என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் துணிப்பை பயன்படுத்த வேண்டும்
- குப்பை மேலாண்மைக்கு பெரும் சவாலாக இருப்பது பிளாஸ்டிக் பைகள் தான்.
- கழிவுநீர் கால்வாய்கள், நிலத்தடி நீர் என அனைத்தும் பாதிக்கப்படுகிறது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாளை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் வசிக்கும் 15 ஆயிரம் குடும்பங்களுக்கு பாலம் தொண்டு நிறுவனம் மூலம் துணிப்பை வழங்கும் விதமாக 'துணிப்பை தூக்க துணிவோம்' என்ற விழிப்புணர்வு இயக்கம் நகராட்சி வளாகத்தில் தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் அப்துல் ஹரிஸ் தலைமை தாங்கினார். பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துணிப்பையை வெளியிட்டு பேசுகையில்:-
தற்போது சுற்றுச்சூழலு க்கும், குப்பை மேலாண்மைக்கும் பெரும் சவாலாக இருப்பது பிளாஸ்டிக் பைகள் தான், இதனால் நீர்நிலைகள், வடிகால், கழிவுநீர் கால்வாய்கள், நிலத்தடி நீர் என அனைத்தும் பாதிக்கப்படுகிறது.
இதன் பயன்பாட்டை தவிர்க்கவும், துணிப்பை பயன்பாட்டை அதிகப்படுத்தவும், தமிழக அரசு மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் துணிப்பை பயன்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்