search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரம் வளர்க்க விவசாயிகளுக்கு வேளாண்மைதுறை அழைப்பு
    X

    மரம் வளர்க்க விவசாயிகளுக்கு வேளாண்மைதுறை அழைப்பு

    • மழை ஈரத்தை பயன்படுத்தி மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வம் உள்ளவர்கள் விவசாய துறையினரை அணுக வேண்டும்.
    • மரக்கன்றுகள் நீர்முளை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    வேதாரண்யம் பகுதியில் தற்போது பெய்த மழை ஈரத்தை பயன்படுத்தி மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வம் உள்ள விவசாயிகள் விவசாய துறையினர அணுக வேண்டும் வேளாண்மை துறையினர் அழைப்புவிடுத்துள்ளனர்

    விவசாயிகளுக்கு தேவையான மரக்கன்றுகள் நீர்முளை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    எனவே, தமிழ்நாடு அரசின் பசுமைக்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகள் மரக்கன்றுகளை இலவசமாக பெற கீழ்க்கண்ட ஆவணங்களோடு நீர்முளை வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு கணினி சிட்டா, ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், பேங்க் பாஸ்புக் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் நேரில் வர வேண்டும் எனவும்மரக்கன்று வளர்ப்புக்கு பராமரிப்பு செலவுத்தொகையும் வழங்கப்படும்.

    விவசாயிகள் தங்களிடம் உள்ளபராமரிப்பற்று கிடக்கும் திடல்கள், வயல் வரப்புகள், வீட்டைச்சுற்றியுள்ள இடங்கள் ஆகியவற்றை மரக்கன்றுகள் வளர்க்க பயன்படுத்தலாம். மரங்களை வளர்த்து வருங்கால நம் சந்ததியை காப்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×