search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "employment camp"

    • சீர்காழியில் வருகிற 18-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடபட்டு இருந்தது.
    • மழையில் காரணமாக வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டது.

    மயிலாடுதுறை:-

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து தமிழ்நாடு முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2-வது சிறப்பு தனியார்துறை வேலைவாய்;ப்பு முகாமானது வருகிற 18-ந்தேதி சனிக்கிழமையன்று சீர்காழியிலுள்ள விவேகானந்தா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாமானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் முகாம் நடைபெறும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காரைக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 14-ந்தேதி நடக்கிறது.
    • வேலை வாய்ப்பு பெற்று பணி நியமனம் பெறும் பதிவு தாரர்களுடைய வேலை வாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் 3 சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 2-வது தனியார் வேலை வாய்ப்பு முகாம் காரைக்குடி யில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியி டங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இம்முகாமில் 5-ம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

    இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்ப முள்ள வர்கள் உரிய ஆவணங்க ளுடன் https://bitly/svgjobfair1 என்ற இணைப்பில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்க உள்ள தனியார் துறை நிறுவனங்கள் https://b itly/svgempreg என்ற இணைப்பில் பதிவு செய்வது அவசியம்.

    மேலும் www.tnprivatejobs.tn.gov.in என்ற தனியார் வேலைவாய்ப்பு இணை யத்திலும் பதிவு செய்யலாம். வேலைவாய்ப்பு தொடர் பான பல்வேறு தகவல் களை பெற SIVAGANGAI EMPLOYMENT OFFICE என்ற Telegram channel—ல் இணைந்து பயன்பெற லாம். இம்முகாமில் வேலை வாய்ப்பு பெற்று பணி நியமனம் பெறும் பதிவு தாரர்களுடைய வேலை வாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது.

    மேலும் இந்த முகாமில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி சேர்க்கை விண்ணப்பம், திறன் பயிற்சி களுக்கான விண்ணப்பம், வேலை வாய்ப்பற்ற இளை ஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் ஆகியவை வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 10 மற்றும் 12 வகுப்பு முடித்தவர்கள், டிப்ளமோ ஐ.டி. மற்றும் பட்டப் படிப்பு முடித்தவர்கள், முதுகலை படித்தவர்கள் வந்திருந்தனர்.
    • இளைஞர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக நேர்காணல் நடத்துவர்கள் செல்போன் வெளிச்சம், சிறிய எமர்ஜென்சி விளக்கை வைத்து நேர்காணலை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் காந்திநகர் வேலைவாய்ப்பு மையத்தில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதன்படி வேலைவாய்ப்பு முகாம்  தொடங்கியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு புதிதாக பட்டம் படித்தவர்கள்,10 மற்றும் 12 வகுப்பு முடித்தவர்கள், டிப்ளமோ ஐ.டி. மற்றும் பட்டப் படிப்பு முடித்தவர்கள், முதுகலை படித்தவர்கள் வந்திருந்தனர். புதுவை, தமிழகத்தை சேர்ந்த நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்றன. இன்று காலை 9 மணி முதல் காந்தி நகர் வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் கூடியிருந்தனர்.

    அப்போது காலை 10 மணிக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இருட்டில் இளைஞர்கள் முகாமில் பங்கேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

    இளைஞர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக நேர்காணல் நடத்துவர்கள் செல்போன் வெளிச்சம், சிறிய எமர்ஜென்சி விளக்கை வைத்து நேர்காணலை நடத்தினர்.

    அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என அறிக்கப்பட்டும், மின் துணைப்பு துண்டிக்க ப்பட்டது இளைஞர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது.

    • மதுரையில் 9-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • வேலையளிக்கும் தனியார் நிறுவனங்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

    மதுரை

    கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ கம் முழுவதும் 100 தனி யார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் நடத்தப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தின் வாயி லாக வரும் 9-ந்தேதி திருப் பாலை இ.எம்.ஜி. யாதவர் மகளிர் கல்லூரியில் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் அலுவல கத்தை தொடர்பு கொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவையான காலிப்பணியிட விவரத்துடன் நேரிலோ அல்லது spljobfairmdu2023@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தெரிவிக்கலாம்.

    இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட தனியார் முன் னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியி டங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர். 8, 10, 12-ம் வகுப்பு, பட்டப் படிப்பு, முதுநிலை பட்டப்ப டிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்ட தாரிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கல்வித் தகுதிக்கேற்ற தனி யார் துறை நிறுவனங்க ளில் பணி நியமனம் பெறலாம்.இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலை தேடுவோர் தங்க ளது அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரப் படிவம் ஆகிய வற்றுடன் நேரில் வரவும்.

    மேலும், இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார் நிறுவனங்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவேற் றம் செய்து பயன் பெறலாம்.

    மேலும் விவரங்களுக்கு மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தின் தொலைபேசி எண். 0452-2566022 வாயிலாக தொடர்பு கொள்ளவும்.

    இம்முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங் களில் வேலைவாய்ப்பு பெறுவதனால் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்தார்.

    • வருகிற 27-ந்தேதி நடக்கிறது
    • சான்றிதழ்களின் நகலுடன் கலந்து கொள்ள வேண்டும்

    திருவண்ணாமலை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவண்ணாம லையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    அருணை பொறியியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த முகாம் நடக்கிறது.

    திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட் டம் சார்பில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ்-2, பட்டப்ப டிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் தேர்ச்சி பெற்ற வேலை தேடுபவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாம் அன்று தங்களு டைய 4 பாஸ்போர்ட்டு சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.

    முகாமில் கலந்து கொள்ள விருப்பமு ள்ளவர்கள்

    www.tnprivatejobs.tn.gov. in என்ற இணையதள முகவரி அல்லது https://forms.gle/ NSVtGVHwEAECg9qF7 என்ற google படிவத்தில் பதிவு செய்ய லாம். மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்று கொள்ளலாம்.

    எனவே திருவண்ணா மலை மாவட்டத்தை சார்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

    • சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு கொள்ளலாம்.

    விருதுநகர்

    முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை யொட்டி சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26-ந்தேதி (சனிக்கிழமை) ஸ்ரீவித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் 100-க் கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய கல்வி தகுதி உடைய வர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் நேர் காணலில் கலந்து கொள்ள வேலைவாய்ப்பு அடையாள அட்டை அனைத்து கல்விச் சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்று டன் காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை கலந்து கொள்ளலாம்.

    இம்முகா மில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் https://forms.gle/TH4R1Djmv8Z7SkpU என்ற Google Form-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

    தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது. எனவே விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு கொள்ள லாம்.

    இந்த தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்து பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
    • 248-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 2-ம் கட்ட தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 565 நபர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான பணிகள் உறுதி செய்யப்பட்டது.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேரிமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்து பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    இதில் கலெக்டர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும் வகையில் வேலைவாய்ப்புத்துறை மற்றும் மகளிர் திட்டத்தின் வாயிலாக பல்வேறு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தமிழகம் முழுவதிலும் இருந்து 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைநாடுனர்களை தேர்வு செய்யவுள்ளனர். பல திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு திறன் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்புக்கு மனுதாரர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    படித்த இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பினை பெற்றிடும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் மாதம் கடைசி வெள்ளிக் கிழமைகளில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து மாதாந்திர வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி பல்வேறு அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இலவசமாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்று தங்கள் திறமைக்கேற்ற வேலைவாய்ப்பினை பெற்று தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 2858 மாணவர்கள் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்தனர். அதில் 317 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பிற்கான பணி நியமன ஆணைகள் வழங்கபட்டுள்ளது. 248-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 2-ம் கட்ட தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 565 நபர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான பணிகள் உறுதி செய்யப்பட்டது.

    இதில் நகராட்சி தலைவர் சுமிதா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தங்கவேல், எண்டப்புளி ஊராட்சிமன்ற தலைவர் சின்னபாண்டி, தேவதானப்பட்டி பேரூராட்சி தலைவர் முருகேஸ்வரி, மகளிர் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர் ராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி, மேரிமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஐசக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் வருகிற 12-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது
    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடக்கிறது.

    சிவகங்கை

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் 3 வேலைவாய்ப்பு முகாம்களை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்த உள்ளது. முதல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிவகங்கை காஞ்சிரங்காலில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் நடைபெற உள்ளது.

    இத்தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் 5-ம் வகுப்பு முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. போன்ற கல்வித்தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது சுயவிபரம், கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளில் காலை 9 மணிக்கு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலை நாடுநர்கள் https://bitly/svgjobfair1 என்ற இணைப்பில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் தெரிவித்து உள்ளார்.

    • வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி, காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற வுள்ளது.
    • அனைத்து இளைஞர் களுக்கும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் நடத்தப்பட வுள்ளது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2023-24-ம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திட திட்ட மிடப்பட்டு, கடலூர் மாவட்டத்தில் மகளிர் திட்டம் மூலம் வேலை வாய்ப்பில்லாத இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 12 ந்தேதி (சனிக்கிழமை) வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி, வள்ளலார் ஞான சபை எதிரில், வடலூரில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற வுள்ளது. 

    இம்முகாமில் மகளிர் திட்டம் தொழில் திறன் பயிற்சி பெற்ற இளைஞர் களுக்கு, மாவட்டத்தில் உள்ள தொழிற்கல்வி மற்றும் பொதுக்கல்வி படித்த அனைத்து இளைஞர் களுக்கும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் நடத்தப்பட வுள்ளது. கடலூர் மாவட்ட த்தில் உள்ள கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, மேல்புவ னகிரி, பரங்கி பேட்டை, கீரப்பாளையம், கம்மாபுரம் மற்றும் விருத்தா சலம் உள்ள ஊரக மற்றும் நகர்புற இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். 

    கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் மூலம் இளைஞர் தொழில்திறன் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் இதர கல்வி தகுதிகளையுடைய இளைஞர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்று சான்றிதழ், சாதி சான்று, இருப்பிட சான்று, வருமானச் சான்று, குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை இத்துடன் 2 (பாஸ்போர்ட் சைஸ்) புகைப்படங்கள், சுய விலாச மிட்ட அஞ்சல் உறை களுடன் மேற்படி முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடையலாம். மேலும், இதர தகவல்களுக்கு மகளிர் திட்ட அலுவலகம், 3வது குறுக்கு தெரு, சீத்தாராமன் நகர், புதுப்பாளையம், கடலூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளது
    • இதில் 307 வேலை நாடுனர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

     திருவாரூர்

    திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து திருவாரூர் நியூ பாரத் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

    முகாமில் கலந்து கொண்டு தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார். இதில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் கலந்துகொண்டனர்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:- கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணி அமர்த்தும் நோக்கத்தோடு திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமில் 2404 வேலை நாடுனர்களும், 96 வேலையளிக்கும் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு அலுவலர்களும் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான வேலை நாடுனர்களை தேர்வு செய்தனர். இதில் 307 வேலை நாடுனர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும் 160 வேலை நாடுனர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
    • 6 மாற்றுத்திறனாளிகள் உள்பட 316 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் அமெரிக்கன் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. 161-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்றன. 3237 பேர் கலந்து கொண்டனர். இதில் 6 மாற்றுத்திறனாளிகள் உள்பட 316 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

    முகாமில் வேலை வாய்ப்பு துறை மண்டல இணை இயக்குநர் தெய்வேந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தின் துணை இயக்குநர் சண்முகசுந்தர், தொழிற்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநர் கலைச்செல்வன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செந்தில்நாதன், அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேலூர் முத்துரங்கம் கலைக்கல்லூரியில் நடக்கிறது
    • 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கிறது

    வேலூர்:

    வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி இணைந்து கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) முத்துரங்கம் அரசு கல்லூரியில் நடத்துகிறது.

    இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கிறது. 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ உள்ளிட்ட கல்வித்தகுதி உடைய வேலைதேடுபவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

    தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது. விரும்பம் உள்ள நபர்கள் www.tnprivatejobs.tn.gov.in-என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கலந்து கொள்ளலாம்.

    இந்த தகவலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    ×