search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோட்டில்"

    • தீபாவளி நெருங்கி உள்ளதையொட்டி ஜவுளி விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
    • சில்லரை வியாபாரம் 60 சதவீதம் நடைபெற்றது.

    ஈரோடு:

    தென்னிந்திய அளவில் ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு புகழ் பெற்ற ஈரோட்டில் திங்கள் மாலை முதல் செவ்வாய் கிழமை மாலை வரை நடைபெறும் ஜவுளி வாரச்சந்தை பிரபலமானது.

    தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட வியாபாரிகளும், ஆந்திரா, கர்நாடகா, கேரள, தெலு ங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநில வியாபாரிகளும் அதிகளவு இங்கு மொத்தமாக ஜவுளி கொள்முதல் செய்வது வழக்கம்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஜவுளி சந்தை மந்தமாக நடந்து வந்த நிலையில் கடந்த வாரம் முதல் தீபாவளி விற்பனை சுறுசுறுப்பாக நடைபெற தொடங்கியுள்ளது.

    தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை சூடுபிடி த்துள்ளது. மொத்தமாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் மட்டுமன்றி, பொதுமக்களும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குழுவாக வந்திருந்தனர்.நேற்று இரவு முழுவதும் விடிய விடிய ஜவுளி சந்தை வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

    மழை பெய்தாலும் மழையை பொறுப்படுத்தாமல் வெளிமாநில வியாபாரிகள் குவிந்தனர். குறிப்பாக கேரளா, கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த நூற்றுக்கணக்கான வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்து துணிகளை மொத்தம் கொள்முதல் விலைக்கு வாங்கிச் சென்றனர். இதனால் வியாபாரம் விறு விறுப்பாக நடைபெற்றது.

    குழந்தைகளுக்கான ஜவுளி துணி விற்பனைகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதைபோல் பெண்களுக்கான காட்டன் சுடிதார் வியாபாரம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. ஆண்களுக்கான பேண்ட், சட்டை, வேஷ்டி விற்பனையும் விறு விறுப்பாக நடந்தது.

    இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறும் போது,

    கடந்த சில நாட்களாக பல்வேறு பிரச்சினை காரணமாக ஜவுளி வியாபாரம் மந்தமாக நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது தீபாவளி நெருங்கி உள்ளதையொட்டி கடந்த வாரம் முதல் ஜவுளி விற்பனை ஓரளவு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    இந்த வாரம் ஜவுளி வார சந்தை நேற்று மாலை கூடியது. இரவில் விடிய விடிய வியாபாரம் விறு விறுப்பாக நடைபெற்றது.

    நூற்றுக்கணக்கான ஜவுளி வியாபாரிகள் வந்திருந்தனர். சில்லரை வியாபாரம் 60 சதவீதம் நடைபெற்றது. மொத்த வியாபாரம் 40 சதவீதம் வரை நடைபெற்றது. பெட் சீட்டுக்கு அதிக அளவில் ஆர்டர்கள் வருகின்றன.

    இந்த ஆண்டு தீபாவளியொட்டி புதிய டிசைன்களில் ஜவுளி ரகங்கள் அதிகம் வந்துள்ளது. இதனால் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் சாலையின் இருபுறம் சிறு சிறு ஜவுளி கடைகள் போடப் பட்டிருந்தன. அதிலும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதேப்போல் சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம், பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான ஜவுளிக்கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கும் வியாபாரம் விறு விறுப்பாக நடைபெற்றது.

    • யசோதா அறையின் கழிவறைக்கு சென்று தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    ஈரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் பாப்பம்பட்டி எஸ்.கே.சி.நகர், 5-வது சாலையை சேர்ந்தவர் காளியப்பன் (54). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார். இளைய மகள் யசோதா (19) மேற்கு குமரலிங்கத்தில் உள்ள கல்லூரியில் செவிலியர் பாடப்பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    தற்போது ஒரு வருட பயிற்சிக்காக யசோதா ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பயிற்சி எடுத்து வந்தார். இதற்காக மருத்துவமனை அருகே உள்ள அறையில் வாடகைக்கு தங்கி இருந்து பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

    இந்நிலையில் சம்ப வத்தன்று யசோதா தான் தங்கி இருந்த அறையின் கழிவறைக்கு சென்று திடீ ரென தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே யசோதா இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனை போலீசார் வழக்கு பதிவு செய்து யசோதா எந்த காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • இருசக்கர ஷோரூம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், அற ச்சலூர் பகுதியை சேர்ந்தவர் கவுரி சங்கர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர், ஈரோடு சத்தி ரோட்டில் உள்ள ஒரு இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் மதி ப்பிலான மோட்டார் சைக்கி ளை கடந்த 4 நாட்களுக்கு முன்னர் வாங்கினார்.

    இதை தொடர்ந்து 4 நாள்களிலேயே அந்த மோட்டார் சைக்கிளின் என்ஜீனில் இருந்து ஆயில் கசிவு ஏற்பட்டுள்ளது. அதை கண்டு அதிர்ச்சியடைந்த கவுரி சங்கர் இருசக்கர வாகன விற்பனை நிலையத்துக்கு சென்றார்.

    தொடர்ந்து அவர் அந்த விற்பனை நிலையத்தில் அந்த மோட்டார் சைக்கிளுக்கு பதிலாக வேறு மோட்டார் சைக்கிளை மாற்றி தருமாறு நேற்று இரவு கேட்டதாக தெரிகிறது.

    ஆனால் ஷோரூம் ஊழியர்களோ மோட்டார் சைக்கி ளில் ஏற்பட்டபழுதை சரிசெய்து தருவதாக மட்டும் கூறி உள்ளனர். இதனால் கவுரி சங்கர் மற்றும் அவருடன் வந்தவர்கள் இருசக்கர ஷோரூம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே ஊழியர்கள் ஷோரூமை பூட்டி விட்டு சென்று விட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    வாங்கிய 4 நாட்களிலேயே மோட்டார் சைக்கிளில் பழுது ஏற்பட்டதால் அதே மாதிரியான வாகனத்தை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களும், அப்பகுதியினரும் அதிர்ச்சிய டைந்துள்ளனர்.

    • இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
    • இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. அக்னி நட்சத்திரம் வெயில் போன்று வெயில் பதிவாகி வந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    இந்நிலையில் நேற்று 4-வது நாளாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாலை முதல் இரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    குறிப்பாக கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று 2-வது நாளாக இடியுடன் கூடிய கன மழை பெய்தது. நேற்று முன்தினம் 8 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

    அதைத்தொடர்ந்து நேற்று இரவும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக 69. 20 மில்லி மீட்டர் அதாவது 6 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது.

    இதேபோல் அம்மாபேட்டை, சென்னிமலை, பெருந்துறை, வரட்டுபள்ளம், கவுந்தப்பாடி பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் நள்ளிரவில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. 4 நாட்களாக மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    எனினும் காலை நேரம் வெயில் வழக்கும் போல் வாட்டி எடுத்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    கொடுமுடி-69.20, அம்மாபேட்டை-27.40, சென்னிமலை-27, பெருந்துறை-26, வரட்டுபள்ளம்-19.40, ஈரோடு-5, கவுந்தப்பாடி-4.80, பவானி-4, நம்பியூர் பவானிசாகர் கொடிவேரி பகுதியில் தலா ஒரு மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • வீடு மற்றும் பொது பயன்பாடு மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • 95 சதவீதம் பேர் வீட்டின் மின் இணைப்புகளுக்காக விண்ணப்பித்துள்ளனர்.

    ஈரோடு:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் ஈரோடு நகரியம் கோட்டம், தெற்கு கோட்டம், பெருந்துறை கோட்டங்களில் வீடு மற்றும் பொது பயன்பாடு மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    இந்த முகாம்கள் செயற்பொறியாளர்கள் நாச்சிமுத்து, சாந்தி, வாசுதேவன் ஆகியோர் அறிவுறுத்தலின்பேரில், அந்தந்த மின் பிரிவு அலுவலகங்களில் நடந்தது.

    இதில் பெயர் யமாற்றம் கோரி விண்ணப்பித்தவர்களில் ஈரோடு தெற்கு மின் கோட்டத்தில் 200 பேருக்கும், நகரியம் மின் கோட்டத்தில் 236 பேருக்கும், பெருந்துறை கோட்டத்தில் 150 பேர் என 586 பேருக்கு ஒரே நாளில் பெயர் மாற்றம் செய்து அதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,

    மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்காக விண்ணப்பித்தவர்களில் 95 சதவீதம் பேர் வீட்டின் மின் இணைப்புகளுக்காக விண்ணப்பித்துள்ளனர்.

    மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய இந்த மாதம் இறுதி வரை அந்தந்த பிரிவு அலுவலகங்களில் வீட்டு வரி ரசீது, கிரைய பத்திர நகல், பாக பிரிவினை பத்திர நகல், கணினி பட்டா,

    அரசால் வழங்கப்பட்ட உரிமை சான்று, வாரிசு சான்று, பிணையுறுதி பத்திரம், பெயர் மாற்ற கட்டணம் ரூ.726-உடன் விண்ணப்பிக்கலாம் என கூறினர்.

    • ஈரோட்டில் இன்று தமிழ் புலிகள் கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
    • இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    ஈரோடு:

    மணிப்பூரில் நடந்த கலவரத்தை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான நடந்த கொடுமையை கண்டித்தும் அதற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஈரோட்டில் இன்று தமிழ் புலிகள் கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

    ஆனால் ரெயில் மறியல் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. எனினும் போலீசாரின் தடையை மீறி மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ஈரோடு காளை மாடு சிலை பகுதியில் டவுன் டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில் போலீசார் தயார் நிலையில் நின்று கொண்டு இருந்தனர்.

    இந்நிலையில் காளைமாட்டு சிலை அருகே தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலா ளர் சிந்தனை ச்செல்வன் தலைமையில், மாநில இளை ஞரணி துணைச்செயலாளர் அறிவு தமிழன், மேற்கு மண்டல செயலாளர் சிவா ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் திரண்டனர்.

    பின்னர் நிர்வாகிகள் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு அங்கிருந்து ஊர்வலமாக ரெயில் மறியலுக்கு செல்ல தொடங்கினர்.

    அப்போது காளை மாட்டு சிலை பகுதியில் தயாராக இருந்த டவுன் டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையிலான போலீசார் நிர்வாகிகளை தடுத்து நிறுத்தினர்.

    அதை மீறி நிர்வாகிகள் செல்ல முயன்றதால் 5 பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட தமிழ் புலிகள் கட்சியி னர் கைது செய்யப்பட்டு தயார் நிலையில் வை க்கப்பட்டிருந்த வேனில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • காய்கறி விலைவாசி உயர்வை கண்டித்தும், ஊழலை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

    ஈரோடு:

    காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்பட அத்தி யாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், ஊழலை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசை கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

    அதன்படி ஈரோடு ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில் இன்று வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    ஆர்ப்பா ட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ். தென்னரசு, சிவசுப்பிரமணி, ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் எம்.எல்.ஏ., கருப்பணன் எம்..எல்.ஏ. ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காய்கறி விலைவாசி உயர்வை கண்டித்தும், ஊழலை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

    இதில் முன்னாள் எம்.பி. செல்வகுமார சின்னையன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி. பழனிச்சாமி, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ், கோவிந்தராஜன், மாநகராட்சி எதிர்க்கட்சித்தலைவர் தங்கமுத்து, மாணவர் அணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்வி, மாணவர் அணி தலைவர் சிவக்குமார்,

    தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோபால் கிருஷ்ணன், பெரியார் நகர் பகுதி அவை தலைவர் மீன்ராஜா, மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் துரை சக்திவேல், சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் பொன் சேர்மன், பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி கே.செல்வராஜ், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், முருகானந்தம், மாதையன், பிரதிநிதி கஸ்தூரி, சூரிய சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு வீட்டுக்கும் விண்ணப்பம், டோக்கன் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது.
    • 3,777 அலுவலர்கள் ஈரோடு மாவட்டம் முழுவதும் விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.

    ஈரோடு:

    குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    இந்த திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் பல்வேறு துறைகளில் அதிகாரிகள் ஒருங்கிணைந்து இந்த திட்டத்தை செயல்ப டுத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் விண்ணப்பம், டோக்கன் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் காலை 8 மணி அளவில் இந்த பணியை தொடங்கினர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் வீடு, வீடாக சென்று டோக்கன் மற்றும் விண்ணப்பம் வழங்கினர்.

    அப்போது சம்பந்தப்பட்ட வீட்டின் பெண்ணிடம் ரேஷன் கார்டை வாங்கி சோதனை செய்து அவரிடம் கையொப்பம் வாங்கி கொள்கின்றனர். பின்னர் அவரிடம் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. அதில் முகாம்களின் நேரம், நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு வழங்குகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் 1,207 ரேஷன் கடைகளில் உள்ள 7 லட்சத்து 63 ஆயிரத்து 316 குடும்ப அட்டை தாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்வது தொடர்பாக முகாம் 2 கட்டமாக நடைபெற உள்ளது.

    முதல் கட்டமாக 639 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு 586 இடங்களில் வருகிற 24-ந் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 4-ந் தேதி வரை விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது.

    2-வது கட்டமாக 568 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு 544 இடங்களில் வருகிற ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை விண்ணப்பித்தினை பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் 2 கட்டங்களும் சேர்த்து 1207 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு 1130 இடங்களில் விண்ணப்பித்தினை பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது. 3,777 அலுவலர்கள் ஈரோடு மாவட்டம் முழுவதும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் சென்று விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.

    • இன்று 3-வது நாளாக தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
    • குடோன்களில் ரூ.300 கோடி மதிப்பிலான சரக்குகள் தேங்கி கிடக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு பார்க் ரோடு, மூலப்பட்டறை குப்பை காடு போன்ற பகுதிகளில் சரக்கு லாரி புக்கிங் மற்றும் டெலிவரி குடோன், ரெகுலர் லாரி சர்வீஸ் போன்ற 450-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.

    இந்த நிறுவனங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பொருட்களை ஏற்றி, இறக்கும் வேலை செய்து வருகிறார்கள்.

    புக்கிங் அலுவலக மூலம் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் ஜவுளி, மஞ்சள், விளை பொருட்கள், மாட்டுத்தீவனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசி யேசனுடன் இணைந்து அனைத்து தொழிற்சங்கங்களும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு, பிற சலுகைகள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப் படவில்லை. தற்போது ஒரு டன் லோடு ஏற்ற ரூ.120 தருகின்றனர்.

    இத்துடன் சேர்த்து 41 சதவீத கூலி உயர்வு கேட்டு தொழிற்சங்கத்தினர் போராடி வருகின்றனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் சுமுகமான முடிவு ஏற்படவில்லை.

    இதனைத்தொடர்ந்து கடந்த 13-ந் தேதி முதல் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆயிரம் பேர் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று 3-வது நாளாக தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் அனைத்து தொழில் சங்கத்தினர் ஈரோடு ஸ்டார் தியேட்டர் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சி.ஐ.டி.யு. சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தங்கவேல் தர்ணா போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

    மத்திய சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.எஸ்.தென்னரசு, டி.பி.டி.எஸ். தலைவர் பெரியார் நகர் மனோகரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினர்.

    ஈரோடு மாவட்ட சுமைதூக்குவோர் மத்திய சங்க தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் மாதையன், பாட்டாளி தொழிற்சங்கம் எஸ்.ஆர்.ராஜு, பொதுத்தொழிலாளர் மத்திய சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுகம், கவுன்சில் செயலாளர் கோபால் உள்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சுமை தூக்கும் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் 3-வது நாளாக நீடித்து வருவதால் ஈரோடு மாநகரில் உள்ள குடோன்களில் ரூ.300 கோடி மதிப்பிலான சரக்குகள் தேங்கி கிடக்கிறது. 

    • 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
    • புதிதாக வந்த மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை விட ப்பட்டது. இதனை யடுத்து மாணவர்கள் கோடை விடுமு றையை கொண்டாடு வதற்காக தங்களது சொந்த ஊர்க ளுக்கும், உறவினர்கள் வீடு களுக்கும் சென்றனர்.

    கோடை விடுமுறை முடிந்த பின் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ந் தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாண வர்களுக்கு ஜூன் 5-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

    இந்நிலையில் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் முடிந்த பின்னும் தமிழகம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்த தால் பள்ளிகள் திறக்கும் தேதியை ஒத்திவைக்க வேண்டும் என பெற்றோ ர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதன்படி பள்ளிகள் திறக்கும் நாள் ஜூன் 7-ந் தேதிக்கு தள்ளி வைக்க ப்பட்டது. இருப்பினும் வெயிலின் தாக்கம் குறையாமல் வறுத்தெடுத்து வந்ததால் பள்ளி திறப்பை மீண்டும் தள்ளி போட வேண்டும் என பெற்றோர்கள், கல்வியா ளர்கள் கோரிக்கை விடுத்த னர். இதையடுத்து பள்ளிகள் திறக்கும் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.

    இதன்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12-ந் தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 14-ந் தேதி இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவ-மாணவி களுக்கு பள்ளிகள் திறக்க ப்பட்டது. பள்ளி திறப்பை யொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கடைவீதிகளில் பெற்றோ ர்கள் கூட்டம் கடந்த 2 நாட்களாக அதிகமாக இருந்தது.

    நோட்டு புத்தகம், ஷூ, சாக்ஸ் போன்ற கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதே நேரம் பள்ளி திறப்பை யொட்டி பள்ளிக்கல்வி த்துறை சார்பில் அந்தந்த பள்ளிகளில் தூய்மை பணிகள் நடந்து வந்தன.

    பள்ளி வளாகம், வகுப்ப றைகள் தூய்மைப்படு த்தப்பட்டன. பள்ளி திறப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டன.

    இந்நிலையில் இன்று காலை 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதற்காக காலையிலேயே மாணவ ர்கள் குளித்து, பள்ளி சீருடை அணிந்து பெற்றோ ர்களுடன் பள்ளிக்கு கிளம்பி னர்.

    மாணவர்களை வரவேற்கும் விதமாக ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநக ராட்சி நடுநிலைப்பள்ளி யில் இன்று காலை புதிதாக பள்ளிக்கு வந்த மாணவ, மாண விகளுக்கு ஆசிரி யர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    புதிய மாணவர்களுக்கு பேன்டு வாத்தியம் முழங்க ஆசிரியர்கள் பூ கொத்து கொடுத்து அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்று அவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    இதேபோல் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நுழைவாயிலில் அலங்கார வளைவு அமைத்து சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க ப்பட்டது.

    பள்ளிக்கு புதிதாக வந்த மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர். இன்னும் சில பள்ளிகளில் வாழ தோரணங்கள் கட்டப்ப ட்டு பள்ளிகளுக்கு புதிதாக வந்த மாணவர்க ளுக்கு ரோஜா பூ மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

    மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் இன்று பள்ளிகளுக்கு வந்தனர். புதிய நண்பர்கள், புதிய சூழல் என மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக ளுக்கு வந்தனர்.

    இதேபோல் யு.கே.ஜி. மாணவர்களுக்கும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கிட்டத்தட்ட ஒன்றரை மாத விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் சில மாணவ-மாணவிகள் அழுது கொண்டே பள்ளிக்கு வந்தனர்.

    பள்ளிக்குள் நுழைந்த தும் தாய், தந்தை யை கட்டி அரவணைத்து பள்ளிக்கு செல்ல மா ட்டோம் என்று அழுது அடம் பிடித்தனர். அவர்க ளை ஆசிரியர்கள் சமாதா னப்படுத்தி வகுப்பறைக்குள் அழைத்து சென்றனர்.

    ஈரோடு மாவட்ட அரசு பள்ளிகளில் 8,093 மாணவ-மாணவிகளுக்கு இன்று முதல் காலை உணவு வழங்கும் திட்டத்தில் உணவு வழங்கப்பட்டது.

    அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் காலை உணவு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டம் ஈரோடு மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் செயலில் இருந்து வருகிறது.

    இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்த பிறகு இன்று முதல் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

    முதல் நாளான இன்று பொங்கல் சாம்பார் வழங்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சியில் 59 பள்ளிகளில் 8,238 மாணவர்களும், தாளவாடி மலைப்பகுதியில் 38 பள்ளிகளில் 665 மாணவர்கள் என 97 பள்ளிகளை சேர்ந்த 8903 மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. 

    • ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ஆங்காங்கே மின் கம்பங்கள்-மரங்கள் முறிந்து விழுந்தன.
    • பஸ் நிலையம் எதிரில் உள்ள சத்தி சாலையில் மழை நீர் தேங்கி நின்றது. அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்று பாதாள சாக்கடை குழி இருப்பது தெரியாமல் சிக்கிக்கொண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கி நின்று குண்டும் குழியுமாக காட்சி அளித்தது.

    குறிப்பாக திண்டல், செங்கோடம்பாளையம், நசியனூர், முத்தம்பாளையம், ரங்கம்பாளையம், பெருந்துறை சாலை பகுதிகளில் காற்று, மின்னல் இடியுடன் மழை பெய்தது.

    பெருந்துறை சாலை செங்கோடம்பாளையம் அருகே சாலையோர மரம் விழுந்தது. நசியனூர் ராயபாளையம் உள்பட பல்வேறு இடங்களிலும் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையில் முறிந்து விழுந்த மரத்தை மின் வாரிய ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

    ஈரோடு முத்தம் பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதி 1-ல் மின்கம்பத்தின் மீது மின்னல் இடி தாக்கி மின்கம்பம் ஒடிந்தது. இதனால் மின் தடை ஏற்பட்டது. நசியனூர் ராயபாளையம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் சரிந்து விழுந்து முற்றிலும் மின்தடை ஏற்பட்டது.

    இதேப்போல் நசியனூர் சாலை திண்டல்-ஈரோடு உள்பட பல்வேறு இடங்களில் கம்பம் சாய்ந்தும் கம்பிகளாலும் பாதிப்பு ஏற்பட்டது.

    ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் உள்ளதால் ஆங்காங்கே வாகனங்கள் சிக்கி கொள்வது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக மழை பெய்யும் போது மழை நீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் பாதாள சாக்கடை குழிகள் இருப்பது தெரியாமல் சிக்கி கொள்கின்றனர்.

    இந்நிலையில் நேற்றிரவு ஈரோட்டில் பெய்த மழையின் காரணமாக பஸ் நிலையம் எதிரில் உள்ள சத்தி சாலையில் மழை நீர் தேங்கி நின்றது. அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்று பாதாள சாக்கடை குழி இருப்பது தெரியாமல் சிக்கிக்கொண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து இன்று காலை கிரேன் மூலம் சரக்கு வாகனம் மீட்கப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இதேபோல் ஈரோடு வ.உ .சி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் வழக்கம்போல் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளித்ததால் காய்கறிகளை வாங்க வந்த பொதுமக்கள், வியாபாரிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    • உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டியை போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தொடங்கி வைத்தார்.
    • பரிசு மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    ஈரோடு:

    உலக ரத்த நன்கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு நந்தா கல்லூரி ரத்ததான இயக்கம் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் என இருபிரிவுகளாக நடைபெற்ற இந்த மராத்தான் போட்டியில் ஆண்களுக்கு 21 கி.மீ எனவும், பெண்களுக்கு 10 கி.மீ வரை என போட்டி தூரம் நிர்ணியக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது.

    இந்த மராத்தான் போட்டிக்கு கல்லூரி செயலாளர் திருமூர்த்தி தலைமை தாங்கினார். இந்த மாரத்தானில் ஆண்களுக்கான போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனும், பெண்களுக்கான போட்டியை திருமகன் ஈ.வெ.ரா எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்திலிருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி ஆண்களுக்கு பெருந்துறையில் முடிவுற்றது. ஆண்கள் பிரிவின் சார்பில் முதல் பரிசாக 20 ஆயிரம் ரூபாயும் , இரண்டாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் முதல் 10 நபர்களுக்கு பரிசும் மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    இந்த மாரத்தான் போட்டியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மேலும் மாரத்தான் முடிவில் கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது .

    ×