search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "urea fertilizer arrived"

    • துாத்துக்குடியில் இருந்து ஸ்பிக் நிறுவனம் மூலம் 720 டன் பாரத் யூரியா உரம் ரெயில் மூலம் ஈரோட்டுக்கு வந்தடைந்தது.
    • மேலும் திரவ உயிர் உரங்களும், வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் விற்பனைக்கு உள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தட ப்பள்ளி அரக்கன்கோட்டை, காளிங்கராயன் பாசன பகுதியில் சம்பா பாசனத்து க்காகவும், கீழ்பவானி, மேட்டூர் வலது கரை கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்பட்டு நெல் சாகுபடி பணிகள் நடக்கிறது.

    மேலும் கரும்பு, வாழை, மஞ்சள், மரவள்ளி, நிலக் கடலை, மக்காசோளம், எள் ஆகிய பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது.

    இந்நிலையில் துாத்து க்குடியில் இருந்து ஸ்பிக் நிறுவனம் மூலம் 720 டன் பாரத் யூரியா உரம், 195 டன் டி.ஏ.பி. உரம், 64 டன் சூப்பர் பாஸ்பேட் உரம் ஆகியவை ெரயில் மூலம் ஈரோட்டுக்கு வந்தடைந்தது.

    இதுபற்றி ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சி.சின்னசாமி கூறியதாவது:- ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் 4,438 டன், டி.ஏ.பி. 1,820 டன், பொட்டாஷ், 1,228 டன், காம்ப்ளக்ஸ், 10,364 டன், சூப்பர் பாஸ்பேட், 906 டன், தொடக்க வேளாண் கூட்டு றவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் திரவ உயிர் உரங்களும், வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் விற்பனைக்கு உள்ளன.

    ஈரோடு திண்டலில் உள்ள வேளாண்மை துறை யின் மண் பரிசோதனை நிலையத்தில் விவசாயிகள் மண் பரிசோதனை செய்து அவர்களது பரிந்துரைப்படி உரங்களை பயன்படுத்து வதன் மூலம் தேவையற்ற உரச்செலவை குறைக்கலாம்.

    இவ்வாறு கூறினார்.

    ×