search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "brinjal"

    • கத்திரிக்காய் பை ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.900 வரை விற்பனை ஆகிறது.
    • கத்திரிக்காய் விலை கட்டுப்படியாகும் நிலையில் உள்ளது

    உடுமலை:

    உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் கத்தரிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. செடிகளில் இருந்து விவசாயிகள் கத்திரிக்காய் அறுவடை செய்து வருகின்றனர்.கத்திரிக்காய் விலை கட்டுப்படியாகும் நிலையில் உள்ளது.

    கோவை, திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் பொள்ளாச்சி பகுதி வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்கின்றனர். தினசரி மார்க்கெட்டில் 18 கிலோ கத்திரிக்காய் பை ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.900 வரை விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    • தக்காளி, மிளகாய், பீன்ஸ், கத்தரிக்காய் கிலோ ரூ.100-ஐ கடந்து விற்பனையாகி வருகிறது.
    • இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அப்டா மார்க்கெட் மற்றும் கனக மூலம் சந்தைக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெள்ள ரிக்காய், புடலங்காய், தடி யங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஓசூர், பெங்களூர் பகுதிகளில் இருந்து தக்காளியும், மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து கேரட், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளும் விற்பனைக்காக வருகிறது.

    கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் காய்கறிகளின் உற்பத்தி அடியோடு பாதிக் கப்பட்டது. இதனால் மார்க்கெட்டுகளுக்கு வரக்கூ டிய காய்கறிகளின் வரத்து குறைய தொடங்கியது. இதனால் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி, மிளகாய், பீன்ஸ், கத்தரிக்காய் கிலோ ரூ.100-ஐ கடந்து விற்பனையாகி வருகிறது. இதனால் இல்லத்தரசிகள், பொதுமக்கள் கடும் கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    தக்காளி வரத்தை பொறுத்தமட்டில் வழக்கமாக வரக்கூடிய அளவைவிட மிகக்குறைவான அளவில் அப்டா மார்க்கெட் மற்றும் கனகமூலம் சந்தைக்கு வருகிறது. இதனால் தினமும் தக்காளியின் விலை ஏறுமுகமாகவே உள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.100-ஐ தொட்டது.

    இந்த நிலையில் இன்றைய தக்காளி கிலோ ரூ.110-க்கு விற்பனை ஆகி வருகிறது. 28 கிலோ எடை கொண்ட ஒரு பாக்ஸ் தக்காளி ரூ.3500-க்கு விற்பனையானது. தக்காளி வரத்து குறைவாக உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

    பீன்ஸ் விலையும் கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.120-க்கு விற்பனையானது. மிளகாய் விலை வரலாற்றில் இதுவரை விற்பனை இல்லாத அளவிற்கு கிலோ ரூ.180 ஆக உயர்ந்து காணப்பட்டது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட நிலையில் மிளகாய் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது. நாட்டுக்கத்தரிக்காய் கிலோ ரூ.120-க்கு விற்கப்பட்டது. இஞ்சி விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ இஞ்சி ரூ.80-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் 3 மடங்கு விலை உயர்ந்து கிலோ ரூ.240-க்கு விற்கப்பட்டது. நாகர்கோவில் காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-

    தக்காளி ரூ.110, கேரட் ரூ.90, வழுதலங்காய் ரூ.80, நாட்டு கத்தரிக்காய் ரூ. 120, வரி கத்தரிக்காய் ரூ.60, வெள்ளரிக்காய் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.35, பல்லாரி ரூ.29, பீன்ஸ் ரூ.130, புடலங்காய் ரூ.50, வெண்டைக்காய் ரூ.50, மிளகாய் ரூ.150, பூண்டு ரூ.150, இளவன்காய் ரூ.30,

    காய்கறி விலை உயர்வு குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், நாகர்கோவில் மார்க்கெட்டுகளுக்கு கடந்த சில நாட்களாக வரக்கூடிய காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. தக்காளி, மிளகாயை பொறுத்தமட்டில் இதுவரை இல்லாத அள விற்கு உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் உற்பத்தி குறைந்ததே ஆகும். இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

    • பி.ஏ.பி., பாசனத்துக்கு காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
    • கத்தரி மற்றும் மிளகாய் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, நடவுக்கு தயார் நிலையில் உள்ளது.

    உடுமலை :

    கத்தரி,மிளகாய் நாற்று தேவைப்படும் உடுமலை வட்டார விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகனரம்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பி.ஏ.பி., பாசனத்துக்கு காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.சங்கரமாநல்லூர் அரசு தோட்டக்கலை பண்ணையில், விவசாயிகளுக்கு தேவையான கத்தரி மற்றும் மிளகாய் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, நடவுக்கு தயார் நிலையில் உள்ளது.மேலும் விபரங்களுக்கு, உதவி தோட்டக்கலை அலுவலர்கள், சிங்காரவேல் 95247-27052, சித்தேஸ்வரன் 88836-10449, காயத்ரி 63790-62232, ராஜ்மோகன் 95854-24502 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மகசூலை பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
    • முயற்சி வெற்றி பெற்றால் விவசாயிகள் கூடுதல் மகசூல் உடன் அதிக லாபத்தை ஈட்ட முடியும்.

    பல்லடம் :

    பல்லடம் அடுத்த கேத்தனூரை சேர்ந்தவர் பழனிசாமி, (வயது 82). இயற்கை விவசாயி. காய்கறிகள் மட்டுமன்றி, கொடி பந்தல் முறையில் விவசாயம் மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மகசூலை பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    பழனிசாமி கூறுகையில், இன்றைய சூழலில் விளைபொருட்களுக்கு விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் புலம்பி வருகின்றனர். கூடுதல் மகசூல் கிடைப்பதால் விவசாயிகள் அதிக லாபம் பெற முடியும் என்பதால், வேளாண் பல்கலைக்கழகம் இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.இதன்படி சுண்டைக்காய் செடியுடன் கத்தரி செடியை இணைத்து ஒட்டுரக செடியை வேளாண் பல்கலை அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்கள் முன் இது குறித்த ஆய்வுக்காக, அரை ஏக்கரில் ஒட்டுரக கத்தரி சாகுபடி செய்யப்பட்டது.இந்த முயற்சியில் வழக்கத்தை காட்டிலும் இரண்டு மடங்கு மகசூல் கிடைத்தது.

    தற்போது இரண்டாம் கட்ட ஆய்வு பணிக்காக மீண்டும் கத்தரி சாகுபடி செய்துள்ளேன். இந்த முயற்சி வெற்றி பெற்றால் விவசாயிகள் கூடுதல் மகசூல் உடன் அதிக லாபத்தை ஈட்ட முடியும் என்றார்.

    நெல்லையில் கத்தரிக்காய் விலை கிலோ ரூ.50-ஐ நெருங்கி உள்ளது. ஒரு வாரத்தில் ரூ.20 அதிகரித்துள்ளது.
    நெல்லை:

    நெல்லை டவுன் நயினார்குளத்தில் உள்ள மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு நெல்லை மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது தென்காசி மாவட்டத்தில் இருந்தும் காய்கறிகள் அதிகளவில் வரும்.
     
    இந்த 2 மாவட்டங்களை தவிர ஊட்டி, மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரம், பெங்களுரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தக்காளி, கத்தரிக்காய், உருளை கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் வரும்.

    இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தக்காளி விலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வாரங்களில் ரூ.100-ஐ தாண்டிய தக்காளி விலை தற்போது சற்று குறைந்துள்ளது. இன்று ஒரு கிலோ ரூ.55-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இதேபோல் கடந்த மாதம் 29-ந்தேதி ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பின்னர் படிப்படியாக அதன் விலை உயர தொடங்கியது. இன்று உழவர் சந்தையில் ஒரு கிலோ வெள்ளை கத்தரிக்காயின் விலை ரூ.48-க்கு விற்பனையாகிறது.

    மொத்த மார்க்கெட்டுகளில் இருந்து வாங்கி செல்லும் வியாபாரிகள் சில்லரை விற்பனை செய்யும் போது ரூ.55 முதல் ரூ.60 வரை விற்கின்றனர். கடந்த ஒரு வாரத்திற்குள் கத்தரிக்காய் விலை ரூ.20-ஐ தாண்டி உயர்ந்துள்ளது.

    இதனால் பெண்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். வெள்ளை கத்தரிக்காய் விலை அதிகரித்து வருவதால் பச்சை, ஊதா நிற கத்தரிக்காய்களுக்கு மவுசு அதிரித்துள்ளது.

    இன்று உழவர் சந்தைகளில் பச்சை நிறத்திலான கீரி கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.30-க்கும், ஊதா நிறத்திலான கீரி கத்தரிக்காய் ரூ.25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர வெண்டை-36, புடலை-22, அவரைக்காய்-80, பச்சை மிளகாய்-36, முருங்கைக்காய்-60 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. 
    வரத்து அதிகரிப்பால் திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் கத்தரிக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து காய்கறிகள் காந்தி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு கமிஷன் கடைக்காரர்களால் வாங்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர். 

    கடந்த சில வாரங்களாக கத்தரிக்காய் விளைச்சல் குறைந்ததால் வரத்து எதிர்பார்த்த அளவு இல்லை. தற்போது பச்சை கத்தரிக்காய் மற்றும் வைலட் கத்தரிக்காய் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை கிலோ ரூ.10-க்கு விற்பனையாகிறது. 

    வைகாசி மாதம் பிறந்துள்ள நிலையில் திருமணம் மற்றும் கோவில் விழாக்கள் அதிக அளவில் நடந்து வருவதால் சமையலுக்கு முக்கியம் வாய்ந்த காயாக கத்தரிக்காய் உள்ளது. இதனால் விலை குறைவு காரணமாக விற்பனையும் அதிகரித்துள்ளது. இதேபோல வீடுகளிலும் கத்தரிக்காய்களை மக்கள் அதிகமாக வாங்கிச் செல்கின்றனர்.
    கத்தரிக்காய் என்றாலே எனக்கு ‘அலர்ஜி’ என்று சாப்பிட்டு பார்க்காமலே கூறுகிறவர்கள் பலர். ஆனால், அதில் பல சத்துக்கள் இருக்கின்றன. கத்தரிக்காய் பற்றிய சில தகவல்களை இங்கே காணலாம்.
    கத்தரிக்காய் என்றாலே எனக்கு ‘அலர்ஜி’ என்று சாப்பிட்டு பார்க்காமலே கூறுகிறவர்கள் பலர். அதை எனக்குப் பிடிக்காது, அதில் என்ன இருக்கிறது? என்றும் கூறுவார்கள். ஆனால், அதில் பல சத்துக்கள் இருக்கின்றன. காய்கறி சந்தைகளில் எளிதாக கிடைக்கும் கத்தரிக்காய் பற்றிய சில தகவல்களை இங்கே காணலாம்.

    கத்தரிக்காயில் நீர்ச்சத்து, பொட்டாசியம் இருப்பதால் ரத்தத்தில் சேரும் கொழுப்பை குறைக்க உதவி செய்கிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்துவதால், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இதனால் இருதயத்தின் பலம் அதிகரிக்கிறது. கத்தரிக்காயில் ஊட்டச்சத்துகள் இருப்பதால் உடலுக்கு மென்மை மற்றும் பலத்தை அளிக்கிறது. மலச்சிக்கல் வராமல் தடுக்க கத்தரிக்காய் சாப்பிடுவது நல்லது.

    கால்களில் வீக்கம் இருக்கிறதா? கவலை வேண்டாம். கத்தரிக்காயை அரைத்து, வீக்கம் இருக்கும் இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் வீக்கம் குணமாகி வரும். வயிற்று பிரச்சினைகள் நீங்க, கத்தரிக்காயை சூப் வைத்து சாப்பிட்டால் சரியாகி விடும். சூப் வைப்பதும் சுலபம்தான். வேகவைத்த கத்தரிக்காய், கொஞ்சம் பூண்டு, தேவைக்கேற்ற உப்பு சேர்த்து சூப் வைத்து சாப்பிட்டால் சுவையாகவும் இருக்கும். வயிற்றுக்கு சுகமாகவும் இருக்கும்.

    நெருப்பில் சுட்ட கத்தரிக்காயுடன் சர்க்கரை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மண்ணீரல் வீக்கம் குறையுமாம். இதயநோய், ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்களை தடுக்க கத்தரிக்காய் சாப்பிடுவது நல்லது.

    கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் திசுக்களின் அழிவை தடுக்கிறது. இதனால் மூளைக்கு வலிமை அதிகரிப்பதோடு ஞாபகத் திறனையும் தூண்டுகிறது. உங்களுக்கு அடிக்கடி மறதி ஏற்படுவதாக உணர்ந்தால் உடனே கத்தரிக்காய் சமைத்து சாப்பிடலாம். கத்தரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும்.
    நாகர்கோவில் மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.50-க்கு விற்ற கத்தரிக்காயின் விலை ரூ.150 ஆக விற்கப்படுகிறது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் அப்டா மார்க்கெட், வடசேரி கனகமூலம் சந்தை செயல் பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுகளுக்கு குமரி, நெல்லை மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    மேலும் ஒட்டன்சத்திரம், மேட்டுப்பாளையம், பெங்களூரு போன்ற இடங்களில் இருந்தும் பலவகையான காய்கறிகள் நாகர்கோவிலுக்கு கொண்டுவரப்படு கிறது. இங்கிருந்து கேரளாவுக்கு அதிக அளவு காய்கறிகள் அனுப்பப்பட்டு வருகிறது. வருகிற 25-ந்தேதி கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொதுவாக ஓணம் பண்டிகையின்போது கேரளாவில் காய்கறிகளின் தேவை அதிமாக இருக்கும். இந்த ஆண்டு இதுவரை இல்லாத மழை காரணமாக கேரளா பெரும் சேதத்தை சந்தித்து உள்ளது.

    மேலும் ஓணம் பண்டிகை கொண்டாட்டமும் களை இழந்து காணப்படுகிறது. இதனால் கேரளாவுக்கு அனுப்பப்படும் காய்கறிகள் வழக்கத்தை விட சற்று கூடுதலாக மட்டும்தான் செல்கிறது. இதற்கிடையில் நாகர்கோவில் மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    ஒரு கிலோ ரூ.50-க்கு விற்ற கத்தரிக்காயின் விலை ரூ.150 ஆக இன்று இருந்தது. கிலோ ரூ.5-க்கு விற்பனையான புடலங்காய் சமீப காலமாக ரூ.25 வரை விற்பனை ஆனது. இன்று அது பல மடங்கு உயர்ந்து கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. ரூ.10-ரூ.15-க்கு விற்ற வெள்ளரிக்காய் கிலோ ரூ.70 ஆக இருந்தது. மற்ற காய்கறி களின் விலையும் உயர்ந்து உள்ளது. கேரட் ரூ.90, பீன்ஸ் ரூ.60, மிளகாய் ரூ.70, சேனை ரூ.30, தக்காளி ரூ.24, தடியங் காய் ரூ.36-க்கு விற்பனை ஆனது.

    இதுபற்றி வியாபாரி ஒருவர் கூறும்போது, சுப மூகூர்த்த தினங்கள் வருவதால் காய்கறிகளின் தேவை அதிகமாக உள்ளது. அதே சமயம் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் இந்த விலை உயர்வு காணப்படுகிறது என்றார். வாழை இலையும் விலை உயர்ந்துள்ளது. ஒரு ரூபாய், 2 ரூபாய்க்கு விற்ற ஒரு வாழை இலை ரூ.10 ஆக உள்ளது. 150 இலை கொண்ட ஒரு கட்டு ரூ.1,500-க்கு விற்பனை ஆனது. தற்போது பலத்த காற்று வீசுவதால் வாழை இலைகள்கிழிந்துவிடுவதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டு உள்ளது. 

    இதேபோல வாழைதார்கள் விலையும் உயர்ந்து உள்ளது. செவ்வாழை, ரசக் கதளி வாழைத்தார்களின் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது. ரூ.400-க்கு விற்ற ஒரு தார் ரசக்கதளி இன்று ரூ.700 ஆக உயர்ந்து காணப்பட்டது.

    ஓணம் பண்டிகையையொட்டி தோவளை பூ மார்க்கெட்டில் இருந்து கேரள வியாபாரிகள் அதிகளவு பூக்களை வாங்கிச் செல்வார்கள். இந்த ஆண்டு மழை காரணமாக அங்கு ஓணம் பண்டிகையின் உற்சாகம் குறைந்தே காணப்படுகிறது. இதனால் தோவாளை மார்க்கெட்டுக்கு கேரள வியாபாரிகள் வருகை சமீபமாக குறைந்தே காணப்படுகிறது. பூக்கள் விற்பனையும் மதமாக உள்ளது.

    தற்போது கேரளவில் ஓரளவு சகஜ நிலை திரும்பி வருகிறது. எனவே ஓணம் விற்பனையை எதிர்பார்த்து தோவாளை வியாபாரிகள் அதிகளவு பூக்களை வாங்கி வைத்துள்ளனர். இன்று இரவு முதல் நாளை காலை வரை விடிய, விடிய பூக்கள் விற்பனை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இன்று தோவாளை மார்க்கெட்டில் மல்லிப்பூ கிலோ ரூ.350, பிச்சி ரூ.300-க்கு விற்பனையானது. சம்பங்கி உள்பட வண்ண மலர்கள் கிலோ ரூ.200 வரை காணப்பட்டது. கடந்த ஆண்டு ஓணத்தின்போது 10 நாட்களில் 80 டன் வரை பூக்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
    ×