search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாரூரில் தொடர் மழை; 25 வீடுகள் சேதம்- 10 கால்நடைகள் உயிரிழப்பு
    X

    மழையால் இடிந்து கிடக்கும் வீடு.

    திருவாரூரில் தொடர் மழை; 25 வீடுகள் சேதம்- 10 கால்நடைகள் உயிரிழப்பு

    • இரண்டு ஓட்டு வீடுகள் பகுதி அளவு பாதிக்கப்பட்டது.
    • 8 மாடுகள் மற்றும் 2 ஆடுகள் என 10 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

    திருவாரூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து திருவாரூர் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தது.

    தொடர் மழையின் காரணமாக 22 குடிசை வீடுகள் பகுதிகளவிலும், ஒரு குடிசை வீடும் முழு அளவும் சேதமடைந்தது.

    அதைப்போல இரண்டு ஓட்டு வீடுகள் பகுதி அளவு பாதிக்கப்பட்டது.

    இதுவரை ஒட்டுமொத்தமாக 25 வீடுகள் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

    அதைப்போலவே 8 மாடுகள் மற்றும் 2 ஆடுகள் என 10 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

    இந்த தகவலை திருவாரூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

    அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

    ஆறுகளில் நீரின் போக்கைதடுக்கும் வகையில் பரவியிருந்த வெங்காயத் தாமரை செடிக ளையும் அகற்றும் பணிகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.

    மேலும் எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போதுமான முன்னெச்சரிக்கை நடவடி க்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகமாவட்ட கலெக்டர் காயத்ரி கிரு ஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×