search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manufacturers"

    • இத்தொழில் மூலம் 30 ஆயிரம் போ் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா்.
    • விசைத்தறி தொழில் பயிற்சி அளிப்பது போல காகித அட்டைப்பெட்டி தொழில் பயிற்சி அளித்து வேலைக்கு ஆட்களை தயாா் செய்ய வேண்டும்.

    திருப்பூர்:

    கோவை மண்டல தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தலைவா் சிவகுமாா் நிருபர்களிடம் கூறியதாவது:- கோவை மண்டலத்தில் திருப்பூா், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், கரூா், சேலம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இதில் 700 அட்டைப்பெட்டி தயாரிப்பு உற்பத்திக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இத்தொழில் மூலம் 30 ஆயிரம் போ் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா். தினசரி ரூ. 3.5 கோடி மதிப்பிலான அட்டைப்பெட்டி உற்பத்தி செய்யப்படுகிறது. மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். காகிதத்துக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி உள்ளது. ஆனால் காகித அட்டைப்பெட்டிக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி உள்ளது. இதனை 12 சதவீதமாக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விசைத்தறி தொழில் பயிற்சி அளிப்பது போல காகித அட்டைப்பெட்டி தொழில் பயிற்சி அளித்து வேலைக்கு ஆட்களை தயாா் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஏற்றுமதி வரி சலுகை அளிப்பதோடு வெளிநாட்டில் இருந்து ஆா்டா்கள் கிடைக்க மத்திய அரசின் தொழில் துறை உதவ வேண்டும். காகித அட்டைப்பெட்டி தொழில் மேம்பாடு அடைய சா்வதேச அளவிலான கண்காட்சிகளை மத்திய அரசு நடத்த வேண்டும். காகித அட்டைப்பெட்டி தயாரித்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் பொருளாதாரம் மேம்பாடும் வகையில் மத்திய, மாநில அமைச்சா்கள், அரசு உயா் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிக்கவுள்ளேன் என்றாா்.

    • தமிழகத்தில் 8,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர்.
    • தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு 2,000 கோடிக்கு அன்னிய செலவாணி ஈட்டப்படுகிறது.

     உடுமலை :

    இந்தியாவில் 14 மாநிலங்களில் 23 ஆயிரத்து க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. தமிழகத்தில் 8,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் 10 லட்சத்துக்கும் அதிகமா னோர் பணிபுரிகின்றனர். தமிழகத்தில் இருந்து 125 நாடுகளுக்கு 250க்கும் மேற்பட்ட தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு 2,000 கோடிக்கு அன்னிய செலவாணி ஈட்டப்படுகிறது. தவிர நாட்டில் 30 மாநிலங்களுக்கு உள்நாட்டு தேவைக்காக இப்பொருட்கள் விற்கப்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக உலகப்பொ ருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்சினைகளால் இத்தொழில்மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளை வகைப்பாட்டிலில் இருந்து ஆரஞ்சு பிரிவுக்கு மாற்ற ப்பட்டதால் தொழில் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து உடுமலை தென்னை நார் உற்பத்தி யாளர்கள் கூறியதாவது:- தென்னை நார் தொழிலால் மாசு ஏற்ப டுவதாக டில்லி பசுமை தீர்ப்பாயத்தில் சிலர் மனு தாக்கல் செய்தனர். அதன் பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டது. அதில் வெள்ளை வகைப்பாட்டில் இருந்த தொழில் ஆரஞ்சுக்கு மாற்றப்பட்டது. இதற்கான நோட்டீஸ்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வாயிலாக வழங்கப்பட்டது.

    பழைய முறைப்படியே வெள்ளை வகைப்பா ட்டுக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும்பாதிப்புகள் குறித்து அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளோம். அவர்களும் முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்றுநடவடிக்கை எடுப்பதாக உறுதியளி த்துள்ளனர். இந்நிலையில் உண்மைக்குமாறான தகவல்களை யாரும் பரப்பவேண்டாம்.இவ்வாறுஅவர்கள் தெரிவித்தனர்.'டான் காயர்' ஆலோசனைக்குழு உறுப்பினர் கவுதமன் கூறுகையில், ''உண்மைக்கு மாறான தகவல்கள் பரவி வருகின்றன. வெள்ளை வகைப்பாட்டுக்கு மாற்ற வேண்டுமென அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. தென்னை நார் இயற்கையாக உண்டாகக்கூடிய பொருள். எவ்வித கெமிக்கலும் சேர்ப்பதில்லை. இதனால் எந்த பாதிப்பும் இல்லை. மின் கட்டணத்தை ஒரே நேரத்தில் உயர்த்துவதால் தொழில் பாதிக்கப்படுகிறது. இது குறித்து அரசு ஆலோசித்து தொழில் மேம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • தமிழ்நாட்டிற்கு தேவையான 70 சதவீத நெல் விதைகள் தாராபுரம் பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
    • புதிதாக 3 விதைசான்று அலுவலர் பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும்.

     தாராபுரம் :

    விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறை சார்பில் விதை நெல் உற்பத்தியாளர்களுக்கான ஆய்வு கூட்டம் தாராபுரம் அரிமா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருப்பூர் விதைச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து வரவேற்றார். கூட்டத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இணை இயக்குனர் ஜெயசெல்வின் இன்பராஜ் தலைமை தாங்கி பேசியதாவது:- தமிழ்நாட்டிற்கு தேவையான 70 சதவீத நெல் விதைகள் தாராபுரம் பகுதியில் இருந்து உற்பத்தி செய்து வினியோகம் செய்யப்படுகிறது. தரமான நெல் விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கடமை உற்பத்தியாளர்களுக்கு உள்ளது. தரமான நெல் விதைகளை உற்பத்தி செய்து உற்பத்தியாளர்கள் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும் தரமான விதை உற்பத்தி செய்வது தொடர்பாகவும் அங்ககச் சான்று மற்றும் அங்கக விவசாயம் தொடர்பாக உற்பத்தியாளர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் விதை உற்பத்தியாளர் தரப்பில் துறையில் உள்ள காலிபணியிடங்களை நிரப்பவேண்டும். தாராபுரம் பகுதிக்கு புதிதாக 3 விதைசான்று அலுவலர் பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும். மேலும் சான்றுபணிக்கு தேவையான சான்று அட்டைகளை தேவைக்கேற்ப முன்கூட்டியே இருப்பு வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆய்வுக் கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து விதை உற்பத்தியாளர்கள், விதை சான்று அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் விதை சான்று அலுவலர் ஆனந்தன் நன்றி கூறினார்.

    • உடன்குடி வட்டார பகுதியில் கருப்பட்டி உற்பத்திக்கு ஒரு தனி சிறப்பு உண்டு.
    • பனிப்பொழிவால் இருப்பு வைத்த கருப்பட்டியில் பூஞ்சை என்ற வெள்ளை நிறத்தில் நூல் போன்ற பாசி படிகிறது.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதியில் கருப்பட்டி உற்பத்திக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார் களோ அங்கெல்லாம் உடன்குடி கருப்பட்டி இங்கு கிடைக்கும் என விளம்பர போர்டு வைத்த விற்பனை செய்வார்கள். அவ்வளவு சிறப்பு வாய்ந்தது உடன்குடி கருப்பட்டி ஆகும்.

    கருப்பட்டியில் பூஞ்சை

    தற்போது கருப்பட்டி உற்பத்தி சீசன் இல்லை. கடந்த ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கருப்பட்டியை சிலர் தங்களது வீடுகளில் இருப்பு வைத்திருக்கிறார்கள். தற்போது உடன்குடி வட்டார பகுதியில் மழை முழுவதுமாக இல்லை.

    இரவு, பகலாக பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இதனால் இருப்பு வைத்த கருப்பட்டியில் பூஞ்சை என்ற வெள்ளை நிறத்தில் நூல் போன்ற பாசி படிகிறது. இதை தடுக்க கருபட்டிக்கு புகைமூட்டம் போடுகிறார்கள். அப்படி இருந்தும் சில இடங்களில் கருப்பட்டி கசிந்து தண்ணீராக வெளி வருகிறது. இது பற்றி கருப்பட்டி உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:-

    உற்பத்தியாளர்கள் தவிப்பு

    கடந்த காலங்களில் உற்பத்தி செய்த கருப்பட்டி யை வீடுகளில் பரன்களில் போட்டு பாதுகாப்பாக வைத்துள்ளோம். இருப்பு கருப்பட்டிக்கு விலை அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வைத்தோம். ஆனால் தற்போது மழைக்காலத்தில் மழை பெய்யவில்லை. ஆனால் இரவு, பகலாக பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.

    மழை பெய்தால் கூட கருப்பட்டிக்கு பாதிப்பு அதிகம் இருக்காது. ஆனால் பனிப்பொழிவால் எல்லா கருப்பட்டியிலும் பூஞ்சை பிடிக்கிறது. புகை போட்டாலும் அதை மீறி பூஞ்சை பிடிக்கிறது. கூடுதல் விலை கிடைக்கும் என்று நினைத்தோம்.ஆனால் பனிப்பொழிவில் எல்லாம் கசிந்து விடும் போல தெரிகிறது.

    மேலும் கருப்பட்டி அதிகளவு கருப்பாக இருந்தால் வாடிக்கை யாளர்கள் வாங்க மறுக்கின்றனர், அதனால் கருப்பட்டியை எப்படி பாதுகாப்பது என்பது தெரியாமல் நாங்கள் தவிக்கிறோம் என்று கவலையுடன் கூறினார்.

    • தமிழக அரசு மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரித்தல் போன்ற தொழில்களை தொடங்க மானியம் அளிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    பிரதான்மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் தமிழகத்தில் தொழில் வளத்தை பெருக்க தமிழக அரசு மத்திய அரசின் 60 சதவீதம் நிதி பங்களிப்புடன் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    மரசெக்கு எண்ணெய், அரிசி மாவு மற்றும் மிளகாய் அரவை மில், பேக்கரி, இட்லி, தோசை மாவு மற்றும் பொடி, அப்பளம், ஊறுகாய், வடாகம், வத்தல் தயாரிப்பு, காரவகைகள் தயாரிப்பு, சிறுதானிய உணவுகள், அரிசிபொரி/சோளபொரி தயாரிப்பு, வறுகடலை, சத்துமாவு, பால் பதப்படுத்துதல், உண்ணத்தக்க நிலையிலுள்ள பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரித்தல் போன்ற தொழில்களை தொடங்க மானியம் அளிக்கப்படும்.

    உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர், குறு நிறுவனங்கள், சுய உதவிக் குழுவினர், உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள், ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்க ஆர்வம் உள்ளோர் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

    ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கவும் மற்றும் தொழில் நுட்பத்தை மேம்படுத்தவும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். திட்ட தொகையில் 10 சதவீதம் முதலீட்டாளர் தங்களின் பங்களிப்பை செலுத்த வேண்டும். 90 சதவீதம் வங்கிகளின் மூலம் கடனாக வழங்கப்படும். அரசு திட்ட மதிப்பில் 35 சதவீதம் மானியம், அதிகபட்சம் 10 இலட்சம் வரை வழங்கப்படும்.

    இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற pmfmd.mofpi gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். கூடுதல் விபரங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல் பெற பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேங்காய் எண்ணை உற்பத்தியாளர்கள் சங்க அலுவலக கூட்டரங்கில் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    காங்கயம் :

    காங்கயம் சென்னிமலை சாலை கச்சேரி பகுதியில் உள்ள காங்கயம் தேங்காய் எண்ணை உற்பத்தியாளர்கள் சங்க அலுவலக கூட்டரங்கில் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் என்.எஸ்.என். தனபால் வரவேற்று பேசி கூட்டத்தை தொடங்கிவைத்தார். செயலாளர் சக்திவேல் சங்கத்தின் ஓராண்டு கால செயல்பாடுகளை விரிவாக கூறினார். பொருளாளர் பாலாஜி ஜி.ஆர்.ரவிச்சந்திரன் ஆண்டு அறிக்கையை வாசித்தார். சங்கத்தின் கவுரவ ஆலோசகர் என்.எஸ்.என்.நடராஜ் சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காததாலும், தேங்காய் உலர் கலங்களுக்கு போதிய விலையில் தேங்காய் கிடைக்காததாலும், தேங்காய் எண்ணை அரவை ஆலைகளுக்கு போதிய விலையில் கொப்பரை கிடைக்காததாலும் தேங்காய் எண்ணையை பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்க தமிழகஅரசை வலியுறுத்த வேண்டுதல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்கத்தின் கவுரவ ஆலோசகர்கள் , நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.   

    • நூல் விலை அதிரடியாக குறைப்பு காரணமாக ராஜபாளையம் வட்டார பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
    • ஒரு கேண்டி நூல் விலை ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ. 75 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ராஜபாளையம்

    சர்வதேச அளவில் பேண்டேஜ் மருத்துவ துணி உற்பத்தியில் 90 சதவீத உற்பத்தி தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டாரத்தில் உள்ள சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் பகுதிகளில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

    சமீப காலமாக நூல் விலை திடீரென்று உயர்ந்து 356 கிலோ கொண்ட ஒரு கேண்டி நூல் விலை ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் வரை உயர்ந்தது. இதன் காரணமாக ஆர்டர் எடுத்த நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்து கொடுக்க இயலாத நிலையில் கடுமையான நஷ்டத்தை பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் சந்தித்தனர்.

    ஒரு மாத காலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக தற்போது ஒரு கேண்டி நூல் விலை ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ. 75 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ராஜபாளையம் வட்டார பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    கடந்த 6 மாத காலத்திற்கு முன்பு வரை ஒரு கேண்டி விலை ரூ.55 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை இருந்து வந்த நிலைக்கு மீண்டும் விலை குறைய வேண்டும் என பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து விலை குறைந்து சர்வதேச சந்தையில் உயர்ந்த இடத்தை தொடர்ந்து பிடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யு மாறு பேண்டேஜ் உற்பத்தி யாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • கடந்த2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை கால ஆடை தயாரிப்பு ஆர்டர் வருகை சரிந்துவிட்டது.
    • ஆண்டு துவக்கம் முதலே திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை குறைவாகவே உள்ளது.

    திருப்பூர் :

    உள்நாட்டு சந்தைக்காக பின்னலாடை ரகங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் திருப்பூரில் ஆயிரக்கணக்கில் உள்ளன.இந்நிறுவனங்களுக்கு கோடை, குளிர் பருவ காலங்கள், பொங்கல், ரம்ஜான், தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் ஆடை தயாரிப்புக்கான ஆர்டர் அதிக அளவில் கிடைக்கிறது.

    பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தீபாவளி பண்டிகை மிக முக்கியமானது. இப்பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள வர்த்தகரிடமிருந்து திருப்பூர் நிறுவனங்களுக்கு அதிக அளவு ஆடை தயாரிப்பு ஆர்டர் கிடைக்கிறது. போனஸ் கிடைப்பதால் தொழிலாளர்களையும், தீபாவளி தித்திக்க செய்கிறது.கொரோனா பரவல் காரணமாக கடந்த2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை கால ஆடை தயாரிப்பு ஆர்டர் வருகை சரிந்துவிட்டது. அபரிமிதமாக உயர்ந்த நூல் விலை, கொரோனாவால் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள வர்த்தக மந்தநிலையால் நடப்பு ஆண்டு துவக்கம் முதலே திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை குறைவாகவே உள்ளது. கைவசம் போதிய ஆர்டர் இல்லாததால் உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் சார்ந்துள்ள நிட்டிங், சாய ஆலை, பிரின்டிங், எம்ப்ராய்டரி உட்பட அனைத்துவகை ஜாப்ஒர்க் துறையினரும் கவலை அடைந்துள்ளனர்.

    வருகிற அக்டோபர் 24-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா குறித்த கவலைகள் விலகியுள்ளன. தீபாவளி ஆடை தயாரிப்புக்கு ஆர்டர் வருகை அதிகரிக்கும் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் பின்னலாடை துறையினர்.நூற்பாலைகள், ஒசைரி நூல் விலைகளை ஒரே சீராக தொடர செய்து, வர்த்தகத்தை ஈர்ப்பதற்கு கைகொடுக்கவேண்டும் என்பது ஒட்டுமொத்த ஆடை உற்பத்தியாளர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

    • அரசு பால் கொள்முதல் விலையை 4ஆண்டுக்கு முன் குறைந்தளவு மட்டுமே உயர்த்தியது.
    • அதிக சிரமங்களை கால்நடை வளர்ப்போர் எதிர்கொள்கின்றனர்.

    மடத்துக்குளம்:

    திருப்பூர் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்த படியாக பால் உற்பத்தி தொழில் உள்ளது. மாவட்டத்தில், நாள் ஒன்றுக்கு 8 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு ஆவின் நிறுவனத்திற்கும், தனியார் பால் நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகிறது.தமிழக அரசு கடந்த 2019 ஆகஸ்டு 19ல் பால் விலையை உயர்த்தியது. அதற்கு பின் 4 ஆண்டாக பால் விலை உயர்த்தாத நிலையில் உற்பத்தி செலவினம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

    இது குறித்து பால் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    அரசு பால் கொள்முதல் விலையை 4ஆண்டுக்கு முன் குறைந்தளவு மட்டுமே உயர்த்தியது. அப்போது, கொழுப்புச்சத்து 4.3, புரதச்சத்து 8.2 உள்ள பால் கொள்முதல் விலை ரூ.32 ஆக விலை அறிவிக்கப்பட்டது. ஆனால் விவசாயிகளுக்கு லிட்டருக்கு 27 முதல் 29 ரூபாய் வரை மட்டுமே கிடைத்து வருகிறது.4 ஆண்டுக்கு முன் மாட்டுக்கு வழங்கப்படும் கலப்புத்தீவனம் விலை கிலோ ரூ. 12 ஆக இருந்தது. தற்போது 24 ரூபாயாக உயர்ந்துள்ளது.பருத்தி ஒரு கிலோ 20 ரூபாயிலிருந்து 45 ரூபாயாகவும், மக்காச்சோளம் மாவு 15 ரூபாயாக இருந்தது 30 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

    புண்ணாக்கு ஒரு கிலோ 30 ரூபாயாக இருந்தது தற்போது 50 ஆக உயர்ந்துள்ளது.அதே போல் ஒரு ஏக்கர் சோளத்தட்டு 5 ஆயிரமாக இருந்தது 15 ஆயிரமாகவும், வைக்கோல் ஒரு கட்டு 30 ரூபாயாக இருந்தது, தற்போது 100 ரூபாயாக அதிகரித்துள்ளது.ஆட்கள் கூலி, மருந்து, பராமரிப்பு, தீவனம் என உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் கொள்முதல் விலை 4 ஆண்டாக உயர்த்தப்படவில்லை.

    அரசு ஆவின் கொள்முதல் விலையை உயர்த்தினால் மட்டுமே தனியார் நிறுவனங்களும் விலை உயர்த்தும்.எனவே அரசு பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும். மாட்டு பால் லிட்டர் 42 ரூபாய்க்கும், எருமை பால் 51 ரூபாய்க்கும் கொள்முதல் செய்ய வேண்டும்.கொள்முதல் செய்யப்படும் பாலுக்குரிய தொகையை உடனடியாக வழங்கவும், கால்நடை தீவனம் 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும்.

    ஆவின் நிறுவனம் தினசரி பால் கொள்முதலை ஒரு கோடி லிட்டராக உயர்த்தும் வகையில் கட்டுமானம் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.ஆவின் நிறுவனம் கால்நடை டாக்டர்களை நியமிக்கவும் உற்பத்தியாளர்களுக்கு உதவ வேண்டும்.இவ்வாறு பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    பருவமழை சீசனின் போது, கால்நடைகள் பராமரிப்பில், அதிக சிரமங்களை கால்நடை வளர்ப்போர் எதிர்கொள்கின்றனர்.குறிப்பாக போதிய விழிப்புணர்வு இல்லாததால் பல்வேறு நோய்த்தாக்குதல் இந்த சீசனில் கால்நடைகளுக்கு ஏற்படுகிறது.இதனால் பால் உற்பத்தி குறைவதுடன் சில நேரங்களில் கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெறுகிறது. எனவே, இத்தகைய சீசனில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கால்நடைத்துறை சார்பில் கிராமந்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.கால்நடை மருந்தகங்களில், மானியத்தில் உலர் தீவனம் வினியோகிக்கும் திட்டத்தையும் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    • உடன்குடி வட்டார பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து காற்று அதிகமாகவே வீசுகிறது.
    • பதனீர் குறைவாக கிடைப்பதால் கருப்பட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து காற்று அதிகமாகவே வீசுகிறது. திடீரென நண்பகல் 2 மணிக்கு மேல் சூறாவளி போல காற்று வீசுகிறது. சில நாள் காலையிலிருந்து மாலை வரை காற்று வீசுகிறது.

    இதனால் பனை மரத்தில் தினசரி 2 முறைஏறி இறங்கி பதநீர் தரும் பாலையை சீவிவரும் தொழிலாளர்கள் பதநீர் கலசத்திற்குள்விழாமல் அங்கும் இங்கும் அசைந்து வீணாகி விடுகிறது.

    இதனால் பதனீர் குறைவாக கிடைப்பதால் கருப்பட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

    இதைப் போல குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் முருங்கை விவசாயத்தில் முருங்கைப்பூவை காற்று உதிர்த்து விடுகிறது.

    மேலும் முருங்கை மரங்கள் காற்றில் அங்கும் இங்குமாக அசைந்து முறிந்து விடுகிறது. இதனால் முருங்கை விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    • கொள்முதல் விலை, 2019ம் ஆண்டுக்கு பின்பு உயர்த்தப்படவில்லை.
    • பால் கூட்டுறவு சங்கங்களுக்கு காலமுறைப்படி கால்நடை மருத்துவர்கள் வருவதில்லை.

    அவிநாசி:

    தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட பேரவை கூட்டம் அவிநாசியில் நடந்தது.தமிழ்நாடு விவசாயிகள் சங்க அவிநாசி ஒன்றிய தலைவர் முத்துரத்தினம் வரவேற்றார். வேலுச்சாமி தலைமை வகித்தார். இதில் மாவட்ட தலைவராக கொளந்தசாமி, செயலாளராக வேலுச்சாமி, பொருளாளராக பரமசிவம், துணை தலைவராக குமாரசாமி, துணை செயலாளராக சுப்பிரமணி உட்பட, 11 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.

    கூட்டத்தில்பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை, 2019ம் ஆண்டுக்கு பின்பு உயர்த்தப்படவில்லை. தற்போது தவிடு, புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, கலப்புத் தீவனம் உள்ளிட்ட இடுபொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.சோளத்தட்டை, பசுந்தீவன உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளதால் பசும் பாலுக்கு லிட்டருக்கு 42 ரூபாய், எருமைப் பாலுக்கு 51 ரூபாய் கொள்முதல் விலையாக அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.

    ஆவின் நிர்வாகம் போதியளவு மருத்துவர்களை நியமிக்காததால் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு காலமுறைப்படி கால்நடை மருத்துவர்கள் வருவதில்லை. கால்நடைகளுக்கு நோய் தாக்கும் போது, தனியார் மருத்துவர்களை நாடி, அதிக தொகை செலவழிக்க வேண்டியுள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.திருப்பூர் மாவட்ட ஆவின் ஒன்றியத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதி செய்து தர வேண்டும் எனதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அனைத்து பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்யக்கூடாது என்று உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    கரூர்:

    கரூர் மாவட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக்கூட்டம் கரூரில் நடந்தது. மாவட்டத் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் மோகன்குமார், பொருளாளர் மோர்சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் பேசுகையில், தமிழக அரசு 2019 புத்தாண்டு முதல் 14 வகையான பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை விதித்துள்ளது. மேலும் அதனை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை வரவேற்கிறோம்.

    இருப்பினும் இந்த தொழிலை நம்பி தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். மேலும் 14 வகையான தடை செய்யப்பட்ட பொருட்களில் பிளாஸ்டிக் கப் குறித்த அறிவிப்பு இல்லை. ஆனால் அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் அனைத்து வகையான பிளாஸ்டிக்கையும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்கிறார்கள். இதனை செய்யக்கூடாது என அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் 14 வகையான பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் பெருமளவில் எங்களது தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களது வங்கிக்கடனை முழுமையாக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

    தொழிலை நம்பியுள்ளவர்களுக்கு மாற்றுத்தொழில் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம் என்று தெரிவித்தனர்.

    கூட்டத்தில் சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.

    ×