என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Womens Football"

    • ஜூன் 1-ம் தேதி முதல் திருநங்கைகள் இனி பெண்கள் கால்பந்தில் பங்கேற்க முடியாது.
    • இங்கிலாந்து, ஸ்காட்லாந்து நாடுகள் இந்த தடையை விதித்துள்ளன.

    லண்டன்:

    சமீபத்தில் இங்கிலாந்து உச்சநீதிமன்றம் ஒரு பெண்ணின் சட்ட வரையறை உயிரியல் பாலினத்தை அடிப்படையாகக் கொண்டது என கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தீர்ப்பளித்தது.

    இந்நிலையில், வரும் ஜூன் 1-ம் தேதி முதல் திருநங்கைகள் இனி பெண்கள் கால்பந்தில் பங்கேற்க முடியாது என இங்கிலாந்து கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.

    இதனால் இங்கிலாந்தில் பதிவு செய்துள்ள 20-க்கும் மேற்பட்ட திருநங்கை வீராங்கனைகள் பாதிக்கப்படுவார்கள் என கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.

    திருநங்கைகள் தங்கள் டெஸ்டோஸ்டெரோன் அளவு 12 மாதங்களுக்கு குறைவாக இருந்தால் பெண்கள் அணியில் விளையாட அனுமதி இருந்தது. தற்போதைய சட்ட மாற்றத்தால் இந்தக் கொள்கை திரும்பப் பெற காரணமாகியுள்ளது.

    இதேபோல், ஸ்காட்லாந்து கால்பந்து சங்கமும் சமீபத்தில் அதே விதியை அறிவித்துள்ளது.

    • வெற்றி பெற்ற விராங்கனைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் ரெயில் நிலையம் வந்திருந்தனர்.
    • இறுதிப்போட்டியுடன் சேர்த்து மொத்தம் 10 போட்டிகளில் விளையாடியதாக வீராங்கனைகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடைபெற்ற 27வது சீனியர் தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு பெண்கள் அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. போட்டியில் வென்ற அணியினர் இன்று தமிழகம் திரும்பினர். வெற்றிக் கோப்பையுடன் வந்த அவர்களுக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வீராங்கனைகளை வரவேற்று உற்சாகப்படுத்தும் வகையில் ரெயில் நிலையத்தில் மேளதாளங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    மேலும், வெற்றி பெற்ற விராங்கனைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் ரெயில் நிலையம் வந்து இனிப்புகள் வழங்கியும் மாலை அணிவித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வீராங்கனைகள், 'இறுதிப்போட்டியுடன் சேர்த்து மொத்தம் 10 போட்டிகளில் ஆடியதாகவும், லீக் போட்டி முதல் அனைத்து போட்டிகளிலும் அதிக கோல்கள் அடித்து வெற்றி பெற்றதாகவும் கூறினர்.


    • ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா வண்ணமயமான கலைநிகழ்ச்சியுடன் இன்று நடைபெறுகிறது.
    • ஒலிம்பிக் தொடரின் மகளிர் கால்பந்து போட்டியில் பிரான்ஸ், அமெரிக்கா ஆகியவை வென்றன.

    பாரீஸ்:

    ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் பிரமாண்ட தொடக்கவிழா இன்று நடைபெறுகிறது.

    இந்நிலையில், ஒலிம்பிக் தொடரில் மகளிர் கால்பந்து போட்டி இன்று தொடங்கியது.

    குரூப் ஏ பிரிவில் நடந்த போட்டியில் பிரான்ஸ், கொலம்பியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றியைப் பதிவு செய்தது.

    இதேபோல், குரூப் பி பிரிவில் ஒலிம்பிக்கில் 4 முறை தங்கம் வென்ற அமெரிக்க அணி ஜாம்பிய அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஸ்வாசன் மலோரி 24 மற்றும் 25வது நிமிடத்தில் அடுத்தடுத்து 2 கோல் அடித்து அசத்தினார்.

    ×