search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "affected"

    • விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் பொன்னேரியில் நடைபெற்றது.
    • மாவட்ட வேளாண்மை துறை நேர்முக உதவியாளர் வேதவல்லி தலைமை தாங்கினார்.

    பூண்டி, சோழவரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 20ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் இலை சுருட்டு புழு உள்ளிட்ட பல்வேறு பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் பொன்னேரியில் நடைபெற்றது. மாவட்ட வேளாண்மை துறை நேர்முக உதவியாளர் வேதவல்லி தலைமை தாங்கினார்.

    வேளாண்மை இணை இயக்குனர் சுசிலா, வேளாண் விஞ்ஞானி சிவகாமி, வேளாண்மை அலுவலர் செல்வகுமார் பங்கேற்றனர். முகாமில் விவசாயிகள் ஜானகிராமன், உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் விஜயகுமார், தாரா, தேவராஜ், ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 158 கல்குவாரிகள் வேலை நிறுத்தம்; 50 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • கட்டுமான தொழிலாளர்கள் ஆகியோரை திரட்டி சாலை மறி யலில் ஈடுபடுவோம் என்றார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 158 கல், கிராவல் மண் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் பெண்கள் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்ற னர். இந்த நிலையில் குவாரிகளுக்கு அனுமதி சீட்டு வழங்குவதில் மாவட்ட கனிம வளத்துறை இயக்குநர் தங்கமுனியசாமி தாமதம் செய்வதாக கூறி கடந்த 4-ந் தேதி முதல் 158 கல்குவாரி கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. தொடர் வேலை நிறுத் தத்தால் தொழிலா ளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மண், கற்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள் ளதால் மாவட்டத்தில் கட்டுமான பணிகளும் பாதி யிலேயே நிறுத்தப் பட்டு உள்ளது. இதுகுறித்து குவாரி குத்தகைதாரர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் நாராயண பெருமாள் கூறுகையில், குவாரிகளுக்கு அனுமதி சீட்டு வழங்குவது தொடர்பாக கடந்த 10 நாட்களாக பிரச்சினை உள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள் ளோம்.

    மாவட்ட நிர்வாகம் தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் லாரி உரிமை யாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் ஆகி யோரை திரட்டி சாலை மறி யலில் ஈடுபடுவோம் என்றார்.

    • பல்வேறு காரணங்களால், கனடாவுடனான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வெகுவாக குறைந்து விட்டது.
    • வரியில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வந்ததால், சலுகையுடன் கனடாவுக்கு ஏற்றுமதி செய்யலாம் என ஏற்றுமதியாளர்கள் காத்திருந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் இருந்து கனடாவுக்கு பின்னலாடை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியா - கனடா விவகாரம் காரணமாக பின்னலாடை ஏற்றுமதி பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறியதாவது:-

    பல்வேறு காரணங்களால், கனடாவுடனான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வெகுவாக குறைந்து விட்டது. கோட்டா முறை ரத்தான பிறகு, இந்தியாவுடன் வர்த்தக தொடர்பை குறைத்துக்கொண்ட கனடா, வங்கதேசத்துக்கு ஆர்டர்களை அதிக அளவில் வழங்கி வருகிறது.

    அமெரிக்கா, ஐரோப்பியா, ஐக்கிய அரபு நாடுகள், பிரிட்டன், ஆப்பிரிக்க நாடுகள், ஆசிய நாடுகளுடன் ஏற்றுமதி வர்த்தகம் சிறப்பாக நடந்து வருகிறது.கடந்த நிதியாண்டில், இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி 61 ஆயிரத்து 764 கோடி அளவுக்கு நடந்துள்ளது. அதில் கனடாவின் பங்களிப்பு 2 சதவீதம் மட்டுமே.அதாவது, 1,304 கோடி ரூபாய் அளவுக்கு நடந்துள்ளது.

    கனடாவுடன் ஏற்பட்ட மோதலால் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் பெரிய பாதிப்பு இருக்காது. புதிய சந்தை வாய்ப்புகள் தொடர்பான விசாரணை ஆக்கப்பூர்வமாக இருப்பதால் மற்ற நாடுகளில் புதிய வாய்ப்புகளை வசப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வரியில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வந்ததால், சலுகையுடன் கனடாவுக்கு ஏற்றுமதி செய்யலாம் என ஏற்றுமதியாளர்கள் காத்திருந்தனர். கனடா விவகாரத்தால் வரியில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை, கனடா - இந்தியா இருதரப்பும் நிறுத்தி வைத்துள்ளன. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் மாற்று வாய்ப்புகளை தேட தொடங்கி விட்டனர்.

    • மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளை மீறி செயல்படும் கோழிப்பண்ணையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது
    • இறந்த கோழிகளை அப்புறப்படுத்துவதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்தினர்.

    உடுமலை

    உடுமலை அருகே சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் செயல்படும் கோழிப்பண்ணையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்.

    அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    குடிமங்கலம் ஒன்றியம் அணிகடவு கிராமத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளை மீறி செயல்படும் கோழிப்பண்ணையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. பி .ஏ. பி. பாசன கால்வாய் கிராம குளம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், குடியிருப்பு அருகில் இந்த கோழி பண்ணை அமைந்துள்ளது.

    இறந்த கோழிகளை நீர் நிலைகளில் வீசுவது போன்ற செயல்களால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதுகுறித்து ஏற்கனவே அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கால்நடை பராமரிப்பு துறையினர் நேரில் ஆய்வு செய்து பண்ணையை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்பதை சரி செய்யவும் இறந்த கோழிகளை அப்புறப்படுத்துவதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்தினர்.இருந்தாலும் விதிமுறைகள் முறையாக பின்பற்ற ப்படுவதில்லை.

    எனவே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    • சாலையோரங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
    • கேட்பார் யாரும் இல்லாத பட்சத்தில் அந்த கால்நடைகளை உள்ளாட்சி நிர்வாகமே வளர்க்கவும் செய்யலாம்.

     திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி உள்ளிட்ட பிற இடங்களில் உள்ள நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சாலைகளில் மாடு, எருமை உள்ளிட்ட கால்நடைகள் அவ்வப்போது சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இது குறித்து நகர்ப்புற உள்ளாட்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    திருப்பூரை பொறுத்தவரை மாநகராட்சி பகுதி மட்டுமே முழுக்க முழுக்க நகரமாக உள்ளது. மாறாக, பூண்டி நகராட்சி, பல்லடம், வெள்ளகோவில் உள்ளிட்ட நகராட்சிகள், அவிநாசி உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகள் அனைத்தும் பெரும்பாலும் கிராமப்புறங்களை ஒட்டியுள்ளன.

    பேரூராட்சிகளின் வழியாக தான் அருகேயுள்ள கிராமங்களுக்கு மக்கள் செல்கின்றனர். கிராமங்களில் கால்நடைகளை வளர்ப்போர் அதிகம் என்ற நிலையில் அவர்கள் அங்குள்ள மேய்ச்சல் நிலம், சாலையோரங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். அந்த சமயத்தில் சில கால்நடைகள், நகராட்சி, பேரூராட்சிக்கு சாலைக்கு வந்துவிடும்.

    நகர்ப்புற உள்ளாட்சி சட்டப்படி சாலைகளில் திரியும் கால்நடைகளை, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி சார்பில் பட்டி அமைத்து அதில் அடைத்து வைக்கலாம். அதன் உரிமையாளர்கள் வந்து கேட்கும் போது அபராதம் விதிக்கலாம். கேட்பார் யாரும் இல்லாத பட்சத்தில் அந்த கால்நடைகளை உள்ளாட்சி நிர்வாகமே வளர்க்கவும் செய்யலாம்.

    மாநகராட்சியில் மட்டுமே அதற்கான கட்டமைப்பு, கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள மருத்துவர் உள்ளிட்ட வசதிகள் இருக்கும். பெரும்பாலான நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இத்தகைய கட்டமைப்பு இல்லை.எனவே சாலைகளில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தவும், உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடமிருந்தாலும், ஆள் பற்றாக்குறை, நடைமுறை சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் அத்தகைய பணியை உள்ளாட்சி நிர்வாகங்கள் செய்வதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • சாலையின் இருபுறமும் கொட்டும் மழையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
    • 2 இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் ஆகிய பகுதிகளில் கடந்த 3 நாளாக தொடா்ந்து கன மழை பெய்துவருகிறது.

    இதனால் கூடலூா்- மைசூா் ரோட்டில் உள்ள தொரப்பள்ளி பகுதியில் சாலையோரம் நின்ற மூங்கில் மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் தமிழகம், கா்நாடகம், கேரளா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சாலையின் இருபுறமும் கொட்டும் மழையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலையில் கிடந்த மூங்கில் தூா்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா்.

    இதனால் அங்கு 2 இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூா், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி வேதனை
    • இப்பழக்க வழக்கங்களால் ஏற்படுகின்ற விளைவு என்ன என்பதை பிள்ளைகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை போலீசார் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி  நடந்தது.

    ராஜீவ் காந்தி சதுக்கம் அருகே தொடங்கிய மோட்டார் சைக்கிள் பேரணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    புதுவையில் இப்போது போதை பொருட்களுக்கு இளம் வயது பிள்ளைகள் அடிமையாகி வருகின்றனர். அதனால் ஏற்படுகின்ற விளைவுகள் என்னவென்று தெரியாமல் அவர்கள் தங்களது வாழ்க்கையை வீணாக்கி வருகின்றனர். படிக்க வேண்டிய இளம் வயதில் தீய பழக்கவழக்கங்களுக்கு ஆளாகி வருவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

    தீய பழக்கவழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டியது மிகவும் அவசியம். எத்தனை கட்டுப்பாடுகளை நாங்கள் கொண்டு வந்தாலும், இதுபோன்ற விழிப்புணர்வு மிகவும் முக்கியம். இப்பழக்க வழக்கங்களால் ஏற்படுகின்ற விளைவு என்ன என்பதை பிள்ளைகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    பெற்றோர்கள் அறிந்து கொண்டு பிள்ளைகளை வளர்ப்பதற்குரிய நிலையில் மாற்றிக் கொள்ள வேண்டும். இதனால் உடல்நலம் கெடுவதோடு, போதை பொருட்களுக்கு அடிமையான பிள்ளைகள் செய்கின்ற குற்றங்களானது, அவர்களே தங்களை அறிந்து கொள்ளாத நிலையில செய்வதை சில நேரங்களில் உணர முடிகிறது.

    போதை பொருட்கள் மூலம் ஏற்படுகின்ற உணர்வு என்பதும் சுட்டிக்காட்ட வேண்டிய ஒன்றாக உள்ளது. அந்த நிலையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் இருப்பதாக மற்றவர்கள் கூறுவது மிகவும் வருத்தப்பட வேண்டிய உண்மையாகும்.

    அப்படிப்பட்ட போதை பொருட்களுக்கு அடிமையாகி வருகின்ற இளம் வயது பிள்ளைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த குற்றங்களால் நம்முடைய நாட்டின் வளர்ச்சி எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்று சிந்திக்கக் கூடிய நிலையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். படிக்க வேண்டிய வயதில் பிள்ளைகள் படிக்க வேண்டும்.

    காவல்துறையின் இந்த பேரணி பயனுள்ளதாக இருக்கும். போதை பொருட்கள் மூலம் ஏற்படுகின்ற தீய பழக்கவழக்கங்களை தடுப்போம். இதனை விழிப்புணர்வு பேரணி மூலம் அறிவுறுத்துவோம். இது கடுமையாக எதிர்க்க வேண்டிய ஒன்று என்பதை பிள்ளைகளுக்கு உணர்த்தி, அதன்மூலம் போதை பொருள் பழக்கத்திற்கு ஆளான இளம் வயதினரை திருத்த வேண்டும்.

    இந்த பழக்க வழக்கத்திற்கு இளைஞர்களை ஆளாக்கும் குற்றவாளிகழை அறவே ஒழிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா, மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்வாதி சிங், பக்தவச்சலம், மாறன், ராஜேஷ், இன்ஸ்ெபக்டர்கள் பாலமுருகன், ஜெய்சங்கர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    ராஜீவ் காந்தி சதுக்கம் அருகே தொடங்கிய பேரணி வழுதாவூர் சாலை, மூலகுளம், ரெட்டியார்பாளையம், வில்லியனூர் பைபாஸ், ரெட்டியார்பாளையம், இந்திரா காந்தி சதுக்கம், 100 அடி சாலை, கடலூர் சாலை, முருங்கபாக்கம் சந்திப்பு, மரப்பாலம் சந்திப்பு, முதலியார்பேட்டை, உப்பளம் சாலை, கடற்கரை சாலை வழியாக சென்று காந்தி சிலையில் நிறைவடைந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

    • கடந்த சில நாட்களாக அப்பகுதியில் முறையாக குடிநீர் வழங்கவில்லை.
    • சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே பட்டமங்கலம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்ப்பட்டமங்கலம் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இங்குள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக இங்குள்ள பகுதியில் முறையாக குடிநீர் வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    இந்நிலையில் குடிநீர் வழங்கதை கண்டித்து மயிலாடுதுறை - திருவாரூர் நெடுஞ்சாலையில், மயிலாடுதறை அருகே சீனிவாசபுரம் பகுதியில் பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் காவல்துறையினர் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

    ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்து அதிகாரிகள் வரவேண்டும் என்று கூறினர்.

    இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    தொடர்ந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததார்.

    இதைத் தொடர்ந்து பொது மக்கள் சாலைமறியலை கை விட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் அங்கு சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சரக்கு ஆட்டோ நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு
    • மீன் வியாபாரம் காரணமாக அப்பகுதியில் நாள் தொல்லை அதிகரிப்பு

    திருமானூர்.

    அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையம் மற்றும் நகரின் முக்கிய சாலைகளில் சரக்கு ஆட்டோவில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மீன் விற்கப்படுகிறது.இதனை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலையில் அப்படியே நிறுத்திவிட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுவதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றன. மேலும் மீன்களின் கழிவுகளை சாலையின் ஓரங்களில் கொட்டி செல்வதால் துர்நாற்றம் வீசுவதுடன் நாய்களின் தொல்லைகளும் அதிகரித்துள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வார சந்தை சாலையோரத்தில் நடைபெற்றதால் பாதிப்பு
    • மாற்று இடம் வழங்காததால் குழப்பம்

    அரியலூர்

    அரியலூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. பஸ் நிலையம் இடிக்கப்படும் என்பதை அறிந்த பஸ் நிலையத்தில் கடை வைத்திருந்த கடைக்காரர்கள் சென்னை நீதிமன்றத்தில் வருகிற 15-ந் தேதி வரை இடிப்பதற்கு தடை ஆணை பெற்றனர். இந்த நிலையில் கடைக்காரர்களிடம் நகராட்சி சார்பில் மார்ச் மாதம் வாடகை செலுத்த வேண்டும் என அறிவிப்பு வந்துள்ளதாக தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்காக டெண்டர் விடப்பட்டு பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இந்நிலையில் பஸ் நிலையம் அருகே கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த வார சந்தையானது நேற்று முன்தினம் திடீரென நகராட்சியில் இருந்து இவ்வாரம் வார சந்தை செயல்படாது எனவும், இடிக்கப்படும் எனவும் அறிவித்தனர். உரிய காலத்தில் அறிவிப்பு வெளியிடப்படாததால் நேற்று பெரும்பாலான வியாபாரிகள் சந்தைக்கு கடை போட வந்திருந்தனர். கட்டிடம் இடிக்கப்படும் வார சந்தை செயல்படாது என தெரிந்ததை அடுத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் முறையிட்டனர். சந்தை இடிக்கப்பட்டது. ஆனால் மாற்று இடம் இதுவரை வழங்கப்படவில்லை. சந்தைக்கான குத்தகை இம்மாத இறுதிவரை செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு வரை ஒப்பந்தம் உள்ளது. சந்தைக்கும் இடம் எங்கே என தெரியவில்லை. தற்காலிக பஸ் நிலையம் அமைப்பதற்கான இடமும் எங்கே எனத் தெரியவில்லை என குற்றம் சாட்டினர். இந்த நிலையில் வந்திருந்த வியாபாரிகள் சந்தைக்கு வெளியே சாலையோரத்தில் கடைகள் போட்டிருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • வேளாண் இயக்குனர் நேரில் ஆய்வு
    • பயிர்களை பாதுகாக்க அறிவுரை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவ ட்டம், ஆவுடையார்கோவில் வட்டாரம், பூவலூர் கிராமத்தில் மழையினால் சம்பா பருவத்தில் சாகுபடி செய்த பயிர்களில், அறு வடை நிலையிலிருந்த நெற்பயிர்கள் பாதிப்ப டைந்துள்ளதை, வேளா ண்மைத்துறை இயக்குநர் ஆ.அண்ணா துரை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது, வேளாண்மைத்துறை இயக்குநர் தெரிவித்ததாவது, புதுக்கோட்டை மாவட்ட த்தில் பெய்த மழையினால் சம்பா பருவத்தில் சாகுபடி செய்த பயிர்களில் அறு வடை நிலையிலிருந்தநெற்ப யிர்கள் பாதிப்படைந்து ள்ளதை நேரில்பார்வை யிட்டு ஆய்வு செய்யப்பட்டது.இரண்டு நாட்களில் பெய்த மழையினால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல் பயிர் சாய்ந்து உள்ளது. இதன்மூலம் ஏற்படும் பாதிப்பூகளிலிருந்து நெல் மணிகளை பாதுகாக்கும் வகையில், பள்ளமான வயல்களில் தேங்கியுள்ள நீரினை வடிகால் அமைத்து வடித்து, நெல் மணிகள் நனைந்து முளைக்காமல் இருக்க, வயலினை காயவிட்டு, அறுவடை பணிகள் மேற்கொள்ள விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தி ற்கு 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயறுவகை பயிர், உளுந்து பயிர் சாகுபடி செய்தி இலக்கு வழங்கப்பட்டுள்ளது. நெல்லுக்கு பின் உளுந்து சாகுபடி செய்திட 50 சதவீத மானிய விலையில் சான்று பெற்ற விதைகள் மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.எனவே நெல் அறுவடை முடிந்த வயல்களில் சாகுபடி செய்து அதிக மகசூல் பெற்றிடவும், மேலும் மண்வளம் கா த்திடவும் அறிவுரை வழங்க ப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வேளாண்மை இணை இயக்குனர் மா.பெரி யசாமி, அறந்தாங்கி வரு வாய் கோட்டாட்சியர் சு.சொர்ணராஜ், வேளா ண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) மோக ன்ராஜ், அறந்தாங்கி வேளாண்மை உதவி இயக்குனர் பத்மப்பிரியா, ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் வில்லியம் மோசஸ், வேளாண்மை அலுவலர்கள் பிரவினா, பாக்யா, உதவி வேளா ண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

    • 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் பணிகள் நிறுத்தம்
    • மழை நின்ற பின் பணி தொடர விவசாயிகள் எதிர்பார்ப்பு

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில்பரவலாக சாரல் மழை பெய்ததால் நெல் அறுவடை பணி பாதிக்கப் பட்டது. கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் மாயனூர், திருக்காம்புலியூர், மகா தானபுரம், லாலாப்பேட்டை, நந்தன் கோட்டை, வல்லம், வீரவள்ளி ஆகிய இடங்களில், 100க்கும் மேற்பட்ட ஏக் கரில் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை முதல் அப்பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வயல் களில் நெற்கதிர் இயந்திரம், டிராக்டர் கொண்டு அறுவடை செய்யும் பணி பாதிக்கப்பட்டது. மழை நின்று வெயில் அடித்தால் மீண்டும் அறுவடை பணி தொடங்கும் என விவசாயிகள் கூறினர்

    ×