தண்டவாளத்தை கடக்க முயன்றால் உயிருக்கு ஆபத்து

காட்பாடி ரெயில்வே போலீசார் விழிப்புணர்வு புகைப்ப டங்களை காட்டி விளக்கினர்
தண்டவாளத்தை கடக்க முயன்றால் உயிருக்கு ஆபத்து
Published on

வேலூர்:

காட்பாடி அருகே உள்ள பள்ளிக்குப்பம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது அவர் மீது ரெயில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதனை தொடர்ந்து தண்டவாள பகுதிகளில் பொதுமக்கள் செல்வதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த ரெயில்வே கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா உத்தரவிட்டார்.

அதன் பேரில் காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுமதி, வசந்தி தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பத்மராஜா ஆகியோர் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பள்ளிக்குப்பம் மற்றும் ஆவரங்காடு கிராமங்களில் விழிப்புணர்வு பேனர்கள் மற்றும் ரெயில் தண்டவா ளங்களை கடந்த போது அடிபட்டு இறந்தவர்கள் புகைப்ப டங்களை காட்டி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அருகாமையில் உள்ள நிலத்தில் வேலை செய்யும் விவசாயிகள் தெரியாமல் ஆடு மாடுகளை தண்டவா ளப்பாதையில் மேய்ப்பது குற்றம்.

தண்டவாளத்தில் விளையாட்டு தனமாக குழந்தைகள் கற்களை வைப்பது குற்றம் என்பதை வலியுறுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com