search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - நாளை மறுநாள் நடைபெறுகிறது
    X

    தென்காசி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - நாளை மறுநாள் நடைபெறுகிறது

    • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 11-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
    • முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 11-ந் தேதி ( வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடைபெற உள்ளது.

    இதில் பல்வேறு தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு முடித்தவர்களும், ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய தொழிற்கல்வித் தகுதியுடைய தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடுபவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.

    முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது deotksjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம். மேலும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×