search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "orders"

    • திருப்புவனம் ஆதிகோரக்கநாதர் கோவில் கும்பாபிஷேக பணியை தொடரலாம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் வழக்கு விசா ரணை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

    மதுரை

    மதுரை முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆதி கோரக்கநாதர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமை யான நூற்றாண்டுகள் கடந்த கோவிலாகும். இந்தக் கோவில் 2 சமூகத்திற்கு சார்ந்த கோவில். இந்த சமூகத்தை சார்ந்த இரு பிரிவினர் தொடர்ந்து கோவில் அறங்காவலராக இருந்து வந்த சூழலில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட நிர்வாக பிரச்சினை காரணமாக தற்போது சிவகங்கை மாவட்ட இந்து அறநிலை யத்துறை இணை ஆணையர் மேற்பார்வையில் கோவில் நிர்வாகம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் இந்த கோவிலில் 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வது நடைமுறை. அதன் அடிப்படையில் இந்த வருடம் வரும் செப்டம்பர் 3-ந்தேதி நடத்துவதற்கு அமைக்கப் பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் திருப்பணி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என மற்றொரு தரப்பை சேர்ந்த முத்து கணேஷ் என்பவர் வழக்கு தாக்கல் செய்து தனி நீதிபதியிடம் தடை உத்தரவு பெற்றார்.

    இதனால் கும்பாபிஷேக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து அனைத்து தரப்பு மக்களும் நாங்களும் வழிபாடு செய்வதற்கு ஏற்கனவே நியமனம் செய்யப்பட்ட அதிகாரி களால் கும்பாபிஷேக பணியை தொடர அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ் சுந்தர் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகி யோர் அமர்வில் விசார ணைக்கு வந்தது. விசா ரணை செய்த நீதிபதிகள் தற்போது கோவில் நிர்வாகம் இந்து சமய அறநிலைத்துறை கீழ் உள்ளது. இதனை எதிர்த்து எதிர்மனுதாரர் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை.

    மேலும் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திருப்ப ணிகள் செய்ய தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்கப்படுகிறது.

    கோவில் கும்பாபிஷேக திருகுழுபணிகளை அதிகாரிகள் தொடர்ந்து செய்யலாம். திட்டமிட்டபடி கோவில் கும்பாபிஷேகத்தை 3.9.2023 நடத்திக் கொள்ள லாம் என்று உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் கும்பாபிஷேக பணிக்கு யாரேனும் தடையாக இருந்தால் எந்த நேரத்திலும் நீதிமன்றத்தை அணுகலாம் என உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் வழக்கு விசா ரணை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

    • கலெக்டர் வளர்ச்சி திட்ட பணிகள் என்னென்ன நடைபெற்று உள்ளது என்பதனை அதிகாரிகளிடம் கேட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • பணிகளுக்கான தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டராக அருண் தம்பராஜ் நேற்று முன்தினம் பதவி யேற்றுக் கொண்டார். இந்த நிலை யில் இன்று காலை கடலூர் மாநகராட்சி அலுவல கத்தில் கலெக்டர் அருள் தம்புராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சி அலுவல கத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை யில் ஆய்வு கூட்டம் நடை பெற்றது. மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் கிருஷ்ண மூர்த்தி, பொறியாளர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து கலெக்டர் அருண் தம்புராஜ், கடலூர் மாநகராட்சியில் குடிநீர், சாலை, தூய்மை பணிகள், தெரு மின்விளக்கு மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் என்னென்ன நடைபெற்று உள்ளது என்பதனை அதி காரிகளிடம் கேட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஒவ்வொரு திட்டப் பணிகள் குறித்தும் அந்த பணி நடைபெறும் மாதங்கள், எவ்வளவு நிதி ஒதுக்கீடு, தற்போது பணிகளின் நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக கேட்டறிந்தார். அப்போது சென்னையில் உள்ள சாலைகள் போல் கடலூர் மாநகராட்சியில் உள்ள சாலைகளை மேம்படுத்த வேண்டும். மக்களை கண் கவர கூடிய தெரு மின்விளக்குகள், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக பார்க்கிங் வசதி, சாலைகளில் முகம் சுளிக்கும் வகையில் ஒட்டப்படும் போஸ்டர் மற்றும் பேனர்களை அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வரும் பணிகளை உடனுக்கு டன் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    சாலை, குடிநீர் போன்ற அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளை விரைந்து முடித்து மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தாத வகை யில் அனைத்து நடவடிக்கை களும் மேற்கொள்ள வேண்டும். கடலூர் மாநகராட்சியில் நிர்ணயிக்கப்படும் அனைத்து பணிகளையும் அந்தந்த கால அவகா சத்திற்குள் தரமாக கட்ட மைத்து முடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது மட்டும் இன்றி பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்த தாரர்களுக்கு உடனுக்குடன் அந்தந்த பணிகளுக்கான தொகையை வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். இது மட்டும் இன்றி மாநகராட்சி முழுவதும் அனைத்து இடங்களிலும் குப்பைகள் தேங்காத வகையில் துப்புரவு பணி யாளர்களை கொண்டு குப்பைகளை அகற்றி தூய்மையான மாநகராட்சி யாக வைத்திருக்க நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சியில் நடை பெறும் பணிகள் தொய்வு ஏற்படாத வகையி லும், பணிகள் காலதாம தமானால் அதற்கான காரணங்கள் தெரிவிக்காத வகையில் அதிகாரிகளின் செயல்பாடுகள் திருப்தி அடையும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகேட்டுக் கொண்டார். இதில் மாநக ராட்சி கவுன்சிலர்கள், அனைத்துதுறை அதிகாரி கள் கலந்து கொண்டனர்.

    • வேலை நாட்கள் மற்றும் பள்ளி, கல்லூரி நாட்கள் நீங்கலாக மற்ற நாட்களில் பனியன் ஆடைகள் அணிவதையே மக்கள் விரும்புகின்றனர்.
    • கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் பனியன் ஆடை விற்பனை அதிகரித்து வருகிறது.

    திருப்பூர் :

    வேலை நாட்கள் மற்றும் பள்ளி, கல்லூரி நாட்கள் நீங்கலாக மற்ற நாட்களில் பனியன் ஆடைகள் அணிவதையே மக்கள் விரும்புகின்றனர். சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டும ல்லாது, நடுத்தர வயதினரும், வயதானவர்களும், டி-சர்ட், பனியன், ஷார்ட்ஸ் என பனியன் ஆடைகள் அணிவதையே விரும்புகின்றனர்.உள்ளாடைகள் மட்டும் வடமாநிலங்களுக்கு விற்பனைக்கு சென்ற நிலை மாறியது. பனியன் ஆடைகளும் அதிகம் விற்கப்படுகிறது. தமிழக மாவட்டங்கள் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் பனியன் ஆடை விற்பனை அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு பின் விற்பனை பாதிக்கப்பட்டதால், புதிய ஆர்டர் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. பெங்களூரு, கேரளா, புனே, லூதியானா போன்ற பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளின் கொள்முதலும் குறைந்திருந்தது. கையிருப்பு ஆடைகள் தீர்ந்துவிட்டதால் புதிய ஆர்டர் விசாரணையும், வரத்தும் கணிசமாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர் காதர்பேட்டை வளாகத்தில் உள்ள பனியன் வியாபாரிகளுக்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் நேரில் வந்து ஆர்டர் கொடுக்கின்றனர். அவ்வப்போது நேரில் வந்து மொத்தமாக ஆடைகளை வாங்கி செல்கின்றனர். நூல்விலை உயர்வால் கடந்த ஆண்டு முழுவதும் சோர்ந்து போயிருந்த காதர்பேட்டை வியாபாரம் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது.

    கடந்த சில மாதங்களாக, நூல்விலை குறைவான நிலையில் தொடர்கிறது. புதிய ஆர்டர் விசாரணையும், கொள்முதலும் அதிகரித்து ள்ளது. இதன்காரணமாக உள்நாட்டு பனியன் வியாபாரம் மீண்டும் சூடுபிடிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து பனியன் வியாபாரிகள் சிலர் கூறியதாவது:- கொரோனா ஊரடங்கிற்கு பின் திருப்பூர் பனியன் ஆடை வியாபாரம் குறைந்தது. கடந்த ஆண்டில் ஏற்பட்ட நூல் விலை உயர்வால் வியாபாரமில்லாமல் பல கடைகள் மூடப்பட்டன.வியாபாரம் மிகக்குறைவாக நடந்து வந்தது. தற்போது, வடமாநிலங்களிலும் கேரள சந்தையிலும் சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளதால் வியாபார விசாரணை அதிகரித்துள்ளது.நூல்விலை சீராக இருப்பதால், விளையாட்டு சீருடைகள், உள்ளாடைகள், குழந்தைகள் ஆடைகள் விற்பனை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. உள்நாட்டு பனியன் வியாபாரத்தை பொறுத்தவரை நூல்விலை இதேநிலையில் இருந்தால் போதும். மேலும் சில மாதங்களில் பழைய நிலைக்கு திரும்ப முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பிரதம மந்திரி வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
    • கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது

    கரூர்:

    கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் பிரபுசங்கர் பேசியதாவது: மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஆகியவை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

    15வது நிதி குழு மானியத் திட்டத்தில் நடந்து வரும் பணிகளின் முன்னேற்றம், முதல்வரின் பள்ளிகள் மேம்பாட்டு திட்டத்தில் கூடுதல் பள்ளி கட்டிடங்களை கட்டுவது, பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை புனரமைப்பது, புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவது, பள்ளிகளில் புதிய சமையலறை கூடம் கட்டுதல் ஆகியற்றை வேகமாக முடிக்க வேண்டும். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில், நிலுவையில் உள்ள வீடுகளை விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணிஈஸ்வரி, செயற்பொறியாளர் பிரேம்குமார், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அன்புமணி ஆகியோர் பங்கேற்றனர்.


    • தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளை இழந்ததோடு சம்பாதிக்கும் வாய்ப்பையும் இழந்தனர்.
    • பெண் தொழிலாளர்கள் பொருளாதாரம் உயரும்.

    திருப்பூர் :

    தமிழக சட்டப்பேரவையில் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வழிவகை செய்யும் தொழிலாளர் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு பின்னலாடை தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர் ஏற்றுதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தொழிலாளர் நல சட்டத்திருத்த மசோதா தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், தொழிலாளர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கும் பெருமளவு வலுசேர்க்கும். திருப்பூரில் ஆயத்த ஆடை தொழில் என்பது பருவகாலம் சார்ந்த தொழில். முந்தைய சட்டத்தின்படி, ஆர்டர்கள் அதிகம் இருந்த காலத்தில், குறிப்பிட்ட நேரத்துக்குள் ஆர்டர்கள் அனுப்பி வைக்கும் நேரத்திலும் வேலை வழங்க முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. இதன்காரணமாக தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளை இழந்ததோடு சம்பாதிக்கும் வாய்ப்பையும் இழந்தனர்.

    பின்னலாடை நிறுவனங்கள் குறித்த நேரத்தில் ஆடை உற்பத்தியை முடிக்க முடியாமல் காலதாமதமாக ஆர்டர்களை முடித்து, அதை கப்பலில் அனுப்புவதற்கு பதிலாக, விமானத்தில் 10 மடங்கு கட்டணத்தை செலுத்தி அனுப்பும் நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக உற்பத்தி நிறுவனத்தின் முதலீடு பாதிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் நிறுவனம் முடங்கும் நிலை ஏற்பட்டது. மேலும் வேலையிழப்பு, உற்பத்தி இழப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டது.

    அதிகப்படியான நேர வேலை தருவதற்கான சூழல் இல்லாத காரணத்தால், பல்வேறு வர்த்தக வாய்ப்புகள் போட்டி நாடுகளுக்கு தொடர்ந்து செல்கிறது. கொரோனாவுக்கு பிறகு இந்தியாவை நோக்கி உலகளவில் வர்த்தக வாய்ப்புகள் வரத்தொடங்கியுள்ள இந்த நேரத்தில் இதுபோன்ற அடிப்படை சீரமைப்பு நிச்சயமாக தொழில் வாய்ப்புகளை அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி பயணிக்க உதவும்.

    ஆயத்த ஆடை தொழில் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நேரத்தில், இதுபோன்ற சட்ட திருத்தங்கள் சவால்களை எளிதாக எதிர்கொள்ள உதவுகிறது. இந்த சட்ட திருத்தத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியிலும், மக்களின் பொருளாதார மேம்பாட்டிலும் அதிக அக்கறை கொண்டு செயல்பட்டு வரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிந்தனையை செயலாக்கிடும் பணியில் துணை நிற்கும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோருக்கும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

    தென்னிந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறியுள்ளதாவது:- சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்பார்த்தபடி 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் வர்த்தகம் ரூ.87 லட்சம் கோடியை எட்டும். ஏற்றுமதியாளர்கள் தமிழகத்தை நோக்கி வரத்தொடங்கியுள்ளனர். வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும்போது தொழிலாளர்களுக்கு சாதகமான நேரத்தை மாற்றியமைக்க முடியும். குறிப்பாக பெண் தொழிலாளர்கள் பொருளாதாரம் உயரும். இதற்காக தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி. இந்த நடவடிக்கை மூலமாக தொழில் நிறுவனங்களின் வர்த்தக வாய்ப்புகள் பெருகும். ஏற்றுமதி நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் ஆர்டர்களை முடித்து அனுப்பும் சூழ்நிலையில் வேலைநேரம் அதிகரிப்பால் மிகுந்த பலன் கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரே நாளில் 1,055 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
    • பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று ரூ. 4.12 கோடி மதிப்பிலான விலையில்லா வீட்டு மனை பட்டாவுக்கான ஆணைகளை வழங்கினாா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் ஒரே நாளில் 1,055 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

    இவ்விழாவில் பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று, தஞ்சாவூா் வட்டத்தைச் சோ்ந்த 150 பேருக்கும், திருவையாறு வட்டத்தைச் சோ்ந்த 59 பேருக்கும், ஒரத்தநாடு வட்டத்தைச் சோ்ந்த 70 பேருக்கும், பூதலூா் வட்டத்தைச் சோ்ந்த 93 பேருக்கும், பட்டுக்கோட்டை வட்டத்தைச் சோ்ந்த 200 பேருக்கும், பேராவூரணி வட்டத்தைச் சோ்ந்த 247 பேருக்கும், பாபநாசம் வட்டத்தைச் சோ்ந்த 95 பேருக்கும், கும்பகோணம் வட்டத்தைச் சோ்ந்த 63 பேருக்கும், திருவிடைமருதூா் வட்டத்தைச் சோ்ந்த 78 பேருக்கும் என மொத்தம் 1,055 பேருக்கு ரூ. 4.12 கோடி மதிப்பிலான விலையில்லா வீட்டு மனை பட்டாவுக்கான ஆணைகளை வழங்கினாா்.

    இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திசேகரன், (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்), மேயா் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையா் சரவணகுமாா், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    • பின்னலாடை ஏற்றுமதியின் தலைநகராக விளங்கிய திருப்பூர் இதுவரை இல்லாத சவால்களை கடந்த ஆண்டு சந்தித்தது.
    • புதிய ஆர்டர் வரத்து இல்லாமல் திருப்பூரின் வர்த்தகம் ஸ்தம்பித்தது.

    திருப்பூர்:

    உலகின் மிகப்பெரிய மூலப்பொருள் ஏற்றுமதி நாடுகளிடையே நிலவும் போர் சூழலால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார மந்தநிலைக்கு ஆளாகியுள்ளன. போர் சூழல் காரணமாக பொருளாதார தடை விதிக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆட்டோமொபைல் உட்பட பல்வேறு தொழில்களும், விவசாயமும் பாதித்தது. கோதுமை, பார்லி உற்பத்தியிலும், சூரியகாந்தி சமையல் எண்ணெய் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.உக்ரைன் போர் சூழல் காரணமாக உலக மக்களின் வாங்கும் திறன் குறைந்து போயுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் போரின் எதிர்விளைவுகளை சந்திக்க தங்களின் இயல்பு வாழ்க்கையை மாற்றிக்கொண்டனர். ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொண்டனர்.

    இதன் காரணமாக இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகமும் நேரடியாக பாதித்தது. திருப்பூரின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு மட்டும் 75 சதவீதம். கடந்த ஆண்டு பஞ்சு விலை உயர்வுக்கு பிறகு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருந்து புதிய ஆர்டர் வெகுவாக குறைந்துவிட்டது.

    பின்னலாடை ஏற்றுமதியின் தலைநகராக விளங்கிய திருப்பூர் இதுவரை இல்லாத சவால்களை கடந்த ஆண்டு சந்தித்தது. சாயக்கழிவு சுத்திகரிப்பு, நூல் விலை, மூலப்பொருள் விலை உயர்வு, மின் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளை சந்தித்து அதிலிருந்து எளிதாக மீண்டு வந்த திருப்பூருக்கு உக்ரைன் போர் சூழல் எதிர்பாராத சவாலாக மாறிவிட்டது.புதிய ஆர்டர் வரத்து இல்லாமல் திருப்பூரின் வர்த்தகம் ஸ்தம்பித்தது. உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. அதற்கு பிறகும் அந்நாடுகள் போராடி வருகின்றன.

    இருப்பினும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்த நிலை மாறி அந்நாட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆங்கில புத்தாண்டில் இருந்து அமெரிக்கா இயல்பு நிலைக்கு வந்துவிட்டது. ஐரோப்பிய நாடுகளும் படிப்படியாக இயல்பான இயக்கத்துக்கு மாறி வருகின்றன.இந்த நிதியாண்டை சமாளித்தால் போதும். வழக்கமான அளவு ஆர்டர்கள் வரத்துவங்கியதும் திருப்பூரில் மீண்டும் பரபரப்பு கூடிவிடும் என தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர். 

    • ராஜபாளையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ெரயில்வே பீடர் ரோட்டில் உள்ள சேத்தூர் சேவுகப்பாண்டியனார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

    தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். யூனியன் சேர்மன் சிங்கராஜ், நகர்மன்ற தலைவி பவித்ரா சியாம்ராஜா கலந்து கொண்டு வேலை வாய்ப்பு முகாமில் கலந்து தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினர்.

    இதில் எம்.எல்.ஏ. பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைஞ ர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த முகாமில் சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதில் 800 பேர் தேர்வு செய்து பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. தேர்வாகாவர்கள் திறமை களை வளர்த்துக்கொண்டு தொடர்ந்து முயற்சி செய்து அடுத்தடுத்து நடக்க இருக்கும் முகாமில் கலந்து கொள்ளலாம்.

    ராஜபாளையம் தொகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திதர உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    இந்த நிகழ்வில் திட்ட இயக்குநர் தெய்வேந்திரன், உதவி திட்ட அலுவலர் ஜேரோம், தி.மு.க. நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை கால ஆடை தயாரிப்பு ஆர்டர் வருகை சரிந்துவிட்டது.
    • ஆண்டு துவக்கம் முதலே திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை குறைவாகவே உள்ளது.

    திருப்பூர் :

    உள்நாட்டு சந்தைக்காக பின்னலாடை ரகங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் திருப்பூரில் ஆயிரக்கணக்கில் உள்ளன.இந்நிறுவனங்களுக்கு கோடை, குளிர் பருவ காலங்கள், பொங்கல், ரம்ஜான், தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் ஆடை தயாரிப்புக்கான ஆர்டர் அதிக அளவில் கிடைக்கிறது.

    பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தீபாவளி பண்டிகை மிக முக்கியமானது. இப்பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள வர்த்தகரிடமிருந்து திருப்பூர் நிறுவனங்களுக்கு அதிக அளவு ஆடை தயாரிப்பு ஆர்டர் கிடைக்கிறது. போனஸ் கிடைப்பதால் தொழிலாளர்களையும், தீபாவளி தித்திக்க செய்கிறது.கொரோனா பரவல் காரணமாக கடந்த2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை கால ஆடை தயாரிப்பு ஆர்டர் வருகை சரிந்துவிட்டது. அபரிமிதமாக உயர்ந்த நூல் விலை, கொரோனாவால் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள வர்த்தக மந்தநிலையால் நடப்பு ஆண்டு துவக்கம் முதலே திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை குறைவாகவே உள்ளது. கைவசம் போதிய ஆர்டர் இல்லாததால் உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் சார்ந்துள்ள நிட்டிங், சாய ஆலை, பிரின்டிங், எம்ப்ராய்டரி உட்பட அனைத்துவகை ஜாப்ஒர்க் துறையினரும் கவலை அடைந்துள்ளனர்.

    வருகிற அக்டோபர் 24-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா குறித்த கவலைகள் விலகியுள்ளன. தீபாவளி ஆடை தயாரிப்புக்கு ஆர்டர் வருகை அதிகரிக்கும் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் பின்னலாடை துறையினர்.நூற்பாலைகள், ஒசைரி நூல் விலைகளை ஒரே சீராக தொடர செய்து, வர்த்தகத்தை ஈர்ப்பதற்கு கைகொடுக்கவேண்டும் என்பது ஒட்டுமொத்த ஆடை உற்பத்தியாளர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

    பாகிஸ்தானில் இயங்கிவரும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அனைத்தும், தங்களுடைய செயல்பாடுகளை முடித்துக்கொண்டு, 60 நாட்களுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. #Pakistan #NGO
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பல்வேறு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பயங்கரவாத தாக்குதல்களுக்கு உள்ளானவர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்களுக்கு இந்நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    ஆனால் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் என கூறிக்கொண்டு அந்த அமைப்புகள் உளவு வேலைகளில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டுகிறது.

    ஒசாமா பின்லேடனை கண்டுபிடிப்பதற்காக அமெரிக்காவின் சி.ஐ.ஏ. நிறுவனம் ஒரு போலியான தடுப்பூசி திட்டத்தின் பேரில் நாட்டுக்குள் நுழைந்து செயல்பட்டு வந்தது கடந்த 2011-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

    அதன் பிறகு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மீதான பாகிஸ்தான் உளவுத்துறையின் சந்தேகங்கள் அதிகரித்தது. அதனை தொடர்ந்து, சர்வதேச தொண்டு நிறுவனங்களின் நடவடிக்கைகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் இயங்கிவரும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அனைத்தும், தங்களுடைய செயல்பாடுகளை முடித்துக்கொண்டு, 60 நாட்களுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து அனைத்து சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கும் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது.  #Pakistan #NGO
    ×