search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Healthy Life"

    • சூ வெஸ்ட்ஹெட்டிற்கு தற்போது 108 வயது ஆகிறது
    • 5 வருடங்கள் கூட தான் உயிருடன் இருப்போம் என சூ நம்பவில்லை

    வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள நகரம் ஹவுட்டன் லெ ஸ்ப்ரிங் (Houghton-le-Spring).

    ஹவுட்டனில் வசித்து வருபவர் சூ வெஸ்ட்ஹெட் (Sue Westhead). வெஸ்ட்ஹெட்டிற்கு தற்போது 108 வயது ஆகிறது

    தனது 12-ஆவது வயதில் உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்ட வெஸ்ட்ஹெட்டிற்கு சிறுநீரக நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, 25-ஆவது வயதில் டயாலிசிஸ் செய்து கொள்ள தொடங்கினார்.

    நீண்ட சிகிச்சைக்கு பிறகும் அவருக்கு நோய் தீரவில்லை.

    1970களின் தொடக்கத்தில் வெஸ்ட்ஹெட்டிற்கு சிறுநீரகத்துறை சிகிச்சை நிபுணர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர்.

    1973ல் வெஸ்ட்ஹெட்டின் தாயார் ஆன் மெட்கால்ஃப் (Ann Metcalf) சிறுநீரகம் தர முன்வந்ததையடுத்து முறையான பரிசோதனைக்கு பின்னர் அறுவை சிகிச்சை நடந்து தாயாரின் சிறுநீரகம், வெஸ்ட்ஹெட்டிற்கு பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை ராயல் விக்டோரியா மருத்துவமனையில் நடந்தது.

    அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும், அடுத்த 5 வருடங்களுக்கு கூட தான் உயிருடன் இருக்க முடியும் என வெஸ்ட்ஹெட் அப்போது நம்பவில்லை.

    ஆனால், 50 வருடங்கள் கடந்தும், எந்தவிதமான சிறுநீரக சிக்கலும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார், வெஸ்ட்ஹெட்.

    இந்த நிகழ்வு, தற்போது வெஸ்ட்ஹெட்டிற்கு உடல்நல மேற்பார்வையும் ஆலோசனையும் வழங்கி வரும் சண்டர்லேண்ட் ராயல் மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது.

    மிகவும் மகிழ்ச்சியுடன் அங்கு வந்திருந்த வெஸ்ட்ஹெட்டுடன் உரையாடிய அங்குள்ள மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவமனை பணியாளர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மக்கள் உறுப்பு தானம் செய்ய முன் வர வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

    • மனது சரியாக இருந்தால் உடல் நன்றாக இருக்கும்.
    • உடல் புத்துணர்ச்சி பெறுவதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.

    தினசரி வாழ்க்கையில் எப்போதும் நேர்மறையாக இருப்பது முக்கியமானது. காலையில் எழும் போது நாம் செய்யும் சில செயல்கள் இந்த நாள் முழுவதும் நம்மை புத்துணர்வோடு வைத்திருக்கும். இசைக்கலைஞர்கள், தடகள விளையாட்டு வீரர்கள் போன்றோர் தொடர்ந்து பயிற்சி எடுத்து தங்களை மேம்படுத்தி வெற்றிபெறுவார்கள். அதை போலவே மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்க விரும்பினால் அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கும் நாள் முழுவதும்நல்ல ஆற்றலை வெளிப்படுத்துவதற்கும் காலையில் எழும்போது மகிழ்ச்சியான நேர்மறை எண்ணங்களை தூண்டுவது அவசியமானது.

    படுக்கையை விட்டு எழும்போது விரிப்புகளை ஒழுங்குபடுத்துவது எதிர்மறையான எண்ணங்களில் இருந்து விலகி இருக்க உதவும். படுக்கை ஒழுங்காகவும், அழகாகவும் இருப்பது மனதுக்கு அற்புதமான உணர்வை தந்து காலை பொழுதை அழகாக்கும்.

    காலையில் சுற்றுச்சூழல் மிகவும் அமைதியாக இருக்கும். இந்த நேரத்தில் நேர்மறை ஆற்றல் வளிமண்டலத்தில் பரவும். எனவே காலையில் எழுந்தவுடன் தோட்டத்தில் நடப்பது, எளிமையான உடற்பயிற்சிகளை செய்வது போன்றவைற்றை வழக்கமாக்கி கொள்ளவும். இது நம் உடலை புத்துணர்வாக வைப்பதற்கு உதவும்.

    உடல் புத்துணர்ச்சி பெறுவதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. கார்போஹைட்ரேட் புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளை உண்ணுங்கள். காலை உணவுதான் அன்றைய நாளுக்குரிய ஆற்றலின் முக்கிய ஆதாரம். நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க இது உதவும்.

    இன்று நாம் என்ன செய்ய வேண்டும். என்பதை முன்போ முடிவு செய்து வேலையை தொடங்குவது நல்லது. எந்த முன்னேற்பாடும் இன்றி நாளை ஆரம்பிப்பது, பெரும்பாலான பிரச்சனைகளை உண்டாக்கும். இதனால் மனதும், உடலும் சோர்வடையும்.

    நேரம் இருக்கும் போது பிடித்தமான இசை, பயனுள்ள சொற்பொழிவுகளை கேட்கலாம். இது அந்த நாளை பயனுள்ளதாக மாற்றும். மனது சரியாக இருந்தால் உடல் நன்றாக இருக்கும்.

    ஒவ்வொரு நாளும் 10 நிமிடம் தியானம் செய்ய வேண்டும். குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் நல்ல முறையில் நேரம் செலவிடுவது உளவியல் ரீதியாக நம்மை மேம்படுத்தும்.

    விழித்திருக்கும் நேரம் எவ்வளவு முக்கியமோ, அதுபோல் தூங்குவதும் முக்கியம். மன அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்கு 8 மணிநேரம் தூக்கம் அவசியம்.

    மேற்சொன்னவற்றை எல்லாம் கடைப்பிடித்தால் நீண்ட ஆரோக்கியத்துடனும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள்.

    • சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
    • எதிர்கால வாழ்க்கை எல்லோருக்கும் நல்ல முறையில் அமைவதற்கு உடல் ஆரோக்கியம் முக்கியம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட உணவு பாதுகாப்பு திட்ட நியமண அலுவலர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காயத்ரி வரவேற்று பேசினார். ஓருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி திட்ட விளக்கவுரையாற்றினார்.

    பாரம்பரிய உணவு திருவிழாவை பார்வையிட்டு சமூக நலன் மற்றும் பெ ண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    எதிர்கால வாழ்க்கை எல்லோருக்கும் நல்ல முறையில் அமைவதற்கு உடல் ஆரோக்கியம் முக்கியம். அதற்கு பாரம்பரிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். சத்தான ஆகாரம் எது என்று பார்த்து சாப்பிட வேண்டும். இதுபோன்ற சில குறைபாடுகள் இருப்பதால் 51சதவீத பெண்களுக்கு ரத்த சோகை பாதிப்பு ஏற்படுகிறது.

    தற்போது கர்ப்பிணி பெண்கள் கர்ப்பகாலத்தில் ரத்தம் ஏற்றி கொள்கின்ற னர். இது போன்ற குறை பாடுகள் வராமல் இருப்பதற்கு காய்கறி வகைகள் நவதானிய வகைகள் அதிக அளவில் சாப்பிட வேண்டும்

    அங்கன்வாடி பணியாளர்கள் கழிவு பொருட்களில் இருந்து பல தத்ரூபமான பொருட்களை தயாரித்திருக்கிறார்கள். மேலும் ஊட்டச்சத்து உணவுகள் தயாரிப்பதிலும், குழந்தைகளை பாதுகாக்கும் வழிமுறைகளுக்கான பயிற்சி எடுத்தவர்கள், கைதேர்ந்தவர்களாக உள்ளார்கள். அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தை களுக்கு திறமையாக கற்றுக்கொடுக்கிறார்கள். குழந்தைகளை அறிவாற்றல் மிக்கவர்களாக வளர்க்க வேண்டும். முதல்-அமைச்சர் இதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

    சமூக நலத்துறை சார்பாக ஊட்டச்சத்து மிக்க குழந்தைகளையும், குறை வான குழந்தைகளையும் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான ஊட்டச் சத்துகள் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்குவதற்காக ஒரு செயலி உருவாக்கி அங்கன்வாடிகளில் உள்ள 38 லட்சம் குழந்தைகளின் வயது, எடை, முகவரி மற்றும் எல்லா பிரச்சனையையும் பதிவேற்றும் செய்து வைத்துள்ளோம். ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கு கவனம் செலுத்தப்படுகிறது.

    ஊட்டச்சத்து குறைவா னவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சத்தான உணவுகள் வழங்குவதற்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் விரைவில் புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளார். கல்லூரி மாணவ, மாணவிகள் காலை உணவை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும் ஊட்டச்சத்து அங்கன்வாடி பணி யாளர்கள் சிறப்பான முறையில் பணி யாற்றுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் சிறப்பாக பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் உதவி சித்த மருத்துவர் ஸ்ரீதேவி, ஹோலிகிராஸ் கல்லூரி போராசிரியர் மாரிதங்கம், கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் இளங்குமரன், செயலாளர் ஜீவன் ஜேக்கப், குழந்தை வளர்ச்சி திட்ட ஊரகம் அலுவலர் திலகா, உள்பட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விவேக்ராஜா நன்றி கூறினார்.

    பசி என்பது உலகம் அனைத்துக்குமான பொது மொழி. என்றாலும், ஒருவருடைய பசியின் மொழியை இன்னொருவர், தான் உணரும் வரை புரிந்துகொள்ள முடியாது.
    பசி என்பது உலகம் அனைத்துக்குமான பொது மொழி. என்றாலும், ஒருவருடைய பசியின் மொழியை இன்னொருவர், தான் உணரும் வரை புரிந்துகொள்ள முடியாது. முன்பெல்லாம் பசித்து சாப்பிட்ட காலம் இருந்தது. இன்றைக்குப் பலரும் பசியே இல்லை என்று சாதாரணமாக சொல்கிறார்கள். ஆனாலும், சாப்பிட வேண்டுமே என்ற கடமைக்காக ஆரோக்கியம் இல்லாத உணவு வகைகளை அவ்வப்போது உள்ளே போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இது தான் பசியில்லாத வாழ்க்கைக்கு முதல் படி.

    தொடக்கத்தில் உணவுக்காக தொடங்கிய வேட்டை, இன்றைக்கு பதுக்கல் என்ற பேராசையில் முடிந்திருக்கிறது. அதன் பயனே பசியின்மை. ஒரு சாண் வயிறு தான் வாழ்க்கையின் தரத்தை தீர்மானிப்பது முதல் அதிகாரத்தை கைப்பற்ற துடிப்பது வரை செல்கிறது. கால சுழற்சியில் பசி, உணவு ஆகிய இரண்டின் தன்மையும் மாறிவிட்டது. உணவின் தன்மை மாறியதாலேயே பசி மறக்கடிக்கப்பட்டிருக்கிறது.

    நல்ல பசிக்கு நல்ல உணவே எரிபொருள். அதனால் ரசாயன உரம் பயன்படுத்தப்படாத, நச்சுத்தன்மை இல்லாத உணவை தேடி உண்போம். அதற்கு பசியை உணர வேண்டும். பசியை மதிக்க வேண்டும். எல்லோருக்கும் நல்ல உணவு தேவை. அந்த நல்ல உணவை தரும் மண்ணை மறந்துவிட முடியுமா?

    சர்வதேச மண் வள ஆண்டு என 2015-ம் ஆண்டை ஐ.நா. சபை அறிவித்திருந்தது. பூமியில் 75 சதவீதம் நீரால் சூழப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 25 சதவீதத்தில் 15 சதவீதம் மட்டுமே மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்றது. அதில் விவசாயம் செய்ய முடியாது. எஞ்சிய 10 சதவீத நிலத்தில் மட்டுமே விவசாயம் செய்து, அவற்றின் மூலமே மனிதர்கள் வாழ முடியும்.

    அந்த நிலத்தையும் மண் வளத்தையும் பாதுகாத்து, அடுத்த சந்ததிகளுக்கு ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. ரசாயன உரங்களை தெளிக்காமல், இயற்கை முறையில் மண்ணை பக்குவப்படுத்தும் விவசாயி தான் என்றென்றைக்கும் நிலைத்திருப்பார். இந்த மண்ணும் மக்களும் நிலைத்திருப்பார்கள் என்று இயற்கை ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
    25 வருட சத்துணவு ஆய்வின் முடிவாக குறைந்த கண் பார்வையினை தவிர்க்கும் விதமாக சில உணவுகளை குறிப்பிட்டுள்ளனர். அவற்றினை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல கண் பார்வை பெறலாம்.
    25 வருட சத்துணவு ஆய்வின் முடிவாக குறைந்த கண் பார்வையினை தவிர்க்கும் விதமாக சில உணவுகளை குறிப்பிட்டுள்ளனர். அவற்றினை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல கண் பார்வை பெறலாம்.

    25 வருட சத்துணவு ஆய்வின் முடிவாக குறைந்த கண் பார்வையினை தவிர்க்கும் விதமாக சில உணவுகளை குறிப்பிட்டுள்ளனர். அவற்றினை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல கண் பார்வை பெறலாம். அவை

    * பாதாம் பருப்பு: அன்றாடம் 5-6 பாதாம் பருப்புகளை உண்பது சிறந்த கண் பார்வைக்கு உதவும். கண் பாதிப்புகளைத் தவிர்க்கும்.

    * பீட்ரூட் இலை    
    * பச்சை, சிகப்பு, மஞ்சள் குடைமிளகாய்.
    * பரோகலி விதை
    * கேரட்
    * சியா விதைகள்
    * ஃப்ளாக் விதை  
    * கிரீன் டீ
    * கீரை    
    * மாம்பழம்
    * சிகப்பு பூசணி
    * சர்க்கரைவள்ளி கிழங்கு    
    * தக்காளி இவை அனைத்தும் கண் பார்வை குறைபாட்டினை சீர் செய்யும்.
    இன்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று ஸ்ட்ரெஸ் என்று சொல்லப்படும் மன அழுத்தம். இது உளவியல் ரீதியாக மட்டுமின்றி உடலியல் ரீதியாகவும் மனிதர்களை பாதிக்க செய்கிறது.
    இன்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று ஸ்ட்ரெஸ் என்று சொல்லப்படும் மன அழுத்தம். இது உளவியல் ரீதியாக மட்டுமின்றி உடலியல் ரீதியாகவும் மனிதர்களை பாதிக்க செய்கிறது. மகிழ்ச்சியை தொலைத்து விட்டு நிம்மதியின்றி தவிப்பவர்கள் அதற்கு காரணமாக சொல்வது இந்த மனஅழுத்ததைத்தான்.!

    மன அழுத்தம் மக்களை எந்த வகையில் பாதிக்கிறது?

    நம் முன்னோர்கள் இருப்பதைக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்தார்கள். போதுமென்ற மனம் அவர்களிடம் இருந்தது. எதிலும் பேராசையோ பரபரப்போ இருந்ததில்லை. இதனால் மன அழுத்தமும் இல்லை. இன்றைய காலத்து மக்கள் எந்திரத்தனமான அவசர உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எனவே குடும்பம், வேலை, தொழில், பணம், படிப்பு என எதுவானாலும் இவற்றின் அன்றாட செயல்களில் கொஞ்சம் மாறினாலோ அல்லது அதிகரித்தாலோ உடனே ஏதோ பெரிய பிரச்சினை வந்து விட்டதாக நினைத்து மூச்சு திணறி போகிறார்கள். அது தொடர்பாக யாராவது கேள்வியோ விளக்கமோ கேட்டு விட்டால்போதும் நெஞ்சு படபடத்து “எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டம்” என்று புலம்புகிறார்கள்.

    இந்த மனஅழுத்தம்தான் அவர்களை துயரத்துக்குள் அமிழ்த்தி விடுகிறது. வாழ்க்கையே இருண்டு விட்டது,எதிர்காலம் என்ன ஆகுமோ என்று அச்சப்படுகிறார்கள். இதனால் கையில் இருக்கும் வாழ்வை அனுபவிக்காமல் நழுவ விட்டு விடுகிறார்கள்.

    வாழ்க்கை இனிதாக அமைய மன அழுத்தத்தை எவ்வாறு மடைமாற்றம் செய்ய வேண்டும்?

    மன அழுத்தம் குறித்து அமெரிக்காவில் பல ஆண்டுகாலமாக பல்லாயிரம் பேர்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் “மன அழுத்தம் என்பது நண்பனுக்கு நண்பன், விரோதிக்கு விரோதி. அதனை சாதகமாகவும் பயன்படுத்தி கொள்ளலாம். பாதகமாகவும் ஆக்கிக் கொள்ளலாம்” என்று கண்டறியப்பட்டது. அதாவது ஒரு வேலையை விரும்பி செய்யும் போது பாஸிட்டிவ் ஆன மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் பாதிப்பில்லை. மாறாக அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் திறனை அதிகரிக்க செய்கிறது. அந்த வேலையை செய்து முடிப்பதற்கான ஆற்றலை, புத்துணர்ச்சியை கொடுக்கிறது. இதனால் ஸ்ட்ரெஸ்ஸாக எண்ணக்கூடிய அந்த வேலையை மகிழ்ச்சி தரக்கூடியதாக மாற்றி விடுகிறது.

    அதையே சுமையாக நினைத்து செய்யும் போது நெகட்டிவ் ஸ்ட்ரெஸ் ஏற்பட்டு நமது செயல் திறனை முடக்கி விடுகிறது. இதனால் உடலும் மனமும் பாதிக்கப்பட்டு சோர்ந்து விடுகிறது. மன அழுத்தத்தின் விளைவு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பிரச்சினைகளோ, சூழ்நிலைகளோ உங்களுக்கு எந்த கெடுதலையும் தராது. எந்த நேரத்திலும் உங்கள் மனநிலையை நேர்மறையாக வைத்திருந்தால் போதும், அதுவே எந்த பிரச்சினைகளையும் சமாளித்து அந்த சூழலை மகிழ்ச்சியானதாக மாற்றி விடும்.

    பொதுவாக மன அழுத்தத்தில் இருக்கும் பலரும் அந்த சமயத்தில் தங்களுக்கு யாராவது ஆறுதல் சொல்ல மாட்டார்களா? என்று எதிர்பார்ப்பார்கள். அல்லது அப்படி பட்டவர்களை தேடிச் செல்வார்கள். அங்கு ஆறுதல் கிடைத்தால் சரி, இல்லை என்றால் மன அழுத்தம் மேலும் அதிகரித்து மோசமான விளைவை ஏற்படுத்திவிடும்.

    இதற்கு காரணம் என்னவென்றால் நம் உடலில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து சுரக்கும் ஆக்ஸிடோசின் ஹார்மோன்தான். இந்த ஹார்மோன் தான் யாராவது நம்மை கவனிக்க மாட்டார்களா? என்ற ஏக்கத்தை நம் மனதில் உண்டாக்குகிறது. மன அழுத்தம் இருக்கும் சமயத்தில் நீங்கள் ஆறுதலைத்தேடி செல்ல வேண்டியதில்லை. அதற்கு பதிலாக வேறு யாரிடமாவது நீங்கள் பரிவு காட்டினாலே போதும், உங்கள் மனம் அமைதி அடைந்து விடும். ஏன் என்றால் இந்த ஆக்ஸிடோசின் ஹார்மோனுக்கு தேவை ‘கவனித்தல்’ மட்டுமே. அதை நீங்கள் பெறுவதாகவும் இருக்கலாம். கொடுப்பதாகவும் இருக்கலாம்.

    இதற்கு பர்மாவில் நடந்த சம்பவத்தில் இருந்து ஒரு உதாரணத்தை காட்ட முடியும். பர்மாவில் உள் நாட்டு கலவரம் நடந்த போது ஏராளமான மக்கள் தங்கள் வீடு, வாசல், உறவுகள், உடமைகளை இழந்து தவித்தனர். பாதிக்கப்பட்ட இந்த மக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்ற அச்சத்துடன் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

    அடர்ந்த காடு, மலை, மேடு, பள்ளங்கள் வழியாக நடுக்கத்தோடு கடந்து கொண்டிருந்த அந்த கூட்டத்தில் இருந்த முதியவர் ஒருவர் மற்றவர்களுக்கு ஈடுகொடுத்து நடக்க முடியாமல் தள்ளாடினார். தன் மகனை பார்த்து “என்னால் இதற்கு மேல் நடக்க முடியாது, எனவே என்னை பற்றி கவலைப்படாமல் நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள்” என்றார்.

    மகன் பலவாறு வற்புறுத்தியும் அந்த இடத்தை விட்டு நகர மறுத்தார். தந்தையால் நடக்க முடியவில்லைதான், ஆனால் ஆபத்தான சூழலில் அவரை எப்படி விட்டு செல்வது என்று யோசித்த மகன் ஒரு உபாயம் செய்தான். தன் சிறு வயது மகனை அவரிடம் கொடுத்தான். அப்பா இவனாலும் நடக்க முடியவில்லை. அவனை தூக்கிக்கொண்டு போவது எனக்கு சிரமமாக இருக்கிறது. அதனால் அவனையும் உங்களுடன் இங்கே வைத்துக் கொள்ளுங்கள். இனி இவன் உங்கள் பொறுப்பு என்று சொல்லி விட்டு வேகமாக நடக்க தொடங்கினான்.

    அவ்வளவுதான் தன் உயிரை பற்றி கவலைப்படாத அந்த பெரியவர் தன் பேரப்பிள்ளையை மகன் விட்டுச் செல்ல போகிறான் என்றவுடன் பதைபதைத்து போனார். “இவனை அழைத்துக் கொண்டு செல்ல உனக்கு சிரமமாக இருந்தால் நீ போ... நான் கூட்டிக்கொண்டு வருகிறேன்” என்று சொன்னபடி குழந்தையை வாரி அணைத்துக்கொண்டார். பேரனை காப்பாற்ற வேண்டுமென்ற உந்துதல் அவர் மனதில் ஏற்பட்டது. அந்த அழுத்தம் காரணமாக மற்றவர்களைவிட வேகமாக நடந்தார். பத்திரமாக நாடு கடந்தார்.

    இந்த உண்மை சம்பவம் நமக்கு சொல்லும் பாடம் ஒன்றுதான். விருப்பமும் பொறுப்பும் இருந்தால் அழுத்தத்தால் நன்மையே விளையும். அதுவே நம் மனதில் உடலில் திடத்தையும் வேகத்தையும் அளிக்கும். நம்முன் தோன்றும் எந்த சவாலையும் எதிர்கொண்டு வெற்றி பெறும் ஆற்றலை கொடுக்கும்.

    பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது?

    உங்கள் மனப்பிரச்சினை களுக்கு இறக்கை கொடுங்கள். அவை உங்களை விட்டு எங்காவது பறந்துச் செல்லட்டும் என்கிறார் அறிஞர் டெர்ரி கில்மெட்.
    பிரச்சினைகளை கையாளத் தெரிந்தவர்களுக்கு எதுவுமே பிரச்சினை இல்லை. வாழ்க்கை உங்களை அழுத்தி நீங்கள் கொஞ்சம் தர்மச் சங்கடமாக உணரும் சமயத்தில் ஒரு விசயத்தை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். வெற்றியின் ஒரு பகுதியே அந்த அழுத்தம். அழுத்தம் இல்லை என்றால் வைரம் இல்லை என்கிறார் அறிஞர் எரிக் தாமஸ்.

    அழுத்தம்தான் குப்பைகளை உரமாக மாற்றுகிறது. அழுத்தம்தான் கரியை வைரமாக மாற்றுகிறது. அதுபோல் உங்களுக்குள் ஏற்படும் மன அழுத்தத்தையும் திடமும் ஆற்றலும் கொடுக்கும் வகையில் மாற்றிக் கொள்ளலாம். ஆகவே உங்களுக்கு அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் விழிப்புணர்வோடு செயல்பட்டால் நன்மை பயக்கும் வகையில் அதனை சாதகமாக மாற்றிக்கொள்ளலாம். அப்படி செய்தால் அழுத்தமே ஆனந்தமாக மாறும். அதில் மகிழ்ச்சி என்னும் பூ மலரும்.
    Email:fajila@hotmil.com
    உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.
    மண்பாண்டங்கள்... மனித குலம் தோன்றியது முதலே இதன் பயன்பாடு இருந்து வருகிறது.

    உன்னதமான பாரம்பரியப் பாத்திரங்களான மண்பாண்டங்களில் உணவைச் சமைத்து உற்சாகமான மனநிலையில் அன்பை கரண்டி வழியே கலந்து பரிமாறிய காலம் போய் நவீன மயம் புகுந்ததுதான் பல்வேறு இன்னல்களுக்கு காரணம்.

    உணர்வோடு மட்டுமல்லாமல், சமைக்கும் பாத்திரங்களாலும் சமையலில் சத்துக்கள் குறைகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு. மண்பாண்டத்தில் ஆரோக்கியமாய் தொடங்கி, பித்தளை, வெண்கலம், இரும்பு, ஈயம் என்பதோடு நில்லாமல் எவர்சில்வர், அலுமி னியம் எனத் தொடர்ந்து தற்போது... ஈசியாக செய்யக்கூடிய உணவோடு ஒட்டாத நவீன நான்ஸ்டிக் பாத்திரங்களும் வந்துவிட்டன.

    அதுவே சர்க்கரை வியாதி, முழங்கால் வலி, உடல் வீக்கம், நுரையீரல் தொற்று, விரை வில் முதுமை என பல வியாதிகளுக்கும் காரணமாகின்றன.

    நான்ஸ்டிக் பாத்திரத்தில் இருக்கும் ரசாயனம் உணவில் கலந்து உடலை பாதிக்கிறது. அதனால் கருப்பை கோளாறு, புற்றுநோய், குழந்தையின்மை என பல நோய்களுக்கும் வித்திடும்.

    மண் அடுப்பு, மண் பாண்டம், கல் சட்டி, தேங்காய்ச் சிரட்டை மரக்கரண்டி போன்ற பழங்காலச் சமையல் சாமான்கள் இன்று காட்சிப்பொருள்களாக மாறிவிட்டன.
    விளைவு உணவின் சுவை மட்டும் போகவில்லை, ஆரோக் கியமும் அதனுடன் சேர்ந்து போய்க்கொண்டு இருக்கிறது.

    இவ்வளவு அருமை பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை.நமது தாத்தா பாட்டி காலத்தில் அதுதான் பிரதான உணவு சமைக்கும் பொருட்கள்.  இன்றையமக்கள் அலுமினி யம், சில்வர், மைக்ரோ ஓவன், பிளாஸ்டக் பைபர் ரகங்கள் என நவீனத்தின் பிடியில் உள்ளார்கள்.

    ஆனால் இதில் சமைக்கும் உணவைவிட பலமடங்கு உயிர்சத்தும் ஆற்றலும் கொண்டது மண்பாண்ட சமையல். அக்காலத்தில் நோயின்றி அதிக காலம் உயிர் வாழ்ந்தமைக்கு மண்பாண்டம் பயன்பாடு பெறும் பங்கு வகிக்கிறது.

    மண்பானையில் சமைக்கும் போது வெப்பம் சமச்சீராக பரவுகிறது, மேலும் இதில் இருக்கும் நுண்துளைகள் மூலம் நீராவி மற்றும் காற்று ஊடுருவி உணவை சமைக்க உதவுகின்றது. அதனால் ஆவியால் வேக வைத்த பக்குவம் கிடைப்பதால் சத்துக்கள் பாதுகாக்கப்பட்டு எளிதில் செரிமானமாகக் கூடிய உயர்தர உணவாக அமைகிறது.

    அத்துடன் மண்பாண்டம் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்துகிறது, உப்பு, புளிப்பு சுவைகளை சமைக்கும் போது எந்த தீங்கான விளைவும் ஏற்படுத்தாமல் கட்டுபடுத்துகிறது. அதுபோல் அதிக எண்ணெய் பயன்படுத்த தேவையிருக்காது. உணவின் சுவையும் தன்மையும் கூடுவதோடு ஆரோக்கயத்திற்கும் உகந்ததாக இருக்கறது.

    இதில் வைக்கும் தயிர் மற்றும் மாவு வகைகள் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும். இயல்பாக மண்ணில் அதீத உயிர்சத்துக்கள் இருக்கும். ஆதலால் மண்பாண்டத்தில் சமைக் கும் உணவு பதார்த்தங்களில் உள்ள சத்துக்கள் அப்படியே கிடைக்கும். மற்ற உலோகப் பாத்திரங்களில் சமைத்த உணவு பலவகை நச்சுத்தன்மையை கொண்டதாக இருக்கிறது என ஆராய்ச்சி குறிப்புகள் தெரிவிக்கிறது. மண்பாண்டம் அப்படியில்லை முற்றிலும் பாதுகாப்பானது.

    இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. உணவுப்ப பொருட்களை கெடாமல் நீண்ட நாள் பாதுகாக்கப்படுகிறது. அந்த காலங்களில் நமது மூதாதையர்கள் களிமண்ணினால் செய்யப்பட்ட வீட்டு உப யோக பொருள்களை பயன்படுத்தி வந்தனர். இதனால் அவர்கள் செய்த உணவு பொருள்கள் கூடுதல் ருசியுடனும், பிரிட்ஜ் இல்லாமல் நீண்ட நாள்களுக்கு கெடாமலும் இருந்தது.

    மேலும் அவர்கள் எவ்வித நோய் பாதிப்பும் இன்றி நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தனர். நமது மூதாதையர்கள் நல்ல உடல் நலத்துடன் இருந்ததற்கு காரணம் கலப் படமற்ற பயிர்கள், உணவு தானியங்கள் என்று சொல்லலாம். எனினும் அவர்கள் தண் ணீர் அருந்த, உணவு சமைக்க, உண்ண களிமண்ணால் ஆன பாத்திரங்களையே பயன்படுத்தி வந்தனர்.

    இதனால் இயற்கை காய்கறிகள், உணவு தானியங்களின் மூலம் கிடைத்த சத்துகளுடன் களிமண்ணில் உள்ள தாதுக்களும் அவர்களுக்கு கிடைத்தன. காலப்போக்கில களிமண் பாத்திரங்களை பராமரிக்க முடியாததால் எவர்சில்வர் பாத்திரங்களுக்கு மாறிவிட்டனர். எனினும் இன்று வரை அசைவ உணவுகளையும், கூழ் வகைகளையும் களிமண் பாத்திரத்தில் செய்தால் அதன் ருசியும் சத்தும் கூடும் என்பதால் பலர் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.

    அம்மிகளும், உரல்களும் மிக்ஸி, கிரைண்டர்களாக மாறிவிட்டன. தற்போது ஆங்காங்கே களிமண்ணால் ஆன பாத்திரங்கள் காணப்பட்டாலும் அவற்றை வெகு சிலரே வாங்கிக் கொள்கின்றனர்.



    தற்போது மண்பானை குக்கர், வாட்டர் பாட்டில், பியூரிபையர், பான், கடாய் பொருள்கள் ஆகியனசந்தையில் கிடைக்கின்றன. இவை ராஜஸ்தான், குஜராத்தில் செய்யப்படுகின்றன.

    கரண்ட் இல்லாத பிரிட்ஜ்

    மின்சாரம் பயன்படுத்தாமல் பிரிட்ஜ், அதுவும் களிமண்ணால் செய்யப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் 20 கிலோ கொண்ட அந்த பிரிட்ஜில் காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்ட பொருள்களை வைத்தால் கெட்டு போகாமல், பிரஷ்ஷாக இருக்கும். மண் பானை குக்கர், வாட்டர் பாட்டில், தயிர் கப்கள், தண்ணீர் ஊற்றி வைக்கும் பானைகள் உள்ளிட்ட ஏராளமான வீட்டு உபயோக பொருள்கள் உள்ளன. அவை குறைந்தபட்சம் ரூ.250-லிருந்து அதிகபட்சமாக ரூ.5,000 வரை உள்ளன.

    தற்போது விவசாயப் பயிர்களுக்கு பூச்சிகொல்லிகள் தெளித்து, செயற்கை உரங்கள் இடுவதால் உணவே விஷமாக மாறி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய குழந்தைகளுக்கு கொஞ்சமாவது இயற்கை சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மண்பாண்டப் பொருள்களை ஏராளமானோர் வாங்கி செல்கின்றனர்.
    குடிநீர் சுத்திகரிப்பான்

    கோடையில் கொளுத்தும் வெயிலில் பத்தடி நடந்தாலே வியர்த்து மூச்சுவாங்குகிறது. தற்போது அக்னி நட்த்திரத்திரம் தொடங்கும் முன்பே சுட்டெரிக்கும் வெயில் அனல் காற்றோடு தகிக்கிறது.

    வியர்வை அதிகம் வெளியேறும் என்பதால் தாகம் அதிகரிக்கும். தாகத்தை தணிக்க குடிநீர், குளிர்பானம், இளநீர் என பல இருந்தாலும் சுத்தமான குடிநீருக்கு நிகரேதுமில்லை. அதிலும் மண் பானை தண்ணீருக்கு நிகரே கிடையாது.

    இன்று நகரங்களில்கூட குடிதண்ணீர் மண் பானைகளில் ஊற்றிவைத்துக் குடிப்பது விரும்பப்படுகிறது. சாதாரண தண்ணீரில் இருக்கும் தாது சத்துக்கள்... மினரல் வாட்டரில் கிடையாது. மினரல், வெந்நீரில் இவையனைத்தும் இறந்து போகின்றன.

    மண் பானை ஒரு மிகச்சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி. மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த நீர் சுத்திகரிக்கும் கருவி மண் பானை ஆகும்.

    10 லிட்டர் தண்ணீர் மண்பானையில் 3 தேத்தான் கொட்டை, 1 துண்டு நன்னாரி வேர், சிறிது வெட்டி வேர், 6 மிளகு, லு தேக்கரண்டி சீரகம், இவை அனைத்தையும் சிறிய வெள்ளை துணியில் கட்டி மண்பானை தண்ணீரில் இரவு முழுவதும் போட்டு வைக்கவும். இதன் பெயர் சத்து நீர் முடுச்சு.
    காலையில் துணியை பிரித்து சூரிய ஒளியில் வைக்கவும். இந்த சத்து நீர் முடிச்சை மூன்று முறை பயன்படுத்தலாம். இந்த நீரை பயன்படுத்தும் போது உயிராற்றல் அதிகரிக்கும்.

    சாதாரணமாக மண்பானையில் பொங்கும் சோறு நல்லா ருசியாகவும் சத்து வெளியேறாமல் அப்படியே கிடைப்பதோடு எளிதில் செரிமானம் ஆகும். அந்த சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் காலையில் அதில் மோர் தயிர் சிறிது உப்பு சேர்த்து அந்த பானத்தை அருந்தும் போது உடலுக்கு நல்ல வலுவை தருகிறது.

    இன்றும் கிராம மக்கள் அமுத பானமாக அந்த நீராகாரத்தை தான் பருகுகிறார்கள். அதுவே பாரம்பரிய அரிசியில் சமைத்த சோறாக இருந்தால் மூன்று நாள் கூட வைத்து அதை பருகலாம். இன்னும் ருசியாக உடலுக்கு குளிர்ச்சியும் ஆற்றலையும் தரும். வெப்ப காலங்களில் இதுவே சிறந்த காலை உணவாகும். இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.
    கோடைக்காலத்தை எப்படி சமாளிப்பது. கோடைக்காலத்தில் என்ன என்ன உடல் உபாதைகள் ஏற்படும்? அவற்றில் இருந்து நம்மை காத்து கொள்வது எப்படி? என்று பார்க்கலாம்.
    குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் வந்தாலே பலருக்கு சிரமம் தான். கத்திரி வெயில் தான் சுட்டெரிக்கும் என்ற நிலைமாறி, வெயில் காலம் முழுவதுமே நம்மை சுட்டெரிக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலும், வீசும் அனல் காற்றும் உடலை பெரிதும் பாதிக்க செய்வதே அதற்கு காரணம். அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்னே வெயில் 100 டிகிரியை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது.

    கோடைக்காலத்தை எப்படி சமாளிப்பது. கோடைக்காலத்தில் என்ன என்ன உடல் உபாதைகள் ஏற்படும்? அவற்றில் இருந்து நம்மை காத்து கொள்வது எப்படி? உடல் வெப்ப தாக்குதல். உடல் சோர்வு, மஞ்சள் காமாலை, சிறுநீர் எரிச்சல், மலச்சிக்கல், ஆசன வாய்கடுப்பு, கண் எரிச்சல், தோல் நோய்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சிரமப்படுவது ஏராளம். முக்கியமாக நீரிழிவு நோயாளிகள், அதிக ரத்த அழுத்த நோயாளிகள் மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பது நலம்.

    கோடை காலத்தில் உடலில் பித்தம் அதிகரிப்பதே பெரும்பாலான நோய் நிலைக்கு காரணம். அதுவே உடல் வெப்பநிலையை அதிகரித்து உடலின் நீர்ச்சத்து தோலின் வழியாகவே பெரும்பாலும் இழக்கப்படுவதால் உடல் சோர்வு, தாகம், நாக்கு வறட்சி, வியர்க்குரு, சிறுநீர் குறைவாக கழிதல், சிறுநீர் எரிச்சல், குடலில் வறண்ட மலத்தால் மலச்சிக்கல் போன்றவை ஏற்படுகிறது. பித்தம் அதிகரிக்க கல்லீரல் செயல்பாடு அதிகரிப்பதால் காமாலை நோய் ஏற்படும் நிலை எளிதில் உண்டாகிறது.

    அதிகமான பித்தத்தைக் குறைப்பதே காத்துக்கொள்வதற்கு சிறந்த வழி. அவரவர் உடல் எடைக்கு ஏற்ப தினசரி 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது மிக அவசியம். உணவில் காரம், புளிப்பு, மசாலா சேர்ந்த உணவுப்பொருட்களை தவிர்த்து கொள்வது நல்லது. மதுபானத்தால் காமாலை நோய் சீக்கிரமே உண்டாகும். டீ, காபி இவற்றை முற்றிலும் தவிர்த்து பித்தத்தை குறைக்கும் படியாக பாலில் ஏலம், சீரகம், தனியா விதை சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம். தயிர், மோர் இவற்றினை மஞ்சள் பொடியிட்டு கொத்துமல்லி இலைகள் சேர்த்து தாளித்து தேவையான அளவு பருகலாம். உணவில் நீர்ச்சத்து நிறைந்த கீரைகளையும், காய்கறியையும் அதிகம் சேர்க்கலாம்.

    பகல் நேரம் பித்தம் அதிகமான காலம் என்பதால் அந்த நேரத்தில் வெள்ளரி பிஞ்சி, முலாம் பழம், தர்பூசணி, மாதுளை, நெல்லி, வில்வ பழம் இவற்றினை எடுத்து கொள்ளலாம். இதனால் நீர்ச்சத்து உடலில் சேர்க்கப்படுவதோடு பித்தமும் குறையும். சிறுநீர் எரிச்சல் நீங்கும். பழங்களை பிழிந்து சாறு மட்டும் குடிக்காமல் பழம் முழுவதும் எடுத்து கொண்டால் நார்ச்சத்து கிடைக்கும். அதனால் மலச்சிக்கல் நீங்கும்.

    கோடைக்காலத்தில் நீர் தூய்மைக்கேடு ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது. அதனால் குடிக்கும் நீரினை கொதிக்க வைத்து ஆறவைத்து பயன்படுத்தவும். இல்லாவிட்டால் தொண்டை வலி, வயிற்று போக்கு எளிதில் தோன்றும். மேலும் நீரில் வெட்டிவேர் அல்லது சீரகம் போட்டு கொதிக்க வைத்து பருகலாம். இவற்றால் உடல் உள்உறுப்புகள் குளிர்ச்சி அடையும், உஷ்ணம் தணியும்.

    அதிக உடல் சோர்வு உள்ளவர்கள் எலுமிச்சை பழச்சாறுடன் சிறிது உப்புடன் சர்க்கரை சேர்த்து பகல் நேரங்களில் பருகலாம். கோடைக்கால வெப்ப நோய்களில் இருந்து காத்துக்கொள்ள சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள நன்னாரி மணப்பாகு, மாதுளை மணப்பாகு, துரிஞ்சி பழ மணப்பாகு இவற்றில் ஒன்றை பகல் நேரங்களில் அளவோடு எடுத்து கொள்ளலாம். மேலும் நெல்லிக்காய் லேகியம், வில்வபழ லேகியம் இவற்றை உட்கொண்டால் பித்தம் குறையும். மலச்சிக்கல் நீங்கும். கோடைக்கால அம்மை நோய்களில் இருந்து காத்துக்கொள்ள தாழம்பூ மணப்பாகினை எடுத்துக்கொள்ளலாம்.

    வெப்பக்கால நோய்களில் இருந்து தோலினை காத்து கொள்ள சந்தனாதி தைலம், குளிர் தாமரை தைலம், சீரக தைலம் இவற்றில் ஒன்றை கொண்டு வாரம் இருமுறை எண்ணெய் குளியல் எடுக்கலாம். வெறும் நல்லெண்ணெய் கூட, எண்ணெய் குளியலுக்கு பயன்படுத்தலாம். இதனால் பித்தமும் குறையும். கண்களும் குளிர்ச்சி அடையும். வியர்க்குரு போக்க பனைநுங்கினை உண்பதுடன் தோலின் மீதும் பூசலாம்.

    தோல் வறட்சியை தடுக்கவும், நீர் இழப்பினை குறைக்கவும், பகல் நேரங்களில் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் இவற்றில் ஒன்றை கை, கால்களில் தேய்க்கலாம். தோல் நமைச்சல் இருந்தால் அருகம்புல் தைலம் மேலே தடவலாம். அதிக கண் எரிச்சல் உள்ளவர்கள் இரவில் உள்ளங்கால்களுக்கு நல்லெண்ணெய் தேய்த்து கொண்டு படுக்கலாம்.

    சரும பாதிப்பு வராமல் தடுக்க சோற்று கற்றாழையை மடல் நீக்கி, சருமத்தில் பூசி வரலாம். கல்லீரல் சார்ந்த நோய்களில் இருந்து காத்துக்கொள்ள கசப்பு சுவையுள்ள உணவு பொருட்களை சேர்த்து கொள்ளலாம். கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி இவற்றை வாரம் இருமுறை சேர்த்து கொள்ளலாம். பப்பாளி, சப்போட்டா போன்ற கல்லீரலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களை வெறும் வயிற்றில் எடுத்து கொள்ளலாம். இவ்வாறாக செயற்கையான குளிர்பானங்களையும், நிறமூட்டப்பட்ட உணவு பொருட்களையும் தவிர்த்து இயற்கையான உணவு வகைகளையும், பழக்கவழக்கத்தையும் பின்பற்றினால், இந்த கோடைக்காலம் மட்டுமல்ல, எந்தக்காலமும் நமக்கு குளிர்ச்சி தரும் காலம் தான்.

    சோ.தில்லை வாணன், அரசு சித்த மருத்துவர், பேரணாம்பட்டு.
    இன்றைய தலைமுறையினர், தங்கள் வீடுகளில் உள்ள ஒரு சுகாதார குறைபாட்டைப் பற்றி கொஞ்சமேனும் விழிப்புணர்வு பெற்றுள்ளதாக தெரியவில்லை. அதுதான், டாய்லெட் எனப்படுகின்ற குளியலறையுடன் கூடிய நவீன கழிப்பறை.
    வாழ்வின் ஒவ்வொரு துணுக்கையும் சுத்தம் என்ற பூதக் கண்ணாடியையும், சுகாதாரம் என்ற நுண்ணோக்கியையும் வைத்து நோக்குகின்ற இன்றைய தலைமுறையினர், தங்கள் வீடுகளில் உள்ள ஒரு சுகாதார குறைபாட்டைப் பற்றி கொஞ்சமேனும் விழிப்புணர்வு பெற்றுள்ளதாக தெரியவில்லை. அதுதான், டாய்லெட் எனப்படுகின்ற குளியலறையுடன் கூடிய நவீன கழிப்பறை அல்லது கழிப்பறையுடன் கூடிய குளியலறை.

    அதாவது, வீட்டுக்குள்ளேயே அமைக்கப்படுகின்ற குளியலறையுடன் கூடிய கழிவறை. தனித்தனி வீடுகளின் அளவு குறையத் தொடங்கியதாலும், அடுக்குமாடி வீடுகள் பெருகியதாலும், இடவசதி கருதி கழிவறைகளை குடியிருப்புக்குள்ளேயே கட்டிக் கொள்வது வழக்கமாகிப் போனது. இப்படி இருந்த போதிலும், நமக்குத் தெரிந்து 1980-களின் தொடக்கம் வரை, வீட்டிற்குள்ளேயேகூட குளியலறையும், கழிவறையும் தனித்தனியாகத்தான் அமைக்கப்பட்டன. அதன் பின்புதான் குளியலறை, கழிவறை இரண்டையும் இணைத்து, ஒரே அறையாக வடிவமைக்கும் போக்கு வளரத் தொடங்கியது.

    தமது கடைசி காலத்தில், பிள்ளையின் சொந்த வீட்டில் நகர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு வந்த முந்தைய தலைமுறையைச் சேர்ந்த தாய் தந்தையர் பலர், இந்த அதிசய டாய்லெட்டுகளைக் கண்டு அதிர்ந்து, தங்களது பழைய வீடுகளுக்கே சென்றுவிட்டனர். ஆதரிக்க வேறு யாரும் இல்லாத பெரியவர்கள் சிலர் இந்தப் புதிய அலர்ஜி கலாசாரத்தை சகித்துக்கொள்ள பழகிக்கொண்டதும் நடந்தது.

    மனிதன், பழக்கத்தின் அடிமை என்பதை நிரூபிப்பது போன்று, இப்போது உள்ள பழைய தலைமுறையினரும் இதைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதாக தெரியவில்லை. இத்தகைய நவீன டாய்லெட்டில் அமைந்துள்ள மேற்கத்திய கழிவறை பீங்கானை மூடிவிட்டு குளிக்கிற வழக்கமிருக்கிறது. ஆனாலும், அந்த மூடி மேலேயே குளியல் சோப்பு, ஷாம்பு போன்றவற்றை வைத்து, அவற்றைப் பயன்படுத்தி குளிக்கின்றனர். கேட்டால் இட வசதி குறைவு என்கிறார்கள்.

    சில வீட்டில் கழுவுவதற்கான சமையல் பாத்திரங்கள், மேற்கத்திய பாணி கழிவறைப் பீங்கானின் பக்கத்தில் குவிக்கப்படுகின்றன. கேட்டால், அவர்கள் வீட்டின் சிறிய சமையலறையில் பாத்திரங்களை கழுவ போதிய இடமில்லை என்று பதில் வந்தது. இது மிகப் பெரிய சுகாதாரக்கேடு. புதிதாக கட்டப்படும் தனி வீடுகளில், அனேகமாக இருபத்தைந்து அல்லது முப்பது சதுர அடிகளை இத்தகைய டாய்லெட்டுகளுக்கு ஒதுக்குவார்கள்.

    அதையே சற்று பொறுமையாக இருபது, இருபது சதுர அடிகளில் தனித்தனியாக குளியலறை மற்றும் கழிவறையை கட்டினால், அவசரத்திற்கும் கைகொடுக்கும், டென்ஷனையும் குறைக்கும். சுத்தத்துக்கு சுத்தம், மன திருப்தியும் ஏற்படும். யோசித்துப் பார்த்தால் இளைய தலைமுறைக்கும் கூட இந்த ஏற்பாட்டில் முழு திருப்தி கிடைக்கும்.
    இயற்கை நமது உடலை குளிர்வித்து அதன் மூலம் பல வியாதிகளை தீர்க்கும் அற்புத பானமாக இளநீரை படைத்திருக்கிறது. தினமும் இளநீரை குடித்து வந்தால், உடலில் எந்த நோயும் வராது.
    தமிழர்களாகிய நாம் வெப்ப மண்டல பகுதியில் வாழ்கிறோம். நம் வாழ்வியலில் இயல்பாகவே மோர், இளநீர், நீராகாரம், எலுமிச்சை சாறு முதலான பானங்களையும், பழச்சாறுகளையும் பருகி வருவது வழக்கமாகும். பின்னர் தேயிலை, காபி என வெப்ப பானங்களுக்கு பழக்கப்பட்டு தற்போது இவையும் நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாததாகி விட்டது.

    நமக்கு என்று, நம் பாரம்பரிய மரபு வழி மாற்றுப்பானங்கள் நம் முன்னோர் வைத்துள்ளனர். ஆம்.. இளநீர், மோர், எலுமிச்சை சாறு இன்னும் அதிகமாக நம் பாரம்பரிய குளிர்பானங்கள் உள்ளன. இயற்கை நமது உடலை குளிர்வித்து அதன் மூலம் பல வியாதிகளை தீர்க்கும் அற்புத பானமாக இளநீரை படைத்திருக்கிறது. கிராமப்புறங்களில் சர்வசாதாரணமாக கிடைக்கும் இளநீர், தற்போது நகர்புறங்களில் கிடைக்கிறது. கலப்படம் செய்ய முடியாத ஒரு குளிர்பானம் என்றால் அது இளநீர் தான். இயற்கை கொடுத்த அற்புத சீதனம் இளநீர்.

    இளநீரைப் பொருத்தவரையில், பகல் நேரத்திலும் குடிக்கலாம், இரவு நேரத்திலும் குடிக்கலாம். தினமும் காலை வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால், அதில் இருக்கும் லாரிக் அமிலம், நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி, எடை குறைவு பிரச்சினையிலிருந்து விடுபடுதல் போன்ற பலன்கள் கிடைக்கும். மதிய உணவுக்கு முன்போ அல்லது பின்போ இளநீர் குடிப்பதால், உடல் சூடு தணிக்கப்படுகிறது. இனிமையான இரவு தூக்கத்தை பெறுவதற்கும் இளநீர் முக்கிய காரணியாக செயல்படுகிறது. நமது இதயத்துடிப்பு அதிகம் இல்லாமல், இதய துடிப்பை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.

    தினமும் இளநீரை குடித்து வந்தால், உடலில் எந்த நோயும் வராது. உடல் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் மேலை நாட்டு மோகம் நம்மை ஆட்டிப்படைக்கிறது. வெளிநாட்டு குளிர்பான பாட்டில்களை நான்கு பேருக்கு மத்தியில் திறந்து குடிப்பதையும், குளிர்பான பாட்டில்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து விற்பதையும் பெருமையாக நினைக்கிறோம். ஆனால் பாரம்பரிய குளிர்பானங்களை விற்பனை செய்யும் நன்னாரி சர்பத் விற்பனையாளர், இளநீர் விற்பனையாளர்களை இளக்காரமாக நினைக்கிறோம்.

    இளநீர் குடிப்பதை இன்றைய தலைமுறையினர் விரும்புவது இல்லை, இளநீர் விற்பவர்களை குறைத்து மதிப்பீடு செய்யும்போக்கு சமுதாயத்தில் புரையோடி போய் உள்ளது. இயற்கை கொடுத்த அற்புத இளநீர் என்னும் பானத்தை நமக்காக விற்பனை செய்பவர்கள் செல்வந்தர்கள் அல்ல.. குபேரபுரியில் உள்ள மாட மாளிகையில் வாழ்பவர்களும் அல்ல.

    அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கு மரபு சார்ந்த இளநீரை விற்பனை செய்யும் அவர்களுக்கு நாம் கைகொடுத்து உதவ வேண்டாமா? 
    காலையில் பல் துலக்குவதற்கு முன்பாக நல்லெண்ணெய் ஊற்றி கொப்பளிப்பதை அன்றாடம் தவறாமல் கடைபிடித்து வருவதால், உடலில் உள்ள நுகர்வு உறுப்புகளின் வேலை தூண்டப்படும்.
    ‘‘ஆயில் புல்லிங் இப்போது பெரிதாக பேசப்பட்டாலும், நம்நாட்டின் பாரம்பரிய மருத்துவங்களான சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் நல்லெண்ணெயை ஊற்றி வாயைக் கொப்பளிக்கும் முறையை 1000 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தியுள்ளனர். பழங்கால ஆயுர்வேத மருத்துவத்தில், எண்ணெய் கொப்பளிப்பது, கண்களுக்கு அஞ்சனம் இடுவது என சிலவற்றை காலை சடங்குகளாகவே சொல்லியிருக்கிறார்கள்.

    ஏதேனும் ஒரு திரவத்தை வாய் முழுவதும் வைத்து கொப்பளிக்கும் ‘கவலகண்டூஷம்’ மற்றும் வாயில் பாதியாக நிரப்பி, கொப்பளிக்காமல் அப்படியே துப்புவதை ‘கவலகிரஹம்’ என இரண்டு முக்கிய சடங்குகளைச் சொல்கிறார்கள். மேலும், ஆயுர்வேதத்தில் நல்லெண்ணெயைத்தான் உபயோகிப்போம். இப்போது வெளிநாட்டினர் தேங்காய் எண்ணெய் ஆயில்புல்லிங் முறையை இப்போது பிரபலப்படுத்துகிறார்கள்.’’

    ‘‘சாதாரணமாக நாம் தொண்டைப்புண் வந்தால் உப்புத்தண்ணீர், வாய்ப்புண்ணுக்கு எண்ணெய் போன்றவற்றை வாயில் ஊற்றி கொப்பளிப்போம். இதுபோல் எந்த பிரச்சனையுமில்லாமல் காலையில் பல் துலக்குவதற்கு முன்பாக நல்லெண்ணெய் ஊற்றி கொப்பளிப்பதை அன்றாடம் தவறாமல் கடைபிடித்து வருவதால், உடலில் உள்ள நுகர்வு உறுப்புகளின் வேலை தூண்டப்படும். பல்லிடுக்குகளில் உள்ள நச்சுப்பொருள், வாய் துர்நாற்றம் போன்றவற்றை நீக்கி, சுவைத்திறனை அதிகரிக்க முடியும்.

    வாய்க்கசப்பு, பசியின்மை போன்ற பிரச்சனைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். கழுத்துவலி, கழுத்து சுளுக்கு, தொண்டைவலி, காதுவலி, மூக்கில் நீர்வடிதல் போன்றவற்றுக்கும் ஆயில் புல்லிங் சிறந்ததொரு சிகிச்சையாகும். பற்களில் உள்ள வெற்றிலைக்கறை, மஞ்சள் கறை நீங்கி பற்கள் வெண்மையாகப் பளிச்சிடும். சொத்தைப்பற்களால் வரக்கூடிய பற்கூச்சம், ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவும் நீங்கும்.’’

    எப்படி செய்வது?

    ‘‘சூரிய வெளிச்சமுள்ள, காற்றோட்டமான இடத்தில் அமர்ந்துகொண்டு, கழுத்து, தோள் பட்டைகளில் சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும். திரவத்தை வாய் முழுவதுமாகவோ (கண்டூஷம்) அல்லது பாதியாகவோ (கவலகிரஹம்) என இரு முறைப்படியும் கொப்பளிக்கலாம். இதை ஒரு குறிப்பிட்ட மணி நேரம் என்றில்லாமல் வாயில் ஊற்றிய திரவமானது நுரைத்து, கெட்டியாக பசை போன்று வரும் வரையோ அல்லது கண், மூக்கு வழியாக தண்ணீர் வரும் வரை வைத்திருக்க வேண்டும்.

    நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் தவிர, பால், பழச்சாறுகள், தேன் மற்றும் கோமியம் போன்றவற்றாலும் வாய் கொப்பளிக்கலாம். ஆனால், நல்லெண்ணெய்தான் மிகச்சிறந்தது. தேனுக்கு எரிச்சல், புண், வீக்கம் போன்றவற்றை ஆற்றும் குணம் உள்ளதால் தேனையும் உபயோகிக்கலாம்.

    இதுதான் ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்ட சரியான முறை. இப்படி முறையாக செய்ய முடியாத பட்சத்தில் குறைந்தபட்சம் வாயில் சில நிமிடங்கள் வைத்திருந்து கொப்பளித்துத் துப்புவதும் பலன் தரும்.’’

    ஒருவர் ஒல்லியாக இருப்பதற்கு, அவரது மரபணுக்களின் குறிப்பிட்ட பகுதிகளே காரணம் என்ற ரகசியத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
    சிலர், ‘நான் எவ்வளவுதான் சாப்பிட்டாலும் என் எடை கூடவே கூடாது’ என்று பெருமையடித்துக் கொள்வார்கள், சிலரோ, ‘நான் எடையைக் கூட்டுவதற்காக கண்டபடி சாப்பிடுகிறேன், ஆனாலும் ஒல்லியாவே இருக்கேன்’ என்று புலம்புவார்கள்.

    இதற்கான ரகசியத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, ஒருவர் ஒல்லியாக இருப்பதற்கு, அவரது மரபணுக்களின் குறிப்பிட்ட பகுதிகளே காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

    சிறந்த உணவுப்பழக்கம் அல்லது வாழ்க்கைமுறையை உடையவர்களைவிட, குறிப்பிட்ட சில மரபணுக்களை உடையவர்கள் ஒல்லியாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

    ஒருவர் குண்டாக இருப்பதற்கான காரணங்களை விளக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மரபணுரீதியிலான மாற்றங்கள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், ஒருவர் ஒல்லியாக இருப்பதற்கான காரணத்தை எடுத்துரைக்கும் ஆராய்ச்சிகள் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டதில்லை.

    இந்நிலையில், உடல் பருமன் குறியீட்டு எண் (பி.எம்.ஐ.) 18-ஐ விடக் குறைவான அளவுடைய, இங்கிலாந்தைச் சேர்ந்த ஆயிரத்து 600 பேரிடம் இருந்து மரபணு மாதிரிகள் பெறப்பட்டு, மிகவும் குண்டான இரண்டாயிரம் பேர் மற்றும் சராசரியான உடல் எடையைக் கொண்ட 10 ஆயிரம் பேருடன் அது ஒப்பிடப்பட்டது.

    இந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம் அவர்களது உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.

    உடல் பருமன் உடையவர்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட தொகுப்பு மரபணுக்களைக் கொண்டிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

    ஒல்லியாக இருப்பவர்கள் உடல் பருமனோடு தொடர்புடைய மரபணுக்களின் தொகுப்பை குறைவாகக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, ஆரோக்கியமான முறையில் ஒல்லியாக இருப்பதற்கு உதவும் மரபணு அமைப்பில் மாற்றங்களும் இருந்தன.

    இந்த ஆய்வுக்குழுவுக்குத் தலைமை வகித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் சடாப் பரூக்கி கூறுகையில், ‘எங்களின் ஆராய்ச்சியின் மூலம், ஒருவர் ஒல்லியாக இருப்பதற்கு சிலர் கூறுவதுபோல் உணவுப்பழக்கமும், வாழ்க்கைமுறையும் மட்டும் காரணமில்லை என்பதும், அந்தக் குறிப்பிட்ட நபரின் உடலில் உள்ள மரபணுக்களில் உடல் பருமனை நிர்ணயிக்கும் தொகுப்பு குறைவான எண்ணிக்கையில் இருப்பதே காரணம் என்பதும் முதல்முறையாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    எடையை மையமாகக் கொண்டு ஒருவரை விமர்சிப்பது எளிதானதாகத் தோன்றலாம். ஆனால், அதற்கான காரணத்தை அறிவியல் ரீதியாகப் பார்க்கும்போது மிகவும் சிக்கலானதாக இருக்கிறது.

    நமது உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் நாம் நினைப்பதைவிட மிகவும் குறைவான அளவே நம்மிடம் கட்டுப்பாடு உள்ளது’ என்கிறார்.

    ஒருவர் ஒல்லியாக இருப்பதற்கான காரணியாக விளங்கும் குறிப்பிட்ட மரபணுக்களைக் கண்டறிவதே தங்களது அடுத்த இலக்கு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, நீண்டகால அடிப்படையில் எடைக் குறைப்புக்கான வழிகளை உருவாக்கும் நோக்கில் செயல்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

    இந்த ஆய்வு குறித்து லண்டன் கிங்ஸ் கல்லூரி பேராசிரியர் டாம் சாண்டர்ஸ், ‘இது மிகவும் முக்கியமான, சரியான முறையில் நடத்தப்பட்ட ஆய்வு. காரணம், அதிகமான உடல் பருமனைக் கொண்டிருப்பவரும், சராசரியை விடக் குறைந்த உடல் எடையைக் கொண்டிருப்பவரும், வேறுபட்ட மரபணுத் தொகுப்பு எண்ணிக்கையைக் கொண்டிருப்பவர்கள் என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது’ என்று கூறியுள்ளார்.

    அதற்காக, காலம் காலமாக உடல் எடையைக் கட்டுப்படுத்தக் கூறப்படும் வழிகளான உடற்பயிற்சியும், நல்ல உணவும் உதவாது என்று சொல்ல முடியாது. அது கைகொடுக்கவே செய்யும்.

    எது எப்படியோ, ஒருவர் ஒல்லியாக இருப்பதற்கும், குண்டாக இருப்பதற்கும் அவர் மட்டுமே காரணம் என்று இனி கூற முடியாது.
    ×