search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "oil pulling"

    • தேங்காய் எண்ணெயை அதிக சூட்டில் வைத்து சமைக்க கூடாது.
    • தேங்காய் எண்ணெயில் எந்த பொருளையும் பொறிக்கக்கூடாது.

    கொப்பரைத் தேங்காயில் இருந்தோ, ஃப்ரெஷ் தேங்காயில் இருந்து எடுத்த பாலில் இருந்தோ தேங்காய் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதில் சாச்சுரேட்டடு வகை கொழுப்பு இருக்கும். அது உடல்நலத்துக்கு ஆரோக்கியமானது. இப்படி எடுக்கப்படும் சுத்தமான தேங்காய் எண்ணெயை சருமத்தில் மாய்ஸ்ச்சரைசராகவும் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெயில் உள்ள மீடியம் ட்ரைகிளிசரைடு வகை கொழுப்பானது எளிதில் உடலால் உட்கிரகிக்கப்படும்.

     இந்த எண்ணெய் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்குமோ என பயப்பட வேண்டாம். வீட்டிலேயே தேங்காயை ஆட்டி நீங்களே தயாரிக்கும் இந்த எண்ணெயை சமையலுக்கும் பயன்படுத்தலாம். ஆனால் தேங்காய் எண்ணெயை அதிக சூட்டில் வைத்து சமைப்பதோ அல்லது பொரிக்கப் பயன்படுத்துவதோ கூடாது.

    வயிறு தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்களும், அசிடிட்டி பிரச்சினை உள்ளவர்களும் தினமும் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள்.

    அதேபோல ஆயில் புல்லிங் செய்யவும் தேங்காய் எண்ணெய் உபயோகிக்கப் பரிந்துரைப்போம். அது வாய் சுகாதாரத்தை மேம்படுத்த உதவும். வாயில் பாக்டீரியா தொற்று ஏற்படாமல் இருக்க இது உதவும்.

    சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும், கூந்தலை வறண்டு போகாமல் வைத்திருக்கவும் தேங்காய் எண்ணெய் உதவும். தினசரி சமையலில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். பொரியல் போன்றவை செய்ய பயன்படுத்தலாம். அதில் உள்ள ஆரோக்கிய கொழுப்பு உடல்நலத்துக்கு நல்லதுதான்.

    • வாய் சுகாதாரத்தை சரியாக பேணாமல் இருப்பதால் பல் சொத்தை உருவாகிறது.
    • ஆயில் புல்லிங் செய்வதால் பற்கள் மற்றும் வாயில் உள்ள பாக்டீரியாக்களை குறைக்கும்.

    பல் சொத்தை பிரச்சினை இப்போதெல்லாம் குழந்தைகளுக்கே மிக எளிதாக வந்து விடுகிறது. இதற்கு காரணம் அவர்கள் அதிகமாக சாப்பிடும் இனிப்பு மிட்டாய்கள், சாக்லெட், ஸ்டார்ச் நிறைந்த உணவுப்பொருள்கள் ஆகியவை தான். இந்த உணவுகளின் எஞ்சிய பகுதி பற்களில் ஒட்டிக் கொண்டு பாக்டீரியாக்களை உற்பத்தி செய்கிறது. வாயில் பாக்டீரியாக்களின் உற்பத்தி அதிகரிக்கும் போது பல் சொத்தை உள்ளிட்ட பிரச்சினைகள் வர ஆரம்பிக்கும். இதேநிலை தான் பெரியவர்களுக்கும்.

    உணவு சாப்பிட்டதும் சரியாக வாய் கொப்பளிக்காமல் இருப்பது, வாய் சுகாதாரத்தை சரியாக பேணாமல் இருப்பது போன்றவற்றால் இந்த பிரச்சினை அதிகரிக்கும்.

    தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் தினமும் ஆயில் புல்லிங் செய்து வருவதால் பற்கள் மற்றும் வாயில் உள்ள பாக்டீரியாக்களை குறைக்கும். பற்களில் பிளேக் படிவதைத் தடுக்கும். தினமும் ஆயில் புல்லிங் செய்து வருவதால் பல் மற்றும் ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரிசெய்வதோடு பல் சொத்தையை கொஞ்சம் கொஞ்சமாக சரிசெய்யும்.

    உணவுமுறையில் மாற்றம்

    பல் சொத்தைப் பிரச்சினை இருப்பவர்கள் அதன் தீவிரத்தைக் குறைப்தற்கு முதலில் செய்ய வேண்டியது உணவு முறையில் மாற்றம் செய்ய வேண்டியது தான். சர்க்கரை சேர்த்த இனிப்பு உணவுகளைத் தவிர்க்க வேண்டும். பழங்களை அப்படியே சாப்பிடுங்கள். சர்க்கரை சேர்த்து ஜூசாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

    கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். கால்சியம் பற்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் நம்முடைய உடலில் இன்பிளமேஷன்கள் ஏற்படாமல் தடுக்க உதவி செய்யும்.

    சொத்தை பல், பல் வலி உள்ளிட்ட பல் தொடர்பான பிரச்சினைகள் பெரும்பாலும் இன்பிளமேஷன்களால் தான் உண்டாகிறது. அதனால் வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் மற்றும் சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

    ஆயுர்வேதத்தில் காயகல்ப மூலிகைகளில் ஒன்றாக சொல்லப்படுவது நெல்லிக்காய். இந்த நெல்லிக்காய் வாய் சுகாதாரத்தை மேம்படுத்தி பல் சொத்தை மற்றும் பல் வலியைச் சரிசெய்ய உதவி செய்யும். ஒரு கப் நீரில் நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அந்த நீரை ஆறவைத்து அதை வாய்க் கொப்பளித்து வர பல் சொத்தை வேகமாக சரியாகும்.

    அதிமதுரம் மிகவும் இனிப்பான மூலிகை. அதனால் ஆயுர்வேதத்தில் எல்லா வகையான மருந்துகள் தயாரிப்பிலும் இந்த அதிமதுரத்தைச் சேர்ப்பார்கள். இதில் ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகள் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் அதிகம் என்பதால் இது பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும். ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அதிமதுரத்தைச் சேர்த்து கொதிக்க விட்டு, ஆறவிட்டு அந்த நீரால் வாய் கொப்பளித்து வர பல் சொத்தையில் உள்ள புழுக்களை வெளியேற்றும். நாளடைவில் பல் சொத்தையைச் சரிசெய்யும்.

    கற்றாழையில் ஆன்டி இன்பிளமேட்டரி, ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் மற்றும் பயோஆக்டிவ் பண்புகள் உடலில் ஏற்படும் கிருமித் தொற்றுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. அதில் பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் தீர்க்கும். கற்றாழை ஜெல்லை டூத் பேஸ்ட்டாக பயன்படுத்தி பல் துலக்கி வர வேகமாக பல் சொத்தை சரியாகும். அதேபோல கற்றாழையை ஜூசாக செய்து குடித்து வர பல் சொத்தை மற்றும் பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும்.

    கிரீன் டீயில் நிறைய ஆன்டி பாக்டீரியல், ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. அதனால் கிரீன் டீ பாக்டீரியா தொற்றால் ஏற்படுகிற பல் சொத்தையைச் சரிசெய்ய உதவி செய்யும். அதோடு கிரீன் டியில் ஃப்ளூரைடும் அதிகமாக இருக்கிறது. இந்த ஃப்ளூரைடு என்பது பற்களைப் பாதுகாக்கவும் பல் சொத்தையைப் போக்கவும் உதவும் ஒரு வகை மினரல். அடிக்கடி கிரீன் குடிப்பது, கிரீன் டீ பேக்கை வைத்து சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்து ஒத்தடம் கொடுத்து வர பல் பிரச்சினைகள் தீரும்.

    கிராம்பு காலங்காலமாக பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்காக நம்முடைய முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உள்ள ஆன்டி பாக்டீரியல், ஆன்டி மைக்ரோபியல், ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகள் பல் வலியைக் குறைக்கவும் பல் சொத்தையை சரிசெய்யவும் உதவி செய்யும். பல் சொத்தை மற்றும் பல் வலி பிரச்சினை உள்ளவர்கள் அந்த இடத்திலுள்ள வலியை குறைக்க கிராம்பு எண்ணையை பயன்படுத்தலாம்.

    காலையில் பல் துலக்குவதற்கு முன்பாக நல்லெண்ணெய் ஊற்றி கொப்பளிப்பதை அன்றாடம் தவறாமல் கடைபிடித்து வருவதால், உடலில் உள்ள நுகர்வு உறுப்புகளின் வேலை தூண்டப்படும்.
    ‘‘ஆயில் புல்லிங் இப்போது பெரிதாக பேசப்பட்டாலும், நம்நாட்டின் பாரம்பரிய மருத்துவங்களான சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் நல்லெண்ணெயை ஊற்றி வாயைக் கொப்பளிக்கும் முறையை 1000 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தியுள்ளனர். பழங்கால ஆயுர்வேத மருத்துவத்தில், எண்ணெய் கொப்பளிப்பது, கண்களுக்கு அஞ்சனம் இடுவது என சிலவற்றை காலை சடங்குகளாகவே சொல்லியிருக்கிறார்கள்.

    ஏதேனும் ஒரு திரவத்தை வாய் முழுவதும் வைத்து கொப்பளிக்கும் ‘கவலகண்டூஷம்’ மற்றும் வாயில் பாதியாக நிரப்பி, கொப்பளிக்காமல் அப்படியே துப்புவதை ‘கவலகிரஹம்’ என இரண்டு முக்கிய சடங்குகளைச் சொல்கிறார்கள். மேலும், ஆயுர்வேதத்தில் நல்லெண்ணெயைத்தான் உபயோகிப்போம். இப்போது வெளிநாட்டினர் தேங்காய் எண்ணெய் ஆயில்புல்லிங் முறையை இப்போது பிரபலப்படுத்துகிறார்கள்.’’

    ‘‘சாதாரணமாக நாம் தொண்டைப்புண் வந்தால் உப்புத்தண்ணீர், வாய்ப்புண்ணுக்கு எண்ணெய் போன்றவற்றை வாயில் ஊற்றி கொப்பளிப்போம். இதுபோல் எந்த பிரச்சனையுமில்லாமல் காலையில் பல் துலக்குவதற்கு முன்பாக நல்லெண்ணெய் ஊற்றி கொப்பளிப்பதை அன்றாடம் தவறாமல் கடைபிடித்து வருவதால், உடலில் உள்ள நுகர்வு உறுப்புகளின் வேலை தூண்டப்படும். பல்லிடுக்குகளில் உள்ள நச்சுப்பொருள், வாய் துர்நாற்றம் போன்றவற்றை நீக்கி, சுவைத்திறனை அதிகரிக்க முடியும்.

    வாய்க்கசப்பு, பசியின்மை போன்ற பிரச்சனைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். கழுத்துவலி, கழுத்து சுளுக்கு, தொண்டைவலி, காதுவலி, மூக்கில் நீர்வடிதல் போன்றவற்றுக்கும் ஆயில் புல்லிங் சிறந்ததொரு சிகிச்சையாகும். பற்களில் உள்ள வெற்றிலைக்கறை, மஞ்சள் கறை நீங்கி பற்கள் வெண்மையாகப் பளிச்சிடும். சொத்தைப்பற்களால் வரக்கூடிய பற்கூச்சம், ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவும் நீங்கும்.’’

    எப்படி செய்வது?

    ‘‘சூரிய வெளிச்சமுள்ள, காற்றோட்டமான இடத்தில் அமர்ந்துகொண்டு, கழுத்து, தோள் பட்டைகளில் சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும். திரவத்தை வாய் முழுவதுமாகவோ (கண்டூஷம்) அல்லது பாதியாகவோ (கவலகிரஹம்) என இரு முறைப்படியும் கொப்பளிக்கலாம். இதை ஒரு குறிப்பிட்ட மணி நேரம் என்றில்லாமல் வாயில் ஊற்றிய திரவமானது நுரைத்து, கெட்டியாக பசை போன்று வரும் வரையோ அல்லது கண், மூக்கு வழியாக தண்ணீர் வரும் வரை வைத்திருக்க வேண்டும்.

    நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் தவிர, பால், பழச்சாறுகள், தேன் மற்றும் கோமியம் போன்றவற்றாலும் வாய் கொப்பளிக்கலாம். ஆனால், நல்லெண்ணெய்தான் மிகச்சிறந்தது. தேனுக்கு எரிச்சல், புண், வீக்கம் போன்றவற்றை ஆற்றும் குணம் உள்ளதால் தேனையும் உபயோகிக்கலாம்.

    இதுதான் ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்ட சரியான முறை. இப்படி முறையாக செய்ய முடியாத பட்சத்தில் குறைந்தபட்சம் வாயில் சில நிமிடங்கள் வைத்திருந்து கொப்பளித்துத் துப்புவதும் பலன் தரும்.’’

    ×