search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு
    X

    3-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

    கடந்த 2 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாக இருந்தது. இது தொடர்ந்து 3-வது நாளாக நேற்று மேலும் உயர்ந்தது. #Petrol #Diesel
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. இதில் கடந்த 2 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாக இருந்தது. இது தொடர்ந்து 3-வது நாளாக நேற்று மேலும் உயர்ந்தது.

    அதன்படி பெட்ரோலுக்கு 19 காசுகளும், டீசலுக்கு 95 காசுகளும் உயர்ந்தது. இந்த புதிய விலைப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் ரூ.79.87 ஆக இருந்தது. இதைப்போல டீசல் விலை ரூ.72.43-ஐ எட்டியது. சென்னையில் பெட்ரோல் விலை ரூ.80-ஐ நெருங்கி இருக்கும் நிலையில் மும்பையில் ரூ.84.33-க்கு விற்பது குறிப்பிடத்தக்கது.

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 3-வது நாளாக உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  #Petrol #Diesel #Tamilnews 
    Next Story
    ×