search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "snacking"

    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
    • ஸ்கூல் ஸ்நாக்காகவும் கொடுத்துவிடலாம்.

    காலை சிற்றுண்டியாக தினமும், இட்லி, தோசை, உப்புமா, என்று சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு இந்த வாழைப்பழம் பிரட் டோஸ்ட் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். செய்வதும் எளிதானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு இதனை ஸ்கூல் ஸ்நாக்காகவும் கொடுத்துவிடலாம் அல்லது ஈவ்னிங் ஸ்நாக்காகவும் செய்து கொடுத்து அசத்தலாம்.

    தேவையான பொருட்கள்:

    பிரட் துண்டுகள்- 1

    வாழைப்பழம்- 2

    முட்டை- 1

    சர்க்கரை- 4 ஸ்ப்பூன்

    தேங்காய்துருவல்- ஒரு கப்

    செய்முறை:

    வாழைப்பழங்களை தோலுரித்து அதனை வட்ட வடிவங்களாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு முட்டையை ஒரு பவுளில் உடைத்து ஊற்றி அதில் சிறிதளவு சர்க்கரை, 5 ஸ்பூன் பால் சேர்த்து நன்றாக அடித்து கலக்கி கொள்ள வேண்டும்.

    வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு காய்ந்ததும் அதில் வாழைப்பழ துண்டுகள் மற்றும் அதன்மேல் சர்க்கரை, தேங்காய் துருவல்களை தூவி பிரட்டி எடுக்க வேண்டும். இதனை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு பிரட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை வெட்டி விட்டு அதனை சப்பாத்தி தேய்க்கும் கட்டையால் பிரட்டுகளை தட்டையாக தேய்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் நடுவே வாழைப்பழங்களை வைத்து ரோல் செய்ய வேண்டும். இவ்வாறு அனைத்து ரோல்களையும் செய்து அடுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் தோசை தவாவை அடுப்பில் வைத்து அதில் நெய் விட்டு காயந்ததும் இந்த பிரட் ரோல்களை எடுத்து முட்டை கலவையில் முன்னும் பின்னுமாக புரட்டி எடுத்து தோசை தவாவில் சேர்க்க வேண்டும். இதனை திருப்பி திருப்பி போட்டு டோஸ்ட் செய்து எடுக்க வேண்டும். அருமையான வாழைப்பழ பிரட் டோஸ்ட் தயார்.

    • புட்டு ஒரு ஆரோக்கியமான உணவு.
    • கோதுமை புட்டு, கேழ்வரகு புட்டு, சிவப்பரிசி புட்டு என பல வகைகள் உள்ளன.

    புட்டு ஒரு ஆரோக்கியமான உணவு. இதில் கோதுமை புட்டு, கேழ்வரகு புட்டு, சிவப்பரிசி புட்டு என பல வகைகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான புட்டு பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ஆக சிப்ஸ் உள்ளிட்டவற்றை கொடுப்பதற்கு பதிலாக ஆவில் வேகவைத்து செய்யும் பலகாரங்கள் போன்றவற்றை செய்து கொடுக்கலாம். செட்டிநாடு ஸ்பெஷல் ரங்கூன் புட்டு எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்

    ரவை -ஒரு டம்ளர்

    வெல்லம்-100 கிராம்

    ஏலக்காய் -3

    நெய்- தேவையான அளவு

    தேங்காய்- அரை மூடி

    திராட்சை-6

    முந்திரி பருப்பு -15

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் 100 கிராம் வெல்லத்தை போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். வெல்லம் முழுமையாக உருகியது அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆறியதும், அதை வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் முந்திரியை சேர்த்து வறுக்க வேண்டும். முந்திரி நிறம் மாற ஆரம்பிக்கும் போது அதில் திராட்சையை சேர்த்து வறுக்க வேண்டும். இவை இரண்டையும் வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது அதே வாணலியில் அரை மூடி தேங்காயை எடுத்து நன்றாக வறுக்க வேண்டும். தேங்காய் நெய்யில் பொன்னிறமாக மாறியதும், அதையும் வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

    மீண்டும் அதே வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் ரவையை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து, ரவையை நன்றாக, அதே நேரத்தில் கருகிவிடாமல் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ரவை சிவக்க ஆரம்பிக்கும் போது அதில் ஏற்கனவே வடிகட்டி எடுத்து வைத்த வெல்லப்பாகை சேர்க்க வேண்டும். இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விட வேண்டும். வெல்லம் முழுமையாக ரவையில் மிக்ஸ் ஆனதும், அதில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு நன்றாக கிளறி விட வேண்டும். அதில் அரைஸ்பூன் ஏலக்காய் பவுடர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

    பின்னர் ஏற்கனவே வறுத்து வைத்த முந்திரி திராட்சை, தேங்காய் ஆகியவற்றை இதில் சேர்க்க வேண்டும். இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி போட்டு 5 நிமிடம் வரை வேக விட வேண்டும். பின்னர் இதில் தேவையான அளவு நெய் சேர்த்து நன்றாக கிளறி விட்டால், சுவையாக ரங்கூன் புட்டு தயார்.

    • வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
    • வெல்லம் சேர்த்து அதிகமானோர் குழி பணியாரம் செய்வார்கள்.

    குளிர்காலம், மழைக்காலம் போன்ற காலங்களில் மாலை நேரங்களில் காபி, டீயுடன் சூடாக ஒரு ஸ்னாக்ஸ் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான ஒரு மாலைநேர சிற்றுண்டி ரெசிபியை தான் காண உள்ளோம். வெல்லம் சேர்த்து அதிகமானோர் குழி பணியாரம் செய்வார்கள். ஆனால் இன்று நாம் காரசாரமான குழி பணியாரத்தை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

    தேவையான பொருட்கள்:

    இட்லி மாவு - 1 கப்

    வெங்காயம்- 1 (பொடிதாக நறுக்கியது)

    கேரட்- 1 (துருவியது)

    கொத்தமல்லித்தழை- 1 (பொடிதாக நறுக்கியது)

    பச்சை மிளகாய்- 1 டீஸ்பூன் (பொடிதாக நறுக்கியது)

    கறிவேப்பிலை- 1 டீஸ்பூன் (பொடிதாக நறுக்கியது)

    கடலைப்பருப்பு- 1 டீஸ்பூன்

    உளுந்து - 1 டீஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    கடுகு- 1 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    பெருங்காயப்பொடி- 1 டீஸ்பூன்

    மஞ்சள்தூள்- டீஸ்பூன்

    செய்முறை:

    அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். பின்னர் அதில் கடுகு, உளுந்தப்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு தாளிக்க வேண்டும். அதன்பிறகு அதில் கறிவேப்பிலை, நறுக்கிய பச்சைமிளகாய், வெங்காயம் போன்றவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து கிளற வேண்டும். பின்னர் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கிளறி இறக்க வேண்டும். இந்த கலவை ஆறியதும் இட்லி மாவுடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

    அடுப்பில் குழிப்பணியாரக் கல்லை வைத்து சூடானதும். அதன் ஒவ்வொரு குழியிலும் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். ஒவ்வொரு குழியிலும் முக்கால் அளவுக்கு மாவை ஊற்றி. இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேகவைத்து திருப்பி போட்டு எடுக்க வேண்டும். இப்போது சுவையான "மசாலா குழிப்பணியாரம் தயார். இதை காரசட்னி, புதினா சட்னியுடன் சேர்த்து சுவைக்கலாம்.

    • சப்பாத்தியை வைத்து சூப்பரா ஒரு லட்டு செய்யலாம்.
    • நட்ஸ் வகைகளையும் நெய்யில் வறுத்து சேர்த்துக் கொள்ளலாம்.

    நம்முடைய பிரதான உணவுகளாக இட்லி, தோசையுடன் சேர்ந்து சப்பாத்தியும் முதன்மை உணவாக மாறிவிட்டது. இந்த சப்பாத்தியை வைத்து சூப்பரா ஒரு லட்டு செய்ய முடியும். செய்து சாப்பிட்டு பார்க்கலாமா? வாங்க பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    சப்பாத்தி - 6

    நெய் - 4 ஸ்பூன்,

    பால் - 4 ஸ்பூன்,

    பால் பவுடர் - 3 ஸ்பூன்,

    நாட்டுச் சர்க்கரை - கால் கப்,

    ஏலக்காய் பொடி - அரை ஸ்பூன்,

    செய்முறை:

    முதலில் சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய்யை சேர்த்து அதில் பொடித்த சப்பாத்தியை சேர்த்து வதக்க வேண்டும். இதில் எடுத்து வைத்திருக்கும் பாலை தெளித்து கொஞ்சம் ஈரமாக்கிக் கொள்ள வேண்டும்.

    அடுத்ததாக பால் பவுடரையும், நாட்டுச் சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கி வையுங்கள். இதோடு நீங்கள் நட்ஸ் வகைகளையும் நெய்யில் வறுத்து சேர்த்துக் கொள்ளலாம். மீதமுள்ள நெய்யையும் சூடாக்கி இந்த கலவையில் சேர்த்து கை பொறுக்கும் சூட்டில் சிறு சிறு உருண்டைகளாக பிடித்தால் சுவையான சப்பாத்தி லட்டு ரெடி.

    • எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம்.
    • பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

    இந்த உருளைக்கிழங்கு முறுக்கு குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இந்த முறுக்கை செய்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால், எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    பச்சரிசி மாவு- 2 கப்

    உளுந்து 2 கப்

    வெண்ணெய் 2 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    உருளைக்கிழங்கு- 2

    உப்பு தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    தண்ணீர் தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு டீஸ்பூன் மிளகை உரலில் போட்டு பாதியாக உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உளுந்தை மிதமான தீயில் சிவக்க வறுக்கவும், அது ஆறிய பின்னர் உலர்ந்த மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை வேக வைத்து உரித்துக்கொள்ள வேண்டும்,

    பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு, வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, சீரகம், மிளகு, உப்பு, உருக்கிய வெண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் முறுக்கு அச்சின் உட்புறம் நெய் அல்லது எண்ணெய் தடவி பிசைந்து வைத்திருக்கும் மாவை அதில் போட்டு, முறுக்காக பிழிந்து எண்ணெய்யில் போட்டு சிவக்கும் அளவிற்கு பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான "உருளைக் கிழங்கு முறுக்கு' தயார்.

    • அருமையான தேநீர் நேர சிற்றுண்டி.
    • இந்த முறுக்கு செய்ய சில துண்டுகள் போதும்.

    அருமையான தேநீர் நேர சிற்றுண்டி. இந்த முறுக்கு செய்ய சில துண்டுகள் போதும், எனவே நீங்கள் மரவள்ளிக்கிழங்கு சமைக்கும் போது, சிறிது சேமித்து இந்த முறுக்கை முயற்சிக்கவும். மரவள்ளிக்கிழங்கை, கப்பா, குச்சி கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது.

    தேவையான பொருட்கள்:

    மரவள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ

    பச்சரிசி மாவு - 1/4 கிலோ

    இஞ்சி - 1 அங்குல துண்டு

    பச்சை மிளகாய் - 10

    ஓமம் - 2 டீஸ்பூன்

    எண்ணெய் - தேவையான அளவு

    வெண்ணெய் - 100 கிராம்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    இஞ்சி, பச்சை மிளகாய், ஓமம் இம்மூன்றையும் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து மேல் தோலை நீக்கிவிட்டு துருவிக்கொள்ள வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் மரவள்ளிக்கிழங்கு, அரிசி மாவு, அரைத்த விழுது உப்பு, வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்.

    அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய்யை ஊற்றி சூடுபடுத்த வேண்டும். அதன்பிறகு முறுக்கு அச்சில் எண்ணெய் பூசி அதில் மாவைப்போட்டு முறுக்குகளாகப் பிழிந்து சிவக்கும் அளவுக்கு பொரித்து எடுக்க வேண்டும். இப்போது மொறுமொறுப்பான மரவள்ளிக்கிழங்கு முறுக்கு தயார்.

    குறிப்பு: கிழங்குகளை பயன்படுத்தி முறுக்கு தயாரிக்கும்போது. மாவு பிசைவதற்கு வெந்நீர் பயன்படுத்தலாம். இதனால் மாவு மென்மையாக இருப்பதுடன், எளிதில் பிசையவும் முடியும்.

    • அடை மாவு போலத்தான் குணுக்கிற்கும் மாவு அரைக்க வேண்டும்.
    • போண்டா செய்வது போல கொஞ்சம் திக்காக இருக்க வேண்டும்.

    அடை மாவு போலத்தான் இந்த குணுக்கிற்கும் மாவு அரைக்க வேண்டும். அடை மாவை கொஞ்சம் தண்ணீராக அரைப்போம். இந்த குணுக்கிற்கு போண்டா செய்வது போல கொஞ்சம் திக்காக மாவு அரைத்துக் கொள்ள வேண்டும். தஞ்சாவூர் கும்பகோணம் பக்கங்களில் இந்த குணுக்கு ரொம்பவும் பிரபலம். சுவையான முறையில் அதேசமயம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய வகையில் சாமை குணுக்கு செய்வது எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்:

    சாமை - 50 கிராம்

    பச்சைப்பருப்பு, கொண்டைக்கடலை - தலா 25 கிராம்

    பச்சரிசி - ஒரு டீஸ்பூன்

    சீரகம் - கால் டீஸ்பூன்

    சின்ன வெங்காயம் - 2 (நறுக்கியது)

    பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    எண்ணெய் - 200 கிராம்

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் சாமை, பச்சைப்பருப்பு, பச்சரிசி அனைத்தையும் அரை மணி நேரம் ஊறவைத்து, இவற்றுடன் ஊறவைத்த கொண்டைக்கடலையையும் சேர்த்து ரவை ரவையாக கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    இதில் உப்பு, சீரகம், கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக பிசைந்து, சிறிது சிறிதாக கிள்ளி சூடான எண்ணெயில் சிவக்க பொரித்து எடுக்கவும். சுவையான சாமை குணுக்கு தயார். மழைக்காலங்களில் ஈவ்னிங் சூடான டீயுடன் பரிமாற அருமையாக இருக்கும்.

    • பன் ரெசிபியை, உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.
    • ஓவன் இல்லாமல் மிகவும் எளிதாக நம்முடைய வீட்டிலேயே செய்யலாம்.

    டீக்கடைகளில் விற்கப்படும் பன்களை ஓவன் இல்லாமல் மிகவும் எளிதாக நம்முடைய வீட்டிலேயே செய்யலாம். பொதுவாகவே குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த சாஃப்டான பன், நம்முடைய வீட்டில் செய்தால் அம்மாக்களுக்கு அது மிகப் பெரிய சந்தோசத்தை கொடுக்கும். உங்கள் குழந்தைகளுக்கு நீங்களும், உங்கள் கையாலேயே பன் செய்து தர வேண்டும் என்ற ஆசை இருக்கா? இந்த குறிப்பை முழுமையாக படித்து, இன்னைக்கு ஈவ்னிங் இந்த பன் ரெசிபியை, உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

    தேவையான பொருட்கள்

    மைதா- 1/2 கிலோ

    சர்க்கரை- ஒரு ஸ்பூன்,

    உப்பு- ஒரு சிட்டிகை

    முட்டை- 1

    பால்-200 கிராம்

    ஈஸ்ட்- 1/2 ஸ்பூன்

    வெண்ணெய்- 2 ஸ்பூன்

    செய்முறை:

    ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் முதலில் ஈஸ்டை சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு கரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாக கரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு முட்டைடை அதனுடன் சேர்த்து நன்றாக அடித்து கலக்கவும்.

    இந்த கலவையுடன் பால் சேர்க்க வேண்டும். இதில் மைதா மாவு சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பால் விட்டு பிசைந்து அரைமணிநேரம் மூடிபோட்டு ஊற வைக்க வேண்டும். அரைமணிநேரம் கழித்து திறந்து பார்த்தால் பிசைந்து வைத்த மாவுக்கலவை உப்பலாக இருக்கும்.

    இந்த மாவுக்கலவையை மீண்டும் ஒருமுறை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாவு உருண்டைகளை ஒரு தட்டில் வெண்ணெய் தடவி அதில் வரிசையாக இடைவெளி விட்டு அடுக்கிக்கொள்ள வேண்டும்.

    இப்போது அடுப்பில் ஒரு அடி கனமாக பாத்திரம் வைத்து அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து அதனை 10 நிமிடத்திற்கு ஃப்ரீஹீட் செய்ய வேண்டும். 10 நிமிடம் கழித்து நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பன் உருண்டைகளை எடுத்து அதனுள் வைத்து ஆவி வெளியே போகாத அளவுக்கு 25 நிமிடம் மூடிபோட்டு மூட வேண்டும். 25 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் சுவையான டீக்கடை பன் தயார். இதன் மேல் வெண்ணெய் தடவி சூடு ஆறியதும் பரிமாறலாம்.

    • முட்டை சேர்க்காமல் செய்யும் ரவா கேக்
    • குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

    வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ரவையை வைத்து குழந்தைகளுக்கு பல ஈவ்னிங் ஸ்நாக்குகளை தயார் செய்யலாம். அந்த வகையில் ஓவன் இல்லாமல் ரவையை வைத்து முட்டை சேர்க்காமல், எப்படி சுலபமான முறையில் கேக் செய்வது என்பதை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    ரவை- 2 கப்

    சர்க்கரை- ஒரு கப்

    தயிர்- 3 கரண்டி

    பால்- ஒரு லிட்டர்

    எண்ணெய்- 3 ஸ்பூன்

    டூட்டி புரூட்டி- 3 ஸ்பூன்

    ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்

    பேக்கிங் பவுடர்- அரை ஸ்பூன்

    பேக்கிங் சோடா- கால் டீஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    ரவையை மிக்சி ஜாரில் பொடித்து எடுத்து சலித்து வைத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய், தயிர் மற்றும் சர்க்கரை ஆகியவை சேர்த்து நன்றாக அடித்து கலக்கவும். அதில் பொடித்த ரவை மற்றும் பால் சிறுகச்சிறுக கலந்து தோசை மாவு பதத்திற்கு கலந்து அந்த கலவையை 10 நிமிடத்திற்கு மூடி வைக்க வேண்டும்.

    இதன்பிறகு இந்த கலவையில் ஏலக்காய் தூள், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து கலக்கி அந்த கலவை கட்டியாக இருந்தால் அதில் பால் சேர்த்து கலந்து அதில் டூட்டி புரூட்டியை சேர்த்து இதனை ஒரு கேக் செய்யும் பாத்திரத்தின் உள்ளே வெண்ணெய் தடவி அதனுள் பட்டர் பேப்பர் வைத்து அதில் இந்த கேக் கலவையை ஊற்ற வேண்டும்.

    அதன்பிறகு ஒரு அடிகனமான பாத்திரத்தின் உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து 10 நிமிடம் ஃப்ரீஹீட் செய்ய வேண்டும். பின்னர் கேக் கலவையை அதனுள் வைத்து ஆவி வெளியே போகாத அளவிற்கு பாத்திரத்தை நன்றாக முட வேண்டும் 15 நிமிடங்கள் கழித்து அதனை திறந்து பார்க்கவும். அதில் ஒரு குச்சியை வைத்து குத்தி பார்த்தால் குச்சியில் அந்த கலவை ஒட்டாமல் வந்தால் கேக் நன்றாக வந்துள்ளது என்று அர்த்தம். சுவையான ரவா கேக் தயார்.

    அந்த கேக்கை ஒரு வட்ட வடிமான பிளேட்டில் போட்டு அதனை கேக் வடிவத்தில் கட் செய்து எடுத்து சூடு ஆறியதும் பரிமாறவும். இந்த கேக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். முட்டை சேர்க்காமல் மிகவும் மிருதுவான ரவா கேக் செய்ய வேண்டுமா முயற்சி செய்து பாருங்கள்.

    • பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
    • சத்தான ஊட்டச்சத்து நிறைந்தது, அனைத்து வயதினருக்கும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:-

    பாசி பயறு - 200 கிராம்

    நாட்டுச்சர்க்கரை 250 கிராம்

    வேர்கடலை - 100 கிராம்

    ஏலக்காய் - 4 நம்பர்

    உப்பு -ஒரு சிட்டிகை

    நெய் - 3 கரண்டி

    செய்முறை:-

    ஒரு பாத்திரத்தில் பாசிபயறு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு கடாயில் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். நன்றாக மனம் வரும் வரை வறுத்து எடுக்க வேண்டும். அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அரைத்து எடுத்துள்ள பாசிபயறு மாவு கலவையை ஒரு வானொலியில் சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்சி ஜாரில் 250 கிராம் நாட்டு சர்க்கரை, 4 நம்பர் ஏலக்காய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதே மிக்சி ஜாரில் 100 கிராம் வறுத்த வேர்கடலையையும் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    வறுத்த பாசிபயறு மாவு கலவையுடன், வறுத்த வேர்கடலை பொடி, பொடித்த நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதனுடன் காய்ச்சிய 3 கரண்டி நெய் சேர்த்து கிளர வேண்டும். இதனை நன்றாக பிசைந்து உருண்டைகளாக உருட்டி எடுக்க வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த பாசிபயறு லட்டு தயார். https://www.maalaimalar.com/health

    ×