search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electric Trains"

    • சென்னை சென்டிரல்- கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்கள் நாளை ஞாயிறு கால அட்டவணையின்படி இயக்கப்படும்.
    • பயணிகள் முன்பதிவு மையங்கள் ஞாயிறு கால அட்டவணைபடி (காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை) பகுதி நேரம் மட்டுமே செயல்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்டிரல் - அரக்கோணம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை சென்டிரல்- கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்கள் நாளை ஞாயிறு கால அட்டவணையின்படி இயக்கப்படும்.

    பயணிகள் முன்பதிவு மையங்கள் ஞாயிறு கால அட்டவணைபடி (காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை) பகுதி நேரம் மட்டுமே செயல்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருவள்ளூர், அரக்கோணத்துக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் சுமார் அரைமணி நேரம் வரை தாமதமாக புறப்படுகின்றன.
    • கோயம்பேட்டுக்கு சென்று பஸ்சில் சென்றால் பயண நேரம் அதிகம் ஆகும் என்பதால் அவர்கள் மின்சார ரெயில்களையே நம்பியுள்ளனர்.

    சென்னை:

    சென்னை மூர் மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூர், அரக்கோணத்துக்கு புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    சென்னையில் இருந்து தினமும் ஏராளமான பயணிகள் இந்த ரெயில்களில் பயணம் செய்து வருகிறார்கள். திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வேலை நிமித்தமாக சென்னைக்கு வருபவர்கள் இந்த ரெயில்களைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

    இந்த நிலையில் சென்னை மூர் மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூர், அரக்கோணத்துக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் சுமார் அரைமணி நேரம் வரை தாமதமாக புறப்படுகின்றன. கடந்த ஒரு வாரமாகவே ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

    இதுகுறித்து அவர்கள் ரெயில்வே நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். இந்த பகுதிகளுக்கு சென்ட்ரலில் இருந்து பஸ்கள் இல்லாததால் பயணிகள் மின்சார ரெயில்களையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. கோயம்பேட்டுக்கு சென்று பஸ்சில் சென்றால் பயண நேரம் அதிகம் ஆகும் என்பதால் அவர்கள் மின்சார ரெயில்களையே நம்பியுள்ளனர்.

    ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவது தொடர்பாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தாலும் அவர்கள் கண்டு கொள்வதில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'இதற்கு முன்பு இதுபோல பிரச்சனை ஏற்பட்டபோது ரெயில்வே மேலாளரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு புறநகர் விரைவு ரெயில்களை விரைவு வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. புறநகர் மின்சார ரெயில் சேவை தாமதமாக காரணமான பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும்' என்றார்.

    • பயணிகள் வசதிக்காக இன்று கூடுதலாக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
    • காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னை :

    சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக 44 மின்சார ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் வசதிக்காக இன்று கூடுதலாக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதன்படி, காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    இரவு 8 மணி முதல் 10 மணி வரை, 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் ரெயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
    • பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    அதேபோல, தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து 4 வாரங்கள் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் கடந்த வாரம் ரெயில்கள் ரத்து செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பயணிகளின் வரவேற்பை பொறுத்து படிப்படியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • ஏ.சி. மின்சார ரெயில்களை பராமரிக்க தாம்பரம் அல்லது ஆவடியில் பிரத்யேக உள்கட்டமைப்பு உருவாக்க முயற்சி எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னையில் ஏ.சி. மின்சார ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து ஏ.சி. ரெயில் விடுவது தொடர்பாக ரெயில்வே முடிவு செய்தது. முதலில் சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி.மின்சார ரெயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

    இதையடுத்து தலா 12 ரெயில் பெட்டிகள் கொண்ட 2 மின்சார ரெயில்களை தெற்கு ரெயில்வேக்கு ரெயில்வே வாரியம் ஒதுக்கியது.

    ஏ.சி.ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி ஐ.சி.எப்.பில் நடந்து வருகிறது. கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏ.சி.மின்சார ரெயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-


    சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் சோதனை அடிப்படையில் ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும். அதன் பின்னர் பயணிகளின் வரவேற்பை பொறுத்து படிப்படியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏ.சி. மின்சார ரெயில்களை பராமரிக்க தாம்பரம் அல்லது ஆவடியில் பிரத்யேக உள்கட்டமைப்பு உருவாக்க முயற்சி எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
    • வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 150 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (மார்ச் 3) காலை 10 மணி முதல் மாலை 3.30 வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை இயங்கும் புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதனால், அந்த வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 150 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    சென்னை பிராட்வே-யில் இருந்து அண்ணாசாலை வழியாக தாம்பரத்திற்கு செல்லும் 18A பேருந்தின் எண்ணிக்கை 60-ஆகவும்,

    சென்னை பிராட்வே-யில் இருந்து தி.நகர், எழும்பூர் வழியாக தாம்பரத்திற்கு செல்லும் 18G பேருந்தின் எண்ணிக்கை 20-ஆகவும்

    கிண்டியில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு செல்லும் 18ACT பேருந்தின் எண்ணிக்கை 10 ஆகவும்,

    கொருக்குப்பேட்டையில் இருந்து தாம்பரத்திற்கு செல்லும் B18 பேருந்தின் எண்ணிக்கை 30 ஆகவும்,

    சென்னை பிராட்வே-யில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் E18 பேருந்தின் எண்ணிக்கை 20 ஆகவும்,

    தியாகராயநகரில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் G18 பேருந்தின் எண்ணிக்கை 10 ஆகவும் மொத்தம் 150 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    • பராமரிப்பு பணிகள் காரணமாக 4-வது வாரமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
    • சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    அதேபோல, தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    இதனால் பொதுமக்களின் வசதிக்காக நாளை காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அனைத்து பயணிகளும் தங்களின் பயணங்களை அதற்கேற்ப திட்டமிடுமாறு மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    • கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
    • பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    அதேபோல, தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக 4-வது வாரமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது.

    பராமரிப்பு பணி காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் ரெயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை கடற்கரையில் இருந்து இரவு நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் வரை செல்லும் மின்சார ரெயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும்.
    • கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.50, 10.10, 10.35, 11.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் வரை செல்லும் மின்சார ரெயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். மறுமார்க்கமாக, இந்த ரெயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும்.

    மார்ச் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.20, 8.20, 8.40, 9, 9.50 ஆகிய நேரங்களில் புறப்படும் தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். மறுமார்க்கமாக, இந்த ரெயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.50, 10.10, 10.35, 11.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்சார ரெயில்கள் சேவை காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • தாம்பரம் முதல் கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வேயின் பராமரிப்பு பணிகள் நாளை (25-ந்தேதி) நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் சேவை காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தாம்பரம் முதல் கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    • சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில் சேவை இன்று முதல் 6 நாட்களுக்கு மாற்றம் செய்யப்படுகிறது.
    • கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 8.15, 8.20, 9.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரெயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    * சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் 44 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    * நாளை காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை குறிப்பிட்ட இந்த வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்படாது.

    * கோடம்பாக்கம் முதல் தாம்பரம் வரையிலான வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில் சேவை இன்று முதல் 6 நாட்களுக்கு மாற்றம் செய்யப்படுகிறது.

    * இதேபோல் இன்று முதல் 22-ந்தேதி இரவு 10.45 மணி முதல் காலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையேயான புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    * கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 8.15, 8.20, 9.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரெயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

    * தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு இரவு 11.15 மணிக்கு பின், புறப்படும் புறநகர் ரெயில்கள் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மூர் மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 11.30 மணிக்கும், இரவு 11.40 மணிக்கும் புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
    • பட்டாபிராமில் இருந்து இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், சென்னை கடற்கரையில் இருந்து இன்று (சனிக்கிழமை) இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு பட்டாபிராம் செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயிலும், மூர்மார்கெட்டில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    மூர் மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 11.30 மணிக்கும், இரவு 11.40 மணிக்கும் புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அரக்கோணத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. திருவள்ளுரில் இருந்து இன்று இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும், பட்டாபிராமில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. பட்டாபிராமில் இருந்து இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சாரரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    இதேபோல் ஆவடியில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயிலும், மூர் மார்க்கெட்டில் இருந்து இரவு 12.15 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. ஆவடியில் இருந்து நாளை அதிகாலை 3.50 மணிக்கும், அதிகாலை 4 மணிக்கும் புறப்பட்டு, மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. ஆவடியில் இருந்து நாளை அதிகாலை 4.10 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×