search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seedlings"

    • தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவோம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • சாலை விதிகளை மதித்து வாகனம் ஓட்டியவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் சேந்தமங்கலம் பேருந்து நிலையம் அருகில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி நிறுவனத்தின் நிறுவனரும், தாளாளருமான வெங்கட்ராஜூலு தலைமையிலும் நேதாஜி கல்வி குழுமத்தினுடைய இயக்குநனரும்), மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ பள்ளி தாளாளருமான விஜயசுந்தரம் முன்னிலையில் நேதாஜி கல்வி நிறுவனங்கள், திருவாரூர் சிட்டி யூனியன் வங்கி இணைந்து மகரிஷி வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியின் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாணவர்கள் எமதர்மராஜா (மற்றும்) சித்திரகுப்தன் வேடமணிந்து சாலை பயணத்தில் கவனமின்மையால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாகவும், தலைக்கவசம் உயிர்க்கவசம், சாலை விதிகளை கடைபிடிப்போம், படியில் பயணம் செய்தால் நொடியில் மரணம், தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவோம், இருசக்கர வாகனங்கள் செல்லும் பொழுது அவசியம் சீட் பெல்ட் அணிவோம், மதுஅருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவதை தவிர்க்கவும் வேகத்தடையில் மெதுவாக செல்லவும், போன்ற வாசகம் அடங்கிய விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

    விழிப்புணர்விற்கு சிறப்பு அழைப்பாளராக திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கீழ்காவாதுகுடி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி தலைக்கோவன், திருவாரூர் சிட்டி யூனியன் வங்கியின் மேலாளர் வினோத் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும்நேதாஜி பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக சாலை விதிகளை மதித்து வாகனம் ஓட்டிய 1000 ஆயிரம் நபர்களுக்கு மரக்கன்று கள்வழ ங்கப்பட்டது.

    மேலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும் அறிவியல்க ல்லூரியின் சார்பாக 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிர்மை நேயத்தினை மனதில் கொண்டு ரத்ததானம் செய்தனர்.

    விழாவிற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி குழுமத்தினுடைய செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த் ஆகியோர் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    இதில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியினுடைய முதல்வர் சிவகுருநாதன் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் நிர்மல் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியினுடைய முதல்வர் ராமபிரபா, துணை முதல்வர்,துறை தலைவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அகரக்கொந்தகை ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • மானிய விலையில் 300 நபர்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் வட்டாரத்தில் 2023-24 ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அகரக்கொந்தகை ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இங்குள்ள விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலமாக 300 நபர்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதன்படி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழரசி பக்கிரிசாமி தலைமையில் உதவி தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் விவசாயிகளுக்கு மானிய விலையில் பழக்கன்றுகளை வழங்கினார்.

    இதில் ஊராட்சி செயலர் பிரேம் குமார்,வார்டு உறுப்பினர் கோவிந்தராஜன் மற்றும் பொதுமக்கள், விவாசயிகள் உடனிருந்தனர்.

    • சிவன்மலை ஊராட்சியுடன் இணைந்து கருங்கல் வனம் எனும் பூங்கா அமைத்து அதில் அரியவகை மரங்கள் மற்றும் அழிந்து வரும் மரக்கன்றுகளையும் நட்டுள்ளனர்.
    • வெள்ளகோவிலை அடுத்த வீரசோழபுரம் ஊராட்சி பெரிய கோவில் அடஞ்சாரம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

    காங்கயம்:

    காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மரக்கன்றுகள் நடுவது, குளம் குட்டைகளை தூர்வார்வது போன்ற பணிகள் செய்யப்பட்டு வருகின்றது.சிவன்மலை ஊராட்சியுடன் இணைந்து கருங்கல் வனம் எனும் பூங்கா அமைத்து அதில் அரியவகை மரங்கள் மற்றும் அழிந்து வரும் மரக்கன்றுகளையும் நட்டுள்ளனர். மேலும் இதுவரை 800 பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 23 ஆயிரத்து 750 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக 131-வது கட்டமாக வெள்ளகோவிலை அடுத்த வீரசோழபுரம் ஊராட்சி பெரிய கோவில் அடஞ்சாரம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவில் வெள்ளகோவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெகதீஸ், சிவாஸ் பேப்பர் மில் சி.சண்முகராஜ், சபரி கன்ஸ்ட்ரக்சன் வி.தங்கமுத்து, அம்மன் கன்ஸ்ட்ரக்சன் சக்திவேல் முருகன், வீரசோழபுரம் ஜி. பாலசுப்பிரமணியம் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள், காங்கயம் துளிகள் அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர்.

    • விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
    • ஏராமானோர் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள ராமசாணிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டது.

    நிகழ்ச்சியில் கண்ணமங்கலம் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் பாலகுமார், மேற்கு ஆரணி வட்டார கல்வி அலுவலர் அருணகிரி ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பள்ளி வளாகத்தில் மூலிகைத்தோட்டம், பல்வகைத் தோட்டங்களை கண்டு பாராட்டினர். முன்னதாக தலைமையாசிரியைதாமரைச்செல்வி வரவேற்றார்.

    அப்போது ஓய்வு பெற்ற ராணுவ வீரர் க.பிரபாகரன், தற்காலிக ஆசிரியர்கள் சசிகலா, நளினி, மகேஷ்வரி, வனிதா, ஆசிரியைகள் பவானி, தமிழ்ச்செல்வி மாணவ, மாணவிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அறிவுரைகளை கடை பிடிக்காத நாற்று பண்ணை உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
    • விவசாயிகள் நாற்று பண்ணைகளில் விற்பனை பட்டியலினை பெற்று நாற்றுகள் வாங்கிட கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதாபாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள காய்கனி நாற்று பண்ணைகளுக்கு விதை கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் கீழ் விற்பனை உரிமம் வழங்கப்பட்டு விதை ஆய்வாளர்களால் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஆய்வின்போது காய்கனி நாற்று ரகங்கள், பழமரக்கன்றுகளின் ரகங்கள் மற்றும் தென்னங்கன்றுகளின் ரகங்கள் எவ்வாறு கொள்முதல் செய்யப்படுகிறது என்ற விபரத்துடன் அவை முறையாக இருப்புப் பதிவேட்டில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு முறையான விற்பனை பட்டியல் வழங்கி, விற்பனை செய்யப்பட்டு வருகிறதா எனவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் விற்பனை உரிமம் பெற்ற நாற்று பண்ணைகளில் விவசாயி பெயர், ஊர், காய்கனி நாற்று அல்லது பழமரக்கன்றுகளின் பெயர், ரகம் ஆகியவற்றுடன் விற்பனையாளர் மற்றும் விவசாயி கையொப்பமிட்ட விற்பனை பட்டியலினை பெற்று நாற்றுகள் வாங்கிட கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    நாற்று பண்ணையாளர்கள் தங்களிடமுள்ள காய்கனி நாற்றுகள், பழமரக்கன்றுகள் மற்றும் தென்னங்கன்றுகளை ரகம் வாரியாக கொள்முதல் பட்டியல் விபரம் குறிப்பிட்டு இருப்பு பதிவேட்டில் பதிவு செய்து முறையாக விற்பனை பட்டியல் வழங்கி விவசாயிகளுக்கு விற்பனை செய்திட அறிவுரை வழங்கப்படுகிறது.

    அறிவுரைகளை கடை பிடிக்காத நாற்று பண்ணை உரிமையாளர்கள் மீது விதை கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் கீழ் உரிமம் ரத்து உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் முழு மானியத்தில் குழித்தட்டு மற்றும் மிளகாய் நாற்றுகள் வழங்கப்படவுள்ளது.
    • இணையதள எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன் பெறலாம்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் வட்டார உதவி தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டம் திருமருகல் வட்டார விவசாயிகளுக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக முழு மானியத்தில் குழித்தட்டு, கத்தரி மற்றும் மிளகாய் நாற்றுகள் வழங்கப்படவுள்ளது.

    இதனை பெற விவசாயிகள் சிட்டா அடங்கல், ஆதார் நகல், போட்டோ ஆகியவற்றை கொண்டு 9715141468 என்ற இைணயதள எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக மாவட்ட கலெக்டர் உமா அறிவுறுத்தலின்படி, கால்நடை பராமரிப்பு துறை சார்பாக திருச்செங்கோடு துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.
    • 5500 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக மாவட்ட கலெக்டர் உமா அறிவுறுத்தலின்படி, கால்நடை பராமரிப்பு துறை சார்பாக திருச்செங்கோடு துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.

    மண்டல இணை இயக்குனர் நடராஜன் தலைமையில் துணை இயக்குனர் அருண் பாலாஜி மற்றும் பசுமை தமிழகம் இயக்கத்தின் மாவட்ட தொடர்பு அலுவலர் ராஜேஸ் கண்ணன் முன்னிலையில் 5500 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது.

    நாமக்கல் மாவட்ட வனத்துறையால் வழங்கப்பட்ட வாகை,சீமை அகத்தி, கொடுக்கா புளி உள்ளிட்ட மரக்கன்றுகளை திருச்செங்கோடு செங்குந்தர் கலை, அறிவியல் கல்லூரியைச் சார்ந்த என்.எஸ். எஸ் மற்றும் என்.சி.சி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

    இந்நிகழ்வில் கால்நடை மருத்துவர்கள் சசிகுமார், சதீஷ்குமார் ஆகியோரும், கல்லூரியின் என்.சி.சி அலுவலர் ராமசாமி, என்.எஸ். எஸ் திட்ட அலுவலர் மைதிலி மற்றும் கால்நடை மருத்துவத் துறையினரும் கலந்து கொண்டனர்.

    • முத்தமிழ் அறிஞர் பூங்கா வனம் என பெயரிடப்பட்டு பெயர்ப்பலகை திறக்கப்பட்டது.
    • சின்னியம்பாளையம் புதூர் பகுதியில் கொடியேற்றுவிழா நடைபெற்றது.

    மங்கலம்:

    முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் 100 வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம், பூமலூர் ஊராட்சி-கிடாதுறை பகுதியில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., க.செல்வராஜ் தலைமையிலும் தி.மு.க.வை சேர்ந்த கிடாதுறை கே.பி.சீனிவாசன் ஏற்பாட்டிலும் 400 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.பின்னர் முத்தமிழ் அறிஞர் பூங்கா வனம் என பெயரிடப்பட்டு பெயர்ப்பலகை திறக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து நடுவேலம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.17,62,000 மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகளுக்கான கட்டிடத்தை செல்வராஜ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    பின்னர் சின்னியம்பாளையம் புதூர் பகுதியில் கொடியேற்றுவிழா நடைபெற்றது.அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிக்கு செல்வராஜ் எம்.எல்.ஏ., ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. பல்லடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார்.மேலும் கட்சியின் பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் வக்கீல்குமார், மாவட்ட மகளிர்அணி துணைச்செயலாளர் நந்தினி, பல்லடம் ஒன்றியகுழு தலைவர் தேன்மொழி, மாவட்ட பிரதிநிதியும், பூமலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான செந்தில்தியாகராஜன், பூமலூர் ஊராட்சி மன்றத்தலைவர் பிரியங்கா, பூமலூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நடராஜன், அவைத்தலைவர் பரமசிவம், பூமலூர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் தங்கராஜ் , தி.மு.க. சரண்சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெடுஞ்சாலை கோட்டத்தின் சார்பில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியினை, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பயணியர் மாளிகையில் அமைச்சர் கே.என்.நேரு மரக்கன்று நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.
    • மேலும், பருவமழைக்கு முன்பாகவே அனைத்து மரக்கன்றுகளையும் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    திருச்செங்கோடு:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து நாமக்கல் நெடுஞ்சாலை கோட்டத்தின் சார்பில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியினை, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பயணியர் மாளிகையில் அமைச்சர் கே.என்.நேரு மரக்கன்று நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன், திருச்செங்கோடு எம்.எல்.ஏ.ஈஸ்வரன், திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

    நாமக்கல் நெடுஞ்சாலை கோட்டத்தில் 1,800 வேம்பு மரக்கன்றுகளும், 1,800 புங்கன் மரக்கன்றுகளும், 2,000 வசந்த ராணி மரக்கன்றுகளும், 1,700 பாதணி மரக்கன்றுகளும், 1,700 நாவல் மரக்கன்றுகளும், 1,500 நீர்மருது மரக்கன்றுகளும், 1,500 அத்தி மரக்கன்றுகளும் என மொத்தம் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளது.

    மேலும், பருவமழைக்கு முன்பாகவே அனைத்து மரக்கன்றுகளையும் நடுவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் திருகுணா, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யா, உதவி கோட்டப்பொறியாளர் தமிழரசி, திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் கணேசன், உதவி பொறியாளர்கள் சுதா, சையது ரசீம் ஆகியோர் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் தகவல்
    • மாநில நெடுஞ்சாலைகளில் மரங்கள் வெட்ட அனுமதி கேட்டு உள்ளனர்

    வேலூர்:

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளி விளையாட்டு மைதானத்தில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடந்தது.

    கலெக்டர் குமரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, வன பாதுகாப்பு அலுவலர் சுஜாதா, மாவட்ட வன அலுவலர் கலாநிதி, உதவிவன பாதுகாப்பு அலுவலர் மணிவண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பின்னர் விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகளை அவர்கள் நட்டு வைத்தனர்.

    இதையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசு வனத்துறையும் இணைந்து சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை வனத்துறை சார்பில் வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

    தேசிய நெடுஞ்சாலை ஓரம் மற்றும் பாலாற்று கரையோரம் மண் அரிப்பை தடுக்கும் வகையில் மரக்கன்றுகள் நடப்படுகிறது.

    இதேபோல் கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு காலியாக உள்ள இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 10 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு பல்வேறு காரணங்களுக்காக இலக்கை எட்ட முடியவில்லை.

    இந்தாண்டும் பல்வேறு இடங்களில் மரக்கன்று நடப்படுகிறது வேலூரை வெயிலூர் என்று அழைக்கின்றனர்.

    இந்த நிலை மாற வேண்டும்.சூரிய ஒளி நேரடியாக நிலத்தில் படுவதால் தான் அதிக தாக்கம் உள்ளது எனவே மரக்கன்றுகள் வளர்க்கப்பட உள்ளது. மாநில நெடுஞ்சாலைகளில் மரங்கள் வெட்ட அனுமதி கேட்டு உள்ளனர்.

    ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள், விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    • வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம் மூலம் 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    ஒன்றுப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் உள்ள முன்னாள் மற்றும் இன்னாள் முப்படை மற்றும் துணை ராணுவ படை வீரர்களைக் கொண்டு அமையப் பெற்ற சோழ நாட்டு பட்டாளம் சமூக சேவை அறக்கட்ட ளையின் 4-ம் ஆண்டு தொடக்க விழா தஞ்சையில் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை ெதாடங்கி வைத்தார்.

    இந்த விழாவில் ஈ.சி.எச்.எஸ் பொறுப்பு அதிகாரி ஜிபி கேப்ட் சிபிகே. கென்னடி ( ஓய்வு ), குந்தவை நாச்சியார் கலை கல்லூரி பேராசிரியர் முனைவர் தமிழடியான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தா டைகள், விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், ரத்த தானம் வழங்கியவர்களுக்கு பரிசு சான்றிதழ்கள் ஆகியவற்றை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கி பாராட்டினார்.

    மேலும் அவர் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம் மூலம் 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கினார்.

    மேலும் இந்த விழாவோடு இணைந்து சோழநாட்டு பட்டாள படை வீரர் அந்தோ ணியின் பணி ஓய்வு பாராட்டு விழாவும் நடைபெற்றது. அவரை கலெக்டர் கவுர வித்தார்.

    • மழை ஈரத்தை பயன்படுத்தி மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வம் உள்ளவர்கள் விவசாய துறையினரை அணுக வேண்டும்.
    • மரக்கன்றுகள் நீர்முளை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    வேதாரண்யம் பகுதியில் தற்போது பெய்த மழை ஈரத்தை பயன்படுத்தி மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வம் உள்ள விவசாயிகள் விவசாய துறையினர அணுக வேண்டும் வேளாண்மை துறையினர் அழைப்புவிடுத்துள்ளனர்

    விவசாயிகளுக்கு தேவையான மரக்கன்றுகள் நீர்முளை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    எனவே, தமிழ்நாடு அரசின் பசுமைக்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகள் மரக்கன்றுகளை இலவசமாக பெற கீழ்க்கண்ட ஆவணங்களோடு நீர்முளை வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு கணினி சிட்டா, ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், பேங்க் பாஸ்புக் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் நேரில் வர வேண்டும் எனவும்மரக்கன்று வளர்ப்புக்கு பராமரிப்பு செலவுத்தொகையும் வழங்கப்படும்.

    விவசாயிகள் தங்களிடம் உள்ளபராமரிப்பற்று கிடக்கும் திடல்கள், வயல் வரப்புகள், வீட்டைச்சுற்றியுள்ள இடங்கள் ஆகியவற்றை மரக்கன்றுகள் வளர்க்க பயன்படுத்தலாம். மரங்களை வளர்த்து வருங்கால நம் சந்ததியை காப்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×