search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Processed food"

    • தமிழக அரசு மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரித்தல் போன்ற தொழில்களை தொடங்க மானியம் அளிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    பிரதான்மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் தமிழகத்தில் தொழில் வளத்தை பெருக்க தமிழக அரசு மத்திய அரசின் 60 சதவீதம் நிதி பங்களிப்புடன் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    மரசெக்கு எண்ணெய், அரிசி மாவு மற்றும் மிளகாய் அரவை மில், பேக்கரி, இட்லி, தோசை மாவு மற்றும் பொடி, அப்பளம், ஊறுகாய், வடாகம், வத்தல் தயாரிப்பு, காரவகைகள் தயாரிப்பு, சிறுதானிய உணவுகள், அரிசிபொரி/சோளபொரி தயாரிப்பு, வறுகடலை, சத்துமாவு, பால் பதப்படுத்துதல், உண்ணத்தக்க நிலையிலுள்ள பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரித்தல் போன்ற தொழில்களை தொடங்க மானியம் அளிக்கப்படும்.

    உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர், குறு நிறுவனங்கள், சுய உதவிக் குழுவினர், உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள், ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்க ஆர்வம் உள்ளோர் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

    ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கவும் மற்றும் தொழில் நுட்பத்தை மேம்படுத்தவும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். திட்ட தொகையில் 10 சதவீதம் முதலீட்டாளர் தங்களின் பங்களிப்பை செலுத்த வேண்டும். 90 சதவீதம் வங்கிகளின் மூலம் கடனாக வழங்கப்படும். அரசு திட்ட மதிப்பில் 35 சதவீதம் மானியம், அதிகபட்சம் 10 இலட்சம் வரை வழங்கப்படும்.

    இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற pmfmd.mofpi gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். கூடுதல் விபரங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல் பெற பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இன்றைக்கும் குளிர்பதன வசதி இல்லாமல் நீண்ட நாட்களுக்கு உணவுப்பொருட்களை பாதுகாத்து வைக்கும் ஆற்றலை இயற்கை ஏற்படுத்தி தந்துள்ளது.
    உணவைப் பதப்படுத்துதல் நாகரிக வளர்ச்சி என்று நினைக்கலாம். ஆனால், போர்கள் நிறைந்த 18-ம் நூற்றாண்டில் பதப்படுத்தப்பட்ட உணவை அனைவரும் வைத்திருக்க வேண்டும் என்று ராணுவ அதிகாரிகள் வலியுறுத்தியதற்கு காரணம் இருக்கிறது. எதிரிகளைவிட, உணவே பல தோல்விகளை வரவழைத்திருக்கிறது. இன்றைக்கும் குளிர்பதன வசதி இல்லாமல் நீண்ட நாட்களுக்கு உணவுப்பொருட்களை பாதுகாத்து வைக்கும் ஆற்றலை இயற்கை ஏற்படுத்தி தந்துள்ளது. மனித பேரழிவுகளின்போது மனிதர்கள் தாக்குப்பிடித்து உயிர்வாழ பதப்படுத்துதல் உதவுகிறது.

    18-ம் நூற்றாண்டின் இறுதியில்தான் தகரக்குவளையில் உணவை அடைத்துப்பதப்படுத்தும் முறை கண்டறியப்பட்டது. மாவீரன் நெப்போலியனின் ராணுவத்தினர் போரில் சண்டையிட்டு இறந்ததைவிட, பசி, ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிக அளவில் இறந்தனர். வைட்டமின் சி குறைபாட்டால் ஸ்கர்வி நோய் தாக்கியதால் பாதிக்கப்பட்டனர். புண்கள் ஏற்படுதல், மஞ்சள்காமாலை, காய்ச்சல், நரம்புக் கோளாறு, இறப்பு போன்றவற்றை அது ஏற்படுத்தக்கூடும்.

    அப்போது பிரெஞ்சு அரசாங்கம், ராணுவ வீரர்களுக்காக உணவைப் பதப்படுத்தும் முறையை கண்டறிபவர்களுக்கு பெரும் பரிசு அளிப்பதாக அறிவித்தது. நிகோலஸ் அப்பெர்ட் என்பவர், பாதி சமைக்கப்பட்ட உணவை இதற்குத் தீர்வாகப் பயன்படுத்தலாம் என்று தெரிவித்தார். மிட்டாய் செய்பவர், சமையல் கலை வல்லுனர், பீர் தயாரிப்பவர் என பல்வேறு அனுபவங்களை பெற்றிருந்தார்.

    உணவை பாட்டில்களில் சேமித்து, அவற்றின் உள்ளே உள்ள காற்றை வெளியேற்ற கொதிக்கும் தண்ணீரில் போட்டார். ஏனென்றால், காற்றுதான் உணவைக் கெட்டுப் போகச் செய்கிறது என்று அவர் நம்பினார். பிரெஞ்சு ராணுவ வீரர்கள் வெளிநாட்டுக்குப் போனபோது, அப்பெர்ட் பதப்படுத்திய கோழி, காய்கறி, குழம்பு மாதிரிகளை எடுத்துச் சென்றனர். நான்கு மாதங்களுக்குப் பிறகும் அவை சாப்பிடக்கூடியதாக இருந்தன என்று தெரிவித்தனர். இப்படியாக உணவைப் பதப்படுத்தும் செயல்பாடு, ராணுவ தேவைகளுக்காகவே முதலில் கண்டறியப்பட்டது.

    ஆனால், கொதிக்கும் தண்ணீரில் உள்ள வெப்பம் காற்றை நீக்குவதற்கு பதிலாக, நுண்ணுயிரிகளை அழித்துவிடுகிறது என்பதை அரை நூற்றாண்டுக்கு பிறகே லூயி பாஸ்சர் என்பவர் கண்டுபிடித்தார். நுண்ணுயிரிகளே உணவை கெட்டுப் போக வைத்தன, நோய்களை உருவாக்குகின்றன என்று அவர் கண்டுபிடித்தார். அது மட்டுமல்லாமல் நம் நாட்டு பதப்படுத்தும் முறையான வற்றல், ஊறுகாய் போன்றவை சுற்றுச்சூழலை சீர்கெடுக்காமல், சூரிய சக்தியின் மூலமே பொருட்கள் பதப்படுத்தப்பட்டன. இதுவும் ஒரு சிறந்த பதப்படுத்தும் முறை என்பதே உண்மை. 
    ×