என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சார ரெயில்கள் ரத்து"

    • மூர் மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.35 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், இரவு 11.20 மணிக்கு புறப்படும்.
    • கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரக்கூடிய 2 மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல்-கூடுர் பிரிவில் எண்ணூர்-அத்திப்பட்டு புதுநகர் ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 6 மின்சார ரெயில்கள் முழுவதும் இன்று இரவு 10.30 மணி முதல் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மூர் மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.35 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், இரவு 11.20 மணிக்கு புறப்படும். கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் ரெயில் மற்றும் மின்சார ரெயில் ஆகியவை முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மூர் மார்க்கெட்டில் இருந்து நாளை அதிகாலை 4.15 மணிக்கு சூலூர்பேட்டை புறப்பட்டு செல்லும் ரெயில் மற்றும் கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரக்கூடிய 2 மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்படும் ரெயில்களால் பயணிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக பயணிகள் சிறப்பு ரெயில்கள் விடப்படுகிறது. இன்று இரவு 10.35, 11.20 மற்றும் நாளை அதிகாலை 4.15 மணி, 4.50 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    • கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 9.10, 9.55, மதியம் 12, 1, 2.30 மணிக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
    • கும்மிடிப்பூண்டியில் இருந்து தாம்பரத்துக்கு மாலை 3 மணிக்கு புறப்படும் ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்பட உள்ளன.

    சென்னை:

    கும்மிடிப்பூண்டி - பொன்னேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே வருகிற 15 மற்றும் 17-ந்தேதிகளில் காலை 9.15 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை ரெயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அந்த 2 நாட்களிலும் 6 மணி நேரத்துக்கு சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 25 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்ட்ரலில் இருந்து காலை 5.40, 10.15, மதியம் 12.10 மணிக்கு சூலூல்பேட்டைக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. சூலூர்பேட்டை - நெல்லூர் இடையே காலை 7.50 மணிக்கு செல்லும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 8.05, 9, 9.30, 10.30, 11.35 மணிக்கு செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. சென்ட்ரலில் இருந்து சூலூர்பேட்டைக்கு காலை 8.35 மணிக்கு செல்லும் ரெயில், சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 9.40, 12.40 மணிக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 4.25 மணிக்கு செல்லும் ரெயில், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 9.10, 9.55, மதியம் 12, 1, 2.30 மணிக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

    சூலூர்பேட்டையில் இருந்து சென்ட்ரலுக்கு காலை 10, 11.45, மதியம் 12.35, 1.15 மணிக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10.55, 11.25 மணிக்கு செல்லும் ரெயில்கள், நெல்லூரில் இருந்து சூலூர்பேட்டைக்கு காலை 10.20 மணிக்கு செல்லும் ரெயில்கள் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

    செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 9.55 மணிக்கு புறப்படும் ரெயில் சென்னை கடற்கரை வரையிலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து தாம்பரத்துக்கு மாலை 3 மணிக்கு புறப்படும் ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்பட உள்ளன. இந்த தகவலை சென்னை ரெயில் கோட்டம் தெரிவித்து உள்ளது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து பொன்னேரிக்கு காலை 8.05, 9, 9.30 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். சென்ட்ரலில் இருந்து மீஞ்சூருக்கு காலை 9.40, 11.35 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும். சென்ட்ரலில் இருந்து எண்ணூருக்கு காலை 10.30 மணிக்கும், சென்னை கடற்கரையில் இருந்து மீஞ்சூருக்கு மதியம் 12.40 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். பொன்னேரியில் இருந்து சென்ட்ரலுக்கு காலை 9.27, 10.13 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். பொன்னேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 11.13 மணிக்கும், மீஞ்சூரில் இருந்து சென்ட்ரலுக்கு காலை 11.56, மதியம் 1.43, 2.59 மணிக்கும், எண்ணூரில் இருந்து சென்ட்ரலுக்கு மதியம் 12.43 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    • கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
    • ஆவடியில் இருந்து அதிகாலை 4.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி-கவரப்பேட்டை ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை, 28, 29 ஆகிய தேதிகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, நாளை காலை 10.30, 11.35 மதியம் 1.40 மற்றும் மதியம் 1, 2.30, 3.15, 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் அதிகாலை 5.40, காலை 10.15, மதியம் 12.10, 12.35, 1,15, 3.10 நேரங்களில் சென்ட்ரல்-சூலூர்பேட்டை, சூலூர்பேட்டை-சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    மேலும் மதியம் 12.40, 2.40 மற்றும் மாலை 4.30 மணிக்கு கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    மேலும் ஆவடியில் இருந்து அதிகாலை 4.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    • கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30, 3.15 மணிக்கு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
    • சென்ட்ரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரப்பேட்டை-கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று மற்றும் வருகிற 16, 19-ந் தேதிகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    அதன்படி, சென்ட்ரலில் இருந்து காலை 10.30, 11.35 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள், கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30, 3.15 மணிக்கு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    சென்ட்ரலில் இருந்து காலை 10.15, மதியம் 12.10, 1.05 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்கள், சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 1,15, 3.10 இரவு 9 மணிக்கு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    கடற்கரையில் இருந்து காலை 9.40, மதியம் 12.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.55 மணிக்கு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.

    சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 3.50 மணிக்கு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு சூலூர்பேட்டை வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    இந்த நாட்களில் சென்ட்ரல் -பொன்னேரிக்கு காலை 10.30 மணிக்கும், சென்ட்ரல்-மீஞ்சூருக்கு காலை 11.35 மணிக்கும், கடற்கரை-பொன்னேரிக்கு மதியம் 12.40 மணிக்கும், பொன்னேரி-சென்ட்ரலுக்கு மதியம் 1.18, 3.33 மணிக்கும், மீஞ்சூர்-சென்ட்ரலுக்கு மதியம் 2.59 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்ட்ரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
    • பொன்னேரி-சென்ட்ரலுக்கும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரைப்பேட்டை-கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் இடையே நாளை (திங்கட்கிழமை) மற்றும் 12 ஆகிய தேதிகளில் காலை 11.20 மணி முதல் மாலை 3.20 மணி வரை (4 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்காரணமாக, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முழுவதுமாக ரத்து

    * சென்ட்ரலில் இருந்து காலை 10.30, 11.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    * சென்ட்ரலில் இருந்து காலை 10.15, மதியம் 12.10, 1.05 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    * கடற்கரையில் இருந்து காலை 9.40 மதியம் 12.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    * சென்ட்ரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    * கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30 மாலை 3.15 ஆகிய நேரங்களில் சென்ட்ரல் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    * சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 1.15, மாலை 3.10, இரவு 9 மணிக்கு சென்ட்ரல் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    * சூலூர்பேட்டையில் இருந்து மாலை 3.50 மணிக்கு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், மறுமார்க்கமாக நெல்லூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு சூலூர்பேட்டை வரும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    பகுதி நேர ரத்து

    * செங்கல்பட்டில் இருந்து நாளை மற்றும் 12 ஆகிய தேதிகளில் காலை 9.55 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் நிறுத்தப்படும்.

    * கும்மிடிப்பூண்டியிலிருந்து மாலை 3 மணிக்கு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி - கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் இருந்து புறப்படும்.

    சிறப்பு மின்சார ரெயில்கள்

    இதன்காரமாக இந்த 2 தேதிகளிலும் காலை 10.30 மணிக்கு சென்ட்ரல்-பொன்னேரிக்கும், காலை 11.35 மணிக்கு சென்ட்ரல் -மீஞ்சூருக்கும், மதியம் 12.40 மணிக்கு கடற்கரை-பொன்னேரிக்கும், மதியம் 1.18 மணிக்கு பொன்னேரி-சென்ட்ரலுக்கும், மதியம் 2.56 மணிக்கு மீஞ்சூர்-சென்ட்ரலுக்கும், மாலை 3.33 மணிக்கு பொன்னேரி-சென்ட்ரலுக்கும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று மற்றும் வருகிற 7-ந் தேதி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
    • சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 1.15, 3.10, இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்ட்ரல்- கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரப்பேட்டை- கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று மற்றும் வருகிற 7-ந் தேதி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மற்றும் வருகிற 7-ந் தேதி காலை 10.30, 11.35 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    அதேபோல, கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30, 3.15 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 10.15, மதியம் 12.10, 1.5 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    அதேபோல, சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 1.15, 3.10, இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.40, மதியம் 12.40, மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது. அதே போல, கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 3.50 மணிக்கு புறப்பட்டு ஆந்திர மாநிலம் நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மீண்டும் மாலை 4.30 மணிக்கு பிறகே மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    • கவரப்பேட்டை ரெயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அருகே உள்ள கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் 11-ந்தேதி நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் விபத்து நடந்த இடத்தில் இருந்த தண்டவாளங்கள் சேதமடைந்தன.

    இந்த நிலையில் தெற்கு ரெயில்வே நிர்வாகம் சேதமடைந்த தண்டவாளங்கள் மற்றும் சிக்னல்களை சீரமைக்கும் பணிகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்றும், நாளை மறுநாளும், பொன்னேரி- கவரைப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று 18 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரல் வரை இன்று காலை 10 மணி வரை புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. அதன்பிறகு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மீண்டும் மாலை 4.30 மணிக்கு பிறகே மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இதையடுத்து இடைப்பட்ட நேரங்களில் சென்னை சென்ட்ரலில் இருந்து பொன்னேரி ரெயில் நிலையம் வரை மட்டுமே புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வேலை நிமித்தமாக செல்பவர்கள் மற்றும் வியாபாரிகள் என பல்வேறு தரப்பு பயணிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

    கும்மிடிப்பூண்டியில் இருந்து வரும் பயணிகள் பொன்னேரி வரை பஸ்சில் வந்து, அதன் பின்னர் பொன்னேரி ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு பயணம் செய்தனர். இதனால் கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டை ரெயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

    அதேபோல் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி சென்ற பயணிகள் பொன்னேரி ரெயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பஸ்களில் ஏறி கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்றனர்.

    • ரெயில்கள் தாமதம், பராமரிப்பு பணி போன்ற பணிகளால் ரெயில் ரத்து உள்ளிட்ட காரணங்களால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
    • இன்று 4 ரெயில்களும், நாளை 13 ரெயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் மக்களின் தினசரி பயணத்திற்கு மின்சார ரெயில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனால் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் சென்னை கடற்கரை- தாம்பரம், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, சென்னை கடற்கரை- வேளச்சேரி மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கும் மின்சார ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.

    மின்சார ரெயிலில் பயணிப்பது மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும், சில சமயங்களில் ரெயில்கள் தாமதம், பராமரிப்பு பணி போன்ற பணிகளால் ரெயில் ரத்து உள்ளிட்ட காரணங்களால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பராமரிப்பு பணி நடைபெறும் நேரங்களில் ரத்து செய்யப்படும் ரெயில்கள் குறித்து அவ்வப்போது அறிவிப்புகள் வெளியாகி கொண்டு இருக்கின்றன.

    இந்த நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக வேளச்சேரி மார்க்கத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 8 மணி வரை மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி- சென்னை கடற்கரை மார்க்கத்தில் இன்று 4 ரெயில்களும், நாளை 13 ரெயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    • சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 12.35, 1.15 மாலை 3.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
    • கடற்கரை-எண்ணூர் இடையேயும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி - கவரைப்பேட்டை ரெயில் நிலையம் இடையே இன்று மற்றும் 5 ஆகிய தேதிகளில் மதியம் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை (4 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்காரணமாக, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முழுவதுமாக ரத்து

    * சென்ட்ரலில் இருந்து காலை 10.30, 11.35 மதியம் 1.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30 மாலை 3.15, 3.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

    * சென்ட்ரலில் இருந்து காலை 5.40, 10.15, மதியம் 12.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 12.35, 1.15 மாலை 3.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 12.40, 2.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    * ஆவடியில் இருந்து காலை 4.25 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    பகுதி நேர ரத்து

    * செங்கல்பட்டில் இருந்து காலை 9.55 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் நிறுத்தப்படும்.

    * கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி - கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் இருந்து புறப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக இன்று மற்றும் 5 ஆகிய தேதிகளில் மட்டும் காலை 10.30 மணிக்கு சென்ட்ரல் - பொன்னேரி, மதியம் 1.18 மணிக்கு பொன்னேரி - சென்ட்ரல், மாலை 3.56 மணிக்கு எண்ணூர் - சென்ட்ரல், காலை 11.35, மதியம் 1.40 மணிக்கு சென்ட்ரல்- மீஞ்சூர், மாலை 4.14 மணிக்கு மீஞ்சூர் - சென்ட்ரல், மதியம் 2.40 மணிக்கு கடற்கரை - பொன்னேரி, மாலை 4.47 மணிக்கு பொன்னேரி - கடற்கரை, மதியம் 12.40 மணிக்கு கடற்கரை-எண்ணூர் இடையேயும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    • அரக்கோணத்தில் இருந்து காலை 6.20, 7.40 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது.
    • பயணிகளின் வசதிக்காக நாளை சிறப்பு ரெயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு நடைபெற உள்ளது. எனவே இன்று (சனிக்கிழமை) இரவு 9.25, 10.25 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் மின்சார ரெயில், இரவு 10 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் செல்லும் ரெயில், இரவு 10.20, 11.45 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரெயில், இரவு 11.15 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூர் செல்லும் ரெயில், இரவு 11.15 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் ரெயில், இரவு 8.50 மணிக்கு அரக்கோணத்திலிருந்து மூர்மார்க்கெட்டிற்கு வரும் ரெயில், இரவு 10.45 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து மூர்மார்க்கெட் வரும் ரெயில், இரவு 11.55 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    இதேபோல நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.50, 8.55, 9.25 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரெயில், காலை 3.50, 6 மணி, 7.40 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து திருத்தணி செல்லும் ரெயில், காலை 4.15, 5.15, 6.20, 7.15, 7.30 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து பட்டாபிராம் செல்லும் மின்சார ரெயில், காலை 4.15 மணிக்கு கடற்கரையில் இருந்து அரக்கோணம் செல்லும் ரெயில், காலை 4.30, 5 மணி, 5.40, 6.50, 7.45, 8.05, 8.40, 9.15, 9.35 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூர் செல்லும் ரெயில், காலை 5.30, 6.30, 7 மணி, 8.20, 9.10 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில், கடற்கரையில் இருந்து திருவள்ளூருக்கு காலை 5.20, 5.55 மணிக்கு செல்லும் மின்சார ரெயில், கடற்கரையில் இருந்து ஆவடிக்கு காலை 6.50, 8.10 மணிக்கு செல்லும் மின்சார ரெயில், சென்னை கடற்கரையில் இருந்து பட்டாபிராமுக்கு காலை 9.10 மணிக்கு செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    இதேபோல, மறுமார்க்கமாக பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து காலை 3.20, 5.30, 6.35, 7.40, 8.45 மணிக்கு சென்னை மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயில்கள், ஆவடியில் இருந்து காலை 3.50, 4 மணி, 4.25, 6.10, 6.40, 9.15 மணிக்கு மூர்மார்க்கெட் புறப்படும் ரெயில்கள், ஆவடியில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 4.10, 4.35, 6 மணி, 7.05, 7.40, 7.55, 8.45 மணிக்கு புறப்படும் ரெயில்கள், திருவள்ளூரில் இருந்து காலை 3.50, 4.45, 5.55, 6.50, 7.15, 7.40, 8.05, 8.20, 8.30, 9.10, 9.25 மணிக்கு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயில்கள், அரக்கோணத்தில் இருந்து காலை 3.45, 4.25, 5.25, 6.40, 7.10, 8.15 மணிக்கு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில்கள், திருத்தணியில் இருந்து காலை 4.30, 5.30, 7 மணிக்கு மூர்மார்க்கெட் வரும் ரெயில்கள், அரக்கோணத்தில் இருந்து காலை 6.20, 7.40 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது.

    அதன்படி இன்று இரவு 10 ரெயில்களும், நாளை 84 ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

    பயணிகளின் வசதிக்காக நாளை சிறப்பு ரெயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 3.50, 5 மணி, 6.50, 8.40, 9.35 மணிக்கு திருவள்ளூருக்கு சிறப்பு ரெயில்கள் புறப்படும்.

    மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 6.30, 7 மணி, 8.20, 9.10, 9.15 மணிக்கு அரக்கோணத்துக்கு சிறப்பு ரெயில்கள் புறப்படும், காலை 7.40 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து சிறப்பு ரெயில் திருத்தணிக்கு புறப்படும், சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.10 மணிக்கு சிறப்பு ரெயில் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிற்கு புறப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்சார ரெயில்கள் சேவை காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • தாம்பரம் முதல் கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வேயின் பராமரிப்பு பணிகள் நாளை (25-ந்தேதி) நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் சேவை காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தாம்பரம் முதல் கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    • இன்று காலை 11 மணிக்கு தண்டவாள பராமரிப்பு பணிகள் தொடங்கின.
    • பயணிகள் மாநகர பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

    சென்னை:

    சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. இதன் காரணமாக அன்று 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன.

    இந்த நிலையில் இன்றும் கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்றும், அந்த நேரத்தில் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு தண்டவாள பராமரிப்பு பணிகள் தொடங்கின.

    இதையடுத்து சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, கடற்கரை-அரக்கோணம் இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்களும், மறுவழித்தடத்தில் தாம்பரம்-கடற்கரை, செங்கல்பட்டு-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்களும் என 44 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவித்தனர். இதையடுத்து பயணிகள் மாநகர பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதன் காரணமாக இன்று மாநகர பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. எனவே பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 3.15 மணி வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பஸ்களுடன் கூடுதலாக 150 பஸ்கள் பஸ்கள் விடப்பட்டுள்ளன.

    பாரிமுனையில் இருந்து அண்ணாசாலை வழியாக தாம்பரம் வரை 60 பஸ்களும், பாரிமுனையில் இருந்து தி.நகர், எழும்பூர் வழியாக தாம்பரம் வரை 20 பஸ்களும், கிண்டியில் இருந்து கிளாம்பாக்கம் வரை 10 பஸ்களும், கொருக்குப்பேட்டையில் இருந்து தாம்பரம் வரை 30 பஸ்களும், பாரிமுனையில் இருந்து கூடுவாஞ்சேரி வரை 20 பஸ்களும், தி.நகரில் இருந்து கூடுவாஞ்சேரி வரை 10 பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட்டன. இதையடுத்து அந்த பஸ்களில் ஏறி பொதுமக்கள் பயணம் செய்தனர்.

    மேலும், பயணிகள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 11.55, பகல் 12.45, பகல் 1.25, பகல் 1.45, பகல் 1.55, பிற்பகல் 2.40, பிற்பகல் 2.55 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. மறு வழித்தடத்தில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்துக்கு காலை 9.30, காலை 9.40, காலை 10.55, காலை 11.05, காலை 11.30, பகல் 12, பகல் 1 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

    ×