search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விதிமுறைகளில் திருத்தம் - தகவல் ஆணைய விசாரணைக்கு இனி நேரில் ஆஜராக தேவையில்லை
    X

    கோப்புபடம்.

    விதிமுறைகளில் திருத்தம் - தகவல் ஆணைய விசாரணைக்கு இனி நேரில் ஆஜராக தேவையில்லை

    • லஞ்ச ஊழலுக்கு எதிராக போராடுவோர் ஏராளமான மனுக்களை அனுப்பி வைக்கின்றனர்.
    • தகவல் உரிமைச்சட்ட ஆர்வலர்களுக்கும், பொதுமக்களுக்கும் சிரமம் அளிப்பதாக இருந்தது.

    தாராபுரம் :

    தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி அரசு துறை அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவன ங்களில் இருந்து தேவை யான தகவல்களை பொதுமக்கள் கோரி பெற முடியும்.இதை பயன்படுத்தி பொதுமக்கள், தகவல் உரிமைச்சட்ட ஆர்வலர்கள், லஞ்ச ஊழலுக்கு எதிராக போராடுவோர் ஏராளமான மனுக்களை அனுப்பி வைக்கின்றனர்.இவ்வாறு வரும் மனுக்களுக்கு உரிய தகவல்களை அனுப்பி வைப்பதற்காக ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் பொது தகவல் அலுவலர் பணியில் இருப்பார்.

    விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள், தகவல் அலுவலர் பதில் அளிக்க வேண்டும் என்பது விதி முறை. கோரிக்கை நிராக ரிக்கப்பட்டால் மனுதாரர் மேல் முறையீடு செய்யலாம்.மேல் முறையீட்டின்போது மனுதாரர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று விதிமுறை இதுநாள் வரை இருந்தது. ஒரு வேளை அவர் நேரில் வர முடியாவிட்டால் எழுத்துபூ ர்வமாக மனு தாக்கல் செய்யும் நடைமுறை இருந்தது. இது தகவல் உரிமை ச்சட்ட ஆர்வல ர்களுக்கும், பொதுமக்களுக்கும் சிரமம் அளிப்பதாக இருந்தது. அதை கருத்தில் கொண்டு விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் மனித வள மேம்பாட்டுத்து றை செயலாளர் பிறப்பித்த அரசாணைப்படி மேல் முறையீட்டு மனு விசா ரணைக்கு மனுதாரர் நேரில் ஆஜராக தேவை யில்லை.இதற்கெனதகவல் ஆணை யத்தின் (மேல்முறை யீட்டு நடைமுறை) விதிகளில் திருத்தம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்ப ட்டுள்ளது.மேல் முறையீடு மனு மீதான விசாரணை நடத்தும்போது நேரடியாக ஆஜராவதற்கு பதிலாக வீடியோ கான்பரன்ஸ் முறையிலும் ஆஜராகலாம்.இதை தனக்குள்ள அதிகா ரத்தை பயன்படுத்தி ஆணையமே முடிவு செய்யலாம் என்று உத்தர வில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூரை சேர்ந்த தகவல் உரிமைச்ச ட்ட ஆர்வலர்கள் கூறுகை யில், இந்த திருத்தம் காலத்துக்கு ஏற்ற மிகவும் அவசியமான திருத்தம். இதன் மூலம்தகவல் கோரும் மனுதாரர்கள், அதிகாரிகள் அலைச்சல் தவிர்க்கப்படும். பொருட்செலவு குறையும். இதே போல தகவல் கோரி விண்ணப்பிக்கும் நடை முறையை, காலத்துக்கு ஏற்றபடி ஆன்லைன் முறைக்கு மாற்றினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

    Next Story
    ×