search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரக்கன்றுகள்"

    • இதற்கு முன்பு ஒரே நாளில் 9,26,000 மரக்கன்றுகளை நட்டு அசாம் மாநிலம் கின்னஸ் சாதனை புடைத்திருந்தது.
    • மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கின்னஸ் புத்தகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ சான்றிதழை பெற்றுக்கொண்டார்.

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 24 மணி நேரத்தில் 11 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

    மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கின்னஸ் புத்தகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ சான்றிதழை பெற்றுக்கொண்டார்.

    இந்த சாதனை குறித்து மோகன் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தூய்மையான நகரம் என்ற சாதனையை தொடர்ந்து ஒரே நாளில் அதிக மரக்கன்றுகள் நடப்பட்ட நகரம் என்ற சாதனையையும் படைத்த இந்தூரின் சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தூர் நகரம் ஒரே நாளில் 11 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

    இதற்கு முன்பு ஒரே நாளில் 9,26,000 மரக்கன்றுகளை நட்டு அசாம் மாநிலம் கின்னஸ் சாதனை புடைத்திருந்தது. அச்சாதனையை தற்போது இந்தூர் முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.

    • தமிழகத்தில் இந்தாண்டு ஒரு கோடியே 21 லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • மரக்கன்றுகள் நடும் திட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றார் திமுக எம்.பி. சண்முகசுந்தரம்.

    கோவை:

    ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகத்தில் இந்தாண்டு (2024-25 நிதியாண்டில்) ஒரு கோடியே 21 லட்சம் மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற விழாவில் பொள்ளாச்சி தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் முதல் கன்றை நட்டு வைத்து இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் சக்தி குழுமத்தின் தலைவர் மாணிக்கம், கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் வசந்தகுமார், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையின் தலைவர் ஜி.டி.கோபால கிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சி தொடர்பாக எம்.பி. சண்முகசுந்தரம் கூறுகையில், ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 21 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். தற்போது உலகம் எதிர்கொண்டு வரும் பருவநிலை மாற்ற பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு மரக்கன்றுகள் நடுவதுதான் சிறந்த தீர்வாகும். அந்த வகையில், விவசாய நிலங்களில் மரம் நடும் இந்த அற்புதமான திட்டம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

    கடந்தாண்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தொண்டாமுத்தூரில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அதில் முதல் மரக்கன்றையும், 2-வது லட்சம் மரக்கன்றையும் என்னை அழைத்து நட வைத்தார்கள். ஈஷா மேற்கொண்டு வரும் இந்த நற்செயல் தொடர்ந்து வெற்றிகரமாக நடக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    இதுதொடர்பாக காவேரி கூக்குரல் இயக்கத்தின் தன்னார்வலரும், முன்னோடி விவசாயியுமான வள்ளுவன் கூறுகையில், "உலகிலேயே வேறு எந்த சுற்றுச்சூழல் இயக்கமும் செய்யாத மாபெரும் சாதனையை காவேரி கூக்குரல் இயக்கம் செய்துவருகிறது. விவசாய நிலங்களில் ஓராண்டில் ஒரு கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடும் இலக்கை நாங்கள் தொடர்ந்து 2 ஆண்டுகளாக வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம். அதன் தொடர்ச்சியாக, இந்தாண்டு தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 21 லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

    உலகில் வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற சாதனை நிகழ்த்தப்பட்டது இல்லை. அந்த வகையில், முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டில் நாம் இதை நிகழ்த்திக் காட்டி வருகிறோம். இத்திட்டத்தின் மூலமாக, சுற்றுச்சூழல் மேம்பாட்டுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரமும் அதிகரித்து வருகிறது.

    காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஆலோசனைப்படி தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் போன்ற விலைமதிப்புமிக்க டிம்பர் மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நட்டு வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்தாண்டு 7,63,087 மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளது. அதை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்தாண்டு 9,55,000 மரக்கன்று நடும் பணியை நாங்கள் முன்னெடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

    மேலும், மரக்கன்று நட விரும்பும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச ஆலோசனைகள் குறித்து பேசும்போது, "விவசாயிகளுக்கு இலவச ஆலோசனைகள் வழங்குவதற்காக 130 களப்பணியாளர்கள் தமிழ்நாடு முழுவதும் இயங்கி வருகின்றனர். மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்குச் சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிகள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என கூறினார்.

    • இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
    • மகிழம், கொய்யா, இலுப்பை உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

     ஏரியூர், 

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமகொண்ட அள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில், சிகரள அள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ராமகொண்ட அள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தயாநிதி தலைமை வகித்தார். பள்ளியின் தமிழாசிரியர் சுப்ரமணி வரவேற்புரை நிகழ்த்தினார். உதவி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், சிகரல அள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் முத்து குமார், கிருஷ்ணன், ரகுராமன், வைரம், குமார் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்துறை தலைவர் நாகராஜ், மரக்கன்றுகள் நடுவதில் பயன்கள் குறித்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஏரியூர் காவல் ஆய்வாளர் யுவராஜ் பங்கேற்று, பள்ளியில் பயிலும் 300 மாணவ மாணவிகளுக்கு மகிழம், கொய்யா, இலுப்பை உள்ளிட்ட இலவச மரக்கன்றுகளை வழங்கினார். நிறைவாக பள்ளியின் ஆசிரியை இளமதி நன்றி உரை கூறினார்.

    • சேலம் மாவட்டம் கெங்கவல்லி வனச்சரகர் சிவக்குமார் முயற்சியில் திண்டுக்கல் நத்தம் பகுதியில் இருந்து விதைகள் சேகரித்து மருத்துவ குணம் கொண்ட 2,000 சிகப்புப் புளி மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
    • சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக முத்தம்பட்டியில் ஒரே இடத்தில் 100 சிகப்புப் புளி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி வனச்சரகர் சிவக்குமார் முயற்சியில் திண்டுக்கல் நத்தம் பகுதியில் இருந்து விதைகள் சேகரித்து மருத்துவ குணம் கொண்ட 2,000 சிகப்புப் புளி மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இவை சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக நடவு செய்யப்படுகிறது. வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை தன்னார்வலர்கள் வேண்டுகோளின் பேரில் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா செந்தில்குமார் தலைமையில் ஊராட்சிக்கு சொந்தமான மரத்தோட்டத்தில் 100 சிகப்புப் புளி மரக்கன்றுகள் நடப்பட்டது. சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக முத்தம்பட்டியில் ஒரே இடத்தில் 100 சிகப்புப் புளி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. அருகி வரும் இந்த மரக்கன்றுகளை முறையாக பராமரித்து பாதுகாத்து வளர்க்க உரிய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

    • அரசு மேல்நிலைப் பள்ளியில் நேரு யுவகேந்திரா சார்பில் மாணவர்களுக்கு சீருடை மற்றும் புத்தகம் வழங்கி, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கபிலர் மலை வட்டார ஆத்மா தலைவருமான கே.கே. சண்முகம் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் புத்தகங்களை வழங்கினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நேரு யுவகேந்திரா சார்பில் மாணவர்களுக்கு சீருடை மற்றும் புத்தகம் வழங்கி, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கபிலர்மலை ஒன்றிய குழு உறுப்பினரும், கபிலர் மலை வட்டார ஆத்மா தலைவருமான கே.கே. சண்முகம் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் புத்தகங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கலை சுந்தர்ராஜ், கபிலக்குறிச்சி ஊராட்சி உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர் பழனிசாமி , ஆசிரியர்கள், ஆசிரியைகள், பொதுமக்கள், நேரு யுவகேந்திரா பொறுப்பாளர்கள், மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவோம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • சாலை விதிகளை மதித்து வாகனம் ஓட்டியவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் சேந்தமங்கலம் பேருந்து நிலையம் அருகில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி நிறுவனத்தின் நிறுவனரும், தாளாளருமான வெங்கட்ராஜூலு தலைமையிலும் நேதாஜி கல்வி குழுமத்தினுடைய இயக்குநனரும்), மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ பள்ளி தாளாளருமான விஜயசுந்தரம் முன்னிலையில் நேதாஜி கல்வி நிறுவனங்கள், திருவாரூர் சிட்டி யூனியன் வங்கி இணைந்து மகரிஷி வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியின் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாணவர்கள் எமதர்மராஜா (மற்றும்) சித்திரகுப்தன் வேடமணிந்து சாலை பயணத்தில் கவனமின்மையால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாகவும், தலைக்கவசம் உயிர்க்கவசம், சாலை விதிகளை கடைபிடிப்போம், படியில் பயணம் செய்தால் நொடியில் மரணம், தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவோம், இருசக்கர வாகனங்கள் செல்லும் பொழுது அவசியம் சீட் பெல்ட் அணிவோம், மதுஅருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவதை தவிர்க்கவும் வேகத்தடையில் மெதுவாக செல்லவும், போன்ற வாசகம் அடங்கிய விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

    விழிப்புணர்விற்கு சிறப்பு அழைப்பாளராக திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கீழ்காவாதுகுடி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி தலைக்கோவன், திருவாரூர் சிட்டி யூனியன் வங்கியின் மேலாளர் வினோத் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும்நேதாஜி பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக சாலை விதிகளை மதித்து வாகனம் ஓட்டிய 1000 ஆயிரம் நபர்களுக்கு மரக்கன்று கள்வழ ங்கப்பட்டது.

    மேலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும் அறிவியல்க ல்லூரியின் சார்பாக 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிர்மை நேயத்தினை மனதில் கொண்டு ரத்ததானம் செய்தனர்.

    விழாவிற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி குழுமத்தினுடைய செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த் ஆகியோர் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    இதில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியினுடைய முதல்வர் சிவகுருநாதன் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் நிர்மல் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியினுடைய முதல்வர் ராமபிரபா, துணை முதல்வர்,துறை தலைவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 1,000 மரக்கன்றுகளை மரத்துக்கு மரம் 15 அடி இடைவெளியில் நடவு செய்ய திட்டமிடப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
    • மரங்களை நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டுமென வனத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 1000 மரக்கன்றுகள் நடுவதன் துவக்க விழா நடைபெற்றது. மரக்கன்றுகள் நடும் விழாவிற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் மருத்துவர் உமா தலைமை வகித்தார்.நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார் மற்றும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநரும், மாவட்ட வருவாய் அலுவலருமான மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் கலந்து கொண்டு குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 1000 மரக்கன்றுகள் நடுவதன் துவக்கமாக, மரக் கன்றுகளை நட்டார்.

    அப்போது வனத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, வனத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ், மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் நாவல் மரம், இலுப்பை மரம், புளிய மரம், மகாகனி மரம், நீர் மருது தலா 250 மரக்கன்றுகள் வீதம் மொத்தம் 1,000 மரக்கன்றுகளை மரத்துக்கு மரம் 15 அடி இடைவெளியில் நடவு செய்ய திட்டமிடப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    காற்றிலுள்ள மாசினைக் கட்டுப்படுத்த, கரியமில வாயுவின் அளவைக் குறைத்து ஆக்சிஜன் அளவை அதிகரிக்கவும், தேவையான அளவு மழைப்பொழிவைப் பெறவும் குறுங்காடுகள் உதவுகின்றன. அகிரா மியாவாக்கி என்ற ஜப்பான் நாட்டு தாவரவியலாளர் அறிமுகம் செய்த காடு வளர்ப்பு முறைதான் மியாவாக்கி முறையாகும். இந்த முறையில் குறைந்த காலத்தில் அடர்ந்த வனப்பகுதியை ஏற்படுத்த முடியும். மியாவாக்கி முறையினால் பத்து ஆண்டுகளில் ஒரு மரம் எவ்வளவு வளர்ச்சியடையுமோ அந்த வளர்ச்சி இந்த முறையில் இரண்டே ஆண்டுகளில் கிடைத்துவிடும், பொதுவாக இந்த முறையில் மரங்கள் இயற்கை காடுகளை விட 10 மடங்கு அதிக வேகமாகவும், 30 மடங்கு அதிக நெருக்கமாகவும் வளரும்.

    கிராமப்புறங்களில் உள்ள பஞ்சாயத்து அல்லது புறம்போக்கு நிலங்களைத் தேர்வு செய்து அதில் குறுங்காடுகளை உருவாக்கலாம் அல்லது பஞ்சாயத்து ஏரிகளில் தண்ணீர் தேங்கி நிற்காத பகுதிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி அந்த இடங்களில் குறுங்காடுகளை உருவாக்கலாம். குறுங்காடுகள் உருவாக்குவதால் பல உயிரினங்கள் பயனடையக் கூடும். மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான காலி நிலங்கள் இருப்பின் அவற்றிலும் குறுங்காடுகளை அமைக்கலாம். மேலும், இந்த மரங்களை நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டுமென வனத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை துணைத் தலைமை பொறியாளர் செங்குட்டுவன், துணைத் தலைமை ரசாயனர் சந்திரசேகரன், கரும்பு பெருக்க அலுவலர் சுப்புராஜ், உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், தொழிலாளர் நல அலுவலர் தியாகராஜன், அலுலக மேலாளர் கணபதி, சிவில் பொறியாளர் தங்கவேலு, சர்க்கரை ஆலை அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவன்மலை ஊராட்சியுடன் இணைந்து கருங்கல் வனம் எனும் பூங்கா அமைத்து அதில் அரியவகை மரங்கள் மற்றும் அழிந்து வரும் மரக்கன்றுகளையும் நட்டுள்ளனர்.
    • வெள்ளகோவிலை அடுத்த வீரசோழபுரம் ஊராட்சி பெரிய கோவில் அடஞ்சாரம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

    காங்கயம்:

    காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மரக்கன்றுகள் நடுவது, குளம் குட்டைகளை தூர்வார்வது போன்ற பணிகள் செய்யப்பட்டு வருகின்றது.சிவன்மலை ஊராட்சியுடன் இணைந்து கருங்கல் வனம் எனும் பூங்கா அமைத்து அதில் அரியவகை மரங்கள் மற்றும் அழிந்து வரும் மரக்கன்றுகளையும் நட்டுள்ளனர். மேலும் இதுவரை 800 பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 23 ஆயிரத்து 750 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக 131-வது கட்டமாக வெள்ளகோவிலை அடுத்த வீரசோழபுரம் ஊராட்சி பெரிய கோவில் அடஞ்சாரம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவில் வெள்ளகோவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெகதீஸ், சிவாஸ் பேப்பர் மில் சி.சண்முகராஜ், சபரி கன்ஸ்ட்ரக்சன் வி.தங்கமுத்து, அம்மன் கன்ஸ்ட்ரக்சன் சக்திவேல் முருகன், வீரசோழபுரம் ஜி. பாலசுப்பிரமணியம் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள், காங்கயம் துளிகள் அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர்.

    • மாணவர்களுக்கு தேக்கு, வேம்பு, சவுக்கு உள்ளிட்ட 4 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
    • மரங்களின் தனி சிறப்பு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

    சீர்காழி:

    சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சீர்காழி ஆயுள் காப்பீட்டு கழகம் சார்பில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பள்ளி தாளாளர் கே.வி. ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    பள்ளி செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

    பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகர் சிங் வரவேற்று பேசினார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக எல்.ஐ.சி.யின் கிளை மேலாளர் சிவாஜி, துணை மேலாளர் ரஃபிக் அகமது ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தேக்கு, வேம்பு, சவுக்கு உள்ளிட்ட 4000 மரக்கன்றுகளை வழங்கி பேசினர்.

    தொடர்ந்து தாவரவியல் ஆசிரியர் ராம்குமார் மரங்களின் தனி சிறப்பு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சரோஜா, எல்ஐசி அதிகாரிகள் தினேஷ், பாபு, அரவிந்தன், நிக்சன், நரேந்திரன், ஆசிரியர்கள், மாணவர்கள், எல்.ஐ.சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சுற்றுச்சூழல் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் சுமதி நன்றி கூறினார்.

    • பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து விழாவை தொடங்கி வைத்தார்.
    • நாட்டுநலப்பணி திட்ட முககமில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    மங்கலம்:

    திருப்பூர் அடுத்த சாமளாபுரம் லிட்ரசி மிஷன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டுநலப்பணி திட்ட முகாம் நடந்தது. சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வேலாயுதம்பாளையம் பகுதியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சிறப்பு முகாமின் ஒரு பகுதியாக லிட்ரசி மிஷன் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து வேம்பு, பலா உள்பட 50 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    விழாவில் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து விழாவை தொடங்கி வைத்தார். இதில் பள்ளியின் முதல்வர் ருக்மணி, வார்டு கவுன்சிலர்கள் மேனகா பாலசுப்பிரமணியம், பெரியசாமி, துளசிமணி ஆறுமுகம், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் தனபால், உதவி அலுவலர் வசந்த்குமார் , ஆசிரியை உண்ணாமலை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
    • ஏராமானோர் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள ராமசாணிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டது.

    நிகழ்ச்சியில் கண்ணமங்கலம் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் பாலகுமார், மேற்கு ஆரணி வட்டார கல்வி அலுவலர் அருணகிரி ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பள்ளி வளாகத்தில் மூலிகைத்தோட்டம், பல்வகைத் தோட்டங்களை கண்டு பாராட்டினர். முன்னதாக தலைமையாசிரியைதாமரைச்செல்வி வரவேற்றார்.

    அப்போது ஓய்வு பெற்ற ராணுவ வீரர் க.பிரபாகரன், தற்காலிக ஆசிரியர்கள் சசிகலா, நளினி, மகேஷ்வரி, வனிதா, ஆசிரியைகள் பவானி, தமிழ்ச்செல்வி மாணவ, மாணவிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பெருங்கடம்பனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 150 மரக்கன்றுகள் நடப்பட்டன.
    • அதனை தொடர்ந்து, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்ட இரண்டாம் ஆண்டை முன்னிட்டு வனத்துறை சார்பில் நாகை பெருங்கடம்பனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 150 மரக்கன்றுகள் நடப்பட்டன.

    அதனையொட்டி தேசிய பசுமை படை மாணவர்கள், ஆதிபராசக்தி மன்ற உறுப்பினர்கள் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் வனச்சரகர் ஆதிலிங்கம், தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், பசுமை கண்காணிப்பாளர் டிவைனியா, தலைமையாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் எழிலன், ஓவிய சங்கத் தலைவர் முருகையன், இயற்கை ஆர்வலர் கீழ்வேளூர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஒவ்வொரு மாணவர் பெயரிலும் ஒவ்வொரு மரக்கன்று நடப்பட்டு அவற்றை பராமரித்து வளர்த்து காட்டும் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் ஒரு வருடம் கழித்து அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

    தேசிய பசுமை படை மாணவர்களுக்கு கிரேட் எஃப் தொண்டு நிறுவனம் சார்பாக மஞ்சப்பைகள் வழங்க ப்பட்டன.

    ×