search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in Erode"

    • காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று முதல் மீண்டும் பள்ளிகள் செயல்பட தொடங்கியுள்ளது.
    • இன்று காலை வழக்கு போல் மாணவ-மாணவிகள் தங்களது பள்ளிகளுக்கு உற்சாகத்துடன் கிளம்பி சென்றனர்.

    ஈரோடு:

    பள்ளி மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி காலாண்டு தேர்வு விடுமுறை விடப் பட்டது. விடுமுறையை கொண்டாடுவதற்காக ஈரோட்டில் இருந்து ஏராளமான மாணவர்கள் பெற்றோருடன் சொந்த ஊருக்கு சென்றனர்.

    இந்நிலையில் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று முதல் மீண்டும் பள்ளிகள் செயல்பட தொடங்கியுள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டு ள்ளது.

    அதே நேரம் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகளுக்கு வரும் 9-ந் தேதி முதல் பள்ளிகள் செயல்பட தொடங்கும் என அறிவிக்கப்பட்டு ள்ளது. தனியார் பள்ளிகள் இன்று முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து நேற்று மாலை முதல் ஈரோடு பஸ் மற்றும் ெரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் ஒரே நேரத்தில் குவிந்ததால் ஈரோடு ெரயில் நிலையம், பஸ் நிலையம் ஸ்தம்பித்தது.

    அனைத்து ெரயில்களிலும் முன்பதிவு பெட்டிகள் நிரம்பி விட்டதால் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவியது. இதேப்போல் பஸ்களிலும் இடம் பிடிக்க போட்டி நிலவியது. இதனால் ஈரோடு பஸ்- ரயில் நிலையம் பரபர ப்பாக காட்சியளித்தது.

    இன்று காலை வழக்கு போல் மாணவ-மாணவிகள் தங்களது பள்ளிகளுக்கு உற்சாகத்துடன் கிளம்பி சென்றனர்.

    அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 2-ம் பருவத்ததற்கான பாட புத்தகம் இன்று வழங்கப்பட்டது. இதனால் இன்று காலை ஈரோடு மாநகர பகுதியில் மீனாட்சி சுந்தர னார் சாலை மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.

    • இருசக்கர ஷோரூம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், அற ச்சலூர் பகுதியை சேர்ந்தவர் கவுரி சங்கர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர், ஈரோடு சத்தி ரோட்டில் உள்ள ஒரு இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் மதி ப்பிலான மோட்டார் சைக்கி ளை கடந்த 4 நாட்களுக்கு முன்னர் வாங்கினார்.

    இதை தொடர்ந்து 4 நாள்களிலேயே அந்த மோட்டார் சைக்கிளின் என்ஜீனில் இருந்து ஆயில் கசிவு ஏற்பட்டுள்ளது. அதை கண்டு அதிர்ச்சியடைந்த கவுரி சங்கர் இருசக்கர வாகன விற்பனை நிலையத்துக்கு சென்றார்.

    தொடர்ந்து அவர் அந்த விற்பனை நிலையத்தில் அந்த மோட்டார் சைக்கிளுக்கு பதிலாக வேறு மோட்டார் சைக்கிளை மாற்றி தருமாறு நேற்று இரவு கேட்டதாக தெரிகிறது.

    ஆனால் ஷோரூம் ஊழியர்களோ மோட்டார் சைக்கி ளில் ஏற்பட்டபழுதை சரிசெய்து தருவதாக மட்டும் கூறி உள்ளனர். இதனால் கவுரி சங்கர் மற்றும் அவருடன் வந்தவர்கள் இருசக்கர ஷோரூம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே ஊழியர்கள் ஷோரூமை பூட்டி விட்டு சென்று விட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    வாங்கிய 4 நாட்களிலேயே மோட்டார் சைக்கிளில் பழுது ஏற்பட்டதால் அதே மாதிரியான வாகனத்தை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களும், அப்பகுதியினரும் அதிர்ச்சிய டைந்துள்ளனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஓணம் திருவிழாவை கொண்டாடினர்.
    • ஆடல், பாடல் பாடி நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

    ஈரோடு:

    கேரளா மாநில மக்களால் ஓணம் திருவிழா உலகம் ழுழுவதும் இன்று மகாபலி மன்னரை வரவேற்று அத்த ப்பூ கோலமிட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரு கிறது. இதே போல் தமிழகம் முழுவதும் மலையாள மக்க ளால் ஓணம் விழா உற்சாக மாக கொண்டாடப் பட்டது.

    கேரள மாநிலத்தை மகாபலி என்ற மன்னர் சிறப்போடு ஆண்டு வந்தார். தானம், தருமங்கள் செய்வ தில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும்போது கிருஷ்ணர் வாமணனாக (குள்ள உருவில்) உருவெ டுத்து வந்து மூன்றடி மண் கேட்டார்.

    மகாபலியும் தந்தார். ஒரு அடியால் இந்தப் பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த கிருஷ்ணருக்கு மூ ன்றாவது அடிக்காகத் தனது தலையையே கொடு த்தார் மகாபலி மன்னர். அவருக்கு முக்தி அளிக்க வேண்டி அவர் தலையில் கால் வைத்து அவனைப் பாதாள உலகிற்கு தள்ளி னார் கிருஷ்ணர்.

    மகாபலி மன்னர் இன்னும் மூமிக்கு அடியில் இன்னும் வாழ்ந்து கொண்டு இருப்பதா கவும், அவர் ஆண்டுக்கு ஒரு முறை திருவேணம் அன்று பூமிக்கு வந்து மக்களை சந்தி ப்பதாக வும் கேரள மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதை யொட்டி அவரை வரவேற்கும் வகையில் திருவேணம் நாளன்று மலையாள மக்க ளால் ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டு வரு கிறது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதி களில் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் மகாபலி மன்னரை வரவேற்கு ம் வகையில் ஓணம் திருவிழா வை கடந்த 10 நாட்களாக வாசல்களில் கோலமிட்டு கொண்டாடி வருகிறார்கள்.

    முதல் நாள் ஒரே வகையான பூக்கள் 2-ம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்றெனத் தொடர்ந்து பத்தாம் நாள் 10 வகையான பூக்களால் அழகு செய்தனர். 10-ம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தந்து இன்று பெரிய அளவிலான அத்தப்பூ கோலமிட்டனர்.

    இதையொட்டி ஒணத்தின் 10-வது நாளான மலையாள மக்கள் இன்று அதிகாலை யிலேயே குளித்து புத்தம் புதிய துணிகள் அணந்து வீட்டு வாசல்களில் அத்தப்பூ கோலமிட்டு மகாபலி மன்ன ரை வரவேற்றனர். தொட ர்ந்து மகாபலி மன்னரின் உருவத்தை வீட்டில் வைத்து கோலமிட்டு வழிபட்டனர்.

    இதை தொடர்ந்து இன்று மதியம் தங்கள் உறனர்களை வீட்டுக்கு அழைத்து திரு வோண சக்தி விருந்து கொடு த்தனர். கேரள உணவுகள் என்றதுமே, புட்டு, கிழங்கு, பயறு என்பவை நினைவுக்கு வரும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவு கள் தயார் செய்யப்படும்.

    "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழி ஓண சாத்யா என்ற உணவின் சிறப்பைக் கூறுகிறது. 6 சுவை களில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் "ஓண சாத்யா" என்ற உணவு தயாரிக்கப்படு கிறது.

    புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சி ப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்ப ட்டு கடவுளுக்கு படைக்கப்பட்டன.

    பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெறுகிறது. 2 வகையான பாயசம், இனிப்பு வகைகள் பச்சடி, அப்பம், நேந்தி சிப்ஸ், பீட்ரூட் உறுகாய், சரக்கரை வரட்டி உள்பட 26 வகையாக உணவு வகைகளை சமைத்து கேரள பாரம்பரியம்படி விள க்கேற்றி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து தங்கள் உறவினர்க ளுக்கு விருந்து வழங்கினர்.

    இதை தொடர்ந்து ஒரு வருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்ட னர். மேலும் ஆடல், பாடல் பாடி நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

    • ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக பெண்கள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 200 ஐ தாண்டியது. தக்காளி விலை உயர்வால் பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் தக்காளி விலை கிலோ ரூ.160 வரை விற்பனை யானது. இதை எடுத்து தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேஷன் கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து தக்காளி விலை குறைய தொடங்கியது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்த நிலையில் கடந்த 4 நாட்களாக மீண்டும் தக்காளி விலை உயர்ந்தது. ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ. 150 வரை விற்பனையானது.

    இதனை அடுத்து அரசு மாற்று ஏற்பாடாக இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள 500 ரேஷன் கடைகளில் மலிவு விலை யில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவித்திருந்தது.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 10 ரேஷன் கடைகளில் மலிவு விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    ஈரோடு கொல்ல ம்பாளையம் கூட்டுறவு அங்காடியில் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளியை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    10 கடைகளிலும் தலா 100 கிலோ வீதம் மலிவு விலை தக்காளி விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு நபருக்கு ஒரு கிலோ என்ற அடிப்படையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த ஒரு மாத காலமாக விலை உயர்வால் தக்காளி வாங்கி சமையலுக்கு பயன்படுத்த முடியாத நிலையில் தற்போது நியாய விலை கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக பெண்கள் தெரிவித்தனர்.

    • ஹலோ சீனியர் திட்டம் தற்போது வரை நடைமுறையில் தான் உள்ளது.
    • இத்திட்டம் மாவட்டத்தில் தற்போது வரை நடை முறையில் உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தனியாக வசிக்கும் முதியவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்து வந்தது.

    இதனை தடுக்க மாவட்ட காவல் துறை சார்பில் கட ந்த 2019-ம் ஆண்டு 'ஹலோ சீனியர்' என்ற திட்டம் தொடங்கப்பட்டு அதற்கென 9655888100 என்ற பிரத்யேக தொலைபேசி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இத்திட்டத்தின் மூலம் தனியாக வசிக்கும் முதியவ ர்களை பாது காக்கவும், அவர்களுக்கு உள்ள இடையூறுகளை களையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்திட்டம் மாவட்டத்தில் தற்போது வரை நடை முறையில் உள்ளது.

    இதுகுறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் எவ்வித பாதுகாப்பு வசதி யும் இன்றி தனியாக வசிக்கும் முதியோர் வீடுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் தனியாக வசிக்கும் முதியவர்களை அந்தந்த போலீஸ் எல்லைக்கு உட்ப ட்ட போலீஸ் நிலை யத்தில் பணி யாற்றும் போலீசார் மூலம் கண்காணி க்கப்பட்டு வருகிறது.

    வாரத்தில் 2 நாட்கள் அவர்களது வீடுகளுக்கு போலீசார் நேரடி யாக சென்று அவ ர்களிடம் நலம் விசாரித்து விட்டு அவர்க ளிடம் குறைகள் இருந்தால் கேட்டு அதனை நிவர்த்தி செய்கின்றனர்.

    தனியாக வசிக்கும் முதியவர்களின் வீடுகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த அறிவுறுத்தினோம். அதன்படி தற்போது 30 வீடுகளில் கேமிராக்கள் பொருத்தியுள்ளனர்.

    ஹலோ சீனியர் திட்டம் தற்போது வரை நடைமுறையில் தான் உள்ளது. இத்திட்டத்திற்காக வழங்கப்பட்ட தொலைபேசி எண்ணில் அளிக்கப்படும் புகார்கள் மீதும் உடனுக்கு டன் நடவடிக்கை எடுத்தும் வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • காய்கறி விலைவாசி உயர்வை கண்டித்தும், ஊழலை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

    ஈரோடு:

    காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்பட அத்தி யாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், ஊழலை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசை கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

    அதன்படி ஈரோடு ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில் இன்று வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    ஆர்ப்பா ட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ். தென்னரசு, சிவசுப்பிரமணி, ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் எம்.எல்.ஏ., கருப்பணன் எம்..எல்.ஏ. ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காய்கறி விலைவாசி உயர்வை கண்டித்தும், ஊழலை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

    இதில் முன்னாள் எம்.பி. செல்வகுமார சின்னையன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி. பழனிச்சாமி, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ், கோவிந்தராஜன், மாநகராட்சி எதிர்க்கட்சித்தலைவர் தங்கமுத்து, மாணவர் அணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்வி, மாணவர் அணி தலைவர் சிவக்குமார்,

    தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோபால் கிருஷ்ணன், பெரியார் நகர் பகுதி அவை தலைவர் மீன்ராஜா, மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் துரை சக்திவேல், சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் பொன் சேர்மன், பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி கே.செல்வராஜ், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், முருகானந்தம், மாதையன், பிரதிநிதி கஸ்தூரி, சூரிய சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு வீட்டுக்கும் விண்ணப்பம், டோக்கன் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது.
    • 3,777 அலுவலர்கள் ஈரோடு மாவட்டம் முழுவதும் விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.

    ஈரோடு:

    குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    இந்த திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் பல்வேறு துறைகளில் அதிகாரிகள் ஒருங்கிணைந்து இந்த திட்டத்தை செயல்ப டுத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் விண்ணப்பம், டோக்கன் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் காலை 8 மணி அளவில் இந்த பணியை தொடங்கினர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் வீடு, வீடாக சென்று டோக்கன் மற்றும் விண்ணப்பம் வழங்கினர்.

    அப்போது சம்பந்தப்பட்ட வீட்டின் பெண்ணிடம் ரேஷன் கார்டை வாங்கி சோதனை செய்து அவரிடம் கையொப்பம் வாங்கி கொள்கின்றனர். பின்னர் அவரிடம் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. அதில் முகாம்களின் நேரம், நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு வழங்குகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் 1,207 ரேஷன் கடைகளில் உள்ள 7 லட்சத்து 63 ஆயிரத்து 316 குடும்ப அட்டை தாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்வது தொடர்பாக முகாம் 2 கட்டமாக நடைபெற உள்ளது.

    முதல் கட்டமாக 639 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு 586 இடங்களில் வருகிற 24-ந் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 4-ந் தேதி வரை விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது.

    2-வது கட்டமாக 568 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு 544 இடங்களில் வருகிற ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை விண்ணப்பித்தினை பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் 2 கட்டங்களும் சேர்த்து 1207 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு 1130 இடங்களில் விண்ணப்பித்தினை பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது. 3,777 அலுவலர்கள் ஈரோடு மாவட்டம் முழுவதும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் சென்று விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.

    • தற்போது விதை மஞ்சள் கூடுதல் விலைக்கு விற்பனையாகிறது.
    • கடந்த 2 மாதங்களில் ஏற்றுமதி 25 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு பகுதியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை நிலையம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என 4 இடங்களில் மஞ்சள் ஏல விற்பனை நடக்கிறது.

    கடந்த சில நாட்களாக தரமான மஞ்சள் வரத்தும், விலையும் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களில் குவிண்டாலுக்கு 1,500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று மேலும் 500 ரூபாய் அதிகரித்துள்ளது.

    இது குறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்திய மூர்த்தி கூறியதாவது:-

    கடந்த வாரம் மஞ்சள் விலை குவிண்டால் 9,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று மேலும் 500 ரூபாய்க்கு மேல் உயர்ந்து விரலி மஞ்சள் 6,206 முதல் 9,589 ரூபாய் வரையிலும், கிழங்கு மஞ்சள் 6,089 ரூபாய் முதல் 8,600 ரூபாய் வரையிலான விலையில் விற்பனையானது.

    ஈரோடு மஞ்சள் வளாக விற்பனை கூட ஏல மையத்தில் தரமான பெருவட்டு மஞ்சள் ஒரு குவிண்டால் 10,286 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த 2 மாதங்களில் ஏற்றுமதி 25 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

    மஹராஷ்டிரா மாநிலத்தில் கோடை காலத்தில் பெய்த எதிர்பாராத மழையால் பெருவாரியான மஞ்சள் தரம் குறைந்து காணப்படுகிறது.

    இதனால் தற்போது மார்க்கெட்டுக்கு தரமான மஞ்சள் வரத்து அங்கு குறைந்து வருகிறது. கடந்த காலங்களில் குறைவான விலை மற்றும் போதிய பருவமழை இல்லாததால் நடப்பு ஆண்டு அனைத்து பகுதிகளிலும் விவசாயிகளின் மஞ்சள் நடவும் குறைந்துள்ளது.

    ஓராண்டு பயிராக மஞ்சள் இருப்பதால் அடுத்து வரும் ஆண்டின் தேவைகளை கருத்தில் கொண்டு வணிகர்கள் கூடுதல் வர்த்தகம் செய்து வருகின்றனர்.

    தவிர 'என்.சி.டெக்ஸ்' ஆன்லைன் வர்த்தகத்திலும் ஆகஸ்ட் மாத டெலிவரி விலை 10,000 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்து உள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தில் ஆரம்பத்தில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடியில் ஆர்வம் காட்டாததால் பெருவாரியான மஞ்சள் வேகவைக்கப்பட்டு விட்டது.

    தற்போது விதை மஞ்சள் கூடுதல் விலைக்கு விற்பனையாகிறது.

    தேசிய அளவில் அனைத்து பகுதியிலும் மஞ்சள் நடவு பணிகள் நடந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு பின் வடமாநில தேவைகளுக்காக ஈரோடு மார்க்கெட்களில் அதிக அளவில் மஞ்சள் விற்பனை நடக்கிறது.

    மஹராஷ்டிரா மாநிலத்தில் மஞ்சள் சாகுபடி பரப்பளவு முழுமையாக தெரியும் வரை எதிர்ப்பு அடிப்படையில் மஞ்சள் வர்த்தகம் கூடுதல் விலையுடன் அதிகமாக நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மழை பொழிவு இல்லாத தால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது.
    • காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 81.28 அடியாக சரிந்தது.

    ஈரோடு,

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டம் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாத தால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. அதே நேரம் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 81.28 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு 163 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடியும், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 955 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதைப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32.65 அடியாக உள்ளது. இதே போல் 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.51 அடியாக உள்ளது.

    இதைப்போல் 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 23.92அடியாக உள்ளது. மாவட்டத்தில் மழை பொழிவு இல்லாததால் அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருவது குறிப்பிட த்தக்கது.

    • அதிகபட்சமாக 107 டிகிரி வரை ஈரோடு மாவட்டத்தில் வெயில் பதிவானது.
    • வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    ஈரோடு, 

    தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் வெயில் முடிந்தாலும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வருகிறது.

    மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கு வதற்கு முன்பே வெயிலின் தாக்கம் சுட்டெரித்தது. அதிகபட்சமாக 107 டிகிரி வரை ஈரோடு மாவட்டத்தில் வெயில் பதிவானது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் அக்னி நட்சத்திரம் வெயில் நிறை வடைந்ததால் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முன்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாகவே பதிவாகி வருகிறது.

    நேற்று மாவட்டத்தில் அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்லாமல் வீட்டுக்கு ள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    முக்கிய சாலைகள் மதிய நேரம் வெறிச்சோடி காணப்படுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடிக்கிறது.

    குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் வெளியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அனல் காற்று, புழுக்கத்தால் வீட்டில் உள்ள குழந்தைகள், முதியவர்கள் அவதி வருகின்றனர்.

    வீட்டில் 24 மணி நேரமும் மின்விசிறி தொடர்ந்து இயங்கினாலும் புழுக்கத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். முடிந்தவரை காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறு த்தியுள்ளனர். குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

    வெயில் தாக்கத்தின் போது வெளியே செல்வ தால் உடலில் நீர் சத்து குறைந்து மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிக அளவில் இருந்து வருகிறது.

    இந்நிலையில் நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வெயிலின் தாக்கம் காரணமாக 1 - ந் தேதிக்கு பதிலாக 7-ந் தேதிக்கு பள்ளி திறப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

    எனினும் தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகமாக பதிவாகி வருவதால் பள்ளி திறப்பை மேலும் தள்ளி போட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • ட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் கோபாலகி ருஷ்ணன் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வரும் வழியி லேயே லோகநாயகி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு பி.பி.அக்ர ஹாரம் காமராஜ் நகரை சேர்ந்தவர் பெருமாள் (55). கூலி தொழிலாளி. இவரது மனைவி மாதம்மாள். இவர்களுக்கு கோபால கிரு ஷ்ணன்(25), பால கிருஷ்ணன்(23) என இரண்டு மகன்கள் உள்ளனர்.

    இதில் மூத்த மகன் கோபால கிருஷ்ணன் தார்ப்பாய் வேலைக்கு சென்று வந்து ள்ளார். இவருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் கடந்த 2 வருடமாக கோபால கிருஷ்ணன் சரிவர வேலைக்கு செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்த ன்று கோபால கிருஷ்ணன் பெற்றோர் வெளியே சென்று விட்டனர். அப்போது வீட்டில் கோபாலகிருஷ்ணன் மட்டும் இருந்துள்ளார். மதியம் வெளியே சென்று விட்டு மீண்டும் கோபாலகிரு ஷ்ணனின் தாய் மாதம்மாள் வீட்டுக்கு வந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் கோபாலகி ருஷ்ணன் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கோபால கிருஷ்ணனை மீட்டு ஒரு ஆட்டோவில் சிகிச்சை க்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்ற னர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியி லேயே கோபாலகிருஷ்ணன் இறந்துவிட்டதாக தெரி வித்தார்.

    இது குறித்து கருங்கல்பா ளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு பழைய பாளையம் ,இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி லோகநாயகி(42).

    கடந்த சில வருடங்க ளாகவே லோகநாயகி வயிற்று வலியால் அவதி அடைந்து வந்துள்ளார். இதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.

    இருந்தாலும் வயிற்று வலி குணமாகவில்லை என கூறப்படுகிறது. வயிற்று வலியால் வாழ்வதை விட செத்து விடலாம் என்று அடிக்கடி அவர் கூறி வந்துள்ளார். அவருக்கு அவரது உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்த துரை சாமி கதவை தட்டி உள்ளார். ஆனால் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழி யாக பார்த்த போது லோக நாயகி வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தொங்கி கொண்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று லோக நாயகியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வரும் வழியி லேயே லோகநாயகி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 7 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
    • கொரோனா பாதிப்புடன் 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவ டிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்து வந்தது. கடந்த ஒரு மாதமாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாதிப்பை விட குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்று சுகாதாரத்து றையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 880 உள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 7 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரத்து 124 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 736 பேர் உயிரி ழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.

    ×