search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் காற்றால் உடன்குடியில் கருப்பட்டி உற்பத்தியாளர்கள் பாதிப்பு
    X

    தொடர் காற்றால் உடன்குடியில் கருப்பட்டி உற்பத்தியாளர்கள் பாதிப்பு

    • உடன்குடி வட்டார பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து காற்று அதிகமாகவே வீசுகிறது.
    • பதனீர் குறைவாக கிடைப்பதால் கருப்பட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து காற்று அதிகமாகவே வீசுகிறது. திடீரென நண்பகல் 2 மணிக்கு மேல் சூறாவளி போல காற்று வீசுகிறது. சில நாள் காலையிலிருந்து மாலை வரை காற்று வீசுகிறது.

    இதனால் பனை மரத்தில் தினசரி 2 முறைஏறி இறங்கி பதநீர் தரும் பாலையை சீவிவரும் தொழிலாளர்கள் பதநீர் கலசத்திற்குள்விழாமல் அங்கும் இங்கும் அசைந்து வீணாகி விடுகிறது.

    இதனால் பதனீர் குறைவாக கிடைப்பதால் கருப்பட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

    இதைப் போல குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் முருங்கை விவசாயத்தில் முருங்கைப்பூவை காற்று உதிர்த்து விடுகிறது.

    மேலும் முருங்கை மரங்கள் காற்றில் அங்கும் இங்குமாக அசைந்து முறிந்து விடுகிறது. இதனால் முருங்கை விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    Next Story
    ×