search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nutrients"

    • பாரம்பரிய உணவாக இடம் பிடிப்பது சர்க்கரைப் பொங்கல்.
    • சர்க்கரைப் பொங்கலில் சத்துக்களும் நிறைந்துள்ளன.

    தென்னிந்த பண்டிகைகளில் பாரம்பரிய உணவாக இடம் பிடிப்பது சர்க்கரைப் பொங்கல். இது பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம். நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. சுவையைப் போலவே சர்க்கரைப் பொங்கலில் சத்துக்களும் நிறைந்துள்ளன.

    சர்க்கரைப் பொங்கலில் இருக்கும் சத்துக்கள், தசைகளுக்கு ஆற்றலை அளித்து அவற்றை வலிமைப்படுத்தும். ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும். வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். சர்க்கரை பொங்கலில் சேர்க்கப்படும் உணவுப்பொருட்களில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்சிடன்டுகள், ஆரோக்கியமான கொழுப்பு ஆகியவை உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

    குளூட்டன் இல்லாத பச்சரிசி, ஒவ்வாமை ஏற்படுத்தாத உணவுப்பொருளாகும். இதில் இருக்கும் ரசாயன மூலக்கூறுகள் சிறு மூளையின் இயக்கத்தை தூண்டக்கூடியவை. அரிசியில் இருக்கும் கார்போஹைட்ரேட் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும்.

    பச்சரிசியில் கால்சியம், மெக்னீசியம். பாஸ்பரஸ், பொட்டாசியம். இரும்புச்சத்து, செலினியம், வைட்டமின் ஏ. பி ஆகிய சத்துக்கள் உள்ளன. பாசிப்பருப்பில், புரதச்சத்து அதிக அளவில் உள்ளது, இது உடலை குளிர்ச்சிப்படுத்தும், இதில் இருக்கும் பொட்டாசியம், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மேலும் மெக்னீசியம், இரும்பு மற்றும் தாமிரம் போன்ற சத்துக்களும் பாசிப்பருப்பில் உள்ளது. இவை அனைத்தும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.

    இனிப்பு சுவைக்காக சேர்க்கப்படும் வெல்லத்தில் வைட்மின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன. அவை சருமம் உள்பட உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஊட்டமளிக்கும். வெல்லம் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும். இதில் இருக்கும் இரும்புச்சத்து பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையை போக்கும்.

    சர்க்கரைப் பொங்கலில் சேர்க்கப்படும் நெய்யில் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு உள்ளது. வைட்டமின் ஏ. ஈ போன்ற சத்துக்களும் அடங்கி உள்ளன. இவை அனைத்தும் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் உறுதுணையாக இருக்கும். முந்திரி, திராட்சை போன்றவற்றில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடியவை.

    பண்டிகை தினத்தில் விரதத்தை முடித்தவர்கள் சர்க்கரை பொங்கலை சாப்பிடும்போது அவர்களுக்கு உடனடியாக ஆற்றல் கிடைக்கும். சர்க்கரைப் பொங்கலில் வாசத்திற்காக சேர்க்கப்படும் ஏலக்காயில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

    அதனால் தான் ஒவ்வொரு விசேஷத் திலும் சர்க்கரைப் பொங்கல் பிரதான உணவாக இருக்கிறது. கோவில்களில் நெய்வேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

    • சத்தாண சிமிலி உருண்டை பெண் குழந்தைகளுக்கு ஏற்றது.
    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.

    தேவையான பொருட்கள்:-

    கேழ்வரகு (ராகி) மாவு - 250 கிராம்

    வெல்லம் -300 கிராம்

    வேர்கடலை - 200 கிராம்

    ஏலக்காய்- 4 நம்பர்

    நெய் - தேவையான அளவு

    உப்பு- ஒரு சிட்டிகை

    செய்முறை:-

    ஒரு கடாயில் 200 கிராம் வேர்கடலையை சேர்த்து நன்றாக மனம் வரும் வரை வறுத்து அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் 250 கிராம் கேழ்வரகு (ராகி) மாவு, அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கிளறி சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு தோசை தவாவில் எண்ணை அல்லது நெய் சேர்த்து ரொட்டி அளவிற்கு திரட்டி வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    வேக வைத்து ராகி ரொட்டி துண்டுகளை மிக்சி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே மிக்சி ஜாரில் 300 கிராம் வெல்லத்தை பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வாய் அகன்ற பாத்திரத்தில் பொடித்த வெல்லம், பொடித்த வேர்கடலை, வேகவைத்து பொடித்த ராகி ரொட்டிகளையும் அதனுடன் சேர்க்க வேண்டும்.

    இந்த கலவையுடன் ஏலக்காய் பொடி, 3 கரண்டி நெய் சேர்த்து அனைத்தையும் சேர்த்து கிளறி உருண்டைகளாக பிடித்து எடுத்து வைக்கவும். சுவையான சிமிலி உருண்டை தயார்.

    90-களில் பிறந்த குழந்தைகளுக்கு இந்த சிமிலி உருண்டைகளை ஸ்நாக்காக செய்து கொடுப்பார்கள். அது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஊட்டச்சத்து நிறைந்தது. அனைத்து வயதினருக்கும் பிடிக்கும்.

    • பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
    • சத்தான ஊட்டச்சத்து நிறைந்தது, அனைத்து வயதினருக்கும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:-

    பாசி பயறு - 200 கிராம்

    நாட்டுச்சர்க்கரை 250 கிராம்

    வேர்கடலை - 100 கிராம்

    ஏலக்காய் - 4 நம்பர்

    உப்பு -ஒரு சிட்டிகை

    நெய் - 3 கரண்டி

    செய்முறை:-

    ஒரு பாத்திரத்தில் பாசிபயறு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு கடாயில் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். நன்றாக மனம் வரும் வரை வறுத்து எடுக்க வேண்டும். அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அரைத்து எடுத்துள்ள பாசிபயறு மாவு கலவையை ஒரு வானொலியில் சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்சி ஜாரில் 250 கிராம் நாட்டு சர்க்கரை, 4 நம்பர் ஏலக்காய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதே மிக்சி ஜாரில் 100 கிராம் வறுத்த வேர்கடலையையும் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    வறுத்த பாசிபயறு மாவு கலவையுடன், வறுத்த வேர்கடலை பொடி, பொடித்த நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதனுடன் காய்ச்சிய 3 கரண்டி நெய் சேர்த்து கிளர வேண்டும். இதனை நன்றாக பிசைந்து உருண்டைகளாக உருட்டி எடுக்க வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த பாசிபயறு லட்டு தயார். https://www.maalaimalar.com/health

    • தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் காசநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து நல உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
    • வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முத்தமிழ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் 15 பேருக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காரிப்பட்டி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் காசநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து நல உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

    வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முத்தமிழ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் 15 பேருக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது. துணை இயக்குனர், காசநோய் மருத்துவர் கணபதி அறிவுறுத்தலின்படி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணா முன்னிலையில் நடந்த முகாமில் சித்த மருத்துவர், பல் மருத்துவர், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவமனை பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் செவிலியர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட காசநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    • கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • 60 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன் கொல்லங்கொண்டான் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 60 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊட்டச்சத்து பெட்டகங்களை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கினார்.அப்போது அவர் பேசுகையில், கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். பிறந்த குழந்தைகளின் வளர்ச்சி மட்டும் கருத்தில் கொள்ளாமல் வயிற்றில் உள்ள குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாடு இன்றி ஆரோக்கியமாக வளர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய ஒரே முதல்வரான மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறார்.

    கருவில் இருக்கும் குழந்தைகள் கூட கருணாநிதியின் மகன் பெயர் சொல்லும் அளவுக்கு கர்ப்பிணி பெண்களுக்கு பார்த்து பார்த்து பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். ஆயிரக்கனக்கான ஏழை, எளிய கர்ப்பிணி பெண்கள் பயன்பெறும் இந்த மருத்துவமனை வளர்ச்சிக்கு நான் எப்போதும் உறு துணையாக இருப்பேன் என்றார்.

    இந்த நிகழ்வில் தலைமை மருத்துவர் கருணாகரபிரபு, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், கிளைச்செயலாளர் வனராஜ், ஒன்றிய கவுன்சிலர் பூமாரி மாரிமுத்து மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், கர்ப்பிணி பெண்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கத்தரிக்காய் என்றாலே எனக்கு ‘அலர்ஜி’ என்று சாப்பிட்டு பார்க்காமலே கூறுகிறவர்கள் பலர். ஆனால், அதில் பல சத்துக்கள் இருக்கின்றன. கத்தரிக்காய் பற்றிய சில தகவல்களை இங்கே காணலாம்.
    கத்தரிக்காய் என்றாலே எனக்கு ‘அலர்ஜி’ என்று சாப்பிட்டு பார்க்காமலே கூறுகிறவர்கள் பலர். அதை எனக்குப் பிடிக்காது, அதில் என்ன இருக்கிறது? என்றும் கூறுவார்கள். ஆனால், அதில் பல சத்துக்கள் இருக்கின்றன. காய்கறி சந்தைகளில் எளிதாக கிடைக்கும் கத்தரிக்காய் பற்றிய சில தகவல்களை இங்கே காணலாம்.

    கத்தரிக்காயில் நீர்ச்சத்து, பொட்டாசியம் இருப்பதால் ரத்தத்தில் சேரும் கொழுப்பை குறைக்க உதவி செய்கிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்துவதால், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இதனால் இருதயத்தின் பலம் அதிகரிக்கிறது. கத்தரிக்காயில் ஊட்டச்சத்துகள் இருப்பதால் உடலுக்கு மென்மை மற்றும் பலத்தை அளிக்கிறது. மலச்சிக்கல் வராமல் தடுக்க கத்தரிக்காய் சாப்பிடுவது நல்லது.

    கால்களில் வீக்கம் இருக்கிறதா? கவலை வேண்டாம். கத்தரிக்காயை அரைத்து, வீக்கம் இருக்கும் இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் வீக்கம் குணமாகி வரும். வயிற்று பிரச்சினைகள் நீங்க, கத்தரிக்காயை சூப் வைத்து சாப்பிட்டால் சரியாகி விடும். சூப் வைப்பதும் சுலபம்தான். வேகவைத்த கத்தரிக்காய், கொஞ்சம் பூண்டு, தேவைக்கேற்ற உப்பு சேர்த்து சூப் வைத்து சாப்பிட்டால் சுவையாகவும் இருக்கும். வயிற்றுக்கு சுகமாகவும் இருக்கும்.

    நெருப்பில் சுட்ட கத்தரிக்காயுடன் சர்க்கரை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மண்ணீரல் வீக்கம் குறையுமாம். இதயநோய், ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்களை தடுக்க கத்தரிக்காய் சாப்பிடுவது நல்லது.

    கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் திசுக்களின் அழிவை தடுக்கிறது. இதனால் மூளைக்கு வலிமை அதிகரிப்பதோடு ஞாபகத் திறனையும் தூண்டுகிறது. உங்களுக்கு அடிக்கடி மறதி ஏற்படுவதாக உணர்ந்தால் உடனே கத்தரிக்காய் சமைத்து சாப்பிடலாம். கத்தரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும்.
    ×