search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் மாவட்டத்தில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்
    X

    வேலூர் மாவட்டத்தில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்

    • கலெக்டர் தகவல்
    • மாநில நெடுஞ்சாலைகளில் மரங்கள் வெட்ட அனுமதி கேட்டு உள்ளனர்

    வேலூர்:

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளி விளையாட்டு மைதானத்தில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடந்தது.

    கலெக்டர் குமரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, வன பாதுகாப்பு அலுவலர் சுஜாதா, மாவட்ட வன அலுவலர் கலாநிதி, உதவிவன பாதுகாப்பு அலுவலர் மணிவண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பின்னர் விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகளை அவர்கள் நட்டு வைத்தனர்.

    இதையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசு வனத்துறையும் இணைந்து சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை வனத்துறை சார்பில் வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

    தேசிய நெடுஞ்சாலை ஓரம் மற்றும் பாலாற்று கரையோரம் மண் அரிப்பை தடுக்கும் வகையில் மரக்கன்றுகள் நடப்படுகிறது.

    இதேபோல் கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு காலியாக உள்ள இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 10 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு பல்வேறு காரணங்களுக்காக இலக்கை எட்ட முடியவில்லை.

    இந்தாண்டும் பல்வேறு இடங்களில் மரக்கன்று நடப்படுகிறது வேலூரை வெயிலூர் என்று அழைக்கின்றனர்.

    இந்த நிலை மாற வேண்டும்.சூரிய ஒளி நேரடியாக நிலத்தில் படுவதால் தான் அதிக தாக்கம் உள்ளது எனவே மரக்கன்றுகள் வளர்க்கப்பட உள்ளது. மாநில நெடுஞ்சாலைகளில் மரங்கள் வெட்ட அனுமதி கேட்டு உள்ளனர்.

    ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×