என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி உள்பட 19 மின்சார ரெயில்கள் ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
    X

    சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி உள்பட 19 மின்சார ரெயில்கள் ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    • சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 12.35, 1.15 மாலை 3.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
    • கடற்கரை-எண்ணூர் இடையேயும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி - கவரைப்பேட்டை ரெயில் நிலையம் இடையே இன்று மற்றும் 5 ஆகிய தேதிகளில் மதியம் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை (4 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்காரணமாக, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முழுவதுமாக ரத்து

    * சென்ட்ரலில் இருந்து காலை 10.30, 11.35 மதியம் 1.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30 மாலை 3.15, 3.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

    * சென்ட்ரலில் இருந்து காலை 5.40, 10.15, மதியம் 12.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 12.35, 1.15 மாலை 3.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 12.40, 2.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    * ஆவடியில் இருந்து காலை 4.25 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    பகுதி நேர ரத்து

    * செங்கல்பட்டில் இருந்து காலை 9.55 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் நிறுத்தப்படும்.

    * கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி - கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் இருந்து புறப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக இன்று மற்றும் 5 ஆகிய தேதிகளில் மட்டும் காலை 10.30 மணிக்கு சென்ட்ரல் - பொன்னேரி, மதியம் 1.18 மணிக்கு பொன்னேரி - சென்ட்ரல், மாலை 3.56 மணிக்கு எண்ணூர் - சென்ட்ரல், காலை 11.35, மதியம் 1.40 மணிக்கு சென்ட்ரல்- மீஞ்சூர், மாலை 4.14 மணிக்கு மீஞ்சூர் - சென்ட்ரல், மதியம் 2.40 மணிக்கு கடற்கரை - பொன்னேரி, மாலை 4.47 மணிக்கு பொன்னேரி - கடற்கரை, மதியம் 12.40 மணிக்கு கடற்கரை-எண்ணூர் இடையேயும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    Next Story
    ×