search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகம்
    X

    கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகம்

    • கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • 60 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன் கொல்லங்கொண்டான் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 60 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊட்டச்சத்து பெட்டகங்களை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கினார்.அப்போது அவர் பேசுகையில், கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். பிறந்த குழந்தைகளின் வளர்ச்சி மட்டும் கருத்தில் கொள்ளாமல் வயிற்றில் உள்ள குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாடு இன்றி ஆரோக்கியமாக வளர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய ஒரே முதல்வரான மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறார்.

    கருவில் இருக்கும் குழந்தைகள் கூட கருணாநிதியின் மகன் பெயர் சொல்லும் அளவுக்கு கர்ப்பிணி பெண்களுக்கு பார்த்து பார்த்து பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். ஆயிரக்கனக்கான ஏழை, எளிய கர்ப்பிணி பெண்கள் பயன்பெறும் இந்த மருத்துவமனை வளர்ச்சிக்கு நான் எப்போதும் உறு துணையாக இருப்பேன் என்றார்.

    இந்த நிகழ்வில் தலைமை மருத்துவர் கருணாகரபிரபு, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், கிளைச்செயலாளர் வனராஜ், ஒன்றிய கவுன்சிலர் பூமாரி மாரிமுத்து மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், கர்ப்பிணி பெண்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×