திருப்பூர் மாநகராட்சியின் புதிய கமிஷனராக பவன்குமார் நியமனம்

கடலுார் மாவட்ட திட்ட இயக்குனராக இருந்த பவன்குமார், திருப்பூர் மாநகராட்சியின் புதிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கமிஷனர் பவன்குமார்.
கமிஷனர் பவன்குமார்.
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி புதிய கமிஷனராக பவன்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக இருந்த கிராந்திகுமார், கோவை கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

அவருக்கு பதிலாக, கடலுார் மாவட்ட திட்ட இயக்குனராக இருந்த பவன்குமார், திருப்பூர் மாநகராட்சியின் புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே, தாராபுரம் சப்-கலெக்டராக பணியாற்றியவர். இவர் இன்னும் ஒரு சில தினங்களில் திருப்பூர் மாநகராட்சியின் கமிஷனராக பொறுப்பேற்க உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com