே, பீட்டர் சீலர் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். சீலர் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். லீடே 33 ரன்கள் எடுத்தார். நெதர்லாந்து அணி 19.5 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அயர்லாந்து அணி பந்துவீச்சில் பேரி மெக்கர்த்தி, சிமி சிங் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 

    அதைத்தொடர்ந்து 145 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் அயர்லாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்டூவர்ட் தாம்ப்சன், பால் ஸ்டிர்லிங் ஆகியோர் களமிறங்கினர். தாம்ப்சன் 15 ரன்களிலும், ஸ்டிர்லிங் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்தவர்கள் நெதர்லாந்து அணியின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.



    இதனால் அயர்லாந்து அணி 63 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது. இறுதியில் சிமி சிங் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நெதர்லாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. சிமி சிங் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். நெதர்லாந்து அணி பந்துவீச்சில் பீட்டர் சீலர் 3 விக்கெட்களும், ஷேன் ஸ்னாடர் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

    இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில், நெதர்லாந்து - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #NEDvIRE #IREvNED
    ஸ்காட்லாந்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் வலுவான இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் கத்துக்குட்டி அணியான ஸ்காட்லாந்து வீழ்த்தியது. #SCOTvENG #OnedayMatch
    எடின்பர்க்:

    ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி கடைக்கோடியில் இருக்கும் ஸ்காட்லாந்துக்கு எதிராக ஒரேயொரு போட்டியில் இன்று விளையாடியது. இந்த ஆட்டம் எடின்பர்க்கில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஸ்காட்லாந்து அணியின் கிராஸ், கோயெட்சர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கிராஸ் 39 பந்தில் 48 ரன்களும், கோயெட்சர் 49 பந்தில் 58 ரன்களும் சேர்த்தனர்.

    அதன்பின் வந்த மெக்லியோட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 94 பந்தில் 16 பவுண்டரி, 3 சிக்சருடன் 140 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்கவும், அவருக்கு துணையாக முன்சே 51 பந்தில் 55 ரன்கள் சேர்க்கவும் ஸ்காட்லாந்து 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது.

    இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், பிளங்கெட் ஆகியோர் 2 விக்கெட்டும், மார்க் வுட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.



    அதன்பின், 372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 129 ரன்களை எடுத்தது. ஜேசன் ராய் 34 ரன்னில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய அலெக்ஸ் ஹேல்ஸ் பேர்ஸ்டோவுக்கு ஒத்துழைப்பு அளித்தார். 

    பேர்ஸ்டோவ் தனது அதிரடியை காட்டினார். அவர் 59 பந்துகளில் 6 சிக்சர், 12 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து இறங்கிய ஜோ ரூட் 29 ரன்னில் வெளியேறினார். அலெக்ஸ் ஹேல்சும் அரை சதமடித்தார். அவர் 52 ரன்களில் அவுட்டானார். மொயின் அலி 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், லியாம் பிளங்கெட் தனியாக நின்று போராடினார். கடைசி 2 ஒவர்களில் 10 ரன்கள் தேவைப்பட்டது. 49-வது ஓவரின் முதல் பந்தில் அதில் ரஷித் ரன் அவுட்டானார். அடுத்த  3 பந்துகளில் தலா ஒரு ரன் பெறப்பட்டது. ஐந்தாவது பந்தில் மார்க் வுட் அவுட்டானார். இறுதியில், இங்கிலாந்து அணி 48.5 ஓவரில் 365 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிளங்கெட் 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஸ்காட்லாந்து சார்பில் மார்க் வாட் 3 விக்கெட்டும், அலாஸ்டெய்ர் எவன்ஸ், ரிச்சி பெரிங்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    வலுவான இங்கிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்காட்லாந்து வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆட்ட நாயகன் விருதுக்கு மெக்லியோட் தேர்வு செய்யப்பட்டார். #SCOTvENG #OnedayMatch
    ×