search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jasmine"

    • மதுபானம், விமான நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை இவர் இந்தியாவில் நடத்தி வந்தார்.
    • நமது நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து சுமார் ரூ, 9,000 கோடி கடன் பெற்றிருந்தார்.

    நமது நாட்டின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்தவர் விஜய் மல்லையா. மதுபானம், விமான நிருவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை இவர் இந்தியாவில் நடத்தி வந்தார். இவர் நமது நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து சுமார் ரூ 9,000 கோடி கடன் பெற்றிருந்தார். இருப்பினும், அந்த கடனை திரும்ப அடைக்க முடியாமல் விஜய் மல்லையா நாட்டை விட்டே 2016ஆம் ஆண்டு வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிப் போய்விட்டார் விஜய் மல்லையா.

    நாட்டை விட்டுத் தப்பியோடிய விஜய் மல்லையா நிதி மோசடியாளர் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் பிறகு அவர் அப்படியே பிரிட்டன் நாட்டில் பதுங்கினார். அவரை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இப்போது வரை அவரை இந்தியாவுக்கு அழைத்து வர முடியவில்லை. இதில் சட்டச் சிக்கல்கள் தொடர்ந்து நிலவி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த வழக்கும் பிரிட்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இவ்வாறு பெரிய பின்புலம் கொண்ட விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவிற்கு சில நாட்களுக்கு முன் லண்டனின் கோலாகலமாக திருமணம் நடைப்பெற்றது. 37 வயதான சித்தார்த் மல்லையா அவரது நீண்ட நாள் காதலியான ஜாஸ்மினை திருமணம் செய்துக் கொண்டார். இத்திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    அவர்கள் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். அதில் இருவரும் கை கோர்த்தபடி மிகவும் சந்தோஷமாக இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இத்திருமண விழாவில் பரிமாறப்பட்ட உணவுகளில் விஜய் மல்லையாவிற்கு சொந்தமான கிங் ஃபிஷர் பீர் பரிமாறப்பட்டத்து குறிப்பிடத்தக்கது. ஒரு தரப்பு மக்கள் சித்தார்த்தா மல்லையாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர் கடன் வாங்கிவிட்டு தப்பியோடிய நபருக்கு இவ்வளவு ஆடம்பரமாக திருமணம் நடப்பதாக சாடினர்.

    • சில நாட்களுக்கு முன்பு அரளி பூக்களை சாப்பிட்ட கால்நடைகள் இறந்தன.
    • அரளிப்பூவின் இதழ்களை சாப்பிட்ட சூர்யா சுரேந்திரன் என்பவர் இறப்பு.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் சபரிமலை அய்யப்பன் கோவில், குருவாயூர் கிருஷ்ணன் கோவில், பத்ம நாபபுரம் பத்மநாத சுவாமி கோவில் உள்ளிட்ட ஏராள மான பிரசித்தி பெற்ற கோவில்கள் இருக்கின்றன. இந்த கோவில்களுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஆண்டு தோறும் வருகின்றனர்.

    கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளிட்ட 1,200-க்கும் மேற்பட்ட கோவில்களை திருவிதாங்கூர் தேவ சம்போர்டு நிர்வகித்து வரு கிறது. அவற்றின் வழி காட்டுதலின் படியே அந்த கோவில்கள் அனைத்தும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் மல்லி, செம்பருத்தி, துளசி உள்ளிட்ட 5 மலர்களை மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    கேரள மாநிலத்தில கடந்த சில நாட்களுக்கு முன்பு அரளி பூக்களை சாப்பிட்ட கால்நடைகள் இறந்தன. மேலும் அரளிப்பூவின் இதழ்களை சாப்பிட்ட சூர்யா சுரேந்திரன் என்பவர் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகின. இந்த சம்பவங்கள் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்தே திரு விதாங்கூர் தேவசம்போர்டு தனது கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 5 வித மலர்களை மட்டும் பயன்படுத்த அறிவுரை வழங்கி ஆணை பிறப்பித்திருக்கிறது. இறந்த நபரின் உடல் பரிசோதனையில் அவரது மரணத்துக்கு அரளியின் நச்சுத்தன்மை தான் காரணம் என்பது உறுதி செய்யப்ட்டால் இந்த பூக்களின் பயன்பாடு முற்றிலுமாக நீக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் தெரவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், கோவில்களில் பயன்படுத்தப்படும் 5 வகை மலர் செடிகளை நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது தவிர தென்னை, பாக்கு மரங்களும் நடவு செய்யப்பட உள்ளது என்றார்.

    • புறநகர் பகுதிகளான பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
    • பரவலாக பெய்த மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து காணப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் ஒருங்கிணைந்த பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் புறநகர் பகுதிகளான பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    பின்னர் இங்கிருந்து வியாபாரிகள் அதனை வாங்கிச்சென்று விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதம் மார்கழி என்பதால் எந்தவித திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. மேலும் பரவலாக பெய்த மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து காணப்பட்டது.

    இந்நிலையில் ஒரு மாதத்திற்கு பின்பு நாளை தை மாதத்தின் முதல் வளர்பிறை முகூர்த்த நாள் வருகிறது. நாளை திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷேச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளநிலையில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

    திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இன்று 30 கிலோ மல்லிகை மட்டுமே விற்பனைக்கு வந்தது. இதனால் ஒரு கிலோ மல்லிகை ரூ.4000-க்கு விற்பனையானது. இதேபோல் முல்லைப்பூ ரூ.1800, ஜாதிப்பூ ரூ.1300, காக்கரட்டான் ரூ.1300, சம்பங்கி ரூ.300, அரளி ரூ.150, செவ்வந்தி ரூ.200, செண்டுமல்லி ரூ.70, கோழிக்கொண்டை ரூ.130, பட்டன்ரோஸ் ரூ.200, பன்னீர்ரோஸ் ரூ.150 என விற்பனையானது.

    வழக்கமாக மார்க்கெட்டுக்கு வரும் பூக்களில் பாதிஅளவு கூட இன்று விற்பனைக்கு வராததால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வர உள்ள நிலையில் பூக்களின் விலையேற்றம் சாமானிய மக்களை அதிர்ச்சி அடைய வைத்தள்ளது.

    • பருவநிலை மாறுபாடு காரணமாக திடீரென பனிப்பொழிவு காணப்படுகிறது.
    • சில நேரங்களில் பூவை பறிக்காமலேயே விட்டு விடுகிறோம்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், மருதூர், நெய்விளக்கு, பஞ்சநதிக்குளம் உள்ளிட்ட 20 கிராமங்களில் 4 ஆயிரம் ஏக்கரில் முல்லைப்பூ சாகுபடி நடைபெற்று வருகிறது.

    இந்த பகுதியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை முல்லைப்பூ சீசன் காலமாகும்.

    இந்த சீசன் காலத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 டன் முல்லைப்பூக்கள் விளையும்.

    இங்கிருந்து பட்டுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு முல்லைப்பூ விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    தற்போது வேதாரண்யம் பகுதியில் பருவநிலை மாறுபாடு காரணமாக திடீரென பனிப்பொழிவு காணப்படுகிறது.

    இதனால் முல்லைப்பூ செடிகளின் இலைகள் உதிர்ந்து பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

    நாள் ஒன்றுக்கு 1 டன் முதல் 2 டன் வரை மட்டுமே வெளியூர்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    சீசன் காலத்தில் முல்லைப்பூ கிலோ ரூ.50-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. சீசன் இல்லாத நவம்பர் முதல் பிப்ரவரி வரை கிலோ ரூ.1000 வரை விற்பனை ஆகிறது.

    தற்போது கிலோ ரூ.500 முதல் ரூ.700 வரை விற்பனையாகிறது. பனிப்பொழிவால் முல்லைப்பூ அதிகம் விளையாததால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது.

    விளைச்சல் அதிகமான காலங்களில் பூ பறிப்பதற்கான கூலிக்கு கூட கட்டுப்படியாகாத விலை கிடைக்கிறது.

    இதனால் சில நேரங்களில் பூவை பறிக்காமலேயே விட்டு விடுகிறோம்.

    இந்த நிலையில் தற்போது எதிர்பாராத வேளையில் பனிப்பொழிவு ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது.

    இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை விலை திடீர் உயர்ந்துள்ளது.
    • கிலோ ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை விலை திடீரென அதிகரித்துள்ளது. கிலோ 1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் பொது மக்கள் மத்தியில் தயக்கம் ஏற்பட்டுள்ளது.

    பண்டிகை காலங்களில் அனைவராலும் மிகவும் விரும்பி வாங்கப்படும் பூக்களில் மல்லிகை முதலிடம் பெற்றுள்ளது. அந்த வகையில் அவ்வப் போது மல்லிகையின் விலை வீழ்ச்சி அடைந்தாலும் பண்டிகை காலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மல்லிகை பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கமாகி விட்டது.

    தற்போது சீசன் மந்தமாக இருப்பதாலும் மல்லிகை பூக்கள் வரத்து மதுரை மார்க்கெட்டில் கணிசமாக குறைந்துள்ளதாலும் விலை திடீரென அதிகரித்துள்ளது. வருகிற 18-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா என்பதாலும் பூக்களின் தேவை அதிகமாக இருப்ப தாலும் அதன் விலை உயர்வு இருமடங்காக அதிகரித்து உள்ளது.

    இன்று காலை மல்லிகை பூ கிலோவுக்கு 1200 முதல் 1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது அதுபோல முல்லை பிச்சி ஆகிய பூக்களின் விலை 700 ரூபாயாக விற்கப்பட்டது.

    சம்மங்கி, அரளி 200 ரூபாய்க்கும், செவ்வந்தி 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதுபோல மற்ற பூக்களும் சற்று விலை அதிகரித்து உள்ளது.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு 250 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ ஒரு கிலோ நேற்று ரூ. 360-க்கு விற்கப்பட்டது.
    • இன்று விலை மேலும் உயர்ந்து ஒரு கிலோ மல்லிகை பூ 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முகூர்த்த நாளைெயாட்டி அதிக அளவில் மல்லிகை பூக் களை வாங்கி செல்கின்றனர்.

    சேலம்:

    சேலம் பூ மார்க்கெட்டுக்கு சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூர், நாமக்கல் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. இந்த பூக்களை சேலம் மற்றும் பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள். இந்த நிலையில் பூக்களின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 250 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ ஒரு கிலோ நேற்று ரூ. 360-க்கு விற்கப்பட்டது. இன்று விலை மேலும் உயர்ந்து ஒரு கிலோ மல்லிகை பூ 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முகூர்த்த நாளைெயாட்டி அதிக அளவில் மல்லிகை பூக் களை வாங்கி செல்கின்றனர். மற்ற பூக்களின் விலை விவரம் ஒரு கிலோவுக்கு வருமாறு:- முல்லை ரூ.360 ஜாதிமல்லிகை ரூ. 260, காக்கட்டான் ரூ.320, கலர் காக்கட்டான் ரூ.280 ,மலைக்காக்கட்டான் ரூ.320, அரளி ரூ.160, வெள்ளைஅரளி ரூ.260, மஞ்சள் அரளி ரூ.260, செவ்வரளி ரூ.260, ஐ.செவ்வரளி ரூ.180, நந்தியாவட்டம் ரூ.140, சி.நந்திவட்டம் ரூ.200, சம்பங்கி ரூ.200, சாதா சம்பங்கி ரூ.200.

    • மல்லிகை சாகுபடி பயிற்சி நடந்தது.
    • உதவி தோட்டக்கலை அலுவலர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    அருப்புக்கோட்டை

    தமிழக அரசு 23-24-ம் ஆண்டு வேளாண் பட்ஜெட்டில் விருதுநகர் மதுரை திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளடக்கி மல்லிகை மண்டலமாக தரம் உயர்த்தப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டது.

    அதற்காக தோட்டக்கலைத் துறை மூலம் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மல்லிகை சாகுபடி விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டாரம் தொட்டியாங்குளம் கிராமத்தில் நடைபெற்றது.

    இதில் மல்லிகை சாகுபடி செய்யும் விவசாயிகள் பங்கேற்றனர் அவர்களுக்கு வேளாண் அறிவியல் நிலையம் (கே.வி.கே) இணை பேராசிரியர்கள் அருள், அரசு (தோட்டக்கலை) மற்றும் பரமசிவன் ஆகியோர் பயிற்சி வழங்கினர்.

    இப்பயிற்சியில் மல்லிகை சாகுபடி தொழில், கவாத்து முறைகள், பேரூட்டம் மற்றும் நுண்ணூட்டம் மேலாண்மை, பருவமில்லா காலங்களில் மல்லிகைப்பூ உற்பத்தி பெருக்குதல், பூச்சி, இயற்கை முறையில் மல்லிகை வளர்ப்பு பற்றியும் எடுத்துரைத்து விவசாயிகளுக்கு மல்லிகை சாகுபடியில் உள்ள சந்தேகங்களை வயல்வெளி சென்று விளக்கம் அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாரீஸ்வரி, தோட்டக்கலைஉதவி இயக்குனர் கண்ணன், தோட்டக்கலை அலுவலர் பூ கலைவாணி, உதவி தோட்டக்கலை அலுவலர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • மதுரையில் மல்லிகை பூக்கள் ரூ.700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • பிச்சி-முல்லை மலர்களும் விலை உயர்ந்துள்ளது.

    மதுரை

    ஆடி 18-ஐ யொட்டி மதுரையில் மல்லிகை பூக்கள் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன பிச்சி, முல்லை மலர்களும் விலை அதிகரித்துள்ளது.

    ஆடி மாதத்தின் முக்கிய தினமாக ஆடி 18-ஐ யொட்டி மதுரையில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் பூக்க ளின் விலை மேலும் அதிகரித்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் வணிக வளாகத்தில் மல்லிகை, பிச்சி, முல்லை உள்ளிட்ட அனைத்து மலர்க ளும் விற்பனை செய்யப் பட்டு வருகின்றன. இன்று பூக்களை வாங்க பொது மக்கள் அதிகளவில் திரண்டனர்.

    மல்லிகை பூக்கள் நேற்றை விட ரூ.200 விலை உயர்ந்து இன்று கிலோ 700 ரூபாய்க்கு கொடுக்கப்பட்டது. நேற்று 400 ரூபாய் வரை விற்கப்பட்ட பிச்சி, முல்லை மலர்களும் இன்று 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன. இது தவிர சம்மங்கி 300 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ், செவ்வந்தி 250 ரூபாய்க்கும், செண்டு மல்லி 120 ரூபாய்க்கும், அரளி 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.

    தற்போது ஆடி மாதம் என்பதால் ஓரளவுக்கு விலை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் வருகிற ஆவணி மாதத்தில் விசேஷ நாட்கள் அதிகமாக இருக்கும் என்பதால் பூக்களின் தேவை யும் அதிகமாக இருக்கும். அப்போது பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கர்நாடகத்திலும், ஓசூர் பகுதியிலும் போதுமான அளவுக்கு மழை பெய்யாததால் பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது.
    • பெண்களின் பூ மீதான ஆசையை நிறைவேற்ற பிளாஸ்டிக்கில் ஒரிஜினல் பூ போலவே தயாார் செய்து விற்பனைக்கு வந்துள்ளது.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வேலூர், திருவள்ளூர், பெரிய பாளையம், காஞ்சிபுரம், ஓசூர் மற்றும் கர்நாடக பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது.

    கர்நாடகத்திலும், ஓசூர் பகுதியிலும் போதுமான அளவுக்கு மழை பெய்யாததால் பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் வரத்தும் பெருமளவு குறைந்துவிட்டது.

    வரத்து குறைவால் கடந்த ஒரு மாதமாகவே பூக்கள் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் ஆடி மாதம் பிறந்துள்ளதால் ஆடி வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெறும். இதனால் கோவில் வழிபாட்டுக்கும் பெண்கள் தலையில் சூடவும் பூக்கள் வாங்குவார்கள்.

    ஆனால் தேவையான அளவுக்கு பூக்கள் வராததால் விலை கடுமையாக உயர்ந் துள்ளது. சாமந்தி பூ கிலோ ரூ.220, ரோஜா ரூ.100 முதல் ரூ.120, மல்லிகை கிலோ ரூ.800, சேர் ரூ.250 வரை அதிகரித்துள்ளது.

    பெண்கள் தலையில் சூட விரும்பும் மல்லி விலை உயர்வால் ஒரு முழம் ரூ. 50-க்கு விற்கப்பட்டது.

    சாதாரணமாக இருபது, முப்பது ரூபாய்க்கு மல்லிகை பூ வாங்கி தலையில் வைக்கும் பெண்கள் விலை உயர்வை பார்த்து பூ வாங்க முடியாமல் தவித்தனர்.

    இதற்கிடையில் பெண்களின் பூ மீதான ஆசையை நிறைவேற்ற பிளாஸ்டிக்கில் ஒரிஜினல் பூ போலவே தயாார் செய்து விற்பனைக்கு வந்துள்ளது. அந்த பூக்களையும் வாங்கி சூடுகிறார்கள்.

    மல்லிகை பூக்களை தலை நிறைய சூடி மகிழ்ந்தும், அதன் வாசனையை ரசித்தும் மகிழ்ந்த பெண்கள் பிளாஸ்டிக் பூக்களை சூடி பூ வைக்கும் ஆசையை நிறைவேற்றி கொள்வது பரிதாபமானது.

    சாமந்தி பூக்கள் ஐதராபாத்தில் கிலோ ரூ.350-க்கு மேல் விற்பனையாவதால் விவசாயிகள் பெருமளவு பூக்களை அங்கு அனுப்புகிறார்கள். மேலும் எல்லா பூக்களின் வரத்தும் குறைவாக இருப்பதால் இன்னும் பூக்கள் விலை அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாக கோயம்பேடு மொத்த வியாபாரி எஸ்.பி.எல்.பாண்டியன் கூறினார்.

    • நெல்லை பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
    • மல்லிகைப்பூ கிலோ ரூ. 700-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    நெல்லை:

    மழைப்பொழிவு, பூக்களின் வரத்து குறைவு உள்ளிட்டவைகளின் காரணமாகவும், தொடர் முகூர்த்த தினங்கள் காரணமாகவும் நெல்லை பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. பிச்சிப்பூ சீசன் இல்லாத காரணத்தினாலும், மழை பொழிவு அதிகரிப்பதன் காரணமாகவும் இன்று ஒரு கிலோ ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்பனையானது.

    அதேபோல் மல்லிகைப்பூ கிலோ ரூ. 700-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரோஜா பூக்கள் கட்டு ரூ.100-க்கும், கேந்தி கிலோ ரூ.50-க்கும், வாடாமல்லி கிலோ ரூ.40-க்கும், சம்பங்கி கிலோ 80-க்கும் விற்பனை ஆகிறது. வில்வ இலை கட்டு ரூ. 150-க்கும், துளசி கட்டு ரூ. 5-க்கும், பச்சை கட்டு ரூ.5 என்ற விலையில் விற்பனையானது.

    • மல்லிகை பூவும் தங்கம் போல் தினமும் ஒரு விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபரிகளும், பொது மக்களும் கூறுகின்றனர்.
    • மதுரை பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

    மதுரை:

    மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது மல்லிகை பூக்கள் அதிகளவில் கிடைப்பதால் மதுரை உள்ளிட்ட பல்வேறு மார்க்கெட்டுகளுக்கு மல்லிகை பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது.

    தினமும் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு 20 முதல் 25 டன் வரை மல்லிகை பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும். தற்போது மல்லிகை பூக்கள் விலை பெருமளவு சரிந்துள்ளது.

    பண்டிகை, திருவிழா மற்றும் முகூர்த்த நேரங்களில் மல்லிகை பூக்கள் விலை உச்சத்தில் இருக்கும். சில நேரம் கிலோ ரூ. 1000 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனையாகும். இதனால் மல்லிகை பூவும் தங்கம் போல் தினமும் ஒரு விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபரிகளும், பொது மக்களும் கூறுகின்றனர்.

    இந்த நிலையில் இன்று மல்லிகைப்பூ விலை மிகவும் வீழ்ச்சியடைந்து மதுரை மார்க்கெட்டில் கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் பிச்சி, முல்லை பூக்கள் விலையும் குறைந்துள்ளது. முல்லை பூ கிலோ ரூ.300-க்கும், பட்டர் ரோஸ் கிலோ ரூ. 80-க்கும், சம்பங்கி பூக்கள் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

    வழக்கமாக கிலோ ரூ. 1000-க்கு மேல் விற்பனை செய்யப்படும் கனகாம்பரம் மலர்களும் இன்று கிலோ ரூ.400-க்கு விற்பனையானது. பூக்களின் வரத்து அதிகரித்ததன் காரணமாக விலை சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த திடீர் விலை சரிவு காரணமாக மலர் சாகுபடி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    ஆனால் விலை குறைந்துள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் மல்லிகை பூக்கள் உள்பட பல்வேறு பூக்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதனால் மதுரை பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

    • பூ மார்க்கெட்டில் சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் தினமும் பூக்கள் வாங்கி செல்கின்றனர்.
    • சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருமணங்கள் நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை முதல் பூக்கள் வாங்க பொதுமக்கள் வழக்கத்தை விட அதிகளவில் திரண்டனர்.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே வ.உ.சி. பூ மார்க்கெட் உள்ளது.

    பூ மார்க்கெட்

    இதைத்தவிர பழைய பஸ் நிலையத்தை யொட்டி விசாலமாக மேலும் ஒரு பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுகளுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இந்த பூ மார்க்கெட்டில் சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் தினமும் பூக்கள் வாங்கி செல்கின்றனர்.

    மல்லிகை பூ கிலோவுக்கு ரூ.1400

    இன்று சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருமணங்கள் நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை முதல் பூக்கள் வாங்க பொதுமக்கள் வழக்கத்தை விட அதிகளவில் திரண்டனர்.

    இதனால் பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. குறிப்பாக இன்று ஒரு கிலோ மல்லிகை பூ கிலோ ரூ.1400-க்கு விற்கப்பட்டது.

    இதுபோல் ஜாதி மல்லிகை ரூ.1000-க்கும், காக்கட்டான் ரூ.400-க்கும், கலர் காக்காட்டான் ரூ.400, மலை காக்கட்டான் - ரூ.320, அரளி -ரூ.140, வெள்ளை அரளி ரூ.140, மஞ்சள் அரளி- ரூ140, செவ்வரளி ரூ.180, நந்தியாவட்டம் ரூ.120, சி.நந்தியாவட்டம் ரூ.400, சம்பங்கி ரூ.30, சாதா சம்மங்கி ரூ.50 என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    ×