என் மலர்
நீங்கள் தேடியது "Electric Trains"
- மின்சார ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் தாமதம் என்ற பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.
- காலை, மாலை ‘பீக்’ நேரத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் தாமதம் ஏற்படுகிறது.
சென்னை:
சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே தினமும் 300 மின்சார ரெயில் சேவை இயக்கப்பட்டாலும் காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் கூட்ட நெரிசல் நீடித்து வருகிறது. வாசலில் நின்று மக்கள் பயணிக்கின்றனர்.
அலுவலகம் செல்லக்கூடிய ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலி வேலை செய்யக்கூடியவர்கள் அதிகளவு பயணம் செய்கின்றனர்.
தற்போது தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது ரெயில் பாதை அமைக்கப்பட்டு அதில் சேவை நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் 80 கி.மீ வேகத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 100 கி.மீ வேகத்தில் இயக்கப்படுகிறது.
மின்சார ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் தாமதம் என்ற பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. காலை, மாலை 'பீக்' நேரத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் தாமதம் ஏற்படுகிறது.
மேலும் தென்மாவட்டங்களில் இருந்து காலை நேரத்தில் சென்னை வரக்கூடிய ரெயில்களும் வருவதால் சில நேரங்களில் மின்சார ரெயில் சேவையில் தாமதத்தை ஏற்படுத்தி விடுகிறது.
தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை 3-வது பாதையில் ரெயில் இயக்கப்படுவதால் பெரும்பாலான பயணிகள் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 3-வது வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் பயணிகள் வேகமாக குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடிகிறது. வேகம் அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள கால இடைவெளியில் கூடுதலாக மின்சார ரெயில்களை இயக்க ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
கூட்ட நெரிசல் மிகுந்த நேரத்தில் ரெயில் சேவையை அதிகரிக்கும் போது பயணிகளுக்கு உதவியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பயணிகள் நலச்சங்க உறுப்பினர் பாண்டியராஜா கூறும் போது, 'மின்சார ரெயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு இருப்பது பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். நெரிசலில் பயணம் செய்யும் நேரம் குறையும்.
மேலும் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே கூடுத லாக 3 அல்லது 4 ரெயில்களை காலை 7 மணிமுதல் 9 மணிக்குள் இயக்க வேண்டும். இந்த வழித்தடத்தில் போதுமான அளவு ரெயில்கள் இயக்கப்படவில்லை' என்றார்.

சென்னை:
ரெயில்களில் பயணம் செய்ய பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வார்கள். டிக்கெட் கவுண்டருக்கு சென்றும், ஆன்லைன் மூலமும் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது.
முன்பதிவு இல்லாத ரெயில்களில் பயணம் செய்ய டிக்கெட் வாங்குவதற்கு கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பயணம் செய்வோர் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் முன்பதிவு இல்லாத ரெயில்களில் பயணம் செய்ய மொபைல் டிக்கெட் வசதியை தெற்கு ரெயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன்படி ரெயில் நிலையத்திலோ வேறு எந்த பகுதியிலோ இருந்து கொண்டு டிக்கெட்டுகளை பெற முடியும். ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு ஊழியர்கள் நேரடியாக சென்று கையடக்க சிறிய கருவி மூலம் டிக்கெட்டுகளை பயணிகளுக்கு வழங்குவார்கள்.
ரெயில் நிலையம் இல்லாத வேறு பகுதிகளிலும் இந்த கருவி மூலம் பயணிகள் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை பெற முடியும். பயணிகள் முன்பதிவு இல்லாத ரெயில்களில் பயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் இந்த வசதியை தெற்கு ரெயில்வே கொண்டு வந்துள்ளது.
இதற்கான சோதனை முறையை தெற்கு ரெயில்வே தொடங்கி உள்ளது. ரெயில்வே போர்டு சேர்மன் சுனித் சர்மா தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் இந்த சோதனையை நேரில் பார்வையிட்டார். அதன்பிறகு அவர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, தொலைவான பகுதியில் இருந்தும், மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடத்திலும் கையடக்க கருவியை பயன்படுத்தி டிக்கெட் வழங்கப்படும். இதை பயன்படுத்துவதற்கு முன்பு ரெயில்வே வாரியத்திடம் ஒப்புதல் பெறப்படும் என்றார்.
இதையும் படியுங்கள்... சென்னையில் 2015-க்குப்பின் அதி கனமழை: 23 செ.மீட்டர் அளவு கொட்டித் தீர்த்தது