என் மலர்
இந்தியா

டெல்லி- ஆக்ரா விரைவுச்சாலையில் பேருந்துகள் அடுத்தடுத்து மோதி தீவிபத்து- 4 பேர் பலி
- 7 பேருந்துகள் மற்றும் 3 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
- மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வடமாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர். இருப்பினும் சில சமயங்களில் விபத்துகளும் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், பனிமூட்டம் காரணமாக உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே டெல்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் சென்ற பேருந்துகள் அடுத்தடுத்து மோதி தீ பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பேருந்து தீவிபத்துக்குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மதுரா போலீசார் கூறுகையில், 7 பேருந்துகள் மற்றும் 3 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அனைத்து வாகனங்களும் தீயில் எரிந்து சேதமாயின. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.






