search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prices"

    • வரம் பருப்பு, பாசிப் பருப்பு விலை திடீரென உயர்ந்துள்ளது.
    • கடலை எண்ணெய் லிட்டர் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    காங்கயம் :

    சமையலில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவை முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றின் விலை வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.துவரம் பருப்பு, பாசிப் பருப்பு விலை திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி திருப்பூர், உடுமலையில் துவரம் பருப்பு கிலோ மொத்த விலை 120 ரூபாய், சில்லறை விலை 140 ரூபாய்க்கு விற்றது. தற்போது மொத்த விலை 140 ரூபாய், சில்லறை விலை 160 ரூபாயாக உயர்ந்துள்ளது.பாசிப்பருப்பு 100 ரூபாயில் இருந்து 120 ரூபாயாக உயர்ந்துள்ளது. உளுந்து கிலோவுக்கு 20 ரூபாய் உயர்ந்து 130 ரூபாயில் இருந்து 150 ரூபாயாகியுள்ளது.

    சீரகம் விலை இதுவரை இல்லாத வகையில் கிலோவுக்கு 200 ரூபாய் கூடி கிலோ 600 ரூபாய்க்கு விற்கிறது. மிளகு, 150 ரூபாய் விலை உயர்ந்து கிலோ 800 ரூபாய்க்கு விற்கிறது.கர்நாடக பொன்னி கிலோ 55 ரூபாயில் இருந்து 60, ராஜபோகம் பொன்னி கிலோ 58ல் இருந்து 64, இட்லி அரிசி 40ல் இருந்து 45 ரூபாயாகியுள்ளது.அரிசி பருப்பு விலை உயர்ந்து பொதுமக்களுக்கு கவலை அளித்தாலும், எண்ணெய் விலை சற்று குறைந்து ஆறுதல் அளித்துள்ளது.

    கடலை எண்ணெய் லிட்டர் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த மாதம் லிட்டர் 150 முதல் 130 ரூபாய் வரை விற்பனையானது. இம்மாதம் லிட்டருக்கு 40 முதல் 60 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. திருப்பூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை பொருளாளர் சாமி கூறுகையில், நடப்பு மாதத்தில் அரிசி விலை கிலோவுக்கு 5ரூபாய் வரையும், பருப்பு, உளுந்து விலை கிலோவுக்கு 15 முதல் 20 ரூபாய் உயர்ந்துள்ளது. அதே நேரம் கடலை எண்ணெய் விலை சற்று குறைந்துள்ளது. வெளி மாநில வரத்து குறைந்து வருவதால் விலை உயர்ந்துள்ளது. சீரகம் இதுவரை இல்லாத விலை உயர்வை தற்போது எட்டியுள்ளது என்றார். காங்கயம் பகுதியில் 450- க்கும் மேற்பட்ட தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர் களங்கள் உள்ளன. மேலும் 150-க்கும் மேற்பட்ட தேங்காய் எண்ணெய் ஆலைகளும் செயல்பட்டு வருகிறது. இங்கு பீகார், ஒடிசா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும், தமிழகத்தில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் வேலை செய்து வருகின்றனர். இந்த களங்களுக்கு பிற மாவட்டங்கள் மற்றும் கர்நாடக, கேரளாவிலிருந்தும் தேங்காய் கொண்டுவரப்பட்டு மட்டை உரித்து, உடைத்து உலர வைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. உலர்களங்களில் உலர்த்தப்படும் பருப்பு தனியார் தேங்காய் எண்ணெய் நிறுவனங்களுக்கும், காங்கயம் பகுதியில் உள்ள கிரஷிங் யூனிட்டுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

    காங்கயம் கிரஷிங் யூனிட்டுகளில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய்யானது டேங்கர் லாரிகள், டின்களில் அடைக்கப்பட்டு வட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. மேலும் டின்கள், பாட்டில்கள், பவுச்களில் அடைக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் கடைகள் மூலம் விற்பனைக்கும் அனுப்பப்படுகிறது. இந்தநிலையில் கொப்பரை தேங்காயின் விலை அதிகரிக்கவில்லை. குறிப்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 கிலோ தேங்காய் பருப்பு ரூ.85 முதல் ரூ.86 வரை விற்பனையானது. அதன் பின்னர் தேங்காய் பருப்பு விலை சற்றே குறையத் தொடங்கியது. கடந்த மார்ச் மாதத்தில் 1 கிலோ தேங்காய் பருப்பு ரூ.81 வரை விற்பனையானது. பின்னர் தொடர்ந்து கொப்பரை தேங்காயின் விலை ஏறாமல் குறைந்து கொண்டே வந்தது. தற்போது 1 கிலோ தேங்காய் பருப்பு ரூ.74 ஆக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1,720 ஆக இருந்த 15 கிலோ கொண்ட எண்ணெய் டின் தற்போது ரூ.1,580 ஆக உள்ளது. இதனால் தோப்புகளில் தேங்காய்களுக்கும் உரிய விலை கிடைப்பதில்லை.

    இதுகுறித்து காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.எஸ்.என்.தனபால் கூறியதாவது:- சோயா எண்ணெய், பாமாயில் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய்களின் விலை குறைந்ததால், தேங்காய் எண்ணெய்யின் விற்பனை குறைவானது. இதன் காரணமாக கொப்பரை தேங்காய் விலை சரிந்துள்ளது. மேலும் தேங்காய் எண்ணெய்யை அதிக அளவில் உபயோகிக்கும் கேரளாவில் தற்போது தேங்காய் எண்ணெய் ஆலைகள் ஆங்காங்கே உருவாக்கி செயல்பட்டு வருகிறது. இதுவே தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு தேங்காய் எண்ணெய் விற்பனை குறைவானதற்கு ஒரு காரணமாகும்.

    தேங்காய் எண்ணெய்யின் பயன்பாடு அதிகரித்தால் மட்டுமே கொப்பரை தேங்காய் விலை உயரும். அந்த வகையில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய்யை வினியோகம் செய்தால் தேங்காய் எண்ணெய்யின் பயன்பாடு அதிகரிக்கும். கொப்பரை தேங்காயின் விலையும் குறையாது. தோப்புகளில் தேங்காய்களுக்கும் உரிய விலை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. இப்பகுதிகளில் விளையும் தக்காளி, உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வந்து ஏல முறையில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.கடந்த சில மாதமாக உரிய விலை கிடைக்காதது, பருவம் தவறி பெய்த மழை, நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால் தக்காளி பயிர்கள் பாதித்தது. நடவு செய்த பெரும்பாலான விவசாயிகள் தக்காளி செடிகளை அழித்தனர். இந்நிலையில் தற்போது வரத்து குறைவு காரணமாக மீண்டும் தக்காளி விலை உயர்ந்து காணப்படுகிறது. உடுமலை சந்தையில் 14 கிலோ கொண்ட பெட்டி 375 ரூபாய் வரை விற்பனையானது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    உடுமலை சந்தைக்கு ஒரு லட்சம் பெட்டிகள் வரை வரத்து காணப்படும் நிலையில் கடந்த சில மாதமாக விலை இல்லாதது உள்ளிட்ட காரணங்களினால் அழிக்கப்பட்டது.மழை பொழிவும் குறைந்ததால் சாகுபடி பரப்பும் பெருமளவு குறைந்தது. இதனால் சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து தற்போது 6 ஆயிரம் பெட்டிகள் என்ற அளவில் உள்ளது. இதனால் விலை உயர்ந்து காணப்படுகிறது.

    இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    பருப்பு தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் சாகுபடியை அதிகரிக்க வேளாண் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    நாடு முழுவதும் துவரை, உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகளின் விளைச்சல் குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.சர்வதேச சிறுதானிய ஆண்டை ஒட்டி, அவற்றின் சாகுபடிக்கு பல்வேறு மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன. இதுவே பருப்பு சாகுபடி குறைந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது. எனவே குறுவை பருவத்தில் நெல்லுக்கு மாற்றாக பருப்பு வகைகள் சாகுபடியை அதிகரிக்க வேளாண் துறை திட்டமிட்டுள்ளது.இதற்காக குறுவை பருவத்தில் மாற்று பயிர் சாகுபடிக்கான சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் பருப்பு வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 1,740 ரூபாய் மானியமாக வழங்கப்பட உள்ளது.

    இதற்கான பயனாளிகள் தேர்வில் வேளாண் துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர். சென்னை, கன்னியாகுமரி, கரூர், பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு இத்திட்ட மானியம் கிடைக்கும்.இதற்காக உழவன் செயலி வாயிலாக முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. சம்பா பருவ நெல் சாகுபடி பருவத்திலும் பருப்பு வகைகள் சாகுபடியை அதிகரிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

    • 28 கிலோ எடை கொண்டு பெரிய ‘டிப்பர்’ 300 ரூபாய்க்கும் விற்பனையானது.
    • தாளவாடியில் இருந்து தினமும் 10 லாரி தக்காளி திருப்பூர் வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தை, தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து இந்த வாரத்தில் அதிகரித்துள்ளது. சீசன் துவங்கி உள்ளதால் விளைவித்த காய்களை கொண்டு வந்து விவசாயிகள் குவிக்கின்றனர்.ஒரே நேரத்தில் உள்ளூர் மற்றும் வெளிமாநில வரத்தும் அதிகரித்துள்ளதால், தக்காளி விலை குறைய துவங்கியுள்ளது.

    இந்த மாத துவக்கத்தில் கிலோ 20 முதல் 25 ரூபாய் விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ தக்காளி, நடப்பு வாரம் கிலோ 14 ரூபாயானது. தெற்கு உழவர் சந்தையில் 14 கிலோ எடை கொண்ட சிறிய 'டிப்பர்' 180 ரூபாய்க்கும், 28 கிலோ எடை கொண்டு பெரிய 'டிப்பர்' 300 ரூபாய்க்கும் விற்பனையானது.

    மொத்த விலையில் முதல் தர தக்காளி கிலோ 14 முதல் 16 ரூபாய்க்கு விற்றது. சில்லறை விலையில் தக்காளி கிலோ 18 முதல் 20 ரூபாய்க்கு விற்றது.கர்நாடக மாநிலம் மைசூரு தமிழக - கர்நாடக எல்லையான தாளவாடியில் இருந்து தினமும் 10 லாரி தக்காளி (சராசரியாக 30 டன்) திருப்பூர் வருகிறது.இதனால், திடீர் ரோட்டோர தக்காளி கடைகள் முளைத்துள்ளது. மொத்தமாக குறைந்த விலைக்கு அடித்து பேசி வாங்கும் வியாபாரிகள் தக்காளி 7 கிலோ 100 ரூபாய்க்கு ஆட்டோவில் கொட்டி விற்கின்றனர்.

    • உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • இந்த உத்தரவை மீறிடும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் விவசாயிகளுக்கு உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் போதிய அளவு உரங்கள் கையிருப்பில் உள்ளது. பெரம்பலூர் மாவட்ட உர விற்பனையாளர்கள் ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை செய்ய வேண்டும். இந்த உத்தரவை மீறிடும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மொத்த உர விற்பனையாளர்கள் வெளி மாவட்டங்களுக்கு உரங்களை மாற்றம் செய்திடவும், விற்பனை செய்திடவும் கூடாது. மேலும் உரங்களை வெளி மாவட்டங்களில் இருந்தும் கொள்முதல் செய்யக்கூடாது. விவசாயிகளின் தேவைக்கு மேல் அதிகமாகவும் மற்றும் இணை உரம் வழங்கக்கூடாது. ஒரே நபருக்கு அதிக அளவு உரம் வழங்கக்கூடாது. குறிப்பிட்ட விவசாயிகளின் பெயரில் அதிகப்படியாக உர விற்பனை கண்டறியப்பட்டால் சில்லரை விற்பனை உரிமம் எந்த முன் அறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்படும். விவசாயம் மேற்கொள்ளாத நபர்களுக்கு உரம் விற்பனை செய்யக்கூடாது.

    திடீர் ஆய்வின் போது மேற்காணும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உர விற்பனையாளர்களின் விற்பனை உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, அவர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்படும். விவசாயிகள் தாங்கள் உரம் வாங்க செல்லும் போது ஆதார் அட்டையுடன் சென்று உரம் பெற்றுக்கொண்டு உரிய பட்டியல் கேட்டு பெற வேண்டும். உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    • சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் முகூர்த்த தினங்கள் இல்லாததால் மல்லிகைப்பூ விலை குறைந்து ரூ.௩௫௦-க்கு விற்பனையானது.
    • மல்லிகை விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் பல்வேறு வகையான பயிர்களை அதிகளவில் பயிரிட்டு அறுவடை செய்து வருகிறார்கள்.

    இதே போல் சத்திய மங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர், சிக்கரசம் பட்டி, புது வடவள்ளி, ராஜன் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பலர் மல்லிகைப்பூ உள்பட பல்வேறு பூக்கள் பயிரிட்டு உள்ளனர்.

    இந்த பகுதிகளில் விளையும் பூக்களை சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே செயல்படும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சத்தியமங்கலத்தில் விற்பனை செய்யப்படும் மல்லிகைப் பூக்கள் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் பூக்கள் பொதுமக்கள் விரும்பி வாங்குகிறார்கள். இதனால் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் இங்கு வந்து பூக்களை அதிகளவில் கொள்முதல் செய்கிறார்கள்.

    மேலும் இந்த பகுதிகளில் விளையும் மல்லிகைப் பூக்கள் சிங்கப்பூர், துபாய், சார்ஜா உள்பட பல வெளி நாடுகளுக்கு நறுமணப் பொருட்கள் தயாரிக்க ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதனால் இங்கு மல்லிகைப்பூ சாதாரண நாட்களில் ரூ.500 வரையும் முகூர்த்தம் மற்றும் விழாக் காலங்களில் ரூ.3 ஆயிரம் வரையும் வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். கேரளா மாநிலத்தில் நடக்கும் விஷேச நாட்களில் விலை மேலும் உயர்ந்து காணப்படும்.

    இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முகூர்த்த நாட்கள் தொடர்ச்சியாக வந்தது. இதனால் மல்லிகைப்பூக்கள் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக மல்லிகைப் பூ ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முகூர்த்த நாட்கள் இல்லாததால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை குறைந்தது. கடந்த ஒரு மாதமாக 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு மேல் விற்பனையானது.

    ஆனால் முகூர்த்தம் மற்றும் விஷேச நாட்கள் இல்லாததால் வியாபாரிகள் ஒரு சிலர் மட்டுமே வந்திருந்தனர்.

    இதனால் நேற்று 1 கிலோ மல்லிகை ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டி பூக்கள் விலை நிலவரம் வருமாறு:

    மல்லிகை ரூ.350, முல்லை ரூ.100, காக்கடா ரூ.75, செண்டு மல்லி ரூ.28, கனகாம்பரம் ரூ.550, சம்பங்கி ரூ.10, அரளி ரூ.50, செவ்வந்தி ரூ.120 விற்பனையானது.

    • தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தக்காளி விலையும் அதிகரித்துள்ளது.
    • இன்று வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் கிருஷ்ணகிரி, ஆந்திராவில் இருந்து 10 டன் தக்காளி மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. தினமும் 15 டன் தக்காளி லோடு விற்பனைக்கு வந்தது.

    இந்நிலையில் சமீபகாலமாக தக்காளி விலை கூடுவதும் குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது. நேற்று வ.உ.சி. மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.35-க்கு விற்பனையானது. நேற்று 15 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது.

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தக்காளி விலையும் அதிகரித்துள்ளது.

    இன்று வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் கிருஷ்ணகிரி, ஆந்திராவில் இருந்து 10 டன் தக்காளி மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. நேற்றைவிட இன்று வரத்து குறைந்ததால் தக்காளி விலையும் அதிகரித்தது. இன்று சுமாரான தக்காளி ஒரு கிலோ ரூ.45-க்கும், நல்ல தக்காளி ஒரு கிலோ ரூ.50-க்கும் விற்பனையானது.

    • தடைக்காலம் முடிந்து இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் அதிகளவில் வந்தது.
    • அதிகாலை முதலே மீன்களை வாங்க மக்கள் ஆர்வத்துடன் மீன் மார்க்கெட்டுக்கு வந்தனர். இதனால் இன்று மீன் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனிபாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன.

    இங்கு கடல் மீன்கள் அதிகளவில் விற்கப்படு வதால் இங்கு எப்போதும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருக்கு ம். குறிப்பாக வார இறுதி நாட்களான ஞாயிற்று க்கிழமை அன்று வழக்கத்தை விட மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வந்தது. இதனால் ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டுக்கு கடந்த சில வாரங்களாக மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டது.

    12 டன் முதல் 15 டன் வரை வரத்தாகி வந்த நிலையில் மீன்பிடி தடை காலங்களில் வெறும் 6 டன் வரை மட்டுமே மீன் வரத்தாகி வந்தது. மேலும் கேரளாவில் இருந்து மட்டுமே மீன்கள் வந்தது.

    இந்நிலையில் மீன்பிடி தடை காலம் முடிவடைந்தது. இதனால் கடந்த 15-ந் தேதி முதல் தமிழக மீனவர்கள் மீண்டும் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். இதன் காரணமாக ஈரோடு மீன் மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    தடைக்காலம் முடிந்து இன்று முதல் ஞாயிற்று க்கிழமை என்பதால் ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் அதிகளவில் வந்தது. இன்று 12 டன் மீன்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

    இதன் காரணமாக மீன்கள் விலையும் அதிகரித்துள்ளது. வஞ்சரம் மீன் ஒரு கிலோ கடந்த வாரம் வரை ரூ. 850 முதல் 900 - வரை விற்பனையானது. இந்த வாரம் ரூ .300 அதிகரித்து ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1, 200-க்கு விற்பனையானது. இதேபோல் மற்ற மீன்களின் விலை கிலோவில் வருமாறு:

    கிளி - 500, வவ்வால் - 700, விளா- 350, மஞ்சள் சாரை - 500, சீலா - 250, அயிலை - 300, சங்கரா - 400, மத்தி- 200, கொடுவா - 350, இறால் - 600, நண்டு - 400.

    இதே போல் கருங்க ல்பாளையம் காவிரி ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன்கள் வரத்து இன்று அதிகமாக இருந்தது.

    அதிகாலை முதலே மீன்களை வாங்க மக்கள் ஆர்வத்துடன் மீன் மார்க்கெட்டுக்கு வந்தனர். இதனால் இன்று மீன் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. 

    நெல்லையில் கத்தரிக்காய் விலை கிலோ ரூ.50-ஐ நெருங்கி உள்ளது. ஒரு வாரத்தில் ரூ.20 அதிகரித்துள்ளது.
    நெல்லை:

    நெல்லை டவுன் நயினார்குளத்தில் உள்ள மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு நெல்லை மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது தென்காசி மாவட்டத்தில் இருந்தும் காய்கறிகள் அதிகளவில் வரும்.
     
    இந்த 2 மாவட்டங்களை தவிர ஊட்டி, மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரம், பெங்களுரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தக்காளி, கத்தரிக்காய், உருளை கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் வரும்.

    இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தக்காளி விலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வாரங்களில் ரூ.100-ஐ தாண்டிய தக்காளி விலை தற்போது சற்று குறைந்துள்ளது. இன்று ஒரு கிலோ ரூ.55-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இதேபோல் கடந்த மாதம் 29-ந்தேதி ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பின்னர் படிப்படியாக அதன் விலை உயர தொடங்கியது. இன்று உழவர் சந்தையில் ஒரு கிலோ வெள்ளை கத்தரிக்காயின் விலை ரூ.48-க்கு விற்பனையாகிறது.

    மொத்த மார்க்கெட்டுகளில் இருந்து வாங்கி செல்லும் வியாபாரிகள் சில்லரை விற்பனை செய்யும் போது ரூ.55 முதல் ரூ.60 வரை விற்கின்றனர். கடந்த ஒரு வாரத்திற்குள் கத்தரிக்காய் விலை ரூ.20-ஐ தாண்டி உயர்ந்துள்ளது.

    இதனால் பெண்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். வெள்ளை கத்தரிக்காய் விலை அதிகரித்து வருவதால் பச்சை, ஊதா நிற கத்தரிக்காய்களுக்கு மவுசு அதிரித்துள்ளது.

    இன்று உழவர் சந்தைகளில் பச்சை நிறத்திலான கீரி கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.30-க்கும், ஊதா நிறத்திலான கீரி கத்தரிக்காய் ரூ.25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர வெண்டை-36, புடலை-22, அவரைக்காய்-80, பச்சை மிளகாய்-36, முருங்கைக்காய்-60 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. 
    42 நாட்களுக்கு பிறகு பெட்ரோல்-டீசல் விலை மாறவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறையாவிட்டாலும் உயராமல் இருக்கிறதே என்று வாகன ஓட்டிகள் சற்றே ஆறுதல் அடைந்தனர். #PetrolDiesel #PetrolPriceHike
    சென்னை:

    கடந்த மாதத்தில் இருந்து பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்தது. ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்துகொண்டே வந்து சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாய் 41 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 78 ரூபாய் 10 காசுகளுக்கும் விற்பனை ஆனது.

    இதில் திடீர் திருப்பமாக நேற்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. முந்தைய நாள் விலையிலேயே நேற்றும் பெட்ரோல்-டீசல் விற்பனை ஆனது. கடைசியாக கடந்த மாதம் 8-ந் தேதி பெட்ரோல்-டீசல் விலை சற்று குறைந்தது. அன்று முதல் நேற்று முன்தினம் வரை பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. 42 நாட்களுக்கு பிறகு பெட்ரோல்-டீசல் விலை மாறவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறையாவிட்டாலும் உயராமல் இருக்கிறதே என்று வாகன ஓட்டிகள் சற்றே ஆறுதல் அடைந்தனர்.  #PetrolDiesel #PetrolPriceHike
    கடந்த 2 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாக இருந்தது. இது தொடர்ந்து 3-வது நாளாக நேற்று மேலும் உயர்ந்தது. #Petrol #Diesel
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. இதில் கடந்த 2 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாக இருந்தது. இது தொடர்ந்து 3-வது நாளாக நேற்று மேலும் உயர்ந்தது.

    அதன்படி பெட்ரோலுக்கு 19 காசுகளும், டீசலுக்கு 95 காசுகளும் உயர்ந்தது. இந்த புதிய விலைப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் ரூ.79.87 ஆக இருந்தது. இதைப்போல டீசல் விலை ரூ.72.43-ஐ எட்டியது. சென்னையில் பெட்ரோல் விலை ரூ.80-ஐ நெருங்கி இருக்கும் நிலையில் மும்பையில் ரூ.84.33-க்கு விற்பது குறிப்பிடத்தக்கது.

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 3-வது நாளாக உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  #Petrol #Diesel #Tamilnews 
    பெட்ரோல் விலை, தொடர்ந்து 5-வது நாளாக நேற்று குறைந்தது. சென்னையில், நேற்று முன்தினம் இருந்த விலையை விட நேற்று 10 காசு குறைந்தது. #Petrol #Diesel
    புதுடெல்லி:

    பெட்ரோல் விலை, தொடர்ந்து 5-வது நாளாக நேற்று குறைந்தது. சென்னையில், நேற்று முன்தினம் இருந்த விலையை விட நேற்று 10 காசு குறைந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.81.09 ஆக இருந்தது.

    ஆனால், டீசல் விலையில் நேற்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.  #Petrol #Diesel
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக சற்று குறைந்து வரும் நிலையில் நேற்று லிட்டருக்கு 9 காசு குறைந்த்து. #Petrol #Diesel
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்தது. இந்த நிலையில், கடந்த 4 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக சற்று குறைந்து வருகிறது.

    பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை நேற்று லிட்டருக்கு 9 காசு குறைந்தது. இதனால் சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 81 ரூபாய் 19 காசாகவும், டீசல் விலை 72 ரூபாய் 97 காசாகவும் இருந்தது.    #Petrol #Diesel #tamilnews 
    பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை உச்சத்தை தொட்டுள்ளது. #petrol #diesel
    சென்னை:

    கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்பு சுமார் 20 நாட்கள் வரை பெட்ரோல் - டீசல் விலை உயராமல் இருந்தது. தேர்தலின் போது பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அது மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதி எண்ணெய் நிறுவனங்கள் விலை உயர்வை நிறுத்தி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில், கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12-ந்தேதி முடிந்தபிறகு அடுத்த 2 நாட்களில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் உயர்த்தி வருகின்றன.

    அவ்வகையில் 9-வது நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் வரலாற்றிலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்வு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

    சென்னையில் பெட்ரோல் விலை 32 காசுகள் உயர்ந்து ரூ 79.79 என நிர்ணயக்கப்பட்டுள்ளது. டீசல் விலை 28 காசுகள் உயர்ந்து ரூ 71.87 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் டெல்லியிலும் பெட்ரோல் விலை உச்சத்தை எட்டியது. ஒரு லிட்டர் பெட்ரோல் 76.57 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் ரூ.76.87, கொல்கத்தாவில் ரூ.79.53 என்ற நிலையில் பெட்ரோல் விலை உள்ளது. #petrol #diesel
    ×