search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "For cooking"

    • அருமையான தேநீர் நேர சிற்றுண்டி.
    • இந்த முறுக்கு செய்ய சில துண்டுகள் போதும்.

    அருமையான தேநீர் நேர சிற்றுண்டி. இந்த முறுக்கு செய்ய சில துண்டுகள் போதும், எனவே நீங்கள் மரவள்ளிக்கிழங்கு சமைக்கும் போது, சிறிது சேமித்து இந்த முறுக்கை முயற்சிக்கவும். மரவள்ளிக்கிழங்கை, கப்பா, குச்சி கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது.

    தேவையான பொருட்கள்:

    மரவள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ

    பச்சரிசி மாவு - 1/4 கிலோ

    இஞ்சி - 1 அங்குல துண்டு

    பச்சை மிளகாய் - 10

    ஓமம் - 2 டீஸ்பூன்

    எண்ணெய் - தேவையான அளவு

    வெண்ணெய் - 100 கிராம்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    இஞ்சி, பச்சை மிளகாய், ஓமம் இம்மூன்றையும் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து மேல் தோலை நீக்கிவிட்டு துருவிக்கொள்ள வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் மரவள்ளிக்கிழங்கு, அரிசி மாவு, அரைத்த விழுது உப்பு, வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்.

    அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய்யை ஊற்றி சூடுபடுத்த வேண்டும். அதன்பிறகு முறுக்கு அச்சில் எண்ணெய் பூசி அதில் மாவைப்போட்டு முறுக்குகளாகப் பிழிந்து சிவக்கும் அளவுக்கு பொரித்து எடுக்க வேண்டும். இப்போது மொறுமொறுப்பான மரவள்ளிக்கிழங்கு முறுக்கு தயார்.

    குறிப்பு: கிழங்குகளை பயன்படுத்தி முறுக்கு தயாரிக்கும்போது. மாவு பிசைவதற்கு வெந்நீர் பயன்படுத்தலாம். இதனால் மாவு மென்மையாக இருப்பதுடன், எளிதில் பிசையவும் முடியும்.

    • அடை மாவு போலத்தான் குணுக்கிற்கும் மாவு அரைக்க வேண்டும்.
    • போண்டா செய்வது போல கொஞ்சம் திக்காக இருக்க வேண்டும்.

    அடை மாவு போலத்தான் இந்த குணுக்கிற்கும் மாவு அரைக்க வேண்டும். அடை மாவை கொஞ்சம் தண்ணீராக அரைப்போம். இந்த குணுக்கிற்கு போண்டா செய்வது போல கொஞ்சம் திக்காக மாவு அரைத்துக் கொள்ள வேண்டும். தஞ்சாவூர் கும்பகோணம் பக்கங்களில் இந்த குணுக்கு ரொம்பவும் பிரபலம். சுவையான முறையில் அதேசமயம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய வகையில் சாமை குணுக்கு செய்வது எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்:

    சாமை - 50 கிராம்

    பச்சைப்பருப்பு, கொண்டைக்கடலை - தலா 25 கிராம்

    பச்சரிசி - ஒரு டீஸ்பூன்

    சீரகம் - கால் டீஸ்பூன்

    சின்ன வெங்காயம் - 2 (நறுக்கியது)

    பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    எண்ணெய் - 200 கிராம்

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் சாமை, பச்சைப்பருப்பு, பச்சரிசி அனைத்தையும் அரை மணி நேரம் ஊறவைத்து, இவற்றுடன் ஊறவைத்த கொண்டைக்கடலையையும் சேர்த்து ரவை ரவையாக கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    இதில் உப்பு, சீரகம், கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக பிசைந்து, சிறிது சிறிதாக கிள்ளி சூடான எண்ணெயில் சிவக்க பொரித்து எடுக்கவும். சுவையான சாமை குணுக்கு தயார். மழைக்காலங்களில் ஈவ்னிங் சூடான டீயுடன் பரிமாற அருமையாக இருக்கும்.

    ×