search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழையினால் பாதித்த நெற்பயிர்கள்
    X

    மழையினால் பாதித்த நெற்பயிர்கள்

    • வேளாண் இயக்குனர் நேரில் ஆய்வு
    • பயிர்களை பாதுகாக்க அறிவுரை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவ ட்டம், ஆவுடையார்கோவில் வட்டாரம், பூவலூர் கிராமத்தில் மழையினால் சம்பா பருவத்தில் சாகுபடி செய்த பயிர்களில், அறு வடை நிலையிலிருந்த நெற்பயிர்கள் பாதிப்ப டைந்துள்ளதை, வேளா ண்மைத்துறை இயக்குநர் ஆ.அண்ணா துரை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது, வேளாண்மைத்துறை இயக்குநர் தெரிவித்ததாவது, புதுக்கோட்டை மாவட்ட த்தில் பெய்த மழையினால் சம்பா பருவத்தில் சாகுபடி செய்த பயிர்களில் அறு வடை நிலையிலிருந்தநெற்ப யிர்கள் பாதிப்படைந்து ள்ளதை நேரில்பார்வை யிட்டு ஆய்வு செய்யப்பட்டது.இரண்டு நாட்களில் பெய்த மழையினால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல் பயிர் சாய்ந்து உள்ளது. இதன்மூலம் ஏற்படும் பாதிப்பூகளிலிருந்து நெல் மணிகளை பாதுகாக்கும் வகையில், பள்ளமான வயல்களில் தேங்கியுள்ள நீரினை வடிகால் அமைத்து வடித்து, நெல் மணிகள் நனைந்து முளைக்காமல் இருக்க, வயலினை காயவிட்டு, அறுவடை பணிகள் மேற்கொள்ள விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தி ற்கு 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயறுவகை பயிர், உளுந்து பயிர் சாகுபடி செய்தி இலக்கு வழங்கப்பட்டுள்ளது. நெல்லுக்கு பின் உளுந்து சாகுபடி செய்திட 50 சதவீத மானிய விலையில் சான்று பெற்ற விதைகள் மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.எனவே நெல் அறுவடை முடிந்த வயல்களில் சாகுபடி செய்து அதிக மகசூல் பெற்றிடவும், மேலும் மண்வளம் கா த்திடவும் அறிவுரை வழங்க ப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வேளாண்மை இணை இயக்குனர் மா.பெரி யசாமி, அறந்தாங்கி வரு வாய் கோட்டாட்சியர் சு.சொர்ணராஜ், வேளா ண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) மோக ன்ராஜ், அறந்தாங்கி வேளாண்மை உதவி இயக்குனர் பத்மப்பிரியா, ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் வில்லியம் மோசஸ், வேளாண்மை அலுவலர்கள் பிரவினா, பாக்யா, உதவி வேளா ண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×