search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் மீன்கள் விலை உயர்வு
    X

    ஈரோட்டில் மீன்கள் விலை உயர்வு

    • தடைக்காலம் முடிந்து இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் அதிகளவில் வந்தது.
    • அதிகாலை முதலே மீன்களை வாங்க மக்கள் ஆர்வத்துடன் மீன் மார்க்கெட்டுக்கு வந்தனர். இதனால் இன்று மீன் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனிபாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன.

    இங்கு கடல் மீன்கள் அதிகளவில் விற்கப்படு வதால் இங்கு எப்போதும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருக்கு ம். குறிப்பாக வார இறுதி நாட்களான ஞாயிற்று க்கிழமை அன்று வழக்கத்தை விட மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வந்தது. இதனால் ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டுக்கு கடந்த சில வாரங்களாக மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டது.

    12 டன் முதல் 15 டன் வரை வரத்தாகி வந்த நிலையில் மீன்பிடி தடை காலங்களில் வெறும் 6 டன் வரை மட்டுமே மீன் வரத்தாகி வந்தது. மேலும் கேரளாவில் இருந்து மட்டுமே மீன்கள் வந்தது.

    இந்நிலையில் மீன்பிடி தடை காலம் முடிவடைந்தது. இதனால் கடந்த 15-ந் தேதி முதல் தமிழக மீனவர்கள் மீண்டும் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். இதன் காரணமாக ஈரோடு மீன் மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    தடைக்காலம் முடிந்து இன்று முதல் ஞாயிற்று க்கிழமை என்பதால் ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் அதிகளவில் வந்தது. இன்று 12 டன் மீன்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

    இதன் காரணமாக மீன்கள் விலையும் அதிகரித்துள்ளது. வஞ்சரம் மீன் ஒரு கிலோ கடந்த வாரம் வரை ரூ. 850 முதல் 900 - வரை விற்பனையானது. இந்த வாரம் ரூ .300 அதிகரித்து ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1, 200-க்கு விற்பனையானது. இதேபோல் மற்ற மீன்களின் விலை கிலோவில் வருமாறு:

    கிளி - 500, வவ்வால் - 700, விளா- 350, மஞ்சள் சாரை - 500, சீலா - 250, அயிலை - 300, சங்கரா - 400, மத்தி- 200, கொடுவா - 350, இறால் - 600, நண்டு - 400.

    இதே போல் கருங்க ல்பாளையம் காவிரி ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன்கள் வரத்து இன்று அதிகமாக இருந்தது.

    அதிகாலை முதலே மீன்களை வாங்க மக்கள் ஆர்வத்துடன் மீன் மார்க்கெட்டுக்கு வந்தனர். இதனால் இன்று மீன் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.

    Next Story
    ×