என் மலர்
நீங்கள் தேடியது "Scotland"
- ஜார்ஜ் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- இத்தாலி சார்பில் பென் தன் 52 ரன்களை விளாசினர்.
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று இத்தாலி மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இத்தாலி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்த ஸ்காட்லாந்து அணி 207 ரன்கள் குவித்தது.
ஸ்காட்லாந்து தரப்பில் தொடக்க வீரர்களாக ஜார்ஜ் முன்சே - மைக்கேல் ஜோன்ஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது. இதில் ஜார்ஜ் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து மைக்கேல் ஜோன்ஸ் 37 ரன்களில் அவுட் ஆனார்.
கடின இலக்கை துரத்திய இத்தாலி அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. இத்தாலி அணியின் துவக்க வீரரான ஜஸ்டின் மொசகா டக் அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய அந்தோனி (13), ஸ்மட்ஸ் (22) என வந்த வேகத்தில் ஆட்டமிழந்தனர். பிறகு களமிறங்கிய ஹேரி அதிரடியாக ஆடினார்.
இவர் 25 பந்துகளில் 37 ரன்கள் (1 பவுண்டரி, 3 சிக்சர்கள்) விளாச இவருடன் ஆடிய பென் தன் பங்கிற்கு 31 பந்துகளில் 52 ரன்களை (5 பவுண்டரிகள், 1 சிக்சர்) விளாசினர். எனினும், அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இத்தாலி அணி 16.4 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஸ்காட்லாந்து அணி 73 ரன்களில் அபார வெற்றி பெற்றது.
ஸ்காட்லாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய மைக்கேல் லீஸ்க் 4 விக்கெட்டுகளையும், மார்க் வாட் 2 விக்கெட்டுகளையும், பிராட் கரி, பிராட் வீல் மற்றும் ஆலிவர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- டி20 உலகக் கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் இத்தாலி- ஸ்காட்லாந்து அணிகள் மோதி வருகிறது.
- முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 207 ரன்கள் குவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று இத்தாலி மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற இத்தாலி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஸ்காட்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜார்ஜ் முன்சே- மைக்கேல் ஜோன்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது.
இதில் ஜார்ஜ் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து மைக்கேல் ஜோன்ஸ் 37 ரன்களில் அவுட் ஆனார். அடுத்த வந்த கேப்டன் ரிச்சி பெரிங்டன் 15 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராண்டன் மெக்முல்லன் 18 பந்தில் 41 ரன்களும் மைக்கேல் லீஸ்க் 5 பந்தில் 22 ரன்கள் எடுத்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்த ஸ்காட்லாந்து அணி 207 ரன்கள் குவித்தது.
இதன்மூலம் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் 200+ ரன்களை குவித்த அணி என்ற பெருமையை ஸ்காட்லாந்து அணி பெற்றுள்ளது. பெரிய அணிகள் கூட 200 ரன்களை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடமாட்டோம் என வங்கதேசம் தெரிவித்தது.
- தங்கள் அணி ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேசம் வலியுறுத்தியது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அங்கம் வகித்த வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமானை, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உத்தரவின் பேரில் அந்த அணி நிர்வாகம் விடுவித்தது. வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த வங்கதேசம், இந்திய மண்ணில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடமாட்டோம். அங்கு எங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. எனவே தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்தும் மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது.
ஆனால் கடைசி நேரத்தில் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்வது இயலாத காரியம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கைவிரித்தது.
இதையடுத்து 2026 டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்நிலையில், வங்கதேச அணி விலகியதால் ஸ்காட்லாந்து அணி டி20 உலகக்கோப்பையில் சேர்க்கப்பட்டுள்ளது.
- ஜூன் 1-ம் தேதி முதல் திருநங்கைகள் இனி பெண்கள் கால்பந்தில் பங்கேற்க முடியாது.
- இங்கிலாந்து, ஸ்காட்லாந்து நாடுகள் இந்த தடையை விதித்துள்ளன.
லண்டன்:
சமீபத்தில் இங்கிலாந்து உச்சநீதிமன்றம் ஒரு பெண்ணின் சட்ட வரையறை உயிரியல் பாலினத்தை அடிப்படையாகக் கொண்டது என கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்நிலையில், வரும் ஜூன் 1-ம் தேதி முதல் திருநங்கைகள் இனி பெண்கள் கால்பந்தில் பங்கேற்க முடியாது என இங்கிலாந்து கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.
இதனால் இங்கிலாந்தில் பதிவு செய்துள்ள 20-க்கும் மேற்பட்ட திருநங்கை வீராங்கனைகள் பாதிக்கப்படுவார்கள் என கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.
திருநங்கைகள் தங்கள் டெஸ்டோஸ்டெரோன் அளவு 12 மாதங்களுக்கு குறைவாக இருந்தால் பெண்கள் அணியில் விளையாட அனுமதி இருந்தது. தற்போதைய சட்ட மாற்றத்தால் இந்தக் கொள்கை திரும்பப் பெற காரணமாகியுள்ளது.
இதேபோல், ஸ்காட்லாந்து கால்பந்து சங்கமும் சமீபத்தில் அதே விதியை அறிவித்துள்ளது.
- கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை பதவியில் நீடிப்பதாக தகவல்
- நிகோலா ஸ்டர்ஜன் நாட்டிற்கு செய்த நீண்ட கால சேவைக்கு பிரதமர் ரிஷி சுனக் நன்றி தெரிவித்தார்.
லண்டன்:
பிரிட்டனின் ஸ்காட்லாந்து மாநில முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் நிகோலா ஸ்டர்ஜன் (வயது 53). ஸ்காட்லாந்து முதல் மந்திரியாக பதவி வகித்த முதல் பெண் மற்றும் நீண்ட காலம் பணியாற்றிய முதல் மந்திரி என்ற பெருமை பெற்ற இவர், ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக இன்று அறிவித்துள்ளார். ஆளுங்கட்சியான ஸ்காட்லாந்து தேசிய கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் நிகோலா ஸ்டர்ஜன் கூறியதாவது:-
8 ஆண்டுகள் ஸ்காட்லாந்து தேசிய கட்சிக்கு தலைமை தாங்கிய பிறகு, பதவி விலகுவதற்கு சரியான நேரம் இது. இப்போது பதவி விலகுவதே எனக்கும், எனது கட்சிக்கும், நாட்டுக்கும் சரியானது. திருநங்கைகளின் உரிமைகள் பிரச்சனை பற்றி கட்சிக்குள் நிலவும் பிளவுகள் இருந்தாலும், இதன் காரணமாக பதவி விலகும் முடிவை எடுக்கவில்லை.
கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை பதவியில் நீடிப்பேன். அத்துடன், 2026ல் பாராளுமன்ற தேர்தல் வரை ஸ்காட்லாந்து பாராளுமன்ற உறுப்பினராக இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் மந்திரி நிகோலா ஸ்டர்ஜன் நாட்டிற்கு செய்த நீண்ட கால சேவைக்கு நன்றி தெரிவிப்பதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறி உள்ளார். இதேபோல் மேலும் சில தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.
ஸ்காட்லாந்தில் ஆதிக்கம் செலுத்தும் ஸ்காட்லாந்து தேசிய கட்சியின் முக்கிய தலைவர் வெளியேறுவதால், கன்சர்வேடிவ் மற்றும் தொழிலாளர் கட்சிகள் இழந்த செல்வாக்கை பெறுவதற்கு ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
ஸ்காட்லாந்தின் சுதந்திரத்திற்காக நிகோலா ஸ்டர்ஜன் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
- வெஸ்ட் இண்டீஸ் 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 ரன் எடுத்தது.
- ஸ்காட்லாந்து அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்தது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.
இந்த போட்டியில் கலந்து கொண்ட 10 அணிகளில் இருந்து ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஓமன், இலங்கை ஆகிய 6 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின.
இதில் இருந்து இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு 2 அணிகள் தேர்வாகும்.
இந்நிலையில், சூப்பர் 6 தொரின் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- ஸ்காட்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாசை ஸ்காட்லாந்து வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது.
இதில், வெஸ்ட் இண்டீஸ் 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 ரன் எடுத்தது.
தொடர்ந்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து ஆட்டத்தை தொடங்கியது.
இந்த ஆட்டத்தின்போது பிரண்டன் மெக்முல்லன் மேத்யூ க்ராஸ் உடன் ஜோடி சேர்ந்து இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
இந்த ஆட்டத்தின் முடிவில் ஸ்காட்லாந்து அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம், ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றது.
முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தது.
- இங்கிலாந்தில் 1817ல் தொடங்கப்பட்டது புகழ் பெற்ற காலின்ஸ் பதிப்பகம்
- 2023க்கான வார்த்தை என்னவென்று அறிந்து கொள்ள பலரும் ஆர்வமுடன் இருந்தார்கள்
இங்கிலாந்து நாட்டின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் உள்ளது பிரபல ஆங்கிலோ-அமெரிக்க புத்தக பதிப்பகமான ஹார்பர் காலின்ஸ் பதிப்பகம் (HarperCollins Publishers).
1817ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் புகழ் பெற்ற காலின்ஸ் அகராதி (Collins Dictionary) எனும் உலக மக்களிடையே மிகவும் பிரபலமான அகராதியை பல மொழிகளில் பதிப்பித்து வருகிறது.
பொது மக்களிடையேயும், பொது மேடைகளிலும், இணைய தளங்களிலும் அதிகம் புழக்கத்தில் உள்ள வார்த்தை எது என வருடாவருடம் காலின்ஸ் பதிப்பகத்தார், "காலின்ஸின் வருடத்திற்கான வார்த்தை" (Collins Word of the year) என கண்டறிந்து வெளியிடுவதும், மாணவர்கள், புத்தக பிரியர்கள் உட்பட பலரும் உலகெங்கிலும் ஒவ்வொரு வருடமும் அந்த வார்த்தை எது என ஆவலுடன் எதிர்பார்ப்பதும் வழக்கம்.
"2023 வருடத்திற்கான வார்த்தை" என காலின்ஸ் அகராதி வெளியிட்டுள்ள வார்த்தை, "ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்" எனப்படும் செயற்கை நுண்ணறிவின் சுருக்கமான "ஏ.ஐ" (AI).
இது குறித்து காலின்ஸ் அகராதி பதிப்பக நிர்வாக இயக்குனர் அலெக்ஸ் பீக்ராஃப்ட் (Alex Beecroft) தெரிவித்துள்ளதாவது:
எங்கள் நிபுணர்கள் வானொலி, தொலைக்காட்சி, இணையம், பொதுவெளி உரையாடல்கள் உள்ளிட்ட தளங்களில் இருந்து 20 பில்லியனுக்கும் மேற்பட்ட வார்த்தைகள் கொண்ட உள்ளடக்க கருவூலங்களை ஆராய்ந்து இந்த முடிவை அறிவித்துள்ளனர். மிக குறுகிய காலத்தில் வளர்ந்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, இந்த வருடம் ஏஐ தான் உலகின் பேசுபொருளாக இருந்தது. நம்மை அறியாமலேயே நமது அன்றாட வாழ்க்கைக்கான சாதனங்களிலும் அது மறைந்துள்ளது. எதிர்கால தொழில்நுட்பங்களிலும் ஏஐ நன்றாக இணைந்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உலகெங்கும் ஏஐ-யின் தாக்கம் பல்வேறு தொழில்களில் மாற்றத்தை ஏற்படுத்த போவதாக பல முன்னணி நாட்டின் தலைவர்கள் கவலை தெரிவித்து, இதன் பயன்பாடு குறித்து சட்டதிட்டங்களை விரைவில் ஒருங்கிணைந்து வகுக்க வேண்டும் என கூறி வந்தனர்.
ஏஐ பயன்பாட்டில் கட்டுப்பாடு தேவை என்றும், இல்லையென்றால் அது மனித குலத்திற்கு ஆபத்தாக முடியும் என ஒரு சாராரும், செயற்கை நுண்ணறிவினால் நன்மையே என மற்றொரு சாராரும் காரசாரமாக சமூக வலைதளங்களிலும், பொது மேடைகளிலும், கருத்தரங்குகளிலும் விவாதித்து வருகின்றனர்.
திரையுலகம் உள்ளிட்ட பல துறைகளில் உள்ளவர்களின் மகன்கள் அல்லது மகள்கள், அதே துறையில் வளர்ச்சியும் வெற்றியும் பெற்றால் அவர்களை "நெபோ பேபி" (nepo baby) என அழைக்கின்றனர். இந்த வார்த்தை "2023க்கான வார்த்தை" பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதாக காலின்ஸ் பதிப்பகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- திருடியவன் பணத்தை எடுத்து கொண்டு பையை டான் நதியில் வீசியுள்ளான்
- பையில் இருந்த கிரெடிட் கார்டில் 1993 வருடம் குறிப்பிடப்பட்டிருந்தது
வட கிழக்கு ஸ்காட்லேண்டு பகுதியில் உள்ள நகரம், அபர்டீன் (Aberdeen).
அபர்டீனில் வசிப்பவர் 81 வயதாகும் ஆட்ரி ஹே (Audrey Hay). சுமார் 30 வருடங்களுக்கு முன் இவரது பணியிடத்தில் இவரின் விலை உயர்ந்த கைப்பை திருடு போனது. பறி போன அவர் பையில் அப்போது சுமார் 200 பவுண்ட் பணம் இருந்தது.
ஆட்ரி காவல்துறையிடம் புகார் அளித்தார். ஆனால், காவல்துறையினரின் தேடலில் கைப்பை கிடைக்கவில்லை.
திருடியவன் அந்த பையை டான் நதியில் (River Don) வீசி உள்ளான்.
கடந்த செவ்வாய் அன்று மெய்சி கூட்ஸ் (Maisie Coutts) எனும் 11-வயது சிறுமி தான் வளர்க்கும் நாயுடனும், பெற்றோருடனும் டான் நதிக்கரையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது கரை ஒதுங்கியிருந்த ஒரு பையை கண்டார். அதில் பேனாக்கள், சில்லறை நாணயங்கள், உதட்டு சாயம், ஆபரணங்கள், சாவி, சில மாத்திரைகள் என பல பொருட்கள் இருந்தன.
அதில் இருந்த சில கிரெடிட் கார்டுகளில் 1993 வருடம் குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்பையின் மேலே இருந்த சில அடையாளங்கள் மற்றும் உள்ளே இருந்த பொருட்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உரிமையாளரை தேட தொடங்கினார் அந்த சிறுமி.
தனது நீண்ட தேடலில் அப்பையின் உரிமையாளரான ஆட்ரியை கண்டு பிடித்தார் மெய்சி. உடனே அவரை தொடர்பு கொண்டு அப்பையை அவரிடமே சேர்த்தார்.

இது குறித்து ஆட்ரி, "நான் எதிர்பார்க்கவே இல்லை. இத்தனை வருடங்கள் ஆகியும் அது அப்படியே உள்ளது. நான் தொலைத்த ஒரே பை இதுதான்" என தெரிவித்தார்.
"சமூக வலைதளங்களின் தாக்கமும், பயன்பாடும் நம்ப முடியாததாக இருக்கிறது" என மெய்சியின் தாயார் கூறினார்.
மெய்சியின் நேர்மைக்கும், உரிமையாளரிடம் பொருளை ஒப்படைக்க அவர் எடுத்த முயற்சிகளுக்கும் சமூக வலைதளங்களிலும், நேரிலும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
- மழையால் இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் 109 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு கொடுக்கப்பட்டது.
- மீண்டும் மழை தொடர்ந்து நிற்காமல் பெய்துகொண்டிருந்தது. இதனால் ஆட்டம் பாதியிலேயே கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
பிரிட்ஜ்டவுண்:
டி20 உலகக்கோப்பையில் நேற்று இரவு நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜார்ஜ் முன்சி மற்றும் மைக்கேல் ஜோன்ஸ் இருவரும் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 90 ரன்கள் எடுத்திருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது.
தொடர்ந்து பெய்த மழை, சில மணி நேரங்களுக்கு பின்னர் நின்றது. இதனால் முழு போட்டியையும் நடத்தாமல் 10 ஓவர்களாக கொண்ட போட்டியாக நடத்த முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் 109 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு கொடுக்கப்பட்டது.
எனினும், மீண்டும் மழை தொடர்ந்து நிற்காமல் பெய்துகொண்டிருந்தது. இதனால் ஆட்டம் பாதியிலேயே கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இங்கிலாந்து அணி எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழையால் போட்டி கைவிடப்பட்டதால் அந்நாட்டு வீரர்கள் ஏமாற்றமடைந்தனர்.
- போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது.
- ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ருடிகர் செய்த தவறால் ஸ்காட்லாந்துக்கு ஒரு கோல் கிடைத்தது.
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நேற்று தொடங்கியது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஜெர்மனியும் ஸ்காட்லாந்தும் மோதின.
இந்தப் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த ஜெர்மனியில் ஃப்ளேரியன், முசைலா 10 மற்றும் 19-வது நிமிடங்களில் கோல் அடித்தனர். இதனால் ஸ்காட்லாந்து அணி வீரர் ரியான் போர்டியஸ் ஆக்ரோஷமாக விளையாடியதால் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இதனால், ஜெர்மனிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் ஹவர்ட்ஸ், நிக்லஸ், கேன் தலா ஒரு கோல் அடித்தனர். ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ருடிகர் செய்த தவறால் ஸ்காட்லாந்துக்கு ஒரு கோல் கிடைத்தது.
அதன் பின் போட்டி நேரமான 90 நிமிடங்கள் முடிவடைந்து கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. அதில் ஜெர்மனி தனது ஐந்தாவது கோலை அடித்தது. அந்த அணியின் எம்ரே கேன் ஐந்தாவது கோலை அடித்தார். இதன் மூலம் 5 - 1 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி ஜெர்மனி அபார வெற்றியை பெற்றது.
- இங்கிலாந்து அணி வெளியேறுவதையே ஆஸ்திரேலியா அணி விரும்பும்.
- ஆஸ்திரேலியா ஒருபோதும் விளையாட்டின் ஆன்மாவிற்கு எதிராக செயல்படாது.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரே பிரிவில் உள்ள இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள், சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல போட்டி போட்டு வருகின்றன.
3 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்காட்லாந்து அணி 2 வெற்றி 1 டிரா உடன் 5 புள்ளிகளுடனும் 2-ம் இடத்திலும் 3 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி ஒரு வெற்றி 1 டிரா மற்றும் 1 தோல்வி என 3 புள்ளிகளுடனும் 3-ம் இடத்திலும் உள்ளது
இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு செல்ல ஸ்காட்லாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்விடைய வேண்டும். இங்கிலாந்து அணி கடைசி லீக் போட்டியில் வெற்றி பெறவேண்டும்.
ஒருவேளை ஆஸ்திரேலியா அணி ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் தோற்றால் இங்கிலாந்து அணி தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும்.
இந்நிலையில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டி குறித்து பேசிய ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஹசல்வுட், "இங்கிலாந்து அணி வெளியேறுவதையே ஆஸ்திரேலியா அணி விரும்பும். எனவே ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் மெதுவாக ஆடவே ஆஸ்திரேலியா அணி விரும்பும், மற்ற அணிகளும் அதையே தான் விரும்புவார்கள்" என்று பேசியிருந்தார்.
ஹசல்வுட்டின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து ஆஸ்திரேலியா அணியின் டெஸ்ட், ஒரு நாள் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
"ஹசல்வுட் இதை பற்றி நகைச்சுவையாகவே பேசியிருந்தார். ஆனால் அவர் கூறியதை திரித்து அதை பேசுபொருளாக மாற்றியுள்ளனர். நாங்கள் ஸ்காட்லாந்துக்கு எதிராக முழு முயற்சியுடன் விளையாடுவோம். அவர்கள் ஒரு வலிமையான எதிரியாக எங்களுக்கு இருப்பார்கள். ஆஸ்திரேலியா ஒருபோதும் விளையாட்டின் ஆன்மாவிற்கு எதிராக செயல்படாது" என்று கம்மின்ஸ் தெரிவித்தார்.
- ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
- மெக்குல்லென் 34 பந்துகளில் 60 ரன்களை விளாசினார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 35-வது போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ஜார்ஜ் முன்செ 23 பந்துகளில் 35 ரன்களை அடுத்து அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய மைக்கேல் ஜோன்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்து வந்த பிரெண்டன் மெக்குல்லென் 34 பந்துகளில் 60 ரன்களை விளாசினார். இதில் 2 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும். அடுத்து வந்த கேப்டன் ரிச்சி பெரிங்டன் ஆட்டமிழக்காமல் 31 பந்துகளில் 42 ரன்களை சேர்த்தார். இதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்களை குவித்தது.
ஆஸ்திரேலியா சார்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளையும், ஆஷ்டன் ஆகர், நாதன் எல்லிஸ் மற்றும் ஆடம் ஜாம்பா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.






