என் மலர்

    நீங்கள் தேடியது "coconut oil"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேங்காய் எண்ணை உற்பத்தியாளர்கள் சங்க அலுவலக கூட்டரங்கில் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    காங்கயம் :

    காங்கயம் சென்னிமலை சாலை கச்சேரி பகுதியில் உள்ள காங்கயம் தேங்காய் எண்ணை உற்பத்தியாளர்கள் சங்க அலுவலக கூட்டரங்கில் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் என்.எஸ்.என். தனபால் வரவேற்று பேசி கூட்டத்தை தொடங்கிவைத்தார். செயலாளர் சக்திவேல் சங்கத்தின் ஓராண்டு கால செயல்பாடுகளை விரிவாக கூறினார். பொருளாளர் பாலாஜி ஜி.ஆர்.ரவிச்சந்திரன் ஆண்டு அறிக்கையை வாசித்தார். சங்கத்தின் கவுரவ ஆலோசகர் என்.எஸ்.என்.நடராஜ் சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காததாலும், தேங்காய் உலர் கலங்களுக்கு போதிய விலையில் தேங்காய் கிடைக்காததாலும், தேங்காய் எண்ணை அரவை ஆலைகளுக்கு போதிய விலையில் கொப்பரை கிடைக்காததாலும் தேங்காய் எண்ணையை பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்க தமிழகஅரசை வலியுறுத்த வேண்டுதல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்கத்தின் கவுரவ ஆலோசகர்கள் , நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.   

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் 120 உறுப்பினர்களைக்கொண்டது.
    • கொரோனா பாதிப்பிற்கு பிறகு எங்கள் தொழில் வியாபாரம் குறைந்துள்ளது.

    காங்கயம் :

    திருப்பூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலை தொழிலுக்கு மின் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மின்சாரம், கலால் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஆகியோருக்கு, காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.எஸ்.என்.தனபால் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

    காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் 120 உறுப்பினர்களைக்கொண்டது. நாங்கள் தேங்காய் எண்ணெய் உற்பத்தி தொழிலை மேற்கொண்டு வருகிறோம். எங்கள் தொழிலானது தென்னை விவசாயத்தை சார்ந்து அதை ஊக்குவிக்கும் தொழிலாக உள்ளது. கொரோனா பாதிப்பிற்கு பிறகு எங்கள் தொழில் வியாபாரம் குறைந்துள்ளது. மேலும் வாராக்கடன்கள் அதிகரித்து எங்கள் தொழில் நலிவடைந்து வருகிறது.

    தற்போது உள்ள சூழ்நிலையில் தேங்காய் எண்ணெயின் விலையை விட பாமாயில் எண்ணெய் விலை குறைவாக உள்ளது. அதனால் மக்கள் தேங்காய் எண்ணெயை வாங்கி பயன்படுத்துவதில் தயக்கம் காட்டுகிறார்கள். இவ்வாறு மின்சார கட்டணத்தை உயர்த்தும் போது நாங்கள் அதன் சுமையை தேங்காய் எண்ணெய் விலையின் மீது வைக்கும்போது தேங்காய் எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அரசு வெளிநாடுகளில் இருந்து பாமாயில் எண்ைணயை இறக்குமதி செய்து ரேஷன் கடைகளில் வினியோகம் செய்து வருகிறது. அதனால் மக்கள் தேங்காய் எண்ணெய் பயன்பாட்டில் இருந்து பாமாயில் பயன்பாட்டிற்கு அதிகப்படியாக மாறி வருகிறார்கள். இதனால் தேங்காய் எண்ணெய் வியாபாரம் குறைந்துள்ளது.

    தமிழக அரசு தேங்காய் கொப்பரை குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து கொள்முதல் செய்து எங்கள் தொழிலை ஊக்குவித்து வரும் இந்த வேலையில், தற்போது மின்சார கட்டணத்தை உயர்த்துவதால் எங்களுக்கு மிகுந்த பாதிப்பை அளிக்கிறது. நாங்கள் அரவை கொப்பரையை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் போது குறைவான விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

    இதனால் தென்னை விவசாயிகள் நேரடியாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தேங்காய் எண்ணெய் ஆலைகள் உபயோகித்து வரும் மின் இணைப்புகளுக்கு மின்சார கட்டணத்தில் மாற்றம் செய்ய உத்தேசித்துள்ளது. எனவே தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலைக்கு மின்சார கட்டணம் உயர்விலிருந்து முழுமையாக விலக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வறண்ட வெடித்த உதடுகளின் சிகிச்சைக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் கொண்டு வெடித்த உதடுகளை சிகிச்சை செய்வதற்கான சில வழிகளை இப்பொழுது பார்க்கலாம்.
    குளிர்காலம் வந்தாலே உங்கள் சருமமும் தலைமுடியும் உதடுகளும் வறண்டு காணப்படும். இவற்றை பராமரிக்க நாம் கடைகளில் கிடைக்கும் கிரீம்களையும், லோஷன்களையும், ஷாம்புக்களையும், லிப் பாம்களையும் வாங்க வேண்டிவரும். இவற்றில் உள்ள இரசாயனப் பொருட்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால், எளிய முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே நமது சருமத்தை பராமரிக்கலாம்.

    நமது உதடுகளில் எண்ணெய் சுரக்கும் சுரப்பிகள் இல்லை. அதனால், குளிர்காலங்களில் அவைகளுக்கு போதுமான எண்ணெய் அல்லது ஈரப்பதம் கிடைப்பதில்லை. இதனால், நமது உடலில் உள்ள மற்ற சருமத்தைக்காட்டிலும் உதடுகளுக்கு அதிக கவனம் தேவைப்படுகின்றது. குளிர்காலத்தில் நமது உதடுகள் வறண்டு, வெடிப்பு ஏற்பட்டு அழகற்று காட்சியளிக்கின்றது.

    இதனை போக்குவதற்கு கடைகளில் ஏராளமான மாய்ஸ்சுரைசர்களும், லிப் பாம்களும், லிப் கிரிம்களும் கிடைக்கின்றன. வறண்ட வெடித்த உதடுகளை குணமாக்க வீட்டிலேயே செய்யக்கூடிய சிகிச்சைகள் பல உள்ளன. சிலவகை இயற்கையான மாயிஸ்ச்சரைசர்கள் உங்கள் உதடுகளை மென்மையாக்கி மீண்டும் நீரேற்றல் செய்யும்.

    வெண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாலாடை போன்றவை இந்த வகையை சார்ந்தவைகளாகும். இவற்றுள் தேங்காய் எண்ணெய் உங்கள் வெடித்த உதடுகளை சரிசெய்வதற்கு சிறந்ததாகும். இந்த எண்ணெய் உங்கள் உதடுகள் வறண்டு போவதை குறைத்து உதடுகளுக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும்.

    தேங்காய் எண்ணெய் உங்கள் வறண்ட வெடித்த உதடுகளைச் சுற்றி ஒரு படலத்தை ஏற்படுத்தி குளிர்காற்றில் இருந்து பாதுகாக்கும். தேங்காய் எண்ணெய் எளிதில் கிடைக்ககூடிய விலை மலிவான பொருளாகும். அதனால், எல்லோரும் வறண்ட வெடித்த உதடுகளின் சிகிச்சைக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் கொண்டு வெடித்த உதடுகளை சிகிச்சை செய்வதற்கான சில வழிகளை இப்பொழுது பார்க்கலாம்.

    தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் எப்பொழுதும் உங்கள் கைப்பையில் சிறிய தேங்காய் எண்ணெய் பாட்டில் ஒன்று எடுத்து செல்ல வேண்டும். போதுமான இடைவேளைகளில் எண்ணெயை தடவிக்கொள்ள வேண்டும். உங்கள் விரல் நுனிகளில் சிறிதளவு எடுத்துக்கொண்டு உங்கள் உதடுகளில் தடவிக்கொள்ள வேண்டும்.

    குளிர்காலங்களில் இதனை பயன்படுத்தி சிறந்த பலன்களை பெறுங்கள். தேங்காய் எண்ணெய்க்கு என்று ஒரு தனி மணமும் சுவையும் உள்ளது. இதன் மணம் பிடிக்கவில்லை என்றால் பகல் நேரங்களில் இதனை உபயோகிக்காமல் வேறு வழியில் உபயோகிக்கலாம். இரவு படுப்பதற்கு முன் இதனை உங்கள் உதடுகளில் தடவிவிடுங்கள் இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். காலையில் எழுந்தவுடன் தண்ணீர் கொண்டு கழுவி விடுங்கள். பகல் நேரங்களில் மற்ற லிப் பாம்களை உபயோகிக்க மறந்துவிடாதீர்கள்.

    தேங்காய் எண்ணெயுடன் ஆலிவ் எண்ணெய் அல்லது பிற எண்ணெய்களின் கலவை உங்கள் உதடுகளுக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும். இந்த கலவையை இரவு நேரங்களிலும் அல்லது பகல் நேரங்களிலும் தொடர்ந்து உபயோகிக்கலாம். இந்த கலவை உங்கள் உதடுகளுக்கு மிகுந்த பலனை அளிக்கும். மேலும் வறண்ட குளிர்ந்த காற்றிலிருந்து உங்கள் உதடுகளை பாதுகாக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பனிக்காலத்தில் ஃபிரெஷ்ஷாக வெளியில் கிளம்பினாலும், கைகளிலும் கால்களிலும் வெள்ளைத்திட்டுக்கள் தெரியும். இவற்றையெல்லாம் தேங்காய் எண்ணெயை வைத்தே சரிசெய்து கொள்ளலாம்.
    பனிக்காலம் தலைக்காட்ட ஆரம்பித்துவிட்டது. ஃபிரெஷ்ஷாக வெளியில் கிளம்பினாலும், கைகளிலும் கால்களிலும் வெள்ளைத்திட்டுக்கள் தெரியும். வாயைச் சுற்றி இழுப்பது மாதிரி இருக்கும். முகத்தில் ஆரம்பித்து கால் பாதம் வரை சருமம் வறண்டு காணப்படும். சருமத்தில் மெல்லிய கோடுகள், சுருக்கம் தெரியும். இவற்றையெல்லாம் வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே சரிசெய்து கொள்ளலாம்.

    பனிக்காலத்தில் காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம், நம்முடைய சருமத்தின் எண்ணெய்ப்பசையை உலரச் செய்துவிடும். அதனால்தான், சருமம் வறண்டு சுருங்கி விடுகிறது. தினமும் குளிப்பதற்கு முன்பு, முகம், கை, கால் ஆகிய பகுதிகளில் தேங்காய் எண்ணெயைத் தடவி சூடு பறக்கத் தேயுங்கள். 10 நிமிடம் ஊறவிட்டு, பிறகு குளியுங்கள். இப்படிச் செய்தால் குளித்தப் பிறகு சருமத்தில் வெள்ளைத்திட்டுக்கள் ஏற்படாது.

    தினமும் இதைச் செய்யமுடியாதவர்கள், வாரம் இரண்டு முறை நல்லெண்ணெய்யைத் தலை முதல் கால் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவிட்டு, பச்சைப்பயிறு மாவால் தேய்த்துக் குளியுங்கள். கடலைப்பருப்பு மாவு சருமத்தின் எண்ணெய்ப்பசையை உறிஞ்சிவிடும் என்பதால், அதைப் பயன்படுத்தாதீர்கள். அதேபோல, எண்ணெய் தடவாமலும், பாசிப்பருப்பு மாவை சருமத்தில் தேய்த்துக் குளிக்காதீர்கள். சருமம் இன்னும் உலர்ந்துவிடும்.



    குளித்துவிட்டு வெளியே வந்தவுடன், உடம்பில் இருக்கும் ஈரத்தை முழுமையாகத் துடைக்காமல், தேங்காய் எண்ணெயை இரண்டு விரல்களால் தொட்டு எடுத்து, உடல் முழுக்க தடவுங்கள். ஐந்து விரல்களையும் விட்டால், எண்ணெய் அதிகம் வந்துவிடும். 'எண்ணெய் வேண்டாம்' என்பவர்கள், பாடிலோஷன் பயன்படுத்தலாம். 'கை கால் மட்டும்தான் அதிகம் வறண்டுபோகிறது. உடம்பு வறலவில்லை' என்பவர்கள், அந்தப் பகுதிகளில் மட்டும் எண்ணெய் தடவிக்கொள்ளலாம். பிடிக்காதவர்கள், கை காலுக்கு மட்டும் கடையில் விற்கப்படும் க்ரீமைப் பயன்படுத்தலாம்.

    நீங்கள் என்னென்ன பழங்களைச் சாப்பிடுகிறீர்களோ, அவற்றின் சில துண்டுகளை அரைத்து, பால் ஏடுடன் கலந்து, முகம், கை கால் என வெளியே தெரியக்கூடிய பகுதிகளில் அடிக்கடி தடவிவந்தால், பனிக்காலத்திலும் உங்கள் சருமம் வறண்டுபோகாமல் இருக்கும். கொட்டும் பனியிலும் உங்கள் அழகு கொஞ்சும்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தலையில் தினசரி அளவாக தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதும், தலை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக, தேங்காய் எண்ணெயை தலையில் தடவி, ஊற வைத்து குளிப்பதும் முடியை நன்றாக சீரமைக்க உதவும்.
    அடிக்கடி முடியை முரட்டுத்தனமாக சீவுவது அல்லது ஃப்ரெஷ் செய்வது முடியை சேதப்படுத்தும். ஆனால், முடியைப் பற்றி வரும் அழகு குறிப்புகள் பெரும்பாலானவற்றில், முடியை அடிக்கடி ஃப்ரெஷ் செய்தால் முடி நன்கு வளரும் என்று குறிப்பிடுவார்கள். உண்மை அதுவல்ல. மாறாக அப்படி செய்வது, முடியை சேதப்படுத்திவிடக் கூடும்.

    காலம் காலமாக தேங்காய் எண்ணெயை முடியில் தேய்க்கும் வழக்கம் உள்ளவர்கள் நாம். கேரள மக்கள் தேங்காய் எண்ணெயைத் தொடர்ந்து உபயோகப்படுத்துவதால், அவர்களுக்கு நீள கூந்தல் இருப்பதை நாம் பார்க்கிறோம். ஒருவருக்கு தேங்காய் எண்ணெய் தடவுவதால் புதிதாக முடி முளைக்காது என்பது உண்மைதான். ஆனால், முடியை சீரமைப்பதில் கண்டிஷனரைவிட தேங்காய் எண்ணெய்தான் ஆகச் சிறந்தது.

    இப்போது மார்க்கெட்டில் தேங்காய் எண்ணெய் என்று விற்கப்படும் பாட்டில்கள் பலவற்றிலும் மற்ற லைட் வெயிட் ஆயில்களும் மினரல் ஆயில்களும் சேர்க்கப்பட்டவை. மினரல் ஆயில்கள் தேங்காய் எண்ணெயைவிட மலிவு என்பதே அதற்கு காரணம். மினரல் ஆயில் முடிக்குள் ஊடுருவி செல்ல முடியாது. தேங்காய் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் மற்றும் மினரல் ஆயில் ஆகியவற்றில் எது முடிக்கு நல்லது என்று ஆராய்ச்சியில், தேங்காய் எண்ணெய் என்பது Triglyceride of Lauric Acid. முடியில் உள்ள ப்ரோட்டீன்களுக்கு அதிக ஈர்ப்பு உடையது மற்றும் நேரான செயின் போன்ற அமைப்பு உடையது என்பதால்,

    இந்த மூவகை எண்ணெய்களில் தேங்காய் எண்ணெயால் மட்டுமே முடியின் உள்ளே ஊடுருவ முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேநேரத்தில், தேங்காய் எண்ணெயை அதிகமாக உபயோகப்படுத்தினால் தலையில் பொடுகை உருவாக்கக்கூடிய முக்கிய பூஞ்சையான Malascezia Furfur அதிக அளவில் வளர்ந்துவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, தினசரி தலையில் அளவாக தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதும், தலை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக, தேங்காய் எண்ணெயை தலையில் தடவி, ஊற வைத்து குளிப்பதும் முடியை நன்றாக சீரமைக்க உதவும் என்பதை உணர வேண்டும்.

    எண்ணெயோ அல்லது கிரீமோ அரை மணி நேரத்துக்கு முன்பு தலைமுடியில் தேய்த்து வைத்து, மிதமான சூட்டில் துண்டை நனைத்து தலையில் கட்டி வைப்பார்கள். அப்படி செய்யும்போது முடியின் உள்ளே கண்டிஷனர் நன்றாகச் செல்லும். Leave on Conditioners தலைமுடியை ஷாம்பூ போட்டு அலசிய பின்பு லேசாக தடவ வேண்டியவை. அவைகள் சூப்பராக முடியில் சிக்கை நீக்கி, முடியை சீவுவதற்கு எளிதாக இருக்கும். முடியின் பளபளப்பையும் அதிகப்படுத்தும். 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தொப்பூர் அருகே லாரி தீ விபத்து நடந்ததில் தேங்காய் எண்ணெயை கொள்ளையடித்து நாடகமாடியதாக 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நல்லம்பள்ளி:

    கடந்த அக்டோபர் மாதம் 21-ந் தேதி கோவையில் இருந்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள தேங்காய் எண்ணெய் லோடு ஏற்றிக்கொண்டு ஆந்திராவிற்கு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள பப்பிரெட்டியூரை சேர்ந்த டிரைவர் சங்கரன் (வயது 30) என்பவர் ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள மாதநாயக்கன்பட்டியை சேர்ந்த விஜயகுமார் (28) என்பவர் உடனிருந்தார்.

    இவர்கள் சென்ற லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே வந்த போது திடீரென டயர் வெடித்ததாகவும், அப்போது லாரியில் திடீரென தீப்பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சங்கரனும், விஜயகுமாரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அப்போது, பெங்களூருவை நோக்கி வந்துகொண்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் ஒரு கியாஸ் டேங்கர் லாரி எரிந்துகொண்டிருந்த எண்ணெய் லாரி மீது மோதியது. இதில் அந்த வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் தேங்காய் எண்ணெயை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் லாரியை எரித்து நாடகமாடியது தெரியவந்தது. லாரியை மேச்சேரி அருகே நிறுத்தி விட்டு அதில் இருந்து 75 சதவீத எண்ணெய்களை மாற்று லாரியில் கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிகிறது. மீதி எண்ணெயுடன் தொப்பூர் அருகே லாரியை தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து லாரி டிரைவர் சங்கரன், விஜய குமார், மாற்று லாரி டிரைவர் சேகர் (29), லாரியின் உரிமையாளர் பிரபு (30) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.#tamilnews
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தேங்காய் எண்ணெயில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பது அறிந்ததே. இன்று வீட்டிலேயே தேங்காய் எண்ணெயில் ஃபேஸ் வாஷ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    சரும வியாதிகளுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வு என எல்லா மருத்துவர்களும் ஒருமித்த குரலில் சொல்லியிருக்கிறார்கள். அத்தகைய தேங்காய் எண்ணெயை நாம் காலங்காலமாக பயன்படுத்திவருகிறோம். முக்கியமாக கூந்தலின் வளர்ச்சிக்கும், மென்மையான சருமத்திற்கும் பயன்படுத்துகிறோம்.

    முகப்பரு, கரும்புள்ளி, தேமல் என பல பிரச்சனைகளை போக்குகிறது. இயற்கையான தேங்காய் எண்ணெயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கின்றது. இவை சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்கிறது.

    தினமும் வெளியே தூசி படிந்த காற்று, மாசில் நம் சருமத்தில் அழுக்குகள் சேர்ந்திருக்கும். சோப்புகள் உபயோகித்தாலும், அவற்றில் இருக்கும் அமிலத்தன்மை சருமத்தில் சுருக்கம் ஏற்படச் செய்யும். இதற்காக நீங்களே ஃபேஸ் வாஷ் தயாரிக்கலாம்.

    இந்த ஃபேஸ் வாஷில் பாக்டீரியாவை எதிர்க்கும் குணங்கள் உள்ளன. அவை சருமத்தில் முகப்பரு உருவாக்காமல் தடுக்கும். சுருக்கங்களைப் போக்கும். சரும பிரச்சனைகளை வராமல் காக்கும். அதற்கு தேவையானவை என்னெவென்று பாக்கலாம்.



    தேவையான பொருட்கள் :

    தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
    தேயிலை மர எண்ணெய் - 3 துளிகள்
    லாவெண்டர் எண்ணெய் - 2 துளிகள்
    தேன் - 1 டீஸ்பூன்

    மேலே சொன்னவற்றை எல்லாம் நன்றாக கலந்து கொள்ளுங்கள். உங்களுக்கு என்ணெய்பசை இருந்தால், இவற்றோடு சில துளி எலுமிச்சை சாறு கலந்து கொள்ளலாம். இல்லையெனில் தேவையில்லை.

    முகத்தை ஈரப்படுத்தியபின், இந்த ஃபேஸ் வாஷை கொண்டு முகத்தில் தேய்க்கவும். அரை நிமிடத்திற்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவிடுங்கள்.

    இப்போது உங்கள் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி, மிருதுவான சருமமாக பொலிவுடன் இருக்கும். வாரம் 3-4 முறை இந்த ஃபேஸ் வாஷ் உபயோகப்படுத்தலாம்.
    ×