என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனிமூட்டம்"

    • பனிமூட்டம் காரணமாக பஸ் மற்றும் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
    • அனைத்து ரெயில்களிலும் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்பட்டன.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை நேரத்தில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. கடந்த 2 நாட்களாக பனி மூட்டம் அதிகரித்து வருவதால் பொது மக்கள் வெளியில் நடமாடவே தயங்குகிறார்கள்.

    குளிருடன் பனியும் சேர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துவதால் வயதானவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று பனிமூட்டம் காரணமாக பஸ் மற்றும் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. மின்சார ரெயில்கள் அதிகாலையில் குறைவான வேகத்தில் இயக்கப்பட்டன. எதிரே வரக்கூடிய வாகனங்கள் தெரியாத அளவிற்கு பணி சூழ்ந்திருந்ததால் முகப்பு விளக்குகள் போடப்பட்டு இயக்கப்பட்டன.

    இதனால் குறைந்த வேகத்திலேயே மின்சார ரெயில்கள் சென்று வந்தன. இதேபோல வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்களும் வேகம் குறைக்கப்பட்டு மெதுவாக நிலையங்களுக்கு வந்து சேர்ந்தன. சென்ட்ரல் , எழும்பூர் நிலையங்களுக்கு அதிகாலை 3 மணியில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருவது வழக்கம்.

    அவ்வாறு வந்த அனைத்து ரெயில்களிலும் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்பட்டன. காலை 7 மணி வரை மேகத்துடன் பனிமூட்டமும் சேர்ந்து காணப்பட்டதால பயணிகளும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    பஸ் மற்றும் கார், இரு சக்கர வாகன ஓட்டிகளும் சாலை தெளிவாக தெரியாததால் முகப்பு விளக்குகளை பயன்படுத்தி சென்றனர்.

    • மும்பை, பெங்களூரு, கோலாலம்பூர் உள்ளிட்ட 5 வருகை விமானங்கள் பெங்களூரு, திருப்பதிக்கு திருப்பதிக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
    • திருத்தணி, திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் சூலூர்பேட்டை செல்லும் புறநகர் மின்சார ரெயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன.

    தமிழகத்தில் இன்று முதல் வரும் 11-ந்தேதி வரை நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் சென்னையில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களிலும் கடும் பனிமூட்டம் காணப்பட்டது.

    சென்னையில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    மும்பை, பெங்களூரு, கோலாலம்பூர் உள்ளிட்ட 5 வருகை விமானங்கள் பெங்களூரு, திருப்பதிக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சென்னையில் இருந்து செல்லும் சுமார் 10 விமானங்களின் புறப்பாடும் தாமதம் ஆகி உள்ளதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

    அதேபோல, திருத்தணி, திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் சூலூர்பேட்டை செல்லும் புறநகர் மின்சார ரெயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன.

    • பனிமூட்டம் காரணமாக சாலையில் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
    • கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டையில் இருந்து சென்னை வரும் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

    தமிழகத்தில் இன்று முதல் வரும் 11-ந்தேதி வரை நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது. பனிமூட்டம் காரணமாக சாலையில் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

    பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் புறநகர் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர் புறநகர் மின்சார ரெயில்களும், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டையில் இருந்து சென்னை வரும் ரெயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன.

    • இப்படி இரவு நேரத்தில் கடுமையான பனி வாட்டி எடுக்கும் நிலையில் பகல் நேரங்களில் வெயில் கொளுத்த தொடங்கி இருக்கிறது.
    • மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் கோடை காலங்களாக இருந்த போதிலும் கடந்த சில ஆண்டுகளாகவே பிப்ரவரி மாதத்தில் இருந்து வெயில் வாட்டி எடுத்து வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கடுமையான வெயில் வாட்டியெடுக்கும். தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக இரவு நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலையில் தொடங்கும் பனிப்பொழிவு காலை வரையில் நீடிக்கிறது. இதன் காரணமாக வீடுகளுக்கு வெளியில் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள், கார்கள் ஆகியவையும் மழையில் நனைந் தது போல் ஆகிவிடுகின்றன.

    காலை நேரங்களில் வெளியில் செல்பவர்கள் காதுகளை மறைத்துக் கொண்டும் ஸ்வெட்டர் அணிந்து கொண்டும் செல்லும் நிலை உள்ளது.

    இப்படி இரவு நேரத்தில் கடுமையான பனி வாட்டி எடுக்கும் நிலையில் பகல் நேரங்களில் வெயில் கொளுத்த தொடங்கி இருக்கிறது. மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் கோடை காலங்களாக இருந்த போதிலும் கடந்த சில ஆண்டுகளாகவே பிப்ரவரி மாதத்தில் இருந்து வெயில் வாட்டி எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் தற்போதே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இது தொடர்பாக வானிலை ஆய்வாளர்கள் கூறும் போது, பனிக்காலம் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வந்து வெயில் காலம் தொடங்கும். இதற்கு அறிகுறியாகவே வெயில் தலைகாட்ட தொடங்கி இருக்கிறது என கூறி உள்ளனர். இருப்பினும் தற்போதைய சூழலில் வெயில் பாதிப்பை விட பனி பாதிப்பே அதிக அளவில் உள்ளது.

    இரவு நேரத்தில் அதிக அளவில் கொட்டும் பனி காரணமாக வயதானவர்கள் குழந்தைகள் ஆகியோர் சளித் தொல்லையாலும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சுவாசப் பிரச்சனையால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு பனியின் தாக்கம் கூடுதல் பாதிப்பையே ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக மாலை நேரங்களில் ஆஸ்பத்திரிகள் மற்றும் சிறிய கிளினிக்குகளில் பொது மக்கள் காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சை எடுப்பதற்கும் அதிக அளவில் திரண்டு வருகிறார்கள்.

    இந்தப் பனிக்காலம் இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வந்து கடுமையான வெயில் வாட்டி எடுக்க உள்ள சூழலில் தேர்தல் களமும் அப்போது சூடு பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இரவு நேர வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைந்து காணப்பட்டது.
    • அதிகாலை நேரங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர்-ஜனவரி மாதங்கள் உறை பனிப்பொழிவு காலம் என்பதால் அங்கு நேற்று முதல் கடும் உறைபனி கொட்டி தீர்த்து வருகிறது.

    அதிலும் குறிப்பாக குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

    இதன்காரணமாக அங்குள்ள புல்வெளிகள் மற்றும் நீர்நிலை பகுதிகளில் பச்சைக் கம்பளத்தில் முத்துக்கள் கொட்டியது போல உறைபனி படர்ந்து இருந்தது. சாலையோரம் நின்றிருந்த வாகனங்கள் மீதும் உறை பனி படலத்தை பார்க்க முடிந்தது.

    மேலும் குன்னூரில் பயிரிடப்பட்டுள்ள கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் மீது வெள்ளைக்கம்பளம் போத்தியது போல் உறைப்பனி படர்ந்து காணப்படுகிறது. பனியின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் அங்குள்ள தேயிலை செடிகள் மற்றும் மேராக்காய் பந்தல்கள் கருகும் அபாயம் ஏற்பட்டு உள்ளதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    இதற்கிடையே குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கொலக்கம்பை, சேலாஸ், கரும்பாலம், சின்ன கரும்பாலம், ஜிம்கானா, குன்னகம்பை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேர வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைந்து காணப்பட்டது.

    இதனால் அங்குள்ள பகுதிகளில் அதிகாலை நேரங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது. எனவே அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போர்வை, சால்வை உள்ளிட்டவற்றை போர்த்திக் கொண்டு நடமாடி வருகின்றனர்.

    மேலும் அதிகாலை நேரங்களில் வேலைக்கு செல்லும் தோட்டத்தொழிலாளர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் ஆகியோர் கடுங்குளிரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

    • பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை சென்ட்ரல் வரவேண்டிய புறநகர் மின்சார ரெயில்கள் 15 நிமிடம் காலதாமதம் ஏற்பட்டது.
    • கர்நாடகாவில் இருந்து சென்னை சென்டரல் வரும் விரைவு ரெயில்களும் தாமதமாக வந்தடைந்தது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    இந்நிலையில் சென்னையில் நிலவும் பனிமூட்டம் காரணமாக புறநகர் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை சென்ட்ரல் வரவேண்டிய புறநகர் மின்சார ரெயில்கள் 15 நிமிடம் காலதாமதம் ஏற்பட்டது.

    அரக்கோணம்-சென்னை கடற்கரை, திருவள்ளூர்-பொன்னேரி இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்களும் தாமதம் ஏற்பட்டது.

    திருத்தணி, திருவள்ளூர், கடம்பத்தூர், கும்மிடிப்பூண்டியில் இருந்து வரும் மின்சார ரெயில்கள் 15 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது.

    இதேபோல் கர்நாடகாவில் இருந்து சென்னை சென்டரல் வரும் விரைவு ரெயில்களும் தாமதமாக வந்தடைந்தது. மங்களூர் விரைவு ரெயில், அசோகபுரம் காவிரி விரைவு ரெயில் காலதாமதமாக சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடைந்தது.

    • டெல்லியில் இன்று காற்றின் தரம் 386 என்ற அளவில் ‘மிகவும் மோசமான’ பிரிவில் இருந்தது.
    • பனிமூட்டம் காரணமாக வடக்கு ரெயில்வேயால் இயக்கப்படும் 50-க்கும் மேற்பட்ட ரெயில்களும் தாமதமாகியுள்ளன.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு கடுமையாக உள்ளது. மேலும் கடும் பனிமூட்டமும் நிலவி வருகிறது. இதனால் டெல்லியில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் இன்று அடர்ந்த பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 200-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் காலை 10 மணிக்கு டெல்லி விமான நிலையம் வெளியிட்ட அறிவிப்பில், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானச் செயல்பாடுகள் இயல்பு நிலையில் தொடர்கின்றன என்று தெரிவித்தது.

    அதேவேளையில் புதுப்பிக்கப்பட்ட விமான அட்டவணைகளுக்கு அந்தந்த விமான நிறுவனங்களுடன் ஆலோசனை செய்யுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தியது. டெல்லியில் இன்று காலை காற்றின் தரம் 386 என்ற அளவில் 'மிகவும் மோசமான' பிரிவில் இருந்தது. நகரத்தில் உள்ள 16 கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் கடுமையான பிரிவில் பதிவாகியுள்ளது, மீதமுள்ள நிலையங்களில் மிகவும் மோசமான அளவில் பதிவாகியுள்ளது.

    மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் காரணமாக வடக்கு ரெயில்வேயால் இயக்கப்படும் 50-க்கும் மேற்பட்ட ரெயில்களும் தாமதமாகியுள்ளன.

    • பனிமூட்டத்தால் நிலவும் மோசமான வானிலையால் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.
    • பயணிகள் விமான பயண நிலையை சரிபார்க்கும்படி ஏர் இந்தியா நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர்.

    பனி மூட்டத்தால் நிலவும் மோசமான வானிலையால் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

    பனிமூட்டம் காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டால் பயணிகளுக்கு அவர்களின் டிக்கெட் கட்டணம் திருப்பி செலுத்தப்படும் என ஏர் இந்தியா விமான நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.

    இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அடுத்த சில நாட்களில், மோசமான தெரிவுநிலையை ஏற்படுத்தும் அடர்த்தியான மூடுபனி நிலைமைகள், டெல்லியில் உள்ள எங்கள் முதன்மை மையத்திலும், வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் உள்ள சில விமான நிலையங்களிலும் விமான நடவடிக்கைகளை பாதிக்கலாம். எங்கள் நெட்வொர்க்கில் உள்ள வேறு சில நகரங்களிலும் இது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

    எனவே, பயணிகள் விமானப் பயண நிலையை சரிபார்க்கும்படி ஏர் இந்தியா நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

    பாதிக்கப்பட்ட பயணிகள் தங்கள் விமானப் பயணங்களை மாற்றலாம் அல்லது அபராதம் இல்லாமல் பணத்தைத் திரும்பப் பெறலாம் என பதிவிட்டுள்ளது.

    • வட மாநிலங்களில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக நேற்று 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.
    • விமான சேவை ரத்தானதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    டெல்லி மற்றும் வட மாநிலங்களில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக நேற்று 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. 131 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வட மாநிலங்களில் பனி மூட்டத்துடன் மோசமான வானிலை நிலவுவதால் சென்னை விமான நிலையத்தில் நேற்று 19 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.

    இந்நிலையில் நாடு முழுவதும் நிலவிய மோசமான வானிலை காரணமாக இன்றும் விமான சேவை பாதிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்களில் சேவை ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து புறப்படும் 4 விமான சேவை, 7 வருகை விமான சேவை ரத்து செய்யப்பட்டன.

    கொல்கத்தா, ஜெய்ப்பூர், காசியாபாத் நகரங்களுக்கான புறப்பாடு, வருகை விமான சேவை ரத்தானதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    • 7 பேருந்துகள் மற்றும் 3 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
    • மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    வடமாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர். இருப்பினும் சில சமயங்களில் விபத்துகளும் நடைபெறுகின்றன.

    இந்த நிலையில், பனிமூட்டம் காரணமாக உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே டெல்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் சென்ற பேருந்துகள் அடுத்தடுத்து மோதி தீ பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பேருந்து தீவிபத்துக்குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக மதுரா போலீசார் கூறுகையில், 7 பேருந்துகள் மற்றும் 3 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அனைத்து வாகனங்களும் தீயில் எரிந்து சேதமாயின. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார். 





    • உறைபனி காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
    • வேலைக்கு செல்வோர், வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் நிலவுவது வழக்கம். குறிப்பாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உறைபனி அதிகளவில் காணப்படும்.

    இந்த ஆண்டு 40 நாட்கள் கழித்து தாமதமாக கடந்த 12-ந்தேதி உறைபனி தொடங்கியது. அதனை தொடர்ந்து சில நாட்களாகவே ஊட்டி, குன்னூரில் உறைபனி கொட்டி வருகிறது.

    இன்றும் குன்னூர், ஊட்டி, மஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் உறைபனி காணப்பட்டது. குறிப்பாக தலைகுந்தா, அவலாஞ்சி பகுதிகளில் அதிகளவில் உறைபனி கொட்டியது.

    இன்று தலைக்குந்தா, அவலாஞ்சி பகுதிகளில் மைனஸ் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அதிகபட்சமாக 4.3 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக மைனஸ் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி இருந்தது.

    கொட்டும் உறைபனியால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, தலைகுந்தா, படகு இல்லம், பைக்காரா, குதிரை பந்தய மைதானம், குன்னூர் ஜிம்கானா மைதானம் உள்ளிட்ட புல்வெளி மைதானங்கள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று ரம்மியமாக காட்சியளித்தது. அங்குள்ள செடி, கொடிகள் மீது பனி படர்ந்து காணப்பட்டது.

    இதுதவிர சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார், வேன், ஆட்டோ மற்றும் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களிலும் உறைபனி காணப்பட்டது. வாகன ஓட்டிகள் காலையில் உறைபனியை அகற்றி வண்டியை எடுப்பதற்குள் சிரமப்பட்டனர்.

    குன்னூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள கேரட், பீட்ரூட் உள்ளிட்ட பயிர்கள் மீதும் வெள்ளை கம்பளம் விரித்தது போன்று உறைபனி காணப்பட்டது. இதனால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இந்த உறைபனி காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. குறிப்பாக அதிகாலையில் தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர், வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளான பால் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு கூட பொதுமக்கள் அதிகாலையில் வெளியில் வர முடியவில்லை.

    இதனால் ஊட்டி, குன்னூரில் உள்ள முக்கிய பஜார் பகுதிகளில் காலை நேரத்தில் வெறிச்சோடி காணப்பட்டது.

    பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டு செல்வதை காண முடிந்தது. வெளியில் நடமாடிய ஒரு சிலரும் போர்வை, கம்பளி ஆடை, சுவர்ட்டர், சால்வை உள்ளிட்டவற்றை அணிந்தபடி சென்றனர்.

    குளிரில் இருந்து பாதுகாத்து கொள்ள பெரும்பாலானோர் தங்கள் வீடுகள் முன்பு தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். இருந்தபோதிலும் குளிர் வாட்டி வதைத்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தொடர்ந்து கொட்டி வரும் உறைபனியால் தேயிலை செடிகள், மற்றும் மேரக்காய் பந்தல்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவி வரும் உறைபனி தாக்கம் காரணமாக நீலகிரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விட்டது. விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே வந்திருந்தனர். அவர்களும் உறைபனி காரணமாக வெளியில் வரமுடியாமல் விடுதிகளுக்குள்ளேயே முடங்கினர். உறைபனி குறைந்த பிறகே வெளியில் சென்று சுற்றுலா தலங்களை பார்வையிட்டு, சீதோஷ்ண நிலையை அனுபவித்தனர்.

    • திடீரென பெய்த மழையால் குளிர்ச்சி ஏற்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி
    • கடும் பனிமூட்டம் நிலவியதால் இரவு போல் காட்சியளித்தது.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திடீரென பெய்த மழையால் குளிர்ச்சி ஏற்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. கொடைக்கானலில் வெயில் அதிகரித்த நிலையில் நேற்று அதிகாலையில் சாரலாக தொடங்கிய மழை பின்னர் கனமழையாக பெய்தது.

    தொடர்ந்து பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ-மாணவிகள் சிரமமடைந்தனர். பகல் பொழுதிலேயே கடும் பனிமூட்டம் நிலவியதால் இரவு போல் காட்சியளித்தது.

    இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். மேல்மலை பகுதியில் பெய்த மழை சாகுபடி பணிக்கு உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    மேலும் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வந்தது. இதனை அணைக்க வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர். தற்போது பெய்துள்ள மழை காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவும் என அவர்கள் தெரிவித்தனர். கோடைகால சீசன் தொடங்க உள்ள நிலையில் மழைப்பொழிவு குளிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. இருந்தபோதும் தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திண்டுக்கல் 20, காமாட்சிபுரம் 13.2, நிலக்கோட்டை தாலுகா 17, நிலக்கோட்டை 16.20, சத்திரப்பட்டி 7.2, வேடசந்தூர் தாலுகா அலுவலகம் 8.4, புகையிலை ஆராய்ச்சி நிலையம் 8.2, பழனி 7, கொடைக்கானல் ரோஸ்கார்டன் 13, பிரையண்ட் பூங்கா 14 என மாவட்டம் முழுவதும் 124.20 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    ×